நான் யார்?
வியாழன், 20 ஜனவரி, 2011
கொஞ்சம் குழம்பலாமா?
நான் யார்?
புதன், 19 ஜனவரி, 2011
யானை, யானை
கிருஷ்ணனைப் போட்டோ எடுக்க விடவில்லை. ஆபத்பாந்தவன், நம் கணேசன் அந்தக் கவலையைப் போக்கிவிட்டார். தேவஸ்தான யானைத் தாவில் சுமார் ஐம்பது யானைகளைப் பராமரிக்கிறார்கள்.
அனைத்து யானைகளையும் பார்க்க இங்கே செல்லவும்.
அறிவுப்பு: முதலில் ஆல்பத்தை Private என்று தெரியாமல் போட்டுவிட்டேன். இப்போது அதை Public என்று மாற்றிவிட்டேன். இப்போது சரியாகத்தெரியும்.
புதன், 12 ஜனவரி, 2011
சிவப்பு நாடா தர்பார் – தொடர்ச்சி.
உட்கார கூட இருக்கை இல்லை, தேவையில்லாத கியூ அதைக்கட்டுப்படுத்த ஒளிப்பான் இருந்தாலும் அது வேலை செய்யவில்லை ஆனால் பணம் வாங்கும் இடத்தில் அது வேலை செய்கிறது.காறி துப்பனும் போல் இருந்தது.மண்டை உள்ளே இருப்பது எந்த அளவுக்கு காய்ந்துபோயிருந்தால் பொது ஜனத்தை இப்படியெல்லாம் பழிவாங்க முடியும்.
அவர்கள் தேவை என்பதை கியூவில் நிற்கும் போது அல்லது உங்கள் முறை வரும் போது தான் தெரிந்துகொள்ளமுடியும்.இணையத்தில் அவர்கள் தேவை முழுமையாக இல்லை அல்லது அன்று வேலை பார்க்கும் அதிகாரியின் மன நிலையை பொருந்து உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் எத்தனியோ!!
உங்களுடைய ஆதங்கத்தை நன்கு புரிந்து கொண்டேன். ஆனால் அன்று நான் செய்தது தவறுதான். இளமை வேகத்தில், நான் சரியாக என் கடமைகளைச் செய்துகொண்டு இருக்கும்போது தார்க்குச்சி போடுகிறாரே என்ற வேகம்தான் என்னை அப்படிச் செய்யத்தூண்டியது. வாயில்லாப் பிராணிகளான மாட்டையோ, குதிரையையோ கூட அதிகம் விரட்டினால் முரண்டு பிடிப்பதில்லையா? அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இதைப்பற்றி மேலும் ஒரு பதிவு போடுகிறேன்.
செவ்வாய், 11 ஜனவரி, 2011
சிவப்பு நாடா தர்பார்
அரசு அலுவலங்களில் நடைமுறை என்னவென்றால், தலைமை ஆபீசர் தவிர வேறு யாரும் தனிப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடாது. ஒரு கடிதத்திற்கு பதில் எழுதுவதாக இருந்தால், இன்னொரு முழுதாள் எடுத்துக்கொண்டு அதில், “இந்தக் கடிதத்தில் இன்னார், இன்ன விவரம் கேட்டிருக்கிறார், அந்த விபரம் இந்த ஆபீசில் இல்லை, வேறு (ஏதாவது ஒரு ஆபீஸ் பெயரைச்சொல்லி) ஆபீஸில் இருக்கலாம், என்ன செய்வது?” என்று எழுதி அந்தக்காகிதத்தை முதல் கடிதத்துடன் சேர்த்து ஆபீசரின் உத்திரவுக்காக என்று எழுதி ஆபீசருக்கு அனுப்பவேண்டும். இதற்கு நோட் பைஃல் என்று சொல்வார்கள். நானும் அதேமாதிரி செய்து மூன்றாவது நாள் என் ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிவிட்டு, டைப்பிஸ்ட்டிடம் கொடுத்தேன்.
