புதன், 4 ஜனவரி, 2017

ஜோசியம் - பாகம் 1

திரு வைகோ அவர்கள் இன்று ஒரு பதிவை என்னுடைய பார்வைக்கு கொண்டு வந்தார்கள்.

அதனுடைய சுட்டி இதோ: http://sivamgss.blogspot.in/2016/12/blog-post_24.html

அந்தப் பதிவு திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுடையது. அதில் திரு வைகோ அவர்கள் போட்டுள்ள பின்னூட்டங்களை அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும்.

நான் இதுநாள் வரை எந்த ஜோசியரிடமும் போனது கிடையாது. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. இதற்குக் காரணம் என் சித்தப்பா ஒருவரே. அவர் ஜோசியம் பார்த்தே வாழ்க்கையைத் தொலைத்தவர். அவருடைய வாழ்க்கையைப் பார்த்துத்தான் இந்த ஜோசியத்தினால் பலன் ஒன்றும் இல்லை என்ற தெளிவு எனக்குள் ஏற்பட்டது.

ஜோசியம் பார்ப்பவர்களை நான் ஒன்றும் விமரிசிக்க மாட்டேன். அது அவர்கள் விருப்பம். அதனால் அவர்கள் பயனடைந்திருந்தால் எனக்கு சந்தோஷமே. ஆனாலும் எனக்கு ஜோசியம் தேவையில்லை என்ற கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். கற்றவர்களின் மனதை என்னால் மாற்ற முடியாது என்று நான் நன்கறிவேன். ஆனாலும் என் கருத்துகளை நான் இங்கே எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காமல் பதிவு செய்கிறேன்.

இதற்குப்பின்னால் கொடுக்கப்பட்டவை ஒரு மீள் பதிவே.

http://swamysmusings.blogspot.com/2012/09/blog-post_7946.html

ஜோதிடம் வாழ்விற்கு அவசியமா?



கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்தவிஷயமோஅதே மாதிரி ஜோசியமும் ஒவ்வொருவருடையநம்பிக்கையைப் பொருத்த விஷயம்

ஜோசியம் உண்மையாபொய்யா என்பதைவிட ஜோசியம் மனிதவாழ்வில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறதுஏன் மக்களுக்கு ஜோசியம் அவசியப்படுகின்றது என்பதுதான் சிந்திக்கத் தகுந்த பொருள்.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் அனைத்தும் பலவிதமானகதிர்வீச்சுகளை வெளிப்படுத்துகின்றனஇவை மனிதனை பல வகையில்பாதிக்கின்றனகண்ணுக்குத் தெரியும் பாதிப்புகள்கண்ணுக்குத் தெரியாதபாதிப்புகள் இரண்டும் இதனுள் அடக்கம்இந்த பாதிப்புகள்ஒவ்வொருவருக்கும்அவரவர்கள் ஜாதகப்பிரகாரம் வேறுபடுகின்றனஎன்பதுதான் ஜோதிடத்தின் அடிப்படை சித்தாந்தம்.

இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்திவைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களைநம்ப வைத்திருக்கிறார்கள்இந்தக் கருத்தை தீவீரமாக ஆதரிக்கும்சாதாரண மக்கள் பலர் இருக்கிறார்கள்அவர்களிடம் போய்ஜோசியத்தை நம்பாதீர்கள் என்று சொன்னால்சொன்னவர்களை அடிக்கவருவார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியேபுட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம்ஆனால்எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம்பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள்நம் வாழ்வில்நடந்தவைகள்தான் நமக்கே தெரியுமேஅதை அந்த ஜோசியன் வாயால்கேட்பதில் என்ன பயன்ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதுவும்நம்புவதும்என்னவென்றால் – நம் கடந்த காலத்தை இவ்வளவு துல்லியமாகசொல்பவன்எதிர்காலத்தைப் பற்றி சொல்வதில் பாதிக்குப் பாதியாவதுபலிக்காதா என்ற நம்பிக்கைதான்.

சரிஅவன் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்றேவைத்துக்கொள்வோம்அதனால் என்ன பயன் என்று யோசித்துப்பார்க்கவேண்டும்ஜோசியத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒருஉதாரணம்இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால்கொஞ்சம் வழி நன்றாகத் தெரியுமல்லவாவழியில் உள்ள குண்டுகுழிகளில் விழாமல் தப்பிக்கலாம் அல்லவாஅப்படி எல்லாத்தடங்கல்களையும் ஜோசியம் மூலம் தாண்டி விடலாம் என்று வைத்துக்கொண்டால் ஏன் ஜோசியத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் வருகிறது?

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் -  ஜோசியன் சொன்ன பரிகாரத்தைநான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும்ஜோசியம் பார்க்கும்எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிடமுடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமாதவிரஅனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?

இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டேதான்இருக்கும்மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும்என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள்அவர்களுக்கு ஜோசியம்தேவையில்லைமன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவதுஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்

26 கருத்துகள்:

  1. //இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்தி வைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்//

    Some get old; some get matured; where do we stand? At times ignorance is a bliss.
    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். கடந்த காலத்தை சரியாகச் சொல்பவர்கள், நாடி ஜோசியம் உட்பட, எதிர்காலம் சொல்வதில் சரியாகச் சொல்ல முடியவில்லைதான்! ஜோசியத்தில் நமக்கு சிறப்பாகப் போட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அல்லது எந்த பலன் நன்றாக இருக்கிறதோ அதை நம்முடைய பலனாக நினைக்கலாம்.

