இந்த மாதிரி கரும்பு தின்னக்கூலி கொடுப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கரும்பையே காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டும். அதை சும்மா கொடுத்து அதைத் தின்பதற்குக் கூலியும் கொடுக்கிறார்கள் என்றால் கசக்கவா செய்யும்?
இப்படி ஒருவர் இந்தக் கலிகாலத்தில் செய்கிறார். அவர்தான் தமிழ் வலைப் பதிவர்களின் ஜாம்பவான், திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
அவர் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவைகளில் 40 சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதியவர்கள் சுமார் 255 பேர்களுக்குப் பரிசு வழங்கியது தமிழ் பதிவுலக சரித்திரத்திலேயே ஒரு மகத்தான சாதனை. அத்தனை பரிசுப்பணமும் அவருடைய சொந்தப் பணம். இதற்காக அவர் யாரிடமும் எந்தவிதமான நன்கொடையும் வாங்கவில்லை.
இந்தப் போட்டியின் முடிவில் அவர் கடந்த மார்ச் மாதம் அவர் பதிவில் வெளியிட்ட இன்னொரு போட்டியின் அறிவிப்பைப் பாருங்கள்.
மீண்டும் ஓர் மிகச்சுலபமான பரிசுப்போட்டி அறிவிப்பு
02.01.2011 முதல் 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும் [மீள் பதிவுகள் உள்பட சுமார் 750] ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு + இனி புதிதாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஓர் சிறப்புப்பரிசு அளிக்கப்பட உள்ளது.
மேற்படி போட்டிக்கான ஒருசில எளிய நிபந்தனைகள்:
என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் தங்களுடைய சற்றே மாறுபட்ட பின்னூட்டம் 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் இடம் பெற வேண்டும்.
’அட’ ’ஆஹா’ ‘அருமை’ ’அசத்தல்’ ’பாராட்டுக்கள்’ ‘வாழ்த்துகள்’ ’படித்தேன்’ ‘ரசித்தேன்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லாமல், அந்தந்த பதிவுகளுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே சுவையான, மாறுபட்ட, வித்யாசமான கருத்துக்கள் கொண்ட பின்னூட்டமாகவும் அவை அமைந்தால் போதுமானது.
’அட’ ’ஆஹா’ ‘அருமை’ ’அசத்தல்’ ’பாராட்டுக்கள்’ ‘வாழ்த்துகள்’ ’படித்தேன்’ ‘ரசித்தேன்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லாமல், அந்தந்த பதிவுகளுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே சுவையான, மாறுபட்ட, வித்யாசமான கருத்துக்கள் கொண்ட பின்னூட்டமாகவும் அவை அமைந்தால் போதுமானது.
பிறர் கொடுத்துள்ள பின்னூட்டங்களையே COPY and PASTE செய்து தங்களின் பின்னூட்டமாக அளித்தல் கூடவே கூடாது.
என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும்
தங்களின் பின்னூட்டங்கள்
இடம்பெற வேண்டிய
இறுதி நாள்: 31.12.2015
இந்தப் போட்டியில் எந்தக் கஷ்டமும் இல்லை. அவருடைய பதிவுகள் படிப்பதற்கு மிகவும் சுவையானவை. அதை ஏற்கெனவே நான் படித்து பின்னூட்டங்களும் போட்டிருக்கிறேன். அப்படி பின்னூட்டங்கள் போடாமல் விட்டுப்போன பதிவுகளுக்கு இப்போது பின்னூட்டம் போட்டேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னூட்டங்கள் போட்டு அவருடைய போட்டியை முடித்து விட்டேன்.
இந்தப் போட்டியை முழுவதும் முடித்த முதல் பதிவர் நான்தான். அதனால் எனக்கு ஸ்பெஷலாக போட்டியின் கடைசி நாள் வராவிட்டாலும் கூட போட்டிக்கான பரிசை திரு. வைகோ அவர்கள் எனக்காக தயார் செய்து வைத்திருந்தார். நான் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குப் போகும்போது திருச்சியில் அவர் வீட்டிற்குப் போனதைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
அப்போது அவர் அந்தப் பரிசை, முழுசாக ஆயிரம் ரூபாய், புது ஐம்பது ரூபாய் நோட்டுகளாகத் தேர்ந்தெடுத்து அவைகளை அழகாக கலை நுட்பத்துடன் ஒரு அட்டையில் அடுக்கி, வாழ்த்துச் செய்தியுடன் எனக்குக் கொடுத்தார்.
முன்பக்கம்
பின்பக்கம்
இவைகளை நான் பெரும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவேன்.
இவ்வளவு அலங்காரமாக நம் கோபு சார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு எனக்கு வழங்கப்பட்டுள்ள பரிசு, என் ஒருவனே ஒருவனுக்கு மட்டுமே அல்ல.
வேறு சில வெற்றியாளர்களுக்கும், இந்தப்போட்டியில் இறுதி வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களுக்குமாக, திரு. கோபு சார், அழகாக வடிவமைத்து தன்னிடம் இப்போதே ரெடியாக வைத்துள்ளார்.
அவற்றையும் என் கண்களால் அவரின் வீட்டில் நான் இருந்தபோது கண்டு மகிழ முடிந்தது.
தலா ரூபாய் ஆயிரம் வீதம் அவர் இவ்வாறு அழகாக அலங்கரித்து வடிவமைத்து வைத்துள்ள வெற்றியாளர்களில் என் நினைவில் நிற்கும் ஒருசிலர்:
1) ’பூந்தளிர்’ வலைப்பதிவர் திருமதி. சிவகாமி அவர்கள்.
2) ’மனம் (மணம்) வீசும்’ வலைப்பதிவர் திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்
3) ‘மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
இவர்கள் அனைவரும் இறுதியில் வெற்றிபெறவும், ரூ. 1000 வீதம் நம் அன்புக்குரிய திரு. கோபு சாரிடமிருந்து பரிசினைப்பெறவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வளவு பரந்த உள்ளம் கொண்ட வைகோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பதிவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்படியே நான் சுலபமாக வெல்லக்கூடிய இதே மாதிரி போட்டிகளையும் அவ்வப்போது அறிவிக்க அவருக்கு கிருபை செய்ய வேண்டுமாய் கூடுதல் பிரார்த்தனையும் இறைவனுக்கு வைக்கிறேன்.
இவ்வளவு பரந்த உள்ளம் கொண்ட வைகோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பதிவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்படியே நான் சுலபமாக வெல்லக்கூடிய இதே மாதிரி போட்டிகளையும் அவ்வப்போது அறிவிக்க அவருக்கு கிருபை செய்ய வேண்டுமாய் கூடுதல் பிரார்த்தனையும் இறைவனுக்கு வைக்கிறேன்.
சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள்
கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது
சரியெனத்தான் எனக்குப் படுகிறது
த.ம 3
http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
Palaniappan Kandaswamy
அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//
இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.
தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//
சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.
நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் கருத்துக்காக
காதல் - காதல் - காதல்
நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை..
உங்கள் கருத்துக்காக
காதல் - காதல் - காதல்//
புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
நன்றி ஐயா.