கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மே, 2015

கடவுளைக் கண்டேன்.

                              Image result for ரூபாய் நோட்டுகள்

என்னால் எந்த விஷயத்தையும் விரிவாக எழுத முடிவதில்லை. இளம் வயதிலிருந்தே அப்படி பழகிவிட்டது. இப்போது, இந்த வயதுக்கு மேல் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

கடவுள் இல்லை என்று மறுப்போரும் கடவுளை இது வரையில் நான் கண்டதேயில்லை என்போருக்கும் ஒரு நற்செய்தியாக இரண்டு நாள் முன்பாக கடவுள் காட்சியளித்தார்.அதைக் கண்டவர்கள் புண்ணியாத்மாக்கள். காணாதவர்கள் பாபிகள்.

நான் கண்டேன். தத்ரூபமாகக் கண்டேன். எனக்கு கடவுள் பணரூபத்தில் காட்சி அருளினார். இனி என் பூஜை அலமாரியில் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்துக் கும்பிடப்போகிறேன்.

புதன், 30 ஜனவரி, 2013

கடவுளும் பின்னே நானும்



Extracts from Google+ comments

  End of World » 18-12-2012
Last night, the God came in my dream and assured that the world will end only next year and not this year. So we have one whole year to do further sinful deeds. Hurray!


 
  balagopal venkatramanDec 19, 2012
So i can wish you happy new year on the evening of 31/12/2012. A happy seasonal greetings             More dreams with God


 
  Seeni VasanJan 17, 2013
When I was worried about 21.12.12, God hinted me that one Mr. so on so who has more than one name of Lord Muruga knows the answer, find him to clear your doubts.            Thank God, I have found you now. 



ஆஹா, சிஷ்யா. உம் பக்திக்கு மெச்சினோம். குருவைத் தரிசிக்க வருமுன் சொல்லிவிட்டு வரவும்.

dharumi -Jan 18, 2013
இப்படி அடிக்கடி உங்கள் கனவில் நான் வருவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குது !!!

கடவுளுக்கே கஷ்டம்னா நாங்க எல்லாம் என்ன செய்யறது கடவுளே!

dharumi -Jan 18, 2013
ஏதோ நல்ல மனுஷரா இருக்கிறாரேன்னு கஷ்டம் பாராம வந்துகிட்டு இருக்கேன்!

இதயெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டி கிள்ளிக்கிட்டு இருக்காதீங்க ... சரியா?

சரீங்க, இருந்தாலும் அறிந்தும் அறியாமலும் அடியேன் செய்த, செய்யும், செய்யப்போகின்ற பிழைகளைப் பொறுத்து ரட்சிக்கவேண்டும்.

dharumi -Jan 19, 2013
செஞ்சதுக்கு சரி .. போனா போகுதுன்னு உட்டுர்ரேன். ஆனா இந்த மாதிரி anticipatory bail எடுத்தா  என்ன பண்றதுன்னு தெரியலையே! ம்ம்... பாத்து நடந்துக்குங்க ....... எதுக்கும் சித்திரகுப்தன் / St.Peter கிட்ட கன்சல்ட் பண்ணிக்கிறேன்.

அவங்களையெல்லாம் மொதல்லயே கரெக்ட் பண்ணீட்டனுங்க. நீங்க மட்டும் கண்டுக்காம இருந்தா போதுமுங்க.

dharumi -Jan 19, 2013
அடப் பாவிகளா! (நான் அவங்க ரெண்டு பேத்தையும் சொன்னேன்.) எனக்கு வரவேண்டிய கமிஷன் என்னாச்சு ...? சரி.. அப்டின்னா என்னையும் கண்டுக்குங்க!

ஒரு பெரிய டீல் கரெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன், கடவுளே. அது சக்சஸ் ஆகட்டும். உங்களையும் கண்டுக்கிறேன்.

 dharumi -Jan 19, 2013
crossed cheques, please

Crossed cheque –ஆ. என்ன கடவுள்ங்கிறீங்க, சுத்த வெவரங்கெட்ட கடவுளா இருக்கீங்களே. இந்த டீலிங்க்குகள்ல எல்லாம் உங்களுக்கு முன்ன பின்ன பரிச்சயம் இல்ல போல இருக்கு. அதான் Crossed cheque கேக்கறிங்க. உங்க அசிஸ்டன்ட்கள் கிட்ட ட்யூஷன் எடுத்துக்குங்க.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மும்பையில் தனியாகத் தவித்தேன்



மும்பையில் என்னுடன் படித்த நண்பர் ஒருவர் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக இருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, மாணவர்கள், ஆசிரியர் ஆகியோர், நாங்கள் 80 பேர், மும்பைக்கு இத்தனாம் தேதி டூர் வருகிறோம், எங்களுக்கு தங்குவதற்கும் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருந்தோம். அவரும், ஆஹா, செய்து விடுகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தார்.