    "வகுப்பறை" பக்கம் சென்றிருக்கிறீர்களோ? ஜோசியத்தில், ஜாதக பலன்களில் நிறைய வகுப்பெடுக்கிறார் அந்த வலைப்பூ ஆசிரியர். நீங்கள் இதுவரை அந்தப் பக்கம் சென்று பார்த்ததில்லை என்றால், அதன் சுட்டி கீழே!

    http://classroom2007.blogspot.in/
    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்திருக்கிறேன். ஜோதிடத்தில் அபார ஞாபக சக்தியும் பேச்சுத்திறமையும் வேண்டும். எனக்கு இந்த இரண்டும் பூஜ்யம். தெரியாத ஒன்றில் தேவையில்லாமல் எதற்கு நேரத்தை செலவிடவேண்டும்? இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே.
      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.
      விளக்கம்: சிரங்கு பிடித்தவன் கையும் இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பது பழைய பழமொழி. அத்துடன் மௌஸ் பிடித்தவன் கையும் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும்.

      இரண்டு நாட்களுக்கு முன் சும்மா இருக்கமுடியாமல் டெம்ப்ளேட்டை நோண்டினேன். பிறகு பார்த்தால் எல்லா ஓட்டுப்பட்டைகளும் காணாமல் போய்விட்டன. எல்லாவற்றையும் ஒரு மாதிரி கண்டுபிடித்து தேத்தினேன். ஆனா இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் எனக்கு தண்ணி காட்டிக்கொண்டு இருக்கிறது.

      சப்மிட் பண்ணினால் ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பதிவு தமிழ்மணம் திரட்டியில் தெரிகிறது. ஆனால் ஓட்டுப்பட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சனியன் ஒழிகிறது என்று விட்டுவிட்டேன். முன்பொரு முறை இவ்வாறு நடந்து ஒரு பத்து நாள் கழித்து சரியாகியது. இப்ப என்ன பண்ணுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
      நீக்கு
  4. மனம் ஒன்றை நம்பினால் எல்லாமே சுபம் தான்... அதை நம்ப வைக்க பெரும்பாடுபட வேண்டும்... மனம் நம் வசமாகிவிட்டால் விதியை மதி நிச்சயம் வெல்லும்
    பதிலளிநீக்கு

  5. ஒவ்வொரு தலைப்பாகப் பிடித்து உங்கள் எண்ணக்களை பதிவு செய்கிறீர்கள். ரசிக்கிறேன்.
    பதிலளிநீக்கு
  6. Sir, 
    What you have written about astrology is correct. In the last para of your writings, you have mentioned that 'One who has mental determination' will not apt Astrology. Can you explain in detail or brief what type of mental determination, One should have? Do you think it is possible for a family man, who is having all sorts of desires over and above his capacities, to have such decisions. Mental determination is a state of mind of those who are very clear in what they are doing and they just restrict themselves to what's happening as you said. Such people are very few and it cannot be a general one. So, for a common man only Temples, Navagrahas, astrology, etc. are the only remedy. One can believe these things and cannot understand because they are occult faculties. At times the prayers via Astrology are answered. Truth is stranger than Fiction. It's all in the game.
    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு, உங்கள் அனுபவத்தில் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் கை பட்டால்தான் நோவு தீரும் என்ற நம்பிக்கையுடன் பலர் வந்திருப்பார்கள். உங்களுடைய சில ஆறுதல் வார்த்தைகள் அவர்களுக்கு நோயைத் தாங்கும் சக்தியை கொடுத்திருக்கும்.

      அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஊன்றுகோல் அவ்வப்போது தேவைப்படும். அது ஆண்டவனாக இருக்கலாம், மத குருவாக இருக்கலாம், குடும்ப வைத்தியராக இருக்கலாம், ஜோதிடராக இருக்கலாம், அல்லது வீட்டுப் பெரியவராக இருக்கலாம். இத்தகைய ஆறுதல் தேடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 

      எந்த ஊன்றுகோலும் தேவையில்லை என்று இருப்பவர்கள் அரிது. ஆனால் எதிலும் அளவோடு இருக்கவேண்டியது அவசியம். தமிழ் நாட்டில் பல திருமணங்கள் ஜோதிடர்களின் பலவித கணிப்புகளினால் தடைப்பட்டுக் கிடக்கின்றன. பல இளைஞர்கள் மத குருமார்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். இவர்களெல்லாம் விழிப்படைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, டாக்டர்.
      நீக்கு
  7. ''..மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள். அவர்களுக்கு ஜோசியம் தேவையில்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்...''
    என(ம)து நிலை இது தான். உண்மையும் கூட. பலர் விழிப்புணர்வு பெறட்டும்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம். 
    பதிலளிநீக்கு
  8. \\கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயமோ\\ இங்கதான் கொஞ்சம் திருத்தம் தேவைப்படுது!! [வந்துட்டான்யா..........வந்துட்டான்............!! ]. உண்மைகளில் இரண்டு விதம் இருக்கு, 1.Relative truth [ஆளாளுக்கு மாறும்], 2. Absolute truth. [ஆளைப் பொறுத்து மாறாது]. உதாரணத்துக்கு, நமக்கு இட்லி, பொங்கல் பிடிக்கும், வட இந்தியர்களுக்கு சப்பாத்தி பிடிக்கும். சிறந்த உணவு எது? இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்ல முடியாது, இது சாப்பிடுகிறவர்களைப் பொறுத்து மாறும். அதே மாதிரி சிலருக்கு கமலஹாசனைப் பிடிக்கும், சிலருக்கு ரஜினியைப் பிடிக்கும். யார் படம் நல்ல படம்? அது பார்க்கிறவர்களைப் பொறுத்து மாறுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு ரஜினிப் படம்தான் நல்ல படம், அதே போல கமல் ரசிகர்களுக்கும் சொல்லலாம். இந்த மாதிரி ஆளாளுக்கு மாறும் விஷயங்களை Relative truth எனப்படும். ஆனால், சில உண்மைகள் ஆளைப் பொறுத்து மாறாது. இப்போ, நெருப்பு சுடும் என்பது, ஆளைப் பொறுத்து மாறாது. நான் நெருப்பு சுடாது என்று நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் அதில் கையை வைத்தால் அது என்னைச் சுடும். சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது ஆளைப் பொறுத்து மாறுமா? குருடனாக இருந்தாலும், சூரியன் கிழக்கில் தான் உதிக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை வைத்து இது மாறப் போவதில்லை. இந்த மாதிரி உண்மைகள் Absolute Truth எனப்படும். அதே மாதிரி, ஒரு குழந்தை இருக்கிறது, அதன் தந்தை ஒருத்தர் இருப்பார். அது யார் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்து மாறுமா? ஒருத்தர் X-தான் அதன் தந்தை என்கிறார், இன்னொருத்தர் Y என நினைக்கிறார் என்றால், அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து தந்தை X ஆகவோ Y ஆகவோ இருக்க முடியுமா? முடியாது. அதை பார்ப்பவரின் நம்பிக்கை தீர்மானிக்காது, அதே மாதிரி, கடவுள் தத்துவம் என்பதும் Absolute truth தான் , அது ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயம் அல்ல அதை அவன் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தனித்து நிற்கும் Absolute truth ஆகும். அதாவது, உலகம் படைக்கப் பட்டதா இல்லையா, அதைப் படைத்த கடவுள் இருக்காரா இல்லையா, அப்படி இருந்தால் அவர் யார் என்பதெல்லாம் தனி மனிதனின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அல்ல, அதற்க்கு அப்பாற்பட்டு நிறுக்கும் Absolute truth.
    பதிலளிநீக்கு
  9. \\என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியே புட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம்.\\ அதைக் கூட சொல்வது எப்படி சாத்தியமாகிறது?

