இந்த வார்த்தைகளை பதிவர்கள் எல்லோரும் பல பதிவுகளில் பார்த்திருப்பார்கள். இந்த வார்த்தைகளில் இருந்து நான் புரிந்து கோண்டது என்னவென்றால் :-
அவர்களுடைய எழுத்துக்கள் மிகவும் பொருளும், மதிப்பும் மிக்கவை. அவை நிறையப் பேருக்குப் போய்ச் சேர்ந்தால் அந்த மக்கள் அதைப் படித்து ஜன்ம சாபல்யம் அடையட்டும் என்பதுதான் அவர்கள் அவா. அதனால்தான் அந்த எழுத்துக்கள் பல பேரைச் சென்றடையட்டும் என்று நம்மை பல திரட்டிகளில் ஓட்டுப்போடச் சொல்லுகிறார்கள்.
நான் புரிந்துகொண்டது சரி என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்தப்பதிவை காப்பி பேஸ்ட் செய்கிறவர்களும் அதே வேலையைத்தானே செய்கிறார்கள். ஏன் அப்போது மட்டும் எல்லோரும் லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறார்கள். அந்த எழுத்துக்களை நீங்கள் பிறக்கும்போதே கொண்டு வந்தீர்களா, இல்லையே. நீங்களும் அந்தக் கருத்துக்களை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டவர்கள்தானே? நீங்கள் எங்கிருந்தோ எடுத்ததை, உங்களிடமிருந்து ஒருவர் எடுக்கிறார், அவ்வளவுதானே.
இந்தடூரைப்பற்றிஎழுத ஆரம்பித்ததும்ஒருபதிவர்சொன்னார். கேதார்நாத்செல்வதற்குநிறையமனோதிடம்வேண்டும்என்று. அதைஇந்தடூரில்அனுபவபூர்வமாகஉணர்ந்தேன். முதலில்நம்ஊர்சாதம், சாம்பார், ரசம், மோர்இவைகளைமறந்துவிடவேண்டும். ரொட்டி, டால்அல்லதுசப்ஜி, கடுகு எண்ணெய்,இவைகளுக்குமனதுஒத்துக்கொண்டால்ஒழியவடநாட்டுயாத்திரையைப்பற்றிகனவுகூடக்காணவேண்டாம். இது தவிர மனதில்அளவுக்கதிகமானபக்திவேண்டும். வடநாட்டுக்காரர்களிடம்இருக்கும்அளவுபக்திதென்னாட்டவரிடம்இல்லையென்றுதான்சொல்லவேண்டும். பக்திஇருந்தால்தான்உடல்உபாதைகளைமறந்துஆண்டவனைத்தரிசிக்கவேண்டும்என்றவேட்கைதோன்றும். இரண்டாவது, பணத்தைத்தாராளமாகச்செலவுபண்ணக்கூடியசௌகரியம். இதுஇல்லாவிட்டால்இன்னும்அதிகமான, அசௌகரியங்களுக்குஆளாகவேண்டும். இந்தஅசௌகரியங்களுக்குஅஞ்சாதமனோதிடம் வேண்டும்.
ஹரித்துவாரிலிருந்துகேதார்நாத்மலையின்அடிவாரமான “கௌரிகுண்ட்” என்னும் இடத்திற்குப்போக ஏறக்குறைய 220 கிலோமீட்டர்கள். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. ஒரு பக்கம் மலை. மறு பக்கம் அதலபாதாளம். அதன் அடியில் சின்ன வாய்க்கால் மாதிரி தெரியும் கங்கை நதியும் அதன் கிளை நதிகளும். இந்தப்பாதாளத்தில் விழுந்தால் நம் காரும் நாமும் என்னவாவோம் என்கிற நினைப்பே ஆண்டவனை நம்ப வைத்துவிடும். அவன் அருள் இல்லையென்றால் அவனை நினைக்கவோ, தரிசிக்கவோ, தரிசித்துவிட்டு உயிருடன் ஊர் திரும்பவோ முடியாது என்கிற நம்பிக்கையை இந்த பாதாளங்களைப் பார்த்ததும் நிச்சயம் தோற்றுவிக்கும்.