அவர் அதை ஆபீசர் டேபிளில் வைத்தார். ஆபீசர் அந்த பைலில் “எஸ்” என்று எழுதி திரும்பவும் எனக்கு பழய மாதிரியே வந்தது. நானும் உடனே ஒரு பதில் எழுதி வைத்திருந்து, மூன்றாவது நாள் திரும்பக் கொடுத்தேன். அந்த லெட்டர் மறுநாள் ஆபீசர் கையெழுத்து போட்டு டைப்பிஸ்ட்டிடம் வந்து அவர் அதை டைப் அடித்து மூன்று நாள் கழித்து என்னிடம் வந்தது. நானும் அதை என்னிடம் மூன்று நாள் வைத்திருந்து திரும்பக் கொடுத்தேன். அப்புறம் அந்தக் கடிதம் ஆபீசர் கையெழுத்துப்போட்டு தபாலில் சேர இரண்டு நாள் ஆயிற்று. ஆக மொத்தம் முன்பு ஒரே நாளில் பதிலளித்த கடிதத்திற்கு, புது ஆர்டர் போட்டபிறகு 18 நாட்கள் கழித்து பதில் போனது. ஆனால் இதுதான் சரியான அரசு ஆபீஸ் நடைமுறை ஆகும். யாருக்கு என்ன வந்தது? அரசு அலுவலகங்களில் ரூல்ஸை அனுசரித்தால் போதும்.
சனி, 8 ஜனவரி, 2011
எனக்குப் புரியாத ஒரு விசயம்.
நண்பர்களே! நீங்கள் தற்போது படித்த விசயம் உங்களோடு மாத்திரம் நின்று விடாது பிறரையும் சென்றடைய தங்களின் மேலான ஓட்டினை போட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வியாழன், 6 ஜனவரி, 2011
அரசு அலுவலகங்களில் தணிக்கை
வாழ்க்கையில் கணக்கு வைப்பதும் அந்தக் கணக்கை உரியவர்களிடம் அவ்வப்போது காட்டி ஒப்புதல் வாங்குவதும் நடைமுறையில் உள்ள வழக்கம்தான். கணக்கு பணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற செயல்களுக்கும் சேர்த்துத்தான். நான் யாருக்கும் கணக்குக் காட்டவேண்டியதில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியாவின் பெரிய பணக்காரரான அம்பானியும் கூட தன் மனச்சாட்சிக்கு கணக்கு (பதில்) சொல்லித்தான் தீரவேண்டும்.
அரசு அலுவலகங்களில் இன்றும் நிலவும் பல நடைமுறைகள், வெள்ளைக்காரத் துரைகள் விட்டுச் சென்றவைகள்தான். அவர்களுக்கு இந்தியர்கள் மேல் தீராத சந்தேகம் இருந்தது. அதனால் தணிக்கை முறைகளை மிக தீவிரமாகக் கையாண்டு வந்தார்கள். இதில் இரண்டு விதமான தணிக்கைகள் உண்டு.
ஒன்று, துறை சார்ந்த தணிக்கை. இது மேலதிகாரிகள் தொழில் நுட்ப ரீதியாகச் செய்வது. அந்த அலுவலகத்தில் கடந்த வருடத்தில் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்திருக்கிறார்களா? அவ்வாறு செய்யாவிட்டால், ஏன் செய்யவில்லை? என்ன வசதிகள் இல்லை, என்ன வசதிகள் வேண்டும்? இப்படி ஆக்கபூர்வமாக தணிக்கை நடக்கும். இதிலும் சில அதிகாரிகள் வெறும் குற்றம் கண்டு பிடிப்பவர்களாகவே அமைவதும் உண்டு. இந்தத் தணிக்கை அந்த அலுவலகத்தில் செய்யவேண்டிய வேலைகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும்.
அடுத்தது, கணக்கு ரீதியான தணிக்கை. ஒரு அலுவலகத்தில் கடந்த ஆண்டு செய்த செலவுகள் முறையாகச் செய்யப்பட்டிருக்கறதா, ஏதாவது தில்லு முல்லு செய்திருக்கிறார்களா? என்று சரி பார்க்கும் தணிக்கை. பல அலுவலகத் தலைவர்கள் இந்தத் தணிக்கையைக் கண்டு பயந்து கொள்வார்கள். காரணம் அவர்களுக்கு தங்கள் துறை சார்ந்த விதி முறைகள் பற்றிய அறிவு போறாமல் இருக்கும். அவர்கள் இந்த தணிக்கைக்கு வரும் உதவி அதிகாரிகளுக்கு வேண்டிய உபசாரங்களை அதிகமாகச் செய்து அவர்களை சந்தோஷப்படுத்தி, அதிகமான தணிக்கைக் குறிப்புகளை எழுதாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். என்ன சௌகரியங்கள் என்று தெரியவேண்டுமல்லவா? அதிகம் ஒன்றுமில்லை. அவர்கள் அந்த அலுவலகங்களிலேயே தங்கிக்கொள்வார்கள். அவர்கள் தங்கும் நாட்களில் இலவச உணவு, டீ, காபி, எடுபிடி வேலைகளுக்கு ஒரு ஆள், ஒரு நாள் சினிமா, பக்கத்திலிருக்கும் ஒரு பிரபல கோவிலுக்கு ஒரு விசிட், அசைவம் சாப்பிடுபவர்களாயிருந்தால் ஒரு நாள் அசைவ விருந்து, ஊருக்குப் போகும்போது பண்ணையிலிருந்து தேங்காய், மற்ற காய்கறிகள், இவ்வளவுதான்.
