கலாச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலாச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 மார்ச், 2019

38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்

                                 
                                   

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வக்கிரங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயம் தேடுகின்றன. பத்திரிக்கைகள் கல்லா கட்டுகின்றன.

ஆனால் யாராவது இந்த அக்கிரமங்கள் நடப்பதற்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றி எள்ளளவாவது  சிந்திக்கிறார்களா என்றால், ஒருவரையும் காணோம். இந்த அக்கிரமக்காரர்கள் எந்தப் பெண்ணையும் பலாத்காரமாகவோ, மயக்க மருந்து கொடுத்தோ தூக்கிக் கொண்டு போனதாக எந்தச் செய்தியும் இது வரை இல்லை.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தங்களுடைய பூரண நினைவுடனேயே தங்களுடைய பரிபூர்ண சம்மதத்துடனேயே சென்றிருக்கின்றார்கள். கூட்டிக்கொண்டு போனவர்கள் அந்தப்பெண்களை சீரழித்தது ஒரு வகையில் காட்டுமிராண்டித்தனம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்தப் பெண்கள் அவர்களுடன் போனது அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமா? பெற்றோர்களின் அனுமதியுடன்தான் அவர்கள் சென்றார்களா?

மனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனுக்கும் இயற்கை சில பயங்களைக் கொடுத்திருக்கிறது. இருட்டு பயம், புது இடம், புது மனிதர்கள், புது சூழ்நிலை இவைகளைக் கண்டு பயம், எதிர்பாலரிடம் பேச. பழக பயம். இப்படி “தெனாலி” படத்தில் கமலஹாசன் லிஸ்ட் போடுவாரே அந்த மாதிரி நிறைய பயங்கள் இயற்கை நம்மிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கள் எல்லாம் நம்முடைய பாதுகாப்புக்குத் தானே ஒழிய சும்மா விளையாட்டுக்கல்ல.

அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல எச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். அதில் முக்கியமாக பெரியவர்கள் (பெற்றோர்களும் இதில் அடங்கும்) சொல்லும் அறிவுறைளைக் கேட்டு நடக்கவேண்டும். பெற்றோர்களிடத்தில் உண்மையை பேச வேண்டும். இப்படியெல்லாம் சில பழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. தாங்கள் நினைப்பதுதான் சரி, தங்கள் நண்பர்கள் செலவதுதான் வேதவாக்கு. இப்படியாக அவர்களுடைய போக்கு இருக்கிறது. ஆணுக்குப் போட்டியாக பெண்களும் இப்படியான கலாச்சாரத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்.

பாய் பிரண்ட் இல்லையென்றால் அது மகா கேவலம் என்ற எண்ணம் பொதுவாக எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. பாய் பிரண்டுடன் ஊர் சுற்றுவது ஒரு கட்டாயம் என்ற நிலைக்கு இன்றைய கல்லூரிப் பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி சுற்றுவதற்கு பல பொய்க் காரணங்களை
வீட்டில் சொல்லி நம்ப வைக்கிறார்கள்.

இந்த மனப்பாங்கை இன்றைய கயவர்கள் நன்கு புரிந்து கொண்டு பல அக்கிரமங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பொள்ளாச்சி விவகாரமும். அடிப்படைக் காரணத்தை அலசாமல் நடந்த நிகழ்வுகளை மட்டும்  ஆராய்வதில் எந்தப் பலனும் இல்லை.

புதன், 18 பிப்ரவரி, 2015

ஒரு அசாதாரண நிகழ்ச்சி

இங்கே கொடுத்திருக்கும் ஒரு விடியோ தொடர்பை சொடுக்கிப் பார்க்கவும். இது ஒரு வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். எனக்கு தற்காலத்திய சினிமாக்கள் அதிகம் பரிச்சயம் இல்லாத தினால் இது எந்தப் படத்தில் வந்தது என்று சொல்லத் தெரியவில்லை.