இயற்கையன்னை கருணையுடன் நம்மை இந்த சிந்தனைகளிடமிருந்து மீட்டு தன்வயப்படுத்துகிறாள். எங்கும் பச்சப்பசேல் என்ற பசுமை. ஓங்கி வளர்ந்த மரங்கள். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. பெரும்பாலான இடங்களில் கூடவே வரும் கங்கை. இவை நம் கவனத்தை ஈர்க்கின்றன.
மதியம் 1 மணிக்கு ஸ்ரீநகர் என்னும் ஊரில் மதிய உணவு சாப்பிட்டோம். என்ன உணவு என்றால் “ரொட்டி, சப்ஜி, சாவல், தஹி, அச்சார்”. இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஐந்து வார்த்தைகளை வைத்துக்கொண்டு வட இந்தியா முழுவதும் உங்கள் உணவுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். என்ன ஒரே சங்கடம் என்றால் இரண்டு நாளில் வயிற்றுப்போக்கு ஆரம்பிக்கும். இதற்கு உண்டான மருந்துகளை நம் மருந்துப்பெட்டியிலிருந்து எடுத்து சாப்பிட வேண்டியதுதான். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இனி ஊர் திரும்பும் வரையில் இந்த மாத்திரைகள்தான் நம் உணவு. அதற்குத்தேவையான அளவு மாத்திரைகளை ஊரிலிருந்தே முன் எச்சரிக்கையாக கொண்டு வந்திருக்கவேண்டும். வயிற்றுப்போக்கு நிற்பதற்கும் நாம் நம் ஊர் வந்து சேருவதற்கும் சரியாக இருக்கும். அப்புறம் என்ன, நம் டாக்டர் நம்மையும் நாம் திருப்பிக் கொண்டு வந்திருக்கும் மிச்சம் மீதி இருக்கும் பணத்தையும் கவனித்துக் கொள்வார்.
ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத், பத்ரிநாத் செல்லும் சாலைகளை BSFஎன்னும் எல்லையோரக் காவல் படையினர் பராமரிக்கிறார்கள். ஆகவே அவைகள் நன்றாக இருக்கின்றன. பல சமயங்களில் மலைச்சரிவு ஏற்பட்டு ரோடு அடைபட்டு விடும். அநேகமாக சில மணி நேரங்களில் சரி செய்து விடுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் சரி செய்வதற்கு ஓரிரு நாட்கள் கூட ஆகலாம். அந்த மாதிரி நிலைமை ஏற்பட்டால் டூரை கேன்சல் செய்து விட்டு திரும்பவதைத்தவிர வேறு வழி இல்லை. எங்கள் நல்ல காலம் அந்த மாதிரி ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
அந்த மலைப்பதையில் வண்டி ஓட்டும் டிரைவர்களும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். வேகமாகச் சென்றால்கூட விபத்துக்களை ஏற்படுத்துவதில்லை. நமக்குத்தான் பயமாக இருக்கிறது. இப்படியாகப்பயணித்து மாலை 5 மணிக்கு சோனப்பிரயாக் என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த இடம் கௌரிகுண்ட் என்னும் இடத்திற்கு ஐந்து கி.மீ. முன்னால் இருக்கிறது. எங்கள் டிரைவர் என்ன சொன்னாரென்றால், “கௌரிகுண்டிற்குச் சென்றால் தங்குவதற்கு நல்ல சௌகரியமான இடம் கிடைக்காது. சோனப்பிரயாக்கில் நல்ல ஓட்டல் இருப்பதால் அங்கேயே தங்கிக்கொள்ளலாம்” என்று சொன்னார். நாங்களும் அப்படியே சரியென்று சொல்லி, சோனப்பிரயாக்கிலேயே தங்கினோம். ஓட்டல் உண்மையிலேயே நன்றாக இருந்தது.
நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள். ஆனால் இது உண்மை. வீட்டில் ஒரு லைட் பல்பு மாற்ற 35000 ரூபாய் செலவு.