    \\ஆனால் எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள்.\\ எங்கள் பாட்டனார் காலத்திலிருந்து எண்கள் காலம் வரை பல கணிப்புகள் துல்லியமாகவே நடந்துவந்திருக்கின்றன. நான் 2 MB மட்டுமே உள்ள ஒரு சோதிட சாப்ட்வேரை நிறு பார்த்தேன், அப்படியே நடக்க ஆரம்பித்ததைப் பார்த்து பயந்து போய் பார்ப்பதை விட்டு விட்டேன். சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகம் என்பதால்!!
    பதிலளிநீக்கு
  10. \\இதற்கு அவர்கள் சொல்லும் பதில் - ஜோசியன் சொன்ன பரிகாரத்தை நான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும். ஜோசியம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிட முடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமா? தவிர அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?\\ ஜோசியன் நடக்கப் போவதைத்தான் சொல்லுவான், பரிகாரம் பண்ணிஎல்லாம் தீர்க்க முடியாது. ஜோதிடம் உண்மைதான், ஆனால் அதை நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது. கஷ்ட காலத்தில் ஏதாவது கோவிலுக்குப் போகச் சொல்லுவான், போய் வந்தால் கொஞ்சம் மன மாற்றமாக மாறுதலாக இருக்கும். மற்றபடி, வீடு கிரகப் பிரவேசம் போன்றவற்றிற்கும், திருமணம் போன்றவற்றிற்கும் நல்ல நேரம் பார்த்து செய்யலாம் தப்பில்லை.
    பதிலளிநீக்கு
  11. \\மனது உறுதியாக இருப்பவர்கள்........... மன உறுதி இல்லாதவர்கள்............\\ இதையே ஒருத்தர் ஜாதகம் தான் சார் தீர்மானிக்குது!!
    பதிலளிநீக்கு
  12. \\இரண்டு நாட்களுக்கு முன் சும்மா இருக்கமுடியாமல் டெம்ப்ளேட்டை நோண்டினேன். பிறகு பார்த்தால் எல்லா ஓட்டுப்பட்டைகளும் காணாமல் போய்விட்டன.\\ அதற்குத்தான் அதை நோண்டும் முன்னர் பேக் அப் எடுத்து வையுங்கள் அப்படின்னு எச்சரிக்கையே போடுறானே சார், எடுத்து வச்சிருந்தா இத்தனை பிடுங்கல்களும் இருந்திருக்காதே!!

    சார், நீங்க இன்றைய பதிவுக்கு சொன்ன சஜஸ்ஷன் படி கடைசியில் சில விளக்கங்களைச் சேர்ந்துள்ளேன், படித்துப் பாருங்கள். நன்றி.
    பதிலளிநீக்கு
  13. என்னவோ போங்க ஜி!

    ஜோசியம்/ கைரேகை அப்படின்னுகிட்டு... எனக்கு ஒண்டுமே விளங்கலை - இந்த ஜோசியம் அப்படின்னா என்ன?
    பதிலளிநீக்கு
  14. ஜெயதேவ் தாஸின் விளக்கங்கள் என்னைப் பொறுத்தவரையில் அருமை. வாழ்த்துக்கள்.
    பதிலளிநீக்கு
  15. ஜோதிடம் குறித்து அருமையான விளக்கம் ஐயா! நான் 70 வீதம் நம்புகிறேன்!!!!
    பதிலளிநீக்கு
  16. இந்த தலைப்பு கிண்டலா? அல்லது உண்மையாகவே ஒண்ணுமே இல்லையா? NO post என்று தான் இருக்கு; சென்று பாருங்கள்.

    நீங்கள கோவை எனபதால், "எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது"...இப்படித்தான் காலியாக இருக்கும் என்று சொல்கிறீர்களா?

    ///எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது///
    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது///

      அது ஒரு வேலீல போற வம்புல மாட்டீட்ட விவகாரமுங்க. இந்த தலைப்பில ஒரு பதிவு இருந்துச்சு. அதில கமென்ட் போடாட்டி நரகத்துக்கு போவீங்கன்னு இருந்துச்சு. சரீன்னு கமென்ட்ட போட்டுட்டு அவங்க கிளிக் பண்ணச்சொன்னபடி பண்ணினா,நம்ம பிளாக்குல ஒரு பதிவு ஏறிடுச்சு. ஒடனே அதை அளிச்சுப்புட்டனுங்க. அப்படியும் கூகுள்காரன் காட்டிக் கொடுத்துப்புட்டானா?

      இதுதான் வம்பை விலை கொடுத்து வாங்கற சமாச்சாரமுங்க. மன்னிச்சுக்கோங்க.
      நீக்கு
  17. அட என்னங்க இதுக்கு போய் மன்னாப்பு எல்லாம் கேட்டுட்டு; இதை வெச்சு சந்துல சாக்குல நான் ஒரு பிட்டு போட்டுக்கிட்டேன்.... 
    எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்தால்..இப்படித்தான் காலியாக இருக்கும்! இதனால், எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எந்த கிரகத்தையும் டைப் பண்ணமுடியாது. அப்படிதான் நினைக்கட்டுமே மக்கள்...
    பதிலளிநீக்கு






புதன், 28 டிசம்பர், 2016

கவலை ஏன்?

நண்பர் என். கணேசன் அவர்கள் பதிவிலிருந்து அவரைக் கேட்காமல் எடுத்துப் போட்டது. நன்றிகள் கணேசனுக்கே உரியன.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்

இது ஒரு மீள் பதிவு


சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்


சர்க்கரை நோயைப் பற்றி பல மருத்துவர்கள் குறிப்பாக டாக்டர் முருகானந்தம் பல பதிவுகள் எழுதியிருக்கிறார். அந்தப் பதிவுகள் மருத்துவ ரீதியில் மிகவும் துல்லியமானவை. பல மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தொகுத்து அதன் சாராம்சங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் சாதாரண சர்க்கரை நோய் உள்ள, சாதாரண மனிதனுக்கு அந்த குறிப்புகளை மனதில் வாங்கி நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிரமமான சமாச்சாரம். அதற்காக, என்னைப் போல் உள்ள பாமர மக்களுக்கும் புரியும்படி சிறு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இவைகளைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறீர்களா? 20 வருடகாலம் சர்க்கரை நோய் அனுபவம் எனக்கு இருக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும்.

இவை யாவும் நான் கற்றுக்கொண்ட நடைமுறை உண்மைகள். ஆனால் இவைகளைக் கடைப்பிடிக்கும்போது ஏதாவது சிக்கல்கள் வருகிற மாதிரி தோன்றினால் உடனே உங்கள் வழக்கமான டாக்டரைப் பார்த்து விடுங்கள்.

1. நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதை முதலில் மறந்து விடுங்கள். கவலை சர்க்கரை நோயை அதிகரிக்கும்.

2. எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் பழைய அளவில் பாதி மட்டும் சாப்பிடவேண்டும். அதாவது முன்பு ஒரு டஜன் இட்லி சாப்பிடுபவராக இருந்தால் இப்போது அரை டஜன் மட்டும் சாப்பிடவும்.

3. நீங்கள் காப்பிப் பிரியரா? சர்க்கரை இல்லாத காப்பி குடிப்பதற்குப் பதிலாக விஷத்தை குடித்து விடலாம். நல்ல காப்பி குடிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ன இரண்டு ஸ்பூன் சர்க்கரைக்குப் பதிலாக ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் பழகி விடும்.

அதற்குப்பிறகு ஒரு ஸ்பூனுக்குப் பதிலாக அரை ஸ்பூன் சர்க்கரை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த ஒரு மாதத்தில் இதுவும் பழகி விடும்.

அப்புறம் மற்றவர்கள் குடிக்கும் காப்பி பாயசம் மாதிரி இருக்கும். என்னய்யா காபி குடிக்கறீங்களா, இல்லை பாயசம் குடிக்கிறீங்களா என்று மற்றவர்களைக் கலாய்க்கலாம்.

4.கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போனால் விருந்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டுபவரா நீங்க? கவலையே படாதீங்க. கல்யாணங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்துங்கள்.

5. டாக்டர் சொல்லும் மருந்துகளைத் தவறாது டாக்டர் சொன்ன முறைப்படி சாப்பிட்டுவிடுங்கள். இதில் எந்த மாற்றமும் கூடாது.

6.பசி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்" ஆகிவிடும். அப்போது கைகால்களில் ஒரு மாதிரி நடுக்கம் வந்து விடும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மயக்கம் கூட வரலாம். இந்த நிலை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

7. மாதம் ஒரு முறை தவறாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு 150 க்கு கீழ் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை. 100 இருந்தால் அன்று நீங்கள் ஒரு ஸ்வீட் சாப்பிடலாம்.

8. எங்கேயாவது ஸ்வீட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட நேர்ந்தால் இரண்டாக சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் குற்ற உணர்வு அதிகரித்து அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் பக்கம் போகாமலிருப்பீர்கள்.

9. வீட்டில் மற்றவர்கள் எல்லாம் வக்கணையாக, விதம் விதமாக ஸ்வீட்டுகள் செய்து சாப்பிடுவார்கள். அவர்கள் மேல் வரும் கொலைவெறியை எப்படியாவது கட்டுப் படுத்துங்கள். ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.

10. தினமும் தவறாமல் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.

அவ்வளவுதானுங்க. ஜாம் ஜாமுன்னு சர்க்கரையில்லா வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மாவுச்சத்து உடலில் சக்தியாக மாறும் அதிசயம்

இது ஒரு மீள் பதிவு


மாவுச்சத்து சக்தியாக மாறும் அதிசயம்


இந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை பார்ப்போம்.