ஹைதராபாத்தில் இருந்தும் எங்கள் வருகையை உறுதிப் படுத்தி-யிருந்தோம். நாங்கள் மும்பையில் விக்டோரியா டெர்மினஸ்ஸுக்கு பல ஸ்டேஷனுக்கு முன்பு வந்துகொண்டிருந்தபோதே, என் நண்பனின் சகாக்கள் மூன்று பேர் எங்கள் கோச்சில் ஏறி அறிமுகம் செய்து கொண்டார்கள். அவர்கள் சொன்ன திட்டத்தின்படி, நாங்கள் அனைவரும் விக்டோரியா டெர்மினஸ் போகாமல் மாதுங்கா ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ளவேண்டும். அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில்தான் எங்களுக்குத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எங்களை ஏற்றிச்செல்ல இரண்டு பஸ்களும் அங்கே காத்துக்கொண்டு இருக்கின்றன. நாங்கள் விக்டோரியா டெர்மினஸ் போய் அங்கிருந்து திரும்பி வருவதென்றால் அதிக தூரம், தவிர நேரமும் அதிகம் ஆகும் என்றார்கள்.

நாங்களும் அவர்களை நம்பி மாதுங்கா ஸ்டேஷனில் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கி விட்டோம். எங்கள் கோச் நாங்கள் வந்த ரயிலுடன் விக்டோரியா டெர்மினஸ் போய் விட்டது. கோச் அங்குதானே இருக்கும், இந்த தங்குமிடம் மற்றும் மும்பை புரொக்ராம் வேலைகளை முடித்து விட்டுப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று எதார்த்தமாக நம்பினோம். (வடிவேலு பாணியில் - நம்ப்ப்ப்ப்ப்ப்பினோம்) இங்குதான் நாங்கள் தவறு செய்து விட்டோம்

எல்லோரும் அவரவர்கள் உடைமைகளை வைத்துவிட்டு குளித்து டிபன் சாப்பட்டோம். கூட வந்த இரண்டு ஆசிரியர்களும் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு புரொக்ராமுக்கு சென்று விட்டார்கள். நான் மட்டும் ரயில்வே பார்மாலிடிகளைக் கவனிக்க விக்டோரியா டெர்மினஸ் சென்று ஸ்டேஷன் சூப்பிரன்ட் ஆபீசுக்குப் போய், நாங்கள் ஸ்பெஷல் கோச்சில் சென்னையிலிருந்து வந்து மாதுங்காவில் இறங்கிவிட்டோம். எங்கள் கோச் இங்கே வந்திருக்கும். நாங்கள் அந்தக் கோச்சில் இத்தனாம் தேதி இந்த ரயிலில் டில்லி போகவேண்டும். அதற்குண்டான ஆர்டர்கள் போடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் என் தலையில் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டார்கள். உங்கள் கோச்சா? அது காலியாக வந்ததா, அதை ஒரு கல்யாணப் பார்ட்டிக்கு கொடுத்துவிட்டோம் என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னடா இது, நேத்து வந்தவன் பொண்டாட்டியை இண்ணைக்கு வந்தவன் கூட்டீட்டுப் போன கதையாக இருக்கிறது? என்று நினைத்துக்கொண்டு, அவர்களிடம் அதெப்படி எங்களுக்கு என்று கொடுக்கப்பட்ட கோச்சை இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்று கேட்டேன்அவர்கள் உங்கள் கோச்சை அனாதையாக விட்டுவிட்டு நீங்கள் எங்கே போனீர்கள்? கோச் காலியாக வந்ததினால் நாங்கள் அதை வேறு பார்ட்டிக்கு கொடுத்து விட்டோம். உங்களுக்கு வேண்டுமானால் வேறு கோச் அலாட் செய்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த புது கோச்சை சென்னையிலிருந்து வாங்கி வந்தோம், அதை இப்படி செய்து விட்டீர்களே, எங்களுக்கு அதே மாதிரி புது கோச் கொடுக்காவிட்டால் மாணவர்கள் உங்கள் ஆபீசுக்கு முன்னால் வந்து தர்ணா செய்வார்கள், பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

நாங்கள் புறப்படும் அன்று ஸ்டேஷனுக்கு சென்று பார்த்தபோது நாங்கள் வந்த அதே மாதிரியான கோச் எங்களுக்கு அலாட் செய்திருந்தார்கள். நான்கு டிஜிட் கோச் நெம்பரில் கடைசி நம்பர் மட்டும்தான் மாற்றம். யாராவது சொன்னால் தவிர கோச் மாறினது யாருக்கும் தெரியாது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். வேறு ஏதாவது பழைய கோச் கொடுத்திருந்தார்களானால் மாணவர்கள் மத்தியில் என் மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிப் போயிருக்கும். அன்று என்னைக் கடவுள்தான் காப்பாற்றினார்.