திங்கள், 18 டிசம்பர், 2017
31. காதல் கல்யாணம்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதுதான் இல்லறம். ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பணம். பணம் இல்லையேல் முற்றும் துறந்த முனிவர்களினால் கூட வாழ முடியாது.
தற்போது செய்தித்தாள்களில் பிரபலமாக இருக்கும் கௌசல்யா-சங்கர் காதலை எடுத்துக்கொள்வோம். அவல்களின் கல்யாணம் நடக்கும்போது கௌசல்யாவிற்கு 18 வயது, சங்கருக்கு 21 வயது. அப்போதுதான் இருவரும் மேஜர் ஆகியிருக்கிறார்கள். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கரின் குடும்பம் ஏழ்மையின் விளிம்பில்தான் இருந்தது என்று யூகிக்கிறேன்.
காதல் சினிமாவில் வேண்டுமானால் உயர்வாகக் காட்டப்படலாம். ஆனால் யதார்த்த த்தில் காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன.
இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. காதல், சாதி வெறி ஆகியவை ஒருபுறம் இருக்க, அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு வாழ்வதற்கான பொருளாதார பலம் அவர்களுக்கு இல்லை. அந்த நிலையில் தங்களுக்கு கல்யாணம் அவசியமா என்ற சிந்தனை வராதா?
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்?
இது எனக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது.
செவ்வாய், 12 டிசம்பர், 2017
30. பிட் காயின் எனும் மகா மோசடி
பிட்காயின் வேண்டுமா என்று நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அது ஒரு நையாண்டிப் பதிவு என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்தப் பதிவில் பலர் இந்த பிட்காயினைப் பற்றி விவரமான பதிவு ஒன்று போடுங்கள் என்று விருப்பப் பட்டிருந்தார்கள்.
அவர்களுக்காக நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து ஆராய்ச்சி செய்ததில் எனக்குத் தெரிய வந்த சில உண்மைகளை இங்கே பகிர்கின்றேன்.
1. மிக மிக அரிய மூளை உள்ள ஒருவன் இதில் ஈடுபட்டிருக்கிறான். பிட்காயின் என்பது அவன் மூளையில் உதித்த ஒரு பக்கா ஃப்ராடு ஐடியா.
2. பிட்காயின் என்பது ஒரு மாயை. ஒரு வித ஏமாற்று வழிகள் மூலம் அப்படி ஒன்று இருப்பதாக பலரை நம்ப வைத்திருக்கிறான். நம்ம ஜனங்கள்தான் இப்படிப்பட்ட ஏமாற்றுத் திட்டங்களில் பலாப் பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி தங்கள் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்களே.
நம் ஊரில் நடந்த ஈமு கோழித்திட்டம் நல்ல உதாரணம்.
3. இந்த பிட்காயினை உற்பத்தி செய்பவர்கள் ஊரில் உள்ள இளிச்சாவாயன்களைக் கண்டு பிடித்து அவர்கள் தலையில் இந்த பிட்காயின்களைக் கட்டுகிறார்கள்.
4. அந்த இளிச்சவாயன்கள் சாதாரண இளிச்சவாயன்கள் இல்லை. பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்டுகள். அவர்களுக்கு உள்ள ஒரே கவலை, அவர்களிடம் இருக்கும் கணக்குக் காட்டாத பணத்தை எப்படி பத்திரப்படுத்துவது என்பதுதான்.
5. அவர்களுக்கு இந்த பிட்காயின் ஒரு வரப்பிசாதமாக வாய்த்தது. இதில் பணத்தைப் போட்டால் பணம் எங்கிருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாது.
6. இவர்கள் போடும் பணம் எங்கே போகிறது என்று அந்த ஒரிஜினல் பக்காத் திருடனுக்கு மட்டுமே தெரியும்.
7. இந்த பிட்காயினைக் கொண்டு ஆயிரம் வித்தைகள் செய்யலாம் என்பது அண்டப்புளுகு.
8. இந்த பிட்காயினுக்கு விலை நிர்ணயம் செய்வது அந்த பக்காத்திருடனே.
9. இந்தப் பிட்காயினுக்காக தனி ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்ஐ நடத்துபவர்களும் வடிகட்டின அயோக்கியர்களே.
10. அவர்கள் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிந்தவர்கள்.
11. ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் என்ன வேலை செய்யும்? பிட்காயினை ஒருவன் விற்கிறான் என்றால், யாராவது வாங்குபவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இரண்டு பார்ட்டிகளும் கிடைத்து விட்டால் இவனிடம் இருந்து அவனுக்கு இந்த பிட்காயினைக் கைமாற்றி விட்டு இவனுடைய கமிஷனை எடுத்துக்கொள்வான்.
12. இந்த வியாபாரத்தில் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஒரு புரோக்கர் மட்டுமே. பிட்காயின் செல்லுமா செல்லாதா என்பதற்கு அவன் எந்தக் கேரன்டியும் தரமாட்டான். எல்லா ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்களும் இந்த விதமாகத்தான் செயல்படுகின்றன.
இந்த உலகமகாத் திருட்டு இன்னும் சில நாட்களில் அம்பலமாகப்போகிறது. பார்த்து அனுபவியுங்கள். பதிவர்கள் யாரிடமும் இந்த பிட்காயின் வாங்கும் அளவிற்கு வசதி இல்லையாதலால் அவர்கள் எந்த வருத்தமும் பட வேண்டியதில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)