ஜாடை போடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாடை போடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூன், 2015

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

19-6-2015  மணி மாலை 7.30

தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் இன்றைய பதிவைப் பார்த்தீர்களா?

http://www.tamilvaasi.com/2015/06/blog-post.html

படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும்.

ஜாடை போடுவது பற்றிய என்னுடைய பதிவையும் படிக்கவும்.

http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_19.html


என்னுடைய தலைப்பில் இருக்கும் கேள்விக்கு வருவோம்.

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

இல்லையே. என் கண்களுக்கு எதுவும் படவில்லையே. அப்படி நடந்தால் பதிவுலகம் பொங்கி எழாதா? பதிவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஜாடை போடுவது

                                        Image result for gossip

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த ஜாடை பேசுவது பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். குறிப்பாக பெண்கள் இதில் வல்லவர்கள். யாரையாவது எதற்காவது  குத்திக்காட்ட வேண்டுமென்றால் நேரடியாகச் சொல்லமாட்டார்கள். ஜாடை போடுவார்கள்.

உதாரணத்திற்கு யாராவது கொஞ்சம் மற்றவர்களை விட தாராளமாக நடந்து கொண்டால், " மயிருள்ள சீமாட்டி, எப்படி வேண்டுமானாலும் கொண்டை முடிப்பாள்" என்பார்கள். அவள் தாராளத்தை நல்ல மனதுடன் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இப்படி ஜாடை பேசுவதில் உள்ள சௌகரியம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட நபர் இப்படிப் பேசினவர்களை நேருக்கு நேராகப் பார்த்து "என்னை ஏன் இப்படிப் பேசினீர்கள்" என்று கேட்டால், உடனே அவர்கள் தங்கள் பேச்சை அப்படியே பொரட்டி விடுவார்கள்.

"நான் உன்னையா அப்படிப் பேசினேன்? எங்க ஊர்ல ஒருத்தியைப் பற்றியல்லவா பேசினேன்" என்று தடாலடியாக தங்கள் பேச்சை அப்படியே மாற்றி விடுவார்கள். நான் டவுனில் பிறந்து வளர்ந்தவனாதலால் எனக்கு இந்த ஜாடைப் பேச்சுக்கள் அவ்வளவாக பரிச்சயம் இல்லை. இருந்தாலும் யாராவது ஜாடை பேசினால் புரிந்து கொள்வேன்.

இப்படித்தான் அன்று என் நண்பன் ஒருவன் "வெயில் காலம் வந்தால் சிலருக்கு ஸ்க்ரூ லூசாகி விடுகிறது" என்றான். நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இருக்கிறோம். என்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று புரிகிறது. ஆனால் உடனடியாக அதற்கேற்ற பதில் என்னால் சொல்ல முடியவில்லை. அதனால் பேசாமல் இருந்து விட்டேன்.

இது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. இதை எப்படி பழி தீர்ப்பது என்று யோசித்ததில் ஒரு வழி புலனாகியது. அடுத்த தடவை அவனைச் சந்தித்தபோது ஒரு கதை விட்டேன்.

நான் சொன்ன கதையாவது.

எங்க வீட்டிற்கு ஒரு வயதான சாமியார் வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்டு அருகில் அமரச்சொன்னார். என் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, உங்களுக்கு ஒரு ஸ்க்ரூ லூசாக இருக்கிறதே என்று சொன்னார். நான் கொஞ்ச நாளைக்கு முன்பு என் நண்பன் ஒருவனும் இதே மாதிரித்தான் சொன்னான் என்றேன். அவர் அந்த நண்பன் யார் என்று விபரங்கள் கேட்டு விட்டு இனிமேல் அந்த நண்பனைப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள் என்று சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் அந்த நண்பனுக்கு முகம் வெளுத்து விட்டது. என்னைப் பார்த்து அந்த சாமியார் சொன்னபடியே செய்யுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அவனுடைய நட்பு முறிந்து விட்டது என்றுதான் கொள்ளவேண்டும்.

உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.