உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 நவம்பர், 2012

கடவுள் சைவமா, அசைவமா?


இத்தகைய கேள்விகளையே கேட்கக்கூடாது, இதுதான் தமிழனின் முக்கிமான கெட்ட குணம், நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நம்புகிறவர்கள் மட்டும் எங்களிடம் வந்தால் போதும் என்று சொல்லும் மத குருமார்கள் இருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறார்கள்.

ஆனாலும் சமீப காலங்களில் இந்த சைவ, அசைவ உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வு பதிவுலகில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இந்த சந்தேகம் என் மனதில் தோன்றியது.

இரண்டு விதமான கடவுள்களும் இருக்கிறார்கள். ஆடு, மாடு, எருமை, கோழி இவற்றைப் பலி கொடுக்கும் கடவுள்கள் நிறைய இருக்கின்றன. கோவில் மடப்பள்ளியில் அய்யர் சமைத்ததைத்தான் சாப்பிடுவேன் என்று சொல்லும் கடவுள்களும் இருக்கிறார்கள்.

கடைசியில் பார்த்தால் கடவுள் பெயரைச் சொல்லி மனுசன் சாப்பிடுகிறதுக்காகத்தான் இந்த படையல்களெல்லாம். இந்த வழக்கங்களெல்லாம் எப்போது யாரால் முறைப்படுத்தப்பட்டன என்று தெரியவில்லை. எது சரி என்றும் தெரியவில்லை?

எது எப்படியானாலும் மனிதன் தன்னுடைய தேவைக்கேற்பவும் கற்பனைக்கேற்பவும் கடவுள்களைப் படைத்திருக்கிறான். தனக்கும் பிடித்த உணவு வகைகளை கடவுள் பெயரைச்சொல்லி சாப்பிடுகிறான். ஆகவே ஒரு வகை உணவுதான் சிறந்தது மற்ற வகை உணவு தாழ்ந்தது என்று கருதவேண்டியதில்லை.