விநோதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநோதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

I have no powers


மும்பையில் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு டில்லி புறப்பட்டோம். கோச் மாறியிருக்கிறது என்ற விஷயம் மாணவர்களில் யாருக்கும் தெரியவில்லை.
 
டில்லியில் எந்தவித தொந்திரவும் ஏற்படவில்லை. அங்கும் எங்கள் வேலைகள் முடிந்த பின் கல்கத்தா (ஹௌரா) விற்கு பயணமானோம். ஹௌரா ஸ்டேஷன் சேர்ந்தவுடன், கோச்சை அதற்குண்டான ட்ரேக்கில் நிறுத்தவேண்டுமே. (ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இந்த மாதிரி டூர் வரும் கோச்சுகளை நிறுத்த ஒரு தனி ட்ரேக் ஸ்டேஷன் வாசலுக்குப் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கும். கோச்சை இங்கு நிறுத்தினால்தான் வெளியே போகவர சௌகரியமாக இருக்கும்). அதற்காக டெபுடி ஸ்டேஷன் சூப்பிரன்டென்டிடம் நானும் இரண்டு மாணவர்களும் போனோம். போய் விவரங்களைச் சொல்லி, கோச்சை ஸ்பெஷல் ட்ரேக்கில் நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டோம்.

அவர் “I have no powers”  என்று சொன்னார். திரும்பவும் தயவு செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். அப்போதும் அப்படியே “I have no powers”  என்று சொன்னார். இன்னொரு முறையும் கேட்டோம். இன்னொரு முறையும் அப்படியே “I have no powers” என்று சொன்னார். மொத்தம் மூன்று முறை ஆயிற்று. எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. நான் கொஞ்சம் குரலை உயர்த்தி சத்தமாக “How much it will cost?” என்றேன். இதைக்கேட்டு அந்த ஆள் கோபப்படுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த மனுஷனுக்கு துளிகூட கோபம் வரவேயில்லை. கூலாக “Fifty Rupees” என்றானே பாருங்கள்.

அடப்பாவி, இதற்காகவா எங்களை இப்படி டென்ஷன் படுத்தினாய் என்று நினைத்துக்கொண்டு ஐம்பது ரூபாயைக் கொடுத்தேன். அதை வாங்கினவுடன் அவன் செய்ததுதான் வேடிக்கை. உடனே சீட்டிலிருந்து எழுந்து ஒரே ஓட்டமாக ஓடினான். எங்கே ஓடுகிறான் என்று பார்த்தால், நாங்கள் வந்த ரயிலின் என்ஜினுக்கு ஓடினான். ஆமாங்க, ஒரு டெபுடி ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட் ஓடி அன்றுதான் பார்த்தேன்.

அங்கு சென்று அந்த இன்ஜின் டிரைவரிடம் ஏதோ சொன்னான். அந்த டிரைவரும் தலையை ஆட்டிவிட்டு, எங்கள் கோச்சை அந்த ஸ்பெஷல் ட்ரேக்கில் கொண்டு வந்து விட்டான். உலகில் மனிதர்களின் வேறுபட்ட குணாதசியங்களை அன்று நேரில் பார்த்தேன். ஆக ஐம்பது ரூபாய் செலவில் (லஞ்சத்தில்) எங்கள் கோச் சௌகரியமான இடத்தில் நிறுத்தப்பட்டது.

திங்கள், 29 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ் முடிவு.

 

 
டரங்க் பெட்டியும் தலைப்பார்சலும் கிடைத்த பிறகு போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டது. ஆளவந்தார் வீட்டிலிருந்தும் அவர் வேலை பார்த்த கம்பெனி முதலாளியிடமிருந்தும் ஆளைக்காணவில்லை என்ற புகார் போலீஸுக்கு கிடைத்தது. இருவரையும் கூப்பிட்டு தலையைக் காட்டியதில் இறந்தது ஆளவந்தார்தான் எனபது உறுதியாகியது.

பிறகு என்ன, விசாரணையில் எல்லா விவரங்களும் தெரியவந்தன. வில்லனும் கதாநாயகியும் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற வரையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வெளியாகிக்கொண்டு இருந்தன. இந்தச் செய்திகளை -யெல்லாம் படித்தவுடன் வில்லனுக்கும் கதாநாயகிக்கும் இருப்புக்கொள்ளவில்லை. அதிக நாள் தலை மறைவாக இருக்கமுடியாது எனத்தெரிந்தது. இருவரும் மெட்ராஸ் கோர்ட்டில் வந்து  சரண்டர் ஆகிவிட்டார்கள்.

