வியாழன், 7 ஜூலை, 2016

ஆனைமலை மாசானியம்மன்

                            Image result for மாசானியம்மன்

எனக்கு முதன்முதலில் வேலைக்கு ஆர்டர் வந்த ஊர் ஆனைமலை என்று முன் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். நான் தனியாளாக இருந்தபடியால் அங்கு ஒரு வீட்டின் முன் பக்கம் தனியாக இருந்த ஒரு அறையில் வாடகைக்கு இருந்தேன். அதே வீட்டில்தான் அந்த ஊர் விவசாய டெமான்ஸ்ட்ரேட்டரும் குடியிருந்தார்.

நான் குடியிருந்த வீடு இப்போதும் இருக்கிறது. அதற்கு ஒரு அடையாளம் சொல்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள். பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை மாசானியம்மன் கோவில் போகவேண்டுமென்றால் ஆனைமலை போய் ஒரு இடத்தில் இடது புறம் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பும்போது இடது புறம் இருக்கும் முதல் வீடுதான் நான் குடியிருந்த வீடு.

அப்போது அந்தத் தெரு சாதாரணமாகத்தான் ஆள்  நடமாட்டமே  இல்லாமல்தான் இருந்தது. இப்போது இருக்கும் பிரபல  மாசானியம்மன் கோவில் அப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. உள்ளூர்காரர் ஒருவர் இங்கே ஒரு கோவில் இருக்கிறது பார்க்கலாம் வாருங்கள் என்று ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனார்.

ஒரு நீண்ட சதுரக் கட்டிடம். ஓடு போட்டது. 40 அடிக்கு 20 அடி இருக்கும். நீளமாக இருக்கும் இரண்டு சைடுகளிலும் மூன்று மூன்று கதவுகள். கதவுகளில் மேல் பாதியில் வெறும் கம்பிகள் மட்டுமே இருந்தன. அதன் வழியாக உள்ளே பார்க்கலாம். உள்ளே தென்வடலாக ஒரு சுதையினால் ஆன ஒரு பெரிய உருவம் படுத்துக் கிடந்தது.

கட்டிடத்தைச் சுற்றிலும் புதர் மண்டிக்கிடந்தது. அந்தச் சிலைக்கு யாரும் பூசை செய்த மாதிரித் தெரியவில்லை. அந்த இடத்திற்கு யாரும் வந்து போகிற மாதிரியும் தெரியவில்லை. சரி ஏதோ ஒரு கிராம தேவதை கோவில் பராமரிப்பின்றி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

பல வருடங்கள் கழித்து திடீரென்று ஆனைமலை மாசானியம்மன் கோவில் பிரபலமாகி விட்டது. ஒரு தடவை அந்தப் பக்கம் போனபோது நான் போய்ப்பார்த்தேன். நான் முன்பு பார்த்ததிற்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஜனங்கள் கூட்டம் அலை மோதியது. அம்மனைப் பார்க்க பெரிய வரிசை, ஒரு மைல் தூரத்திற்கு நின்று கொண்டிருந்தது.

நான் மலைத்துப் போய்விட்டேன். கோவிலின் சுற்றுப் புறம் முழுவதும் கடை கண்ணிகள், ஓட்டல்கள், பூஜை சாமான் கடைகள் என்று வியாபித்திருந்தன. ஏறக்குறைய நூறு இருநூறு குடும்பங்கள் அந்தக் கோவிலை நம்பிப் பிழைத்துக்கொண்டிருந்தன. இந்த மாற்றம் எப்படி வந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தக் கோவிலின் நடைமுறையைக் கவனித்தேன். மக்கள் தங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளை இந்த அம்மனிடம் வைத்தால் அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வருவதைக் கவனித்தேன். சாதாரணக் கோரிக்கைகளைக் காகித த்தில் எழுதி அங்குள்ள அர்ச்சகர் மூலமாக அம்மனிடம் சேர்க்கப்பட்டு விட்டால் அந்தக் கோரிக்கைகள் நிறைவேறி விடும் என்று நம்புகிறார்கள். இந்த மாதிரி கோரிக்கைகளை எழுதிக்கொடுக்க அங்கே ஏகப்பட்ட புரோக்கர்கள் சுற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.

