இந்தப்படம் நிறையப் பேருக்கு அறிமுகம் ஆன படம். ரிஷிகேஷ் லக்ஷ்மண் ஜூலா எனப்படும் தொங்குபாலம். நான் குடும்பத்துடன் ஜூலை மாதம் போகலாமென்று இருக்கிறேன். போய் வந்த பிறகு உங்களை அறுப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த அறுவைகளைத் தாங்கக் கூடியவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்.
சத்தமே கேக்கலயே, இன்னும் கொஞ்சம் பலமா. ம்ம்ம், இப்ப கேக்குது. ரெடியா இருங்க J
மலைஓரமாகஉள்ளபகுதிகளில்அந்தவருடவிவசாயம்முடிந்தபிறகுநிலங்கள்தரிசாககிடக்கும். பக்கத்திலுள்ளமலைகளில்யானைகள்நிறையஉண்டு. வெயில்காலங்களில்மலைகளிலிருந்துயானைகள்சமவெளிநிலங்களுக்குமேய்ச்சலுக்குவருவதுண்டு. யானைகளின் இந்த குணத்தைப்பயன்படுத்தி அவைகளை வேட்டையாடுவார்கள் (அதாவது பிடிப்பார்கள்).
யானை வழக்கமாக வரும் வழியில் 15 ஆடி ஆழத்தில் ஒரு பள்ளம் தோண்டுவார்கள். இந்தப்பள்ளம் கீழே போகப்போக குறுகலாக, அதாவது கூம்பு வடிவத்தில் இருக்கும். அதன்மேல் குறுக்கும் நெடுக்குமாக மூங்கில் தப்பைகளைப் போட்டு அதன்மேல் தென்னை ஓலைகளை பரப்பி விட்டு, அதன் மேல் லேசாக மண் போடுவார்கள். சிறுவர்கள் அதன் மேல் நடக்கலாம், பெரியவர்கள் நடக்கமுடியாது. இந்த மண்ணில் சோள விதைகளை அடர்த்தியாகத்தூவி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து விடுவார்கள். ஒரு மாதத்தில் சோளம் நெருக்கமாக முளைத்துஒருஇரண்டடிவளர்ந்திருக்கும். இதுதான்யானைபிடிக்கும்குழி.
இந்த பிளாக்கைத்தொடரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்னுடைய இந்த "சாமியின் மன அலைகள்" என்கிற பிளாக்கு நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. எனக்குத்தெரிந்த புத்திமதி எல்லாம் சொல்லிப்பார்த்து சலித்துப்போய் எக்கேடும் கெட்டுப்போ என்று கை கழுவி விட்டேன். யாரும் சிபாரிசுக்கு வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய சொற்படி நடக்கும் வேறொரு பிளாக்கை சீக்கிரம் தத்தெடுத்து விடுகிறேன். அதையும் என்னுடைய விருப்பத்திற்கு பழக்க சிறிது நாள் பிடிக்கும். அதன் பிறகு பதிவுகளைத்தொடருகிறேன். இந்த பிளாக்கில் உள்ளவைகளையும் ஒவ்வொன்றாக மறுபதிவு செய்கிறேன். அது வரையிலும் இந்த பிளாக்குக்கு தண்டச்சோறு போடுகிறேன்.
அன்பர்கள் யாவரும் வழக்கம்போல் தங்களுடைய ஆதரவை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும். வேறு வழி தெரியாததால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
உங்கள் ஆதரவை வேண்டும் அன்பன், தாத்தா,
ப.கந்தசாமி.
பின் குறிப்பு: என்னுடைய இன்னொரு பிளாக்கான "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்" அதுவும் இதோடு சேர்ந்து கொழுப்பெடுத்துத் திரிகிறது. எல்லாம் இந்த "விண்டோஸ்-7" O.S. நிறுவியதின் விளைவுகள். அதையும் இதனுடன் சேர்த்து கை கழுவப்போகிறேன். காலுக்கு சேராத செருப்பை கழட்டி எறி என்று பெரியவர்கள் சொல்லிப்போயிருக்கிறார்கள். மூத்தோர் சொல்லைக் கடைப்பிடிப்பதே நமது கொள்கை.