அனைத்து மாவுச்சத்துக்களும் அடிப்படையில் சர்க்கரையே. நூற்றுக்கணக்கான சர்க்கரை மூலகங்கள் பிணைந்து மாவுச்சத்தாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாவுச்சத்து திரும்பவும் சர்க்கரையாக மாறினால்தான் மனிதனுக்கு உபயோகமாகும். இந்த மாற்றம் மனிதனுடைய இரைப்பையிலும் சிறுகுடலிலும் ஏற்படுகிறது. இவ்வாறு மாவுச்சத்து சர்க்கரையாக மாறியபின் அந்த சர்க்கரை இரத்தத்தினால் உறிஞ்சப்பட்டு உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கிறது.


சாப்பிட்டவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது இதனால்தான். வெறும் சர்க்கரையைச் சாப்பிட்டால்தான் இரத்தத்தில் சர்க்கரை கூடும், இட்லி, தோசை, சாதம் முதலானவை சாப்பிட்டால் அவ்வாறு சர்க்கரை கூடாது என்று இன்றும் பல சர்க்கரை நோயாளிகள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று அவர்கள் உணரவேண்டும்.


சர்க்கரை சக்தியாக மாறுவது எப்படி?

(இந்தத் தலைப்பை Ctrl + click செய்தால் இதைப் பற்றிய விரிவான ஆங்கிலக் கட்டுரைக்கு செல்லலாம்.) 


மாவுச்சத்து இரைப்பையை அடைந்தவுடன் பல என்சைம்களினால் ஜீரணமாகத் தொடங்குகிறது. இந்த ஜீரணம் சிறுகுடலிலும் தொடர்கிறது. இதன் காரணமாக மாவுச்சத்து குளுகோஸ் ஆக மாறி, இரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது. சாப்பிட்டவுடன் இந்த சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிக அளவில் இருக்கும். அத்தனை சர்க்கரையும் உடலுக்கு உடனடியாகத் தேவைப்படுவதில்லை. ஆகவே அதிக அளவில் இருக்கும் சர்க்கரையை, உடல் கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. பிறகு இரத்தத்தில் குளுகோஸ் குறையும்போது கல்லீரலில் இருந்து சர்க்கரை இரத்தத்திற்கு வருகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை முழுவதும் குறைந்து போனால் அப்போது பசி ஏற்படுகிறது. இது "உடலில் சர்க்கரை குறைந்து விட்டது, நீ உணவு சாப்பிடவேண்டும்" என்று இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாகும். இது இயற்கை மனிதனுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்.

இந்த மாதிரி குளுகோஸ் கல்லீரலுக்குள் போவதற்கும் திரும்ப வெளியில் வருவதற்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டால் இந்த வேலை நடை பெறாது. அப்போது சாப்பிட்டவுடன் இரத்தத்தில் அதிகமாக சேரும் குளுகோஸுக்கு தேவை இல்லாததினால், இந்த அதிகப்படியான குளுகோஸை உடல் வெளியேற்றி விடும். ஏனென்றால் அந்த அதிக அளவு குளுகோஸ் இரத்தத்தில் இருந்தால் பல அவயவங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். குறிப்பாக கண்கள் பாதிப்படையும். தேவைக்கு அதிகமாக எது இருந்தாலும் உடல் அதை கழிவுப்பொருள் என்றே எடுத்துக்கொள்ளும்.


இந்த அதிக குளுகோஸை வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகங்களின் மேல் சுமத்தப்படுகிறது. உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் எதுவானாலும் அவைகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். தன்னுடைய வழக்கமான பொறுப்புகளுடன் இந்த சர்க்கரையை வெளியேற்றும் பொறுப்பும் கூடினால் சிறுநீரகங்கள் என்ன செய்யும்? ஸ்ட்ரைக் செய்யும். டாக்டர்கள் சர்வ சாதாரணமாக "கிட்னி பெயிலியர்" என்று சொல்லி விடுவார்கள். சரியான சமயத்தில் இதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்தால் தப்பிக்கலாம். நோய் முற்றிய பிறகு வைத்தியம் செய்தால் குணம் காண்பது சற்று கடினம். இதுதான் நீரிழிவு நோய் என்று கூறப்படுகிறது.


இரத்தத்தில் சேரும் குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.  

என்ன, இந்த ஆள்  இந்தப் பதிவை 
டிவிக்களில் வரும் மெகாத் தொடர்கள் போல் நீட்டிக்கொண்டு போகிறானே என்று சலிப்படைய வேண்டாம். ஒரு பதிவில் ஒரு செய்தியை மட்டும் கொடுத்தால்தான் அது மனதில் நன்றாகப் பதியும். அதனால்தான் இந்த ஜவ்வு மிட்டாய் விவகாரம். 

புதன், 14 டிசம்பர், 2016

உலகில் பணமே பிரதானம்


பணம் என்று ஒன்றை மனிதன் கண்டு பிடித்த நாளிலிருந்து இன்று வரை பணத்தினால் மயங்காதவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம். இல்லறத்தானில் இருந்து முற்றும் துறந்த துறவி என்று சொல்கிறவர்கள் வரை இந்தப் பணம் பிரதானமாய் விளங்குகிறது.

காரணம் என்னவென்றால் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும். யாரையும் விலைக்கு வாங்க முடியும். எந்த குற்றமும் செய்து விட்டு தண்டனையில்லாமல் திரியலாம்.

ஆகவேதான் பணத்தின் மீதான மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. ஆனாலும் இந்தப் பணத்தில் ஒரு சிக்கல். இதை தன் உபயோகத்திற்காக பயன்படுத்தத்  தெரியாதவர்களின் கையில் இது ஒரு விலங்கேயாகும்.

பழங்காலத்து ராஜாக்கள் முதல் இந்நாளைய அரசியல்வாதிகள் வரை பணம் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இதை எப்படி சேர்த்துவது என்பதற்கு வரையறை எதுவும் இல்லை. பணம் சேரவேண்டும், அவ்வளவுதான். யார் சாப்பிட்டால் எனக்கென்ன, சாப்பிடாவிட்டால் எனக்கென்ன? என்கிற கொள்கைதான் இன்று ஆட்சி புரிகிறது.

தமிழ்நாட்டில் இன்று அரசியல்வாதிகளை ஆட்டுவிப்பது பணம், பணம் மட்டும்தான் என்று அனைவரும் புரிந்திருப்பீர்கள். பணம் முட்டாளையும் அறிவாளியாகக் காட்டும். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்களை அரசியலுக்கு வரவழைக்கும். பணம்  இருந்தால்  பதவி தானாகத் தேடி வரும். பணம் படைத்தவர்களை  அனைவரும் போற்றுவார்கள்.

ஆகவே, மக்களே, எப்படியாவது பணம் சேருங்கள். அப்போதுதான் உங்களை ஒரு மனிதன் என்று அனைவரும் போற்றுவார்கள்.

சனி, 10 டிசம்பர், 2016

இனிமையான வியாதி

இது ஒரு மீள் பதிவு.


                                     Image result for sugar patient
இனிப்பானதெல்லாம் இன்பமானதல்ல. அதில் ஒன்றுதான் சர்க்கரை நோய். உலகில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் நோய். இந்திய நாடு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் “மதுமேகம்” என்று அழைக்கப்படுகின்ற இந்த நோய் இந்தியர்களுக்குப் பல காலமாகப் பரிச்சயமான நோய். இந்த நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வு அவசியம்.


முதலில் புரிந்து கொள்ளவேண்டியது – இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு. வயது ஆகிவிட்டால் தலை நரைக்கிறது. பல் விழுகிறது. பசி குறைகிறது. காது கேட்பதில்லை. அந்த மாதிரிதான் சர்க்கரை வியாதியும். இது ஒரு ஜீரண மாறுபாடு. இந்நோய் பற்றிய மருத்துவத் தகவல்கள் டாக்டர் முருகானந்தம் அவர்கள் ஒரு பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். தையும் படியுங்கள்.

தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று முதன்முதலில் தெரியும்போது எல்லோரும் அதிர்ச்சியடைவது இயல்பு. அவர்கள் கற்பனை சிறகடித்துக்கொண்டு பறக்கும். ஓ, இனி ஆயுளுக்கும் இனிப்பு சாப்படக்கூடாது, காப்பிக்கு சர்க்கரை போடாமல் குடிக்கவேண்டும், சப்பாத்தி மட்டுமே சாப்பிடவேண்டும், இப்படி வாழ்வது என்ன வாழ்க்கை, செத்துப் போய்விடலாமா என்றெல்லாம் கற்பனை பண்ணுவார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் தேவையற்றவை. நீங்களும் எல்லோரையும் போல் வாழலாம். நல்ல காப்பி குடிக்கலாம். கல்யாண வீட்டில் வெளுத்துக் கட்டலாம். அரிசிச் சாப்பட்டை விட வேண்டியதில்லை. எப்படி என்று பார்க்கலாம்.

நம் உடம்பின் அவயவங்கள் இயங்குவதற்கும், நாம் வேலை செய்வதற்கும் சக்தி தேவைப்படுகிறது. (ஆபீசில் வேலை செய்பவர்கள் இதிலிருந்து விதிவிலக்கு - ஏனென்றால் அவர்கள் வேலை என்பது தூங்குவதுதானே). இந்த சக்தியானது நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் சாப்பாடு அப்படியே சக்தியாவதில்லை. பலவிதமான வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உணவு சக்தியாக மாறுகின்றது. அப்படி ஏற்படும் மாற்றங்களில் முக்கியமானது நம் உணவிலுள்ள ஸ்டார்ச்சு சத்து குளுகோஸ் சர்க்கரையாக மாறுவது. இது நமது இரைப்பையில் நடக்கிறது.

இந்த குளுகோஸ் சர்க்கரை குடல்களில் உள்ள குடல் வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேருகிறது. இந்த குளுகோஸ் சர்க்கரைதான் உடலின் பல பாகங்களுக்கும் சென்று அந்த திசுக்களுக்கு சக்தியைத் தருகிறது. குளுகோஸ் திசுக்களில் எப்படி சக்தியாக மாறுகிறது என்பதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ( நான் படிச்சதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி கட்டாயம் உங்கள் கழுத்தை அறுக்கப் போகிறேன்.)

நாம் எல்லோரும் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவோம். அதற்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். நாம் சாப்பிட்ட உணவு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகி, அந்த குளுகோஸ் முழுவதும் ரத்தத்தில் சேர்ந்து விடும். அப்போது ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாக இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் நமது உடம்புக்கு சக்தி ஒரு அளவில் நீடித்து, அதாவது அடுத்த வேளை உணவு உண்ணும் வரை வேண்டும். ஆகவே ரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரையை ஓரிடத்தில் சேமித்து வைத்துப் பிறகு உடலுக்குத் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் நல்லதல்லவா? கடவுள் இதற்கான ஒரு வழியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்போது, அந்த சர்க்கரையானது கல்லீரலில் சேமிக்கப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து ரத்தத்திற்கு திரும்பவும் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆறுகளில் வெள்ளம் வரும்போது அதை அணைக்கட்டுகளில் சேகரித்து ஆற்றில் நீரை ஒரே அளவில் விடுகிறோம் அல்லவா? அதே போல் கல்லீரல் சர்க்கரைக்கு ஒரு அணைக் கட்டாக செயல்படுகிறது. இப்படி இல்லாவிட்டால் ஆற்று வெள்ளம் அது பாயும் இடங்களிலெல்லாம் சேதம் விளைவித்து விடும் அல்லவா? அது போல்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் உடலின் பல அவயவங்களுக்குத் தீமை வந்து சேரும். இவ்வாறு நடக்காமல் இருக்க கல்லீரல் ஒரு அணையாக வேலை செய்கிறது.

இன்னொரு சமாச்சாரம். சர்க்கரை ரத்தத்திலிருந்து கல்லீரலுக்குள் போவதற்கும் மறுபடி கல்லீரலுக்குள் இருந்து ரத்தத்திற்கு வருவதற்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகின்றது. பல காரணங்களினால் இந்த இன்சுலின் பலருடைய உடம்பில் பற்றாக்குறையாகி விடுகிறது. அப்போது சாப்பிட்டவுடன் ரத்தத்தில் அதிக அளவில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்குள் போகாமல் ரத்தத்திலேயே இருந்து விடுகிறது. அதனால்தான் இதை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.

சரி, அப்படி ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அதிக சர்க்கரை ரத்தத்தில் இருந்தால், கிட்னி அதை வெளியேற்றப் பார்க்கும். அப்போது சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இப்படி சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டால் கொஞ்ச நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கல்லீரலிலிருந்து சர்க்கரை ரத்தத்திற்கு வராது. வேலை செய்ய சக்தி குறையும். அதை ஈடுகட்ட மூளை சாப்பிடு என்று சொல்லும். பசி எடுக்கும். அப்போது சாப்பிடவேண்டும்.

இப்படி சாப்பிடுவதும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் இருந்து சிறுநீர் வழியாக சர்க்கரை வெளியேறுவதுமாக இருந்தால் உடல் நிலை க்ஷீணித்து பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வு உடலில் இன்சலின் செயலை அதிகரிக்கவேண்டும். இதை இரண்டு விதத்தில் டாக்டர்கள் செய்வார்கள். ஒன்று மாத்திரைகள், இரண்டு இன்சுலின் இஞ்செக்ஷன். ஆனால் இவை முழுமையான தீர்வுகள் அல்ல. டாக்டர் முருகானந்தம் சொல்லியுள்ள வழி முறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.

வியாழன், 8 டிசம்பர், 2016

முதுமை ஒரு வரம்.




முதுமை ஒரு வரம்தான். எந்த சூழ்நிலையில் என்பதுதான் கேள்வி? இளமையில் ஒழுங்காக வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

"ஒழுங்காக" என்பதற்கு பலவிதமாக வியாக்யானம் கொடுக்கலாம். நான் "ஒழுங்காக" என்று நினைப்பது மற்றவர்களுக்கு ஒழுங்கற்றதாகத் தெரியலாம். அதை பின்னூட்டங்களில் விவாதித்துக் கொள்ளலாம்.

"ஒழுங்காக" என்பதற்கான இலக்கணங்கள்.

1. படிக்கவேண்டிய வயதில் நன்றாகப் படிக்கவேண்டும்.

2. படித்து முடித்தவுடன் தன் தகுதிக்கேற்ப ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும்.

3. வேலையில் செட்டில் ஆனவுடன் ஒரு கல்யாணம் செய்துகொண்டு குடும்பத்தை விருத்தி செய்யவேண்டும்.

4. வரவிற்குள் செலவை அடக்கி சேமிப்பும் செய்யவேண்டும்.

5. தன் வாரிசுகளுக்கு நல்ல படிப்பும் நல் ஒழுக்கமும் கற்றுத் தரவேண்டும்.

6.அவர்களுக்கு காலா காலத்தில் ஆணாக இருந்தால்   நல்ல வேலையில் அமர்த்த வேண்டும், பெண்ணாக இருந்தால் ஒரு கல்யாணம் செய்து வைக்கவேண்டும்.

7. ரிடையர் ஆன பிறகு கிடைக்கும் தொகைகளை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

எல்லோரும் இப்படி வாழ முடியுமா என்று பலரும் நினைக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்தேன். இன்று முதுமையில் கவலை இல்லாமல் இருக்கிறேன்.

என் அனுபவத்தைச் சொல்வதன் மூலம் ஒரு சிலராவது பலனடைந்தால் அது என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மிளகாய் ஊறுகாய் செய்யும் முறை.



முதலில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மிளகாய் என்றதும் காய்ந்த மிளகாயை நினைத்தவர்கள் அனைவரும் "ஒன் ஸடெப் பேக்". ஊறுகாய் போடுவதற்கு உகந்தது பச்சை மிளகாயே.

போன பதிவில் "நான் படித்த படிப்பென்ன" என்று எம்ஜியார் பாணியில் பாடினேன் அல்லவா? அப்படி நான் என்ன படித்தேன் என்று அறிய ஆவல் கொண்டிருப்பீர்கள் என்று அறிவேன். ஆகவே நான் படித்த பெருமைகளைச் சிறிது கூறிவிட்டுப் பிறகு ஊறுகாய் சமாச்சாரத்திற்குப் போவோம்.

நான் படித்தது விவசாய வேதியல் படிப்பு அதாவது "கெமிஸ்ட்ரி".  இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பீர்கள். சினிமாவில் குறிப்பாக "கெமிஸ்ட்ரி" வொர்க்அவுட் ஆகலைன்னு இப்ப அடிக்கடி சொல்றாங்களல்லவா? அதுக்கு அர்த்தம் அவுங்க எதிர்பார்த்த மாதிரி அந்தப் படம் வெற்றி பெறவில்லை அல்லது அந்தக்காட்சி எதிர் பார்த்த மாதிரி வரவில்லை, இப்படி பல அர்த்தங்கள்.

உலகம் முழுவதும் இந்த "கெமிஸ்ட்ரி" யினால்தான் இயங்குகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். "கெமிஸ்ட்ரி" இயங்காத இடமே இல்லை. ஊறுகாய் போடுவதும் சுத்தமான "கெமிஸ்ட்ரியே" தவிர வேறு ஒன்றும் இல்லை.

