ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 மே, 2013

நான் செய்த தவறு


நான் சமீபத்தில் தமிழீழம் பற்றி ஒரு பதிவு போட்டதில் சில தவறுகள் செய்து விட்டேன். அதாவது ஈழ சரித்திரம் சரியாகப் படிக்காததினால் வந்த தவறுகள் அவை. ஆகவே ஈழச் சரித்திரத்தை படிப்போம் என்று சில புத்தகங்களைப் படித்தேன்.

அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை என்னவென்றால் இலங்கையில் தமிழினம் 2000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.  தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்வதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து போனவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இலங்கையை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆண்டுவிட்டு பிறகு சுதந்திரம் கொடுத்தபோது பல சிக்கல்களையும் விட்டுச் சென்றார்கள். அந்தச் சிக்கல்களில் தலையாயதுதான் தமிழ் ஈழப் பிரச்சினை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை.

பல கட்டங்களைத் தாண்டி இந்தப் பிரச்சினை இன்று ஒரு குழப்பமான நிலைக்கு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை எப்படி தீரும் என்பதை காலம்தான் சொல்லும்.