இரண்டாவது கோரிக்கை முறை கொஞ்சம் விநோதமானது. உங்கள் வீட்டில் ஏதாவது பொருள் திருட்டுப்போய் விட்டால் இந்தக் கோவிலுக்கு வந்து அங்கிருக்கும் ஆட்டுக் கல்லில் கொஞ்சம் மிளகாயை நன்றாக அரைத்து அங்கே இருக்கும் ஒரு கல்லின் மீது தடவி விட்டால் அந்த பொருளைத் திருடியவனுக்கு உடம்பு முழுவதும் மிளகாயை அரைத்துப் பூசிய மாதிரி எரிச்சல் வந்து விடுமாம். என்ன செய்தாலும் அந்த எரிச்சல் போகாதாம். அந்தத் திருடின பொருளை எடுத்த இடத்தில் திரும்ப வைத்தால்தான் அந்த எரிச்சல் போகுமாம்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அங்கே நாலைந்து ஆட்டுக்கல்கள் போடப்பட்டிருந்தன. பல பெண்கள் அவைகளில் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பரவாயில்லையே, மாசானியம்மன் போலீஸ் வேலையும் பார்க்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். இப்படியாக ஒரு கோவில் பிரபலமானதை என் வாழ்நாளில் நேரில் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது அந்த மாசானியம்மன் அருளால்தான் என்று நம்புகிறேன்..

செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆண்களுக்கான உடல் நலக் குறிப்பு


                                Image result for ஆண்கள்

ஆண்களுக்கு மட்டும். பெண்கள் படிக்க வேண்டாம்

மனிதனுக்கு பல உடல் நலக்குறைவுகள் ஏற்படுவது இயற்கை. அதில் சிலவற்றை உடனடியாக க் குணப்படுத்த வேண்டியது அவசியம். இதற்குத் தான் இப்போது வீதிக்கு இரண்டு மருத்துவர்கள் இருக்கிறார்களே?

சில உடல் உபாதைகள் உடனடியாகக் கவனிக்க வேண்டியதில்லாதவை. உதாரணத்திற்கு அஜீரணம், மலச்சிக்கல், சளிக்காய்ச்சல், தலைவலி முதலானவை. இரண்டு நாள் சும்மா இருந்தால் இவை போய்விடும். இவைகளுக்குப் பல கை வைத்தியங்கள் உள்ளன. அவைகளில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

சில உபாதைகள் நீங்காமல் இருந்து கொண்டு தொந்திரவு கொடுக்கக் கூடியவை. இவைகளில் டாக்டரிடம் உடனடியாகக் காட்ட முடியாதவை சிலது உண்டு. அதுவும் வயதானவர்களுக்கு வரக்கூடிய உபாதைகள் இவை. அவைகளில் ஒன்று இங்கே ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்.

இந்த உபாதைக்கு இணையத்தில் நல்ல யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. டாக்டரிடம் செல்லாமல் நாமே கடைப்பிடிக்கக் கூடியவை. (டாக்டர்கள் மன்னிக்கவும்) இந்த யோசனைகளை அனுசரித்து நான் பலன் பெற்றபடியால் இதை இங்கே பதிவு செய்கிறேன்.


What is jock itch? What does jock itch look like?

Jock itch is a common, itchy rash of the groin. It can produce a very intense itch and is associated with a red or pink rash involving the groin folds and genitals. Jock itch is primarily a skin condition in men because of anatomic structures unique to males, the male genitalia.
The symptoms of jock itch may come and go, and many cases of jock itch resolve spontaneously without any treatment. Jock itch is primarily seen in the groin, although it may spread to the inner thighs, genitals (including penis, scrotum, labia, and vaginal opening), and anus.
While jock itch is frequently noted in otherwise healthy people, those with diabetes and/or obesityare more susceptible. Possible causes include irritation from tight or abrasive underwear, excess moisture, sweating, skin rubbing or friction, allergic problems, fungal infection, Candida (yeast) infection, and bacterial overgrowth.
Treatment of fungal-related jock itch may include one or a combination of antifungal creams and, rarely, antifungal pills. Treatment of jock itch that is not caused by fungus involves proper groin hygiene, keeping the area clean and dry, and washing frequently with gentle soap and water (especially after sweating or exercise).
Jock itch causes a symmetrical red or pink rash on the sides of the groin folds. There may be a dry, scaly rash or a collection of small, pinpoint red or pink bumps at each hair follicle
Certain groups of people may be more prone to jock itch. Patients withdiabetes, obesity, and those with a compromised immune system such as from HIV/AIDShepatitis, chronic illnesses, cancer, systemicchemotherapy, immunosuppressive drugs such as prednisone, and those on biologic immune-system-modifying drugs such as infliximab (Remicade) oretanercept (Enbrel) may be more prone to jock itch.



திங்கள், 4 ஜூலை, 2016

நான் வேலையில் சேர்ந்த கதை.

 

1956 ம் வருட சுதந்திர தின நாள் என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் நான் படித்து முடித்தபின் முதல் முதலாக வேலைக்குப் போன நாள். எனக்கு வேலைக்கான உத்திரவு வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனாலும் என் மேலதிகாரி நான் வேலையில் உடனே சேருவதற்கு அனுமதிக்கவில்லை. அவர் படித்த முடித்த காலத்தில் இவ்வாறு வேலை சுலபமாக க் கிடைக்கவில்லை. அது காரணமாக இப்போது படித்து வருபவர்களுக்கு உடனே வேலை கிடைப்பதைக் கண்டு வயிற்றெரிச்சல் பட்டார்.

வேலைக்குச் சேருவதற்கான கடைசி நாளான ஆகஸ்ட் 16 ம் தேதி பிற்பகலில் சேர அனுமதித்தார். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அரசு உத்தியோகத்தின் நெளிவு சுளிவுகளைச் சொல்லித்தர எனக்கு யாருமில்லை. ஆனால் நான் ஒரு விஷயத்தில் ஆழமான கருத்து கொண்டிருந்தேன். இந்த உத்தியோகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிக அவசியம். என் முட்டாள்தனத்தினால் இந்த வேலையை நான் போக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

அந்த மேல் அதிகாரி வேலையைச் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுத்ததே இல்லை. நானாகத் தெரிந்து கொண்டு செய்யும் வேலையிலும் குற்றம் கண்டுபிடிப்பதே அவர் வேலை. இப்படியாக இரண்டு வருடம் அவரிடம் வேலை பார்த்தேன். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் அரசு வேலைகளை நன்றாகக் கற்றுக்கொண்டு விட்டேன். எந்த வேலையானாலும் பயமில்லாமல் எதிர்கொள்ளும் தைரியம் வந்து விட்டது. கால நேரம் பார்க்காமல் உழைக்கும் மன தைரியமும் வந்து விட்டது. இந்த அனுபவம் பிற்காலத்தில் பல சவால்களைச் சந்திக்க உதவியது.

இப்படி இருக்கையில் நான் படித்த கல்லூரியில் 1958 ம் வருடம் முதுகலை வகுப்புகள் ஆரம்பித்தார்கள். அப்போது என் மேல் அதிகாரி அந்தப் படிப்பிற்கு விண்ணப்பித்து அதில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 18 வருட அனுபவம். கல்யாணமாகி நாலைந்து குழந்தைகள். இதைக்கண்ட எனக்கும் நானும் இந்தப் படிப்பில் சேர்ந்தால் என்ன என்று தோன்றியது. அது மட்டுமல்ல. இந்த ஆள் படித்து முடித்துவிட்டு திரும்பும்போது நான் இந்த இடத்தில் இருக்க க்கூடாது என்று முடிவு செய்தேன். அடுத்த வருடம் நானும் விண்ணப்பித்தேன். இடம் கிடைத்தது. முதுகலை வகுப்பில் சேர்ந்தேன்.

இந்த மாதிரி ஒரு மிக கடுமையான மேலதிகாரியிடம் முதன் முதலில் வேலை பார்த்ததில் நான் பெற்ற அனுகூலங்கள்.

1. எந்த வேலையையும் பயமில்லாமல் எதிர்கொள்வது.

2. கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது.

3. மேல் படிப்பிற்குச் சேர்ந்தது.

இப்படி நான் அப்போது முதுகலை வகுப்பில் சேர்ந்ததினால்தான் என் பிற்கால உத்தியோக வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆகவே அந்த முதல் மேலதிகாரியை அவ்வப்போது நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.