       

இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த ஊரில் இந்த படப்பிடிப்பை ஒரு பெரிய விஷயமாகக் கருதி எந்த விதமான கூட்டமும் சேரவில்லை என்பதுதான். நம் ஊரில் இப்படி ஒரு படப்பிடிப்பு நடத்த முடியுமா?

நேற்று நான் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். விழா ஒரு பிரபல ஓட்டலில் நடை பெற்றது. பிறந்த நாள் கேக் வெட்டியபிறகு விருந்து நடைபெற்றது. விருந்து தாங்களே எடுத்துக்கொள்ளும் ரகம். இம்மாதிரி விருந்துகளில் உணவை எடுத்துக்கொண்ட பிறகு அந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளிப்போய் நின்று சாப்பிடவேண்டும். அப்போதுதான் அடுத்து வருபவர்கள் உணவை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்த அடிப்படைத் தத்துவத்தைக் கூட நம் ஆட்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. உணவு மேஜைகளைச் சுற்றியே பெருங்கூட்டமாக நின்று கொண்டு அடுத்து வருபவர்களுக்கு பெரும் இடைஞ்சல் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் எப்போது பண்பைக் கற்றுக்கொள்வார்கள்?

                                          Image result for buffet dinner party

வெள்ளி, 30 ஜனவரி, 2015

தமிழ் மொழி அழியுமா?

                                
இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/ கலை அரசி என்பவர் எழுதியிருக்கும் கருத்தைக் கவனியுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான்,  சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்ல கூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்.  ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணி செட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     


பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இது உண்மையல்ல என்று எந்தத் தமிழனாவது தன் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா?

இது ஏன் என்று ஆராய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். தமிழ் மொழி அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் என்பது ஏது?

நான் சில நாட்களுக்கு முன் "பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய அறிவுரைகள்" (http://swamysmusings.blogspot.in/2015/01/blog-post_3.html) என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் ஒரு இடத்தில் ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிந்து போனால் அந்த இனமே அழிந்து விடும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பண்பு அவர்கள் பேசும் மொழியாகும். அது அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் ஏது?

நான் குறிப்பிட்ட பெண்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை விமரிசித்து மூன்று முன்னணிப் பதிவர்கள் என்னை கேவலமாக விமரிசித்தார்கள். 

அந்த மூன்று முன்னணிப் பதிவர்கள் இந்த மொழிச் சீர்கேட்டுக்கு என்ன தீர்வு சொல்லுவார்கள்?

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கலாச்சாரம்


கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு என்று பல சொற்களால் குறிக்கப்படும் குணம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இது மக்களின் பழக்க வழக்கங்களைக் குறிப்பிடுவது ஆகும். பெரும்பாலும் இது நம்பிக்கை சார்ந்ததே ஆகும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள், நாமும் கடைப்பிடிப்போம் என்ற வகையில் வருவதே இந்த கலாச்சாரப் பண்புகள்.

ஒரு தனி மனிதனின் பண்புகள் அவன் வாழும் சமூகக் கலாச்சாரத்தை ஒட்டி அமைவது இயற்கை. அந்தக் கலாச்சாரத்தின் அங்கங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கவேண்டியது அந்த சமூகத்தில் உள்ள அனுபவமிக்கவர்களின் கடமையாகும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான அறிவு அபரிமிதமாக வளர்ந்துள்ள நிலையில் இத்தகைய கலாச்சார அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.  மக்கள் மனம் மாற்றமடையும்போது கலாச்சாரங்கள் மற்றமடையத்தான் செய்யும்.

இத்தகைய மாற்றங்களைக் கண்டு சிலர் புலம்புவார்கள். அவர்களை பழமைவாதிகள் என்று உலகம் புறக்கணித்து விட்டு தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
என்ற கொள்கையினை பழங்காலத்திலேயே தமிழன் உண்டாக்கியிருக்கிறான். ஆகவே மாற்றங்கள் நடைபெற்றே தீரும். அவைகள் நன்மை தருமாயின் நன்றே. இல்லாவிடில் சமூகம் சீரழியும்.