போலீஸ் விசாரணை எவ்வளவு நாள் நடந்தது என்பது சரியாக நினைவில்லை. விசாரணை முடிந்து கேஸ் கோர்ட்டிற்கு வந்த பிறகுதான் வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. 200க்கும் மேற்பட்ட சாக்ஷிகள். 20க்கும் மேற்பட்ட சாதனங்கள். இவைகளையெல்லாம் ஒரு ஆங்கில துப்பறியும் படம் பார்ப்பது போன்று விசாரணை விபரங்கள் பந்திரிக்கைகளில் வெளியாயின. தினத்தந்தியில் வழக்கு விபரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. பத்திரிக்கையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது.

மெட்ராஸ்வாசிகள் அநேகம் பேர் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு கேஸ் விசாரணையைப் பார்க்கப் போனார்கள். கேஸ் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேல் நடந்தது. கடைசியாக கேஸ் விசாரணை முடிந்து வக்கீல்கள் வாதம் முடிந்து கேஸ் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

தீர்ப்பு நாள் விடியற்காலையிலிருந்தே ஹைக்கோர்ட்டில் கூட்டம் கூடிவிட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜட்ஜ் உள்ளே போவதற்கே போலீஸ் உதவி தேவைப்பட்டது. ஜட்ஜ் தீர்ப்பு கூறும் நேரம் வந்துவிட்டது. கோர்ட்டில் மயான அமைதி. தீர்ப்பு படிக்கப்பட்டது. வில்லனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கதாநாயகிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தீர்ப்பு வழங்கப்பட்டது.   



இப்படியாக ஓர் ஆண்டுக்கு மேல் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த கேஸ் முடிவிற்கு வந்தது.

பின் குறிப்பு: தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்த இருவரும் மக்கள் சமுத்திரத்தில் மறைந்து போனார்கள்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

கொலைக்கான காரணமும், கொலை நடந்த விவரங்களும்.

 
(எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்களும், பெண்களும், திடமனது இல்லாத ஆண்களும் தயவு செய்து இந்த பதிவைப்படிக்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.)

இன்றைக்கு பேப்பரில் கொலைச்செய்திகள் சர்வ சாதாரணமாயப் போய்விட்டன. குறிப்பாக கள்ளக்காதல் விவகாரத்தினால் நடக்கும் கொலைகள். மூன்று பேர் இருப்பார்கள். இரண்டு ஆண், ஒரு பெண் அல்லது இரண்டு பெண், ஒரு ஆண். இதில் இரண்டு பேர் சேர்ந்து மூன்றாவது ஆளைப்போட்டுத் தள்ளுவார்கள். இந்த மாதிரி செய்திகள் சராசரியாக தினம் இரண்டு வருகின்றன. அதை நாம் கண்டுகொள்வதே இல்லை. அது மாமூல் செய்தியாகப்போய்விட்டது. அப்படிப்பட்ட செய்தி வராவிட்டால்தான் ஏன் வரவில்லை என்று யோசிப்போம்.

ஆளவந்தார் கேஸிலும் இதே கதைதான். என்ன, அன்றைக்கு இப்படிப்பட்ட கேஸ்கள் அபூர்வம். ஒரு அழகான பெண் (30 வயசு) தினமும் ஜெம் அண்ட் கோ வழியாக அங்குள்ள ஏதோ ஒரு ஆபீஸுக்கு வேலைக்கு போய்வந்து கொண்டிருந்தது. நம் கதாநாயகர் பார்த்துக்கொண்டே இருந்தார். எப்படியோ அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டார். இந்த மாதிரி கேஸ்களின் வழக்கம்போல், அறிமுகம் முற்றிப்போய் லாட்ஜில் ரூம் போடுமளவிற்கு வளர்ந்து விட்டது. பிறகு லாட்ஜ் செலவை மிச்சப்படுத்துவதற்காக அந்தப்பெண்ணின் வீட்டையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவள் புருஷனுக்கு ( சாரி, முதலிலேயே சொல்ல மறந்துவிட்டேன்-அவளுக்கு கல்யாணமாகிவிட்டது) அடிக்கடி டூர் போகும் வேலை. அதனால் எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரே பொறாமை. ஒரு நாள் அந்த ஆள் வீட்டில் தனியாக இருக்கும்போது போட்டுக்கொடுத்து விட்டார்கள்.