வியாழன், 30 ஜூன், 2016

வேலையில்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்காக ஒரு கதை


                     Image result for Road side temple

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருக்கும். நான் என் அலுவலகத்திற்குப் போகும் வழியில் ஒரு நாற்சந்தியில் ஒரு மூலையில் கொஞ்சம் இடம் விஸ்தாரமாய் இருந்தது. ஒரு நாள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைப் பந்தல் 6 க்கு 6 அடி அளவில் போடப்பட்டு அதற்குள் ஒரு அடி உயரமுள்ள ஒரு வட்ட வடிவிலான கருங்கல் நட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆற்றுப் படுகைகளில் கிடைக்குமே அந்த மாதிரியான கல்.

அந்தக் கல்லுக்கு விபூதி பட்டை போட்டு சந்தனப்பொட்டு, குங்குமப்  பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லுக்கு முன் ஒரு உடைத்த தேங்காய், இரண்டு வாழைப் பழங்கள், ஒரு வாழைப்பழத்தில் இரண்டு ஊதுபத்திகள், தாம்பூலம் , ஒரு சிறிய பித்தளைச்சொம்பிற்கு வாயில் ஒரு மஞ்சள் துணியைக்கட்டி, நடுவில் கொஞ்சம் கிழித்து விட்டு, வைத்திருந்தது. இவைகளுக்கு முன்னால் ஒரு ஒல்லியான ஆசாமி காவி வேட்டி, துண்டுடன் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்தபடி இருந்தான்.

சரி ஏதோ பைத்தியக்காரன் போலிருக்குது என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அவன் பைத்தியக்காரன் இல்லை, மற்றவர்களைப் பைத்தியம் பண்ண வந்தவன் என்று. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் சேர்ந்தார்கள். அந்த வழியில் போகும் மாட்டு வண்டிக்காரர்கள் அங்கு நின்று அந்த சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகத் தொடங்கினார்கள்.

இவ்வாறு பக்தர்கள் அதிகரிக்கவே அந்தப் பூசாரி பந்தலை விஸ்தரித்து சாமியை வலுப்படுத்தினான். ஒரு வருடம் சென்றது. முதல் விழாவை விமரிசையாகக் கொண்டாடினான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். சாமியும் ஆசாமியும் நிரந்தரமாகி விட்டார்கள்.

அந்த ரோட்டில் பக்கத்து ஊரிலுள்ள செங்கல் காளவாய்களிலிருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள் அந்த வழியாகப் போவது வழக்கம். இந்தப் பூசாரி அப்படிப் போகும் வண்டுகளிலிருந்து இரண்டிரண்டு செங்கல்கள் வாங்கிக் கொள்வான். இப்படியே செங்கல்களைச் சேகரித்தான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சிமென்ட், மணல் ஆகியவைகளை வாங்கிக் கொடுத்தார்கள். சில மாதங்களில் ஒரு பத்துக்குப் பத்து கோவில் அங்கே உருவாகி விட்டது.

அந்த சாமி கேட்பவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் சக்தி உள்ளது என்று புகழ் பரவ ஆரம்பித்தது. பலர் அந்தக் கோவிலின் நிரந்தர புரவலர்கள் ஆனார்கள். ஒவ்வொரு இந்துப் பண்டிகையையும் விமரிசையாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். இப்படி அந்தக் கோவில் நிரந்தரமானதாக ஆகிவிட்டது. சமீபத்தில் அந்த வழியாகப் போனபோது கவனித்தேன். சாமிக்கு கருங்கல் தரை, வெள்ளிக் கவசம், உற்சவ வாகனங்கள் இத்தியாதிகளுடன் மிகவும் செல்வாக்காக விளங்கியது.

சாமிக்கே இப்படியென்றால் பூசாரியைப் பற்றிக் கேட்க வேண்டுமா? அவரும் பட்டில் காவி உடுத்துக்கொண்டு ரொம்பவும் சௌக்கியமாக இருந்தார்.

நம் இளைஞர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கோவில் பூசாரியைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

திங்கள், 27 ஜூன், 2016

கடவுள்களுக்கு நோய்கள் வராதா?

                                  Image result for கடவுள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது ஒரு பெரும் விவாதத்திற்குரிய விஷயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.

கடவுளை மனிதன்தான் உருவாக்கினான் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அப்படி கடவுள்களை உண்டாக்கும்போது அந்தக் கடவுள்களை தன் உருவம் மாதிரியே உண்டாக்கினான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில கடவுள்களுக்கு நான்கு தலை, ஆறு தலை, நான்கு கைகள், பனிரெண்டு கைகள் என்று உருவகப்படுத்தினான்.

