பேங்க் மோசடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேங்க் மோசடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூன், 2013

எனக்குப் புரியாத பேங்க் விவரம் ஒன்று

இன்றைய செய்தித்தாள்களில் வந்த ஒரு பேங்க் மோசடி விவகாரம் பற்றி படித்திருப்பீர்கள். கர்நாடகா பெங்களூரில் உள்ள அரசு சார்ந்த ஒரு நிறுவனம் 25 கோடி ரூபாயை இரண்டாகப்பிரித்து சேலம் மாவட்டத்தில் சங்ககிரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் டிபாசிட்டாக ஒரு வருடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

அதில் 12 கோடி ரூபாயை வங்கி அதிகாரிகள் மோசடி செய்திருக்கிறார்கள்.

எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் இந்தப் பணத்தை டிபாசிட் வைப்பதற்கு ஒரு நல்ல பேங்க் பெங்களூரில் இல்லையா என்பதுதான்?  பெங்களூரில் இருந்து இவ்வளவு தூரம் வருவதற்கான காரணம் என்ன?

என் சந்தேகம் நியாயமானதுதானா?