கோழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 மார்ச், 2010

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?






இது காலம் காலமாக விதண்டா வாதக்காரர்களால் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப்பதில் கிடையாது. அப்படிச்சொன்னால் “அப்புறம் நீ என்ன பெரிய ஆராய்ச்சி பண்ணறே?” அப்படீன்னு மறு கேள்வி வரும்.

இந்த முன்னுரை எதற்கு என்றால், அடுத்து படிக்கவும்.

என்னுடைய ஒரு பதிவில் கோவி கண்ணன் சொன்னது.

//அடுத்த பதிவு எதை பற்றி கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழை வராமல் தடுக்குமாமே? எனவே அந்த மரத்தை பற்றி உங்களிடம் பதிவு எதிர்பார்க்கிறேன் //

“இதற்கு ஹாய் அரும்பாவூர் சொன்னது”

//இது என்ன சார் புது கதை? யார் அவிழ்த்து விட்டார்கள்?

இதை விளக்க பல பதிவுகள் போட வேண்டும். இதற்கு நம் டாக்டர் சார் எதற்கு?

நானே சொல்லிவிடுவேனே?

இதற்கு சிறிதளவு இயற்கையியல் அல்லது உயிரியல்/தாவரவியல்(BOTANY) தெரிந்தால் போதுமே!

அதைப்பற்றி பார்க்கும் முன்னர் ஒருவார்த்தை

இயற்கையினால் உண்டான எதுவும் அந்த இயற்கைக்கு எதிரானது அல்ல, மனிதர்களை தவிர!

கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் மட்டுமல்ல சப்பாத்தி, கள்ளி மற்று பல பாலை தாவரங்கள் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவது உண்மைதான்.

ஆனால் அவைகள் மழைவராமல் தடுக்கும் காரணிகள் அல்ல.

மீண்டும் சந்திப்போம்.//


அரும்பாவூர் ஏறக்குறைய சரியான பதில் சொல்லிவிட்டார். நானும் கொஞ்சம் சொல்லாவிட்டால் என்னுடைய டாக்டர் பட்டத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடுமல்லவா? அதற்காக.



கருவேலமரம், சப்பாத்தி கள்ளி முதலானவை இயற்கையாகவே மழை குறைந்த வறண்ட பிரதேசங்களில் வளரக்கூடியவை. அந்த சூழ்நிலையில் அவை தாக்குப்பிடிக்கத் தேவையான குணங்களைப் பெற்றிருக்கின்றன. அந்த குணங்களில் ஒன்று காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை இலைகள் மூலம் உறிஞ்சிக்கொள்வது. பிராணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் முட்கள். ஆகவே மழை குறைவான பிரதேசங்களில் இத்தகைய மரங்கள் வளருகின்றன.


இப்போது தலைப்பை மீண்டும் படியுங்கள். கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?


இல்லே, கோழி வறுவல்தான் முன்னே வந்ததா?

கருவேல மரம் வளர்ந்ததால் மழை குறைந்ததா? மழை குறைந்ததால் கருவேல மரம் வளர்ந்ததா?