அத்துடன் நில்லாது கடவுள்களுக்கு தன்னைப்போலவே ஆசா பாசங்களையும் கற்பித்தான். கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டிகள், பலதார மணம், சக்களத்திச் சண்டை, பங்காளிச் சண்டை, கற்பழிப்பு, பிறன் மனை விழைதல் இப்படி எல்லாம் கற்பித்தான். அப்புறம் கடவுள்களுக்கு பசி, தாகத்தையும் உண்டு பண்ணினான்.

கடவுள்களும் இப்படியே ஆசா பாசங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள்கள் இப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது வருகின்றன. அவைகளுக்கு பல காலமாக விடை தேடுகிறேன். அவ்வளவுதான்.

1. கடவுள்கள் காலையில் எழுந்ததும் குளிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். மாலை வந்தால் ஆடல் பாடல்களைக் கண்டு களிக்கிறார்கள், இரவானால் சகதர்மிணியுடன் பள்ளியறை எழுந்தருள்கிறார்கள். இவ்வளவும் செய்கிறார்கள். ஆனால் மனிதர்கள் மாதிரி அவர்கள் காலை எழுந்தவுடன் ஏன் பாத்ரூம் போவதில்லை என்று தெரியவில்லை. எந்தக் கோவில்களிலும் கடவுள்களுக்காக பாத் ரூம் கட்டப்படவில்லையே, ஏன்?

2. மனிதர்களில் நோய்வாய்ப் படாதவர்கள் அபூர்வம். அவர்களுக்கு நோய் தீர்க்க தெருவிற்குத் தெரு பல விதமான ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. இப்படி கடவுள்களுக்கும் நோய் வராதா? தேவலோகத்தில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே. அவர்களுக்கு நோய் வந்தால் எப்படி அந்த நோயைக் குணப்படுத்திக் கொள்வார்கள்?

பல நாட்களாக இந்த இரண்டு சந்தேகங்களும் என் மண்டையில் புரண்டு கொண்டேயிருக்கின்றன. இந்த சந்தேகங்கள் வந்ததினால் நான் கடவுள்களுக்கு விரோதியாய் விடுவேனோ என்ற சந்தேகமும் இப்போது புதிதாய் முளைத்திருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு நான் உங்களிடம் விடை கேட்கப்போவதில்லை. ஏனெனில் உங்கள் மனம் புண்படலாம். ஆகவே இந்தப் பதிவைப் படித்து விட்டு ஒரு ஸ்னானம் செய்து நீங்கள் இதைப் படித்த பாவத்தைப் போக்கிக்கொள்ளவும்.

எனக்கு நரகம்தான் பலிக்கும் என்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் ஆப்த நண்பர்கள் எல்லோரும் அங்குதான் இருப்பார்களாகையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

சனி, 25 ஜூன், 2016

நண்பனைச் சிக்கலில் இருந்து விடுவித்த கதை.

                   
                         Image result for Thief and police

ஒரு நல்ல திருடன்தான் ஒரு நல்ல போலீஸ்காரன் ஆகமுடியும் என்று சொல்வார்கள். அதேபோல் சில தந்திரவாதிகளின் ஏமாற்றுதலில்
இருந்து தப்பிக்க நீங்களும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக இருக்க வேண்டும். ஏமாற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அந்த குயுக்தி முறைகளை அறிந்திருப்பது அவசியம்.

என் நண்பர் ஒருவர் தன் வீட்டில் உள்ள ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் குடியிருந்த ஒருவன் இவரிடம் அவ்வப்போது ஆயிரம் இரண்டாயிரம் என்று கைமாத்து வாங்குவான். சொன்ன நாளில் திருப்பிக்கொடுத்து விடுவான். இப்படி சில மாதங்கள் ஆகியவுடன் என் நண்பருக்கு அவன் மீது அபார நம்பிக்கை வந்து விட்டது.