அன்று அந்தப்பெண் வேலையிலிருந்து வந்தவுடன், இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் நடக்கும் வழக்கமான வாதப்பிரதிவாதங்கள், அடிதடிகள் எல்லாம் முடிந்து ஒரு அமைதி நிலைமைக்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி அடுத்த நாள் பகலில் நம் கதாநாயகனை வீட்டுக்கு வரச்சொல்லி கதாநாயகி அழைப்பு விடுக்கவேண்டும். அவன் வந்தவுடன் மற்ற விஷயங்களை நம் வில்லன் (வில்லன் யார், அந்தப்பெண்ணின் புருஷன்தான்) கவனித்துக்கொள்வார். இப்படியாக முடிவு ஆகியது.

காலையில் வழக்கம்போல் கதாநாயகி வேலைக்குப்போவது போல் சென்று கதாநாயகனுக்கு அழைப்பு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். கதாநாயகனும் சொன்ன நேரத்தில் வந்துவிட்டார். கதவு சாத்தப்பட்டது. கதாநாயகனும் குஷியானார். அப்போது வில்லன் சீனில் பிரவேசித்தார். கதாநாயகனுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

பிறகு நடந்ததை அதிகமாக விவரிக்க வேண்டிதில்லை. புருஷனும் மனைவியும் சேர்ந்து ஆளவந்தாரை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதுவரை நடந்தது சாதாரணமாக நடப்பதுதான். அதற்கப்புறம் நடந்தவைதான் கிளைமேக்ஸ். அப்போது பகல் 12 மணி. 

 

இனி இந்த பாடியை என்ன செய்வது? வில்லன் திட்டம் தீட்டினார். சைனாபஜாருக்குப்போய் ஒரு பெரிய டிரங்க் பெட்டி வாங்கினார். ஒரு ரிக்சாவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஆள் இழுக்கும் கை ரிக்சாக்கள்தான் இருந்தன. பெட்டியை வீட்டில் இறக்கி வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு கடையில் ஒரு பெரிய வெட்டுக்கத்தி இரவல் வாங்கி வந்தார். பிறகு கதவைச்சாத்தி லாக் செய்துவிட்டு, போட்டிருந்த சட்டை பேண்ட் எல்லாம் கழற்றி வைத்துவிட்டு, பாடியை கவனித்தார்(?). முதலில் தலையைத் தனியாக வெட்டி ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தார். பிறகு கை, கால்களைத் தனித்தனியாக வெட்டி, டிரங்க் பாக்ஸில் சுற்றிலும் கதாநாயகனின் துணிகளைப்போட்டு நடுவில் முண்டத்தையும் கைகால்களையும் பேக் செய்தார். பெட்டியை நன்றாக மூடி பூட்டுப்போட்டார். இரண்டு பேருமாகச் சேர்ந்து பெட்டியை முன் வராந்தாவில் கொண்டுவந்து வைத்தனர். பிறகு தலையை இன்னும் கொஞ்சம் பேப்பரில் சுற்றி தனியாக வைத்தார். மறக்காமல் இரவல் வாங்கிய கத்தியை திருப்பிக்கொடுத்தார்.
 
பிறகு வில்லனும் கதாநாயகியும் சேர்ந்து வீட்டை முழுவதும் கழுவிவிட்டார்கள். பிறகு வில்லன் குளித்தார். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. வெளியில் போய் எக்மோர் ஸ்டேஷன் போவதற்கு என்று ஒரு ரிக்சா பேசி அழைத்துவந்தார். அந்த ஆளையே பெட்டியை எடுத்து ரிக்சாவில் வைக்கச்சொல்லி, தானும் ஏறிக்கொண்டு எக்மோர் சென்றார்கள். அங்கு ரிக்சாக்காரருக்கு வாடகை கொடுத்துவிட்டு, ஒரு போர்ட்டரைப்பிடித்தார். பெட்டியை கொண்டுபோய்  போட்மெயிலில் ஒரு கம்பார்ட்மென்டில் வைக்கச்சொல்லி, கூலி கொடுத்து போர்ட்டரை அனுப்பி விட்டார். சிறிது நேரம் அங்கே உட்கார்ந்துவிட்டு, பிறகு கிளம்பி வீடுவந்து சேர்ந்தார்.



உடனே அந்த தலைப்பார்சலை எடுத்துக்கொண்டு இன்னொரு ரிக்சா பிடித்து சாந்தோம் பீச்சுக்கு சென்றார். ரிக்சாவை அனுப்பிவிட்டு, கடல் நீருக்குள் சிறிது தூரம் சென்று அந்தப்பார்சலை கடலுக்குள் வீசிவிட்டு வீட்டுக்குத்திரும்பினார். மணி 10. உடனே அவசியமான துணிமணிகளை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, பிராட்வே பஸ் ஸ்டேண்ட் சென்று பெங்களூருக்கு பஸ் ஏறிவிட்டார்கள்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன்.....