இந்த மாதிரி சௌகரியங்களை அனுபவித்த அந்த உதவி அதிகாரிகள், தாங்கள் போகும் எல்லா அலுவலங்களிலும் இந்த மாதிரி சௌகரியங்களை எதிர்பார்ப்பார்கள். அந்த சௌகரியங்கள் செய்யப்படாவிட்டால் வேண்டுமென்றே பல தணிக்கைக் குறிப்புகளை எழுதி அந்த அலுவலகத் தலைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். அதனால் பெரும்பாலான அலுவலகங்களில் இந்த சௌகரியங்களைச் செய்து கொடுத்து விடுவார்கள். அதற்கு ஆகும் செலவை அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறை.
இந்த தணிக்கைகளில் பல சமயம் வேடிக்கைகள் நடக்கும். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம். நான் வேலை செய்தது வேதியல் துறை. அங்கு நிறைய வேதியல் பொருட்கள் தேவைப்படும். அவைகளை டெண்டர் விட்டு வாங்குவோம். அதில் கந்தக அமிலமும் ஒன்று. அது அந்தக் காலத்தில் பீங்கான் ஜாடிகளில் வரும். அந்த அமிலம் தீர்ந்தவுடன் அந்த பீங்கான் ஜாடிகளை ஊறுகாய் போடுவதற்காக அங்கு பணி புரியும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆகவே அந்த காலி ஜாடிகளை கணக்கில் காட்டுவதில்லை. நியாயமாக அவைகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
ஒரு சில ஜாடிகளை இந்த தணிக்கை உதவியாளர்களுக்கும் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் ஒரு சமயம் அவர்கள் நன்றி கெட்டத்தனமாக, “இவ்வளவு அமிலங்கள் வாங்கியிருக்கிறீர்களே, அந்த காலி ஜாடிகளுக்கு கணக்கு எங்கே” என்று எழுதி வைத்து விட்டார்கள். இந்த உதவியாளர்கள் எழுதி வைத்தது எல்லாவற்றையும் ஒரு மேலதிகாரி வந்து எல்லோரையும் வைத்து ஒரு விவாதம் நடத்தி பிறகுதான் அந்த குறிப்புகளை அப்ரூவ் செய்வார். நாங்கள் ஒரு யுக்தி செய்தோம். “சிட்ரிக் அமிலம்” (லெமன் சால்ட்) என்று ஒன்று இருக்கிறது. அது அட்டைப் பெட்டியில் வரும். அதை எடுத்து தயாராக வைத்திருந்தோம். அந்த தணிக்கை ஆபீசர் வந்து இந்தக் குறிப்பைப் படித்ததும் நாங்கள் இந்த சிட்ரிக் அமில பாக்கெட்டைக் காட்டி, எல்லா அமிலங்களும் இப்படி அட்டைப்பெட்டியில் போட்டுத்தான் வரும். நாங்கள் அந்த அமிலத்தை உபயோகித்தவுடன் இந்த அட்டையை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம் என்று சொன்னோம். அவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு, அப்படியே எழுதிக்கொடுங்கள் என்று எங்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அந்தக் குறிப்பை ரத்து செய்து விட்டார்.
உலத்திலேயே கந்தக அமிலத்தை அட்டைப்பெட்டியில் வாங்கிய லேபரேட்டரி எங்களுடையதாகத்தான் இருக்கும். இன்னும் இதுபோல் பல வேடிக்கைகள் உண்டு. இந்தப் பதிவிற்கு கொடுக்கும் ஆதரவைப் பார்த்துவிட்டு அந்த வேடிக்கைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.