ஒரு நாள் அவன் தன் மனைவியின் வேலையை நிரந்தரமாக்க அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள், கொடுக்கலாமா என்று இவரிடம் கேட்டிருக்கிறான். இவருக்கு அந்தக் கம்பெனியை நன்றாகத் தெரியும். கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டு நாள் கழித்து அவன் இவரிடம் வந்து, சார், ஒரு லட்சம் ரூபாய் சேகரித்து விட்டேன். இன்னும் ஒரு லட்சம் வேண்டும். நாளைக்குள் பணம் கட்டவேண்டும் என்கிறார்கள். ஊரில் ஒரு இடம் இருக்கிறது. அதை விற்றால் ஒரு லட்சம் வரும். வந்தவுடன் கொடுத்து விடுகிறேன். நீங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று அழுதிருக்கிறான்.

நண்பருக்கு அப்படியே மனது வெய்யிலில் வைத்த ஐஸ் கட்டியாக உருகிவிட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அவனும் அதை பவ்யமாக வாங்கிக்கொண்டு போய் பணத்தை வாங்கிவிட்டான். இவர் அவனிடம் ஒரு புரோநோட் வேண்டுமென்றிருக்கிறார். அவன் ஸ்டேஷனரி கடையில் விற்கும் ஒரு புரோநோட் பாரத்தை வாங்கி ஒன்றும் எழுதாமல் கீழே மட்டும் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறான். நண்பரும் அதை வாங்கி வைத்துவிட்டார்.

நாலைந்து மாதம் ஆகி விட்டது. பணம் திரும்பி வரவில்லை. இதனிடையில் அவன் வேறு வீட்டிற்கு குடி போய்விட்டான்.  இவர் அவனை நெருக்கியிருக்கிறார். அவன் ஒரு நாள் ஒரு லட்சத்தி நான்காயிரத்திற்கு (நான்காயிரம் வட்டி) இவர்பேரில் ஒரு செக் கொடுத்து விட்டு, சார் இதை உடனே பேங்கில் போடவேண்டாம், ஊரில் இருந்து வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை, வந்தவுடன் நான் சொல்கிறேன், அப்போது இந்த செக்கைப் பேங்கில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

நண்பரும் சரியென்று அந்த செக்கை வாங்கி வைத்துக்கொண்டார்.
ஒரு மாதம் சென்றது. அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. சரி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நண்பர் செக்கை கலெக்ஷனுக்குப் போட்டார். கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்து விட்டது.

இந்த நிலைமையில் நண்பர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். நான், பொறுப்போம், பார்க்கலாம், அவனை எப்படியாவது பிடித்து என்ன விவரம் என்று கேளுங்கள் என்றேன். இரண்டு நாள் கழித்து நண்பர் ஓடோடி வந்தார். இதற்குள் அவர் யாரையோ சிபாரிசு பிடித்து பேங்க் மேனேஜரைக் கைக்குள் போட்டுக்கொண்டார். அவர் மூலம் அவன் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டார். இரண்டாயிரம் ரூபாய்தான் இருந்தது. அவன் வருவதாகச் சொன்ன ஒரு லட்சம் ரூபாய் வந்தாலும் மொத்தம் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே இருக்கும், நம் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கு அல்லவா, இது எப்படி பாஸ் ஆகும் என்று புலம்பினார்.

நான் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு. நாளைக்கு பேங்குக்கு வரும்போது உங்கள் செக் புக்கை எடுத்து வாருங்கள், மிச்ச்த்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறி அவரை அனுப்பி வைத்தேன். மறுநாள் பேங்க்குக்குப் போனால் நண்பர் காத்துக் கொண்டிருந்தார். அந்த கடன் வாங்கினவனும் கூட இருந்தான். அவனிடம் என்னப்பா இன்றைக்கு செக்கை கலெக்ஷனுக்குப் போட்டு விடலாமா என்று கேட்டேன். அவன் தாரளமாகப் போடலாம் சார் என்றான்.

அவனுடைய எண்ணம் அவன் கணக்கில் வரப்போகும் ஒரு லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம்தானே இருக்கும். நாம் இவர்களுக்குக் கொடுத்தது ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கான செக்கல்லவா? இவர்கள் அந்தச் செக்கை பாஸ் பண்ணமுடியாது என்ற நினைப்பில் சம்மதம் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் கவுன்டர் கிளார்க்கிடம் ஐம்பதாயிரத்திற்கு தனியாக ஒரு செக் கொடுத்து வைத்திருந்தான். இவன் எதிர் பார்க்கும் பணம் வந்தவுடன் அந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுப்பது அவன் திட்டம்.

