வண்டவாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வண்டவாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஏப்ரல், 2015

என் வண்டவாளம் என்னும் தண்டவாளம்



"அப்பப்பா என்ன வெய்யில்" என்கிற போன பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம். என்னுடைய SSLC சர்டிபிகேட்டைப் பார்க்க எத்தனை மக்களுக்கு எத்தனை ஆர்வம். அதைத் தீர்க்கவில்லை என்றால் நான் பதிவராக இருப்பதில் அர்த்தமே இல்லை.





  • // உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?//

    இவ்வளவு அழகாக பதிவுகள் போடுபவர், வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியராக குப்பை கொட்டினவர், தனது அறையை இவ்வளவு அழகாக (மனைவியின் தொந்திரவு தாங்காமல்தான் என்றாலும் கூட) வைத்திருப்பவர், என்பதை நெருங்கும் வயதிலும் தனது அந்தப்புரத்துக்கு புதுப்புது ராணிகளை சேர்த்துக்கொண்டிருப்பவர், தன்னை யாராவது சீண்டினால் ஆக்ரோஷமாக பதிலளிப்பவர், எல்லாவற்றுக்கும் மேலாக "வண்டவாளம்" என்று கிண்டல் செய்யும் பின்னூட்டங்களையும் போடுபவர் - இவ்வளவும் செய்பவர் கண்டிப்பாக SSLC இல் நல்ல மதிப்பெண்தான் பெற்றிருப்பார் என்பது எனது யூகம்.

    சேலம் குரு
    நீக்கு
  • இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்கே, நான் SSLC படித்தேனா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஒரு நாள் டைம் கொடுங்க, வீட்டையே பொரட்டி அந்த SSLC பொஸ்தகத்தைக் கண்டுபிடிச்சு போட்டோ எடுத்து ஒரு பதிவு போடாட்டி என் பேரை மாத்தி வச்சுக்கறேன்.

  • நான் SSLC படித்த வருடம் 1950-51. படித்த பள்ளி - கோயமுத்தூர் ஆர். எஸ். புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி. அப்பொழுது SSLC படிப்பு மொத்தம் 11 வருடம். SSLC பரீட்சையில் மொத்தம் 5 பாடங்கள். பாடத்திற்கு 100 மார்க்குகள் வீதம் மொத்தம் 500 மார்க்குகள். அந்தக் காலத்தில் பொதுவாக 40 லிருந்து 60 மார்க் வரைதான் போடுவார்கள். சென்டம் என்பதெல்லாம் அந்தக்காலத்தில் கேள்விப்பட்டதே இல்லை. கணக்குப் பாடத்தில் மட்டும் கொஞ்சம் அதிகம் மார்க் போடுவார்கள்.

    என் மார்க்குகளை கவனித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

    இந்தப் படங்களைப் பாருங்க

    1. SSLC புஸ்தகத்தின் அட்டை.


    2. SSLC புஸ்தகத்தில் அந்தக்காலத்தில் தகப்பனார் கையெழுத்துடன் ஒட்டப்படும் பிறந்த தேதிக்கான சர்ட்டிபிகேட். உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் அந்தக்காலத்தில் அத்தாட்சி.


    இதில் உள்ள என் தகப்பனாரின் கையெழுத்தைப் பாருங்கள். இந்தக் கையெழுத்தை அந்தக் காலத்தில் நான் சர்வ சாதாரணமாகப் போடுவேன். பின்னே ஸ்கூல் புராக்ரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவிடமா கையெழுத்து  வாங்க முடியும்? அப்பாவிடம் நேரில் நின்று பேசினதே இல்லை. அப்புறம் எங்க கையெழுத்து வாங்கறது?

    3. SSLC முதல் பக்கம்


    எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் இ.வி. சிங்காரவேலு அவர்களின் கையெழுத்தைப் பாருங்கள். கட்டைப் பேனாவினால் போட்டது.

    4. ஸ்கூல் பரீட்சைகளில் என் மார்க்குகள்.


    எல்லா மார்க்குகளும் 40 முதல் 50 க்குள்தான்.

    5. ஹைஸ்கூல் வருடங்களில் என்னுடைய உயரம் மற்றும் எடை. சரியாக கண்டு பிடிப்பவர்களின் கண் கூர்மையாக இருக்கிறதென்று சர்டிபிகேட் கொடுக்கிறேன்.




    6. ஆஹா, என்னுடைய தண்டவாளம் (வண்டவாளம்)




                            1. தமிழ்
                            2. ஆங்கிலம்
                            3.  கணக்கு
                            4.  பொது விஞ்ஞானம்
                            5.  சமூகப் பாடங்கள்

    மொத்த மார்க்குகள்  324/500. =  65 %

    கடைசியில் இருப்பது பிரசிடென்சி ஏவரேஜ். என் மார்க்குகள் அனைத்தும் இதைவிட அதிகமாக இருப்பதைக் கவனிக்கவும்.

    நான் SSLC என்பதை இப்பொழுதாவது நம்புகிறீர்களா? இல்லை என் ஹெட்மாஸ்டர் காலம் சென்ற திரு. சிங்காரவேலு முதலியாரை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வரவா?

                                                  Image result for RS Puram Municipal High School

    இல்லை, என் வகுப்புத் தோழர் காலம் சென்ற திரு. C.T. தண்டபாணி M.P. அவர்களைக் கூட்டிக்கொண்டு வரவா?