நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பழைய ஞாபகந்தான் பேராண்டி


பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:14 PM
இன்றைய குழந்தைகளுக்கு அந்த கால ஆசாமியின் ஒரு கடிதம்.
நாங்கள் நினைப்பதெல்லாம் 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF



• தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்nkட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை

• எங்களுக்கு நல்ல கதை சொல்ல அன்பான தாத்தா பாட்டி இருந்தார்கள். கலாச்சாரத்தை கெடுக்கும் மெகா சீரியல்கள் டஹ்ரும் டிவி பெட்டிகள் இல்லை

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு (குண்டு பல்புதான், மண்ணெண்ணெய் விளக்குதான்) வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். ஆமாம் பேப்பர் காத்தாடிகள் தீப்பெட்டி ரயில்கள் பாண்டி விளையாட்டு கில்லி தாண்டல் போன்றன ஆனால் இன்றோ அனைத்தும் ப்ரொவிசனல் ஸ்டோர்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும். எனவே எங்கள் ஜிம்கள் எல்லாம் எங்கள் வீதிகளிலிலேயே இருந்தன (காசு பறிக்காமல்)
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை .

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

• முக்கியமாக பெண்களை நம் தாயாக மற்றும் கூட பிறந்தவர்களாக நினைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் டெல்லி நியூஸ் போன்றவற்றை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

குருச்சந்திரன்
பதிலளிநீக்கு
பதில்கள்
  1. பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:19 PM

    எங்கேயோ படித்த ஞாபகம் என்று என் நண்பன் எனக்கு அனுப்பிய ஒரு கடிதம்.
    குருச்சந்திரன் அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது.

    செல் போன் டவர்களால் தொலைந்து போன சிட்டு குருவிகளின் கீச் கீச் குரல்கள் 

    நானும் வீரன்தான் என்று காட்ட, பயந்து பயந்து மாடு விரட்டிய நம் ஊர் மஞ்சு விரட்டு மைதானம் 

    பெரிது பெரிதாக தொங்கிய விழுதுகளில் ஊஞ்சல் ஆடி மனம் களித்த நம் ஊர் பள்ளிகூடத்திலிருந்த ஓங்கி வளர்ந்த ஆலமரம் 

    காத்திருக்கும் போது வராமல் பாதி தூரம் நடந்த பிறகு நம்மை கடந்து போகும், ஒரே ஒரு முறை நம் ஊருக்கு எட்டிப்பார்க்கும் பேருந்து 

    யாயும் நீயும் யாராகியரோ என்று இருந்த நம்மை பின்னர் செம்புல பெய நீர் போல நண்பர்களாக்கிய நம்மூர் திருவிழாக்கள் 

    தூக்கி போடு நீச்சல் தன்னாலே வந்துடும் என்று சொல்லி தள்ளி விட , நெஞ்சில் சிலீர் என்று நீர் தெளித்த ஆழ் கிணறுகள் 

    அக்கம்பக்கத்து நண்பர், நண்பிகளுடன் சேர்ந்து விளையாடும்போது மரத்தடியில் நெருப்பு மூட்டி ஆக்கிய கூட்டாஞ்சோறு 

    பாங்குல இருக்கோ இல்லையோ எப்போதும் காசு வைத்திருக்கும் எங்க வீட்டு ஆயாவின் இடுப்பிலிருக்கும் சுருக்குப்பை 

    பாம் பாம் என்ற சத்ததுதுடன் வந்த காரை மார்க் 1,2,3 என்றுவகை பிரித்த பணக்கார வீட்டு பையன் 

    மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி 

    முகத்தை மட்டும் விட்டுட்டு உடம்புலே எங்கே வேணுமானாலும் விளாசலாம், பையன் மட்டும் நல்லா படிக்கணும்னு வாத்தியாருக்கு அனுமதி தந்த அப்பா அம்மா

    இதெல்லாம் நான் உனக்கு எப்படி காட்டுவேன்?
    எல்லாமே என் கண் முன்னாலேயே காணாமல் போய் விட்டதே

    திருச்சி அஞ்சு

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

நினைவுகளின் சங்கமம்


கோவை விவசாயக் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புத்தோழர்களுடன் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம் நான் பல வருடங்கள் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்த காரணத்தினால் எனக்கும் அழைப்பு வரும்.

அந்த வகையில் நேற்று ஒரு சந்திப்பு நடந்தது. ஆசிரியர்களுக்குத் தங்கள் பழைய மாணவர்களைச் சந்திப்பதிலும் மாணவர்களுக்குத் தங்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதிலும் எப்போதும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். அது தவிர நேற்று ஒரு மாணவரின் திருமண நாளாக அமைந்ததால் அந்த மகிழ்ச்சியையும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.




அந்த விழாவில் எடுத்த சில படங்கள். (நோக்கியா 5230 செல்போனில் எடுத்தது. ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது).


என்னைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்று நம்புகிறேன்.
இடமிருந்து மூன்றாவதாக இருப்பதுதான் நான்.

பழைய நினைவுகள் எப்பொழுதும் இனிமையானவை.