நானும் நண்பரும் மேனேஜர் ரூமுக்குப் போய் அவருக்கு முன்னால் அமர்ந்தோம். அவர் இன்னும் தபால் வரவில்லை, கொஞ்சம் பொறுங்கள் என்றார். சிறிது நேரத்தில் தபால் வந்தது. எதிர் பார்த்த ஒரு லட்சம் ரூபாயும் வந்திருந்தது. அவர் அந்த கடன்காரனின் கணக்கைப் பார்த்தார். பார்த்துவிட்டு எங்களிடம் சென்னார், இந்தப் பணத்தைப் போட்டாலும் ஒரு லடசத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே வருகிறது. உங்கள் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய் அல்லவா? பாஸ் ஆகாதே என்றார்.

அவரிடம் நான்,  சார் எவ்வளவு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றேன். அவர் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றார். நான் நண்பரிடம் மேனேஜர் சென்ன தொகைக்கு உங்கள் செக் ஒன்று அந்த திருடன் பெயருக்கு எழுதுங்கள் என்றேன். அப்படியே எழுதிக்கொடுத்தார். மேனேஜரிடம் அந்தச் செக்கைக் கொடுத்து சார் இந்தப் பணத்தை அவன் கணக்கில் சேர்த்து விட்டு பிறகு எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது பாருங்கள் என்றேன். அவர் அப்படியே செய்து விட்டு, சார் உங்கள் செக் இப்போ பாஸ் ஆகிவிடும் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று சொல்லி என் நண்பருடைய  செக்கைப் பாஸ் பண்ண வைத்தேன்.

இரண்டாயிரத்தி ஐந்நூறு செலவில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பணம் வசூலாகி விட்டது. பேங்க் மேனைஜர் அசந்து விட்டார். சார் நீங்கள் பலே கில்லாடியாக இருக்கிறீர்களே என்று பாரட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

அதற்குள் இந்த செக் பாஸான விவரம் கவுன்டர் கிளார்க் மூலம் அந்த கடன்காரனுக்குத் தெரிந்து விட்டது. வெளியில் எங்களைப் பார்த்தவுடன் காச் மூச்சென்று கத்தினான். நான் சொன்னேன், நீ செக்கைப் போடச் சொன்னதினால்தானே நாங்கள் போட்டோம், இப்ப எதற்கு கத்துகிறாய், உன் வேலையைப் பார் என்று சொல்லி அவன் அனுப்பினோம்.

அடுத்த நாள் ஒரு பெரிய பிரியாணி ஒட்டலில் நான் கேட்ட ஐட்டங்கள் எல்லாம் என் நண்பர்  வாங்கிக் கொடுத்தார்.

புதன், 22 ஜூன், 2016

ஒரு பரோபகாரியின் கதை

                                         Image result for இரு நண்பர்கள்
ஒரு ஊரில் இரு நண்பர்கள். ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்ம்கு பட்டப்படிப்பு முடிந்தவுடன் சென்னையில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் கழித்து இருவருக்கும் மணமானது. இரு குடும்பமும் அன்னியோன்னியமாக இருந்தன.

இந்நிலையில் ஒருவன் வீடு வாங்க ஆசைப்பட்டான். அந்த ஏரியாவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு இருவாகிக்கொண்டு இருந்தது. அதில் இவன் ஒரு அபார்ட்மென்ட் பதிவு செய்தான். கையிலுருந்த சேமிப்பு பணத்தையெல்லாம் கொடுத்து விட்டு பிறகு பேங்க் லோன் அப்ளை பண்ணினான்.

பேங்க்கில் ஒருவர் கேரண்டி போடவேண்டும் என்றார்கள்.
நமது கதாநாயகன் தன் நண்பனைக் கேட்டான். அவன் அதற்கென்ன, கையெழுத்துதானே, போட்டால் போயிற்று என்று பேங்கிற்குப் போய் கையெழுத்து போட்டான்.

அபார்ச்மென்ட் கட்டிடம் வளர்ந்தது. மொத்தம் பதிமூன்று மாடிகள். ஒரு நாள் பெரிய புயல் காற்று, இடியுடன் மழை வந்தது. அந்தக் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. அபார்ட்மென்ட் புக் பண்ணினவன் இதைக்கேட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டான்.

இப்போது அந்த பேங்க் கடனுக்கு யார் பொறுப்பு?