இப்போது மிளகாய் ஊறுகாய்க்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

1. நல்ல புதிதாகப் பறித்த பச்சை மிளகாய் -
       நன்றாக கழுவி  ஒரு வெள்ளைத் துணிமேல் பரப்பி
       பேஃனுக்கு அடியில் வைத்து ஈரம் போகும் அளவிற்கு             உலர்த்தியது                                                               -  500 கிராம்.
2. தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி                -   250 கிராம்.
3. தோல் நீக்கிய பூண்டு                                        -    250 கிராம்
4. பொடித்த கல்லுப்பு                                             -   100 கிராம்
5.  பெருங்காயப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
6.  நல்ல நல்லெண்ணை - 100 மில்லி
7.  கடுகு   - ஒரு டேபிள் ஸ்பூன்
8. சீரகம்  - அரை டேபிள் ஸ்பூன்
9. கருவேப்பிலை - ஒரு இணுக்கு
10. இரண்டு எலுமிச்சம்பழத்திலிருந்து எடுத்த சாறு.

செய்முறை.

முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து  
ஈரம் இல்லாமல் துடைத்து வைத்த ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் இஞ்சியையும் பூண்டையும் அரைத்து அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நன்றாக கலக்கவும். உப்பைச் சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். (எலுமிச்சை இல்லாவிட்டால் 100 மில்லி வினிகர் சேர்த்துக்கொள்ளலாம்)

பாத்திரத்தை மூடி மூன்று நாட்கள் வைத்திருக்கவும். மூன்றாம் நாள் அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு பாதி பொரிந்து கொண்டிருக்கும்போது சீரகத்தைப் போடவும். உடனே கருவேப்பிலையைப் போடவும். பத்து செகன்ட் கழித்து வாணலியை இறக்கி வைத்து பெருங்காயத்தைப் போடவும், பிறகு தாளித த்தை மிளகாய் அரைத்து வைத்திருப்பதின் மேல் கொட்டி நன்றாக கிளறி விடவும்.

ஊறுகாயை உங்களுக்கு விருப்பமான (நன்கு கழுவி, வெயிலில் இரண்டு மணி நேரம் காயவைத்த) ஜாடி அல்லது பாட்டிலில்  போட்டு வைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான். சுவையான காரசாரமான மிளகாய் ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, தயிர் சாதம் அமிர்தமாய் சுவைக்கும். ஒரு குறிப்பு - பொரியல் சாப்பிடுகிற மாதிரி வழித்து நாக்கில் வைக்காதீர்கள். ஒரு விரலால் நொட்டு நாக்கில் வைத்தால் போதும்.

ஒரு எச்சரிக்கை; வயிற்றில் அல்சர் இருப்பவர்கள் தங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகு இந்த ஊறுகாயை உபயோகிக்கவும். அப்படிச்செய்யாமல்   இந்த ஊறுகாயைச் சாப்பிட்டால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பில்லை.

பிற்சேர்க்கை: இதோ நான்கு மாதங்களுக்கு முன் நான் போட்ட மிளகாய் ஊறுகாய்.




வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஒரு காரசாரமான பதிவு

                                 
                                     Image result for மிளகாய்ஊறுகாய்

மனிதன் சாப்பிடுவது ருசிக்காகத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள் தயவு செய்து வேறு பதிவிற்குச் சென்று விடுங்கள். உங்கள் நேரத்தை இங்கு விரயப்படுத்த வேண்டாம். ATM க்யூவில் நின்றாலாவது இரண்டாயிரம் ரூபாய் செலவிற்குக் கிடைக்கும்.

ருசியை அறிவது நாக்கில் உள்ள ருசி அறியும் திசுக்களே. இவை 60 வயதாகும்போது பாதிக்கு மேல் செயலிழந்து போகின்றன என்று மருத்துவம் படிக்கும் என் பேரன் சொல்கிறான். அது உண்மைதான் என்று என் மனைவியும் சொல்கிறாள். அவள் எதை வைத்து அப்படி சொல்கிறாளென்றால், நான் தினமும் சாப்பிடும்போது சாப்பாட்டில் ருசியே இல்லை என்று சொல்வதை வைத்து அப்படி சொல்கிறாள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் கடைக்குப் போனபோது "மிளகாய் ஊறுகாய்" என்ற ஒன்றைப் பார்த்தேன். ஒரு பாக்கெட் வாங்கி வந்தேன். பிரித்து ஒரு பாட்டிலில் போட்டு, சாப்பிடும்போது தயிர் சாப்பாட்டுக்கு அதை வைத்து சாப்பிட ஆரம்பித்தேன். தொட்டு வாயில் வைத்தவுடன், ஆஹா, அந்த அனுபவத்தை எப்படிச் சொல்வேன்?

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அப்படியே ஒரு சிலிர்ப்பு. அடுத்த வினாடியே ஒரு கவளம் தயிர் சாதம், எப்படி எடுத்தேன், எப்போது வாயில் போட்டேன், எப்படி விழுங்கினேன் என்பது ஒன்றும் நினைவில் இல்லை. இப்படியாக ஒரு அரை ஸ்பூன் ஊறுகாயில் தயிர் சாதம் முழுவதும் மறைந்தது.

ஆஹா, இந்த ஊறுகாய்தான் நமக்கு உகந்தது என்று முடிவு செய்து, இன்னும் இரண்டு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போனால், சார், அந்த ஊறுகாய் நேற்றே தீர்ந்து விட்டது, ஆர்டர் போட்டிருக்கிறோம், வந்து விடும். அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போங்கள், என்றார்கள். வியாபார தந்திரம் எப்படி, பாருங்கள்.

பின்பு பல முறை போய்ப்பார்த்தும் அந்த ஊறுகாய் வரவேயில்லை. முதலில் வாங்கினது தீர்ந்து விட்டது. அந்த ஊறுகாய் இல்லாமல் தயிர் சாதம் உள்ளே போகமாட்டேனென்கிறது. என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.

அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. நாம் படித்த படிப்பென்ன, லேசான படிப்பா, வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே, இந்த மிளகாய் ஊறுகாய் என்ன, ஆர்ய வித்தையா? என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில் பாருங்கள்.