அமெரிக்க சஞ்சிகைகளில் அடிக்கடி வரும் ஒரு பிரபலமான கேள்வி. ஒரு லைட் பல்பு மாற்றுவதற்கு எவ்வளவு பேர் வேண்டும் என்று கேட்பார்கள். இதில் ஏதோ ஒரு ஜோக் இருக்குதுன்னு நம்புகிறேன். ஆனா அது என்னன்னு என்னுடைய மரமண்டைக்கு இன்னமும் புரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் ஆயுளுக்கும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பயப்படாதீங்க. என்னுடைய ஆயுள் அவ்வளவு ஜாஸ்தியா இருக்காது. (76 வயசுக்காரன் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போகிறான்?)
நம்ம சப்ஜக்ட்டுக்கு வருவோம். நேற்று என் நண்பர் (என் வயசுதான்) ஒருவரை எலும்பு முறிவு ஆஸ்பத்திரியில் பார்த்தேன். என்ன இங்க வந்திருக்கீங்க, என்ன சமாசாரம் என்று விசாரித்தேன்.
அவர் சிரித்துவிட்டு வீட்டில் ஒரு பல்பு மற்றினேன் என்றார்.
அதுக்கு இங்க எதுக்கு வந்திருக்கீங்க என்றேன்.
அவர் அது பாருங்க, ஒரு ஸ்டூல் மேல ஏறி நின்னு பல்பு மாத்தினேனுங்களா, அந்த ஸ்டூல் சாய்ந்து நான் கீழே விழுந்துட்டேன். இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இங்க வந்து அதுக்கு ஒட்டுப்போட்டு ரிப்பேர் செய்தேன். இன்னிக்கு செக்கப்புக்கு வந்திருக்கேன் என்றார்.
அடடா, அப்படியா ஆய்ட்டுது, வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டு, சரி, இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு என்று கேட்டேன்.
அவர் முப்பத்தியைந்தாயிரம் ஆச்சு என்றார்.
இப்ப கணக்கு புரிஞ்சுதுங்களா?
என் வீட்டிலும் ஒரு பல்பு ப்யூஸ் ஆகிவிட்டது. முப்பத்தியைந்தாயிரம் ரூபாய் வேண்டும். பதிவர்கள் யாராவது உதவ முடியுமா?
என் நண்பரின் மகள், அமெரிக்காவில் செட்டில் ஆனவள், தன்னுடைய மகளுடனும், அப்பா, அம்மாவுடனும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் வருகிறார்களென்று தெரிந்தவுடனேயே கை கால்களையெல்லாம் டெட்டால் போட்டுக்கழுவி விட்டு வெந்நீர் கொதிக்கவைத்து ஆறவைத்து அதைத்தனியாகவும், அதில் ஜூஸ் தனியாகவும் கலக்கி வைத்திருந்தோம்.
வீட்டிற்கு வந்தவர்கள் என்ன சொல்லியும் அந்த தண்ணீரையோ, ஜூஸையோ குடிக்கவில்லை.
இரண்டு மாதம் கழித்து நாங்கள் ஒரு பெரிய ஓட்டலில் "கெட்டுகெதர்" வைத்திருக்கிறோம், நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாங்கள் ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லிப் போகவில்லை.என்னுடைய தன்மானம் என்னைப்போக விடாமல் தடுத்தது.
ஆனால் எல்லோரும் அப்படியில்லை. போன வாரம் இன்னொரு நண்பரின் அமெரிக்க குடியுரிமை வாங்கிய மகள், மாப்பிள்ளை, பேத்தி ஆகியோர் இங்குள்ள என் நண்பரின் வீட்டுக்கு ஒரு வார விடுமுறையில் வந்திருந்தார்கள். நான் அவர்களை என் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தேன். எந்தவித பந்தாவும் இல்லாமல் வீட்டுக்கு வந்து இரண்டு மணிநேரம் இருந்து நாங்கள் கொடுத்த கேசரி, இட்லி (முருங்கைக்காய் சாம்பார் - அந்தப்பேத்திக்கு பிடிக்கும் என்று தெரிந்து அதை வைத்திருந்தோம்), தயிர் சேமியா ஆகியவற்றை எந்த பிகுவும் பண்ணாமல் சாப்பிட்டுவிட்டுச் சென்றார்கள். மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
அந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு “கெட்டுகெதர்” பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். சந்தோஷமாகப்போய் வந்தோம். படங்களைப் பாருங்கள்.
பல பதிவர்கள் பல புதிய புரொக்ராம்களைப் பற்றி உயர்வாக தங்கள் பதிவுகளில் எழுதுகிறார்கள். அவர்கள் நல்ல எண்ணத்துடன்தான் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றுதான் எழுதுகிறார்கள். சில சமயம் அந்த புரொகிராம் எழுதின கம்பெனியே பதிவர்களைத் தொடர்புகொண்டு எங்கள் புரொகிராம் பற்றி உங்கள் பதிவில் எழுதினால் உங்களுக்கு அந்த புரொகிராமை இலவசமாகத் தருகிறோம் என்றும் ஆசை காட்டுவதுண்டு. என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அந்தப் புரொகிராம் உங்களுக்கு மிகமிக அவசியம் என்றால் ஒழிய அதை தரவிறக்கவேண்டாம்.
அடுத்ததாக அந்த வேலையைச் செய்யும் புரொகிராம் ஏற்கனவே உங்களிடம் இருந்தால் (உதாரணத்திற்கு, ம்யூசிக் பிளேயர்கள்) புது புரொகிராமுக்கு போகவேண்டாம்.
மிக அவசியம் என்று தோன்றும் புரொகிராம்களை நாலு நண்பர்களிடம் விசாரித்துவிட்டு தரவிறக்கவும்.
அல்லது கம்ப்யூட்டரை கண்டெம்ன் பண்ணுவதாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் தரவிறக்குங்கள் நண்பர்களே.
இந்தவிபரத்தைவெங்கட்டிடம்சொன்னஐந்தாவதுநிமிடத்தில்அவர்என்முன்னால்நின்றார். என்தற்போதையமீசை, நான்எங்கிருந்தாலும்அடையாளம்காட்டிவிடும். அவர்அன்புடன் டில்லி பிளம்ஸ் பழங்கள் வாங்கி வந்திருந்தார். அவரை என் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவிட்டு பொதுவான குடும்ப சமாசாரங்கள் பரிமாறிக்கொண்ட பிறகு பதிவுலகத்தைப் பற்றியும் சிறிது பேசினோம். பதிவுலகத்தை தற்போது பீடித்திருக்கும் முக்கிய வியாதியான ஜாதி, மதம் வேற்றுமைகளைப் பற்றிப் பேசினோம். அதைப்பற்றி இருவரும் ஒத்த கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஒரு 45நிமிடம் அளவளாவிய பிறகு அவர் விடை பெற்றுச்சென்றார்.
டில்லி ஏர்போர்ட்டில் இறங்கும்போது வெளியில் உஷ்ண நிலை 45 டிகிரி செல்சியஸ் என்று சொன்னார்கள். கோவையில் 45டிகிரி வெய்யிலைப் பார்த்ததே இல்லை. வெளியில் வந்தவுடனேயே வெய்யிலின் தாக்கத்தை எங்களால் தாங்க முடியவில்லை. தண்ணீர், பாட்டில் ஜூஸ், மாற்றி மாற்றி குடித்தும் தொண்டை வறட்சியை நிறுத்த முடியவில்லை. பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகு வெங்கட் வந்து பேசிவிட்டுப் போகும் வரை ஒரு மாதிரி வெய்யிலை மறந்திருந்தேன். அவர் போன பிறகு இரவு 10 மணி வரை என்ன செய்வது என்றே தெரியாமல் ஒருவிதமான மயக்கத்திலேயே இருந்தோம். பத்தரை மணிக்கு ஹரித்துவார் போகும் முஸ்ஸோரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பிளாட்பாரத்திற்கு வந்தது. வெங்கட் போனபிறகு மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு உண்மையான முதல் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டோம்.
ரயில் வந்தவுடன் எங்கள் கம்பார்ட்மென்டில் (நல்ல காலம் ஏ.சி. கிளாஸ்) ஏறி உட்கார்ந்ததும்தான் ஒரு மாதிரி போன உயிர் திரும்பி வந்தது. ரயில் அரை மணி நேரத்தில் புறப்பட்டது. ரயில் புறப்பட்டவுடன் தூங்கி விட்டோம். காலை ஐந்தரை மணிக்கு ஹரித்துவார் சேர்ந்தோம். லக்கேஜ்களை இரண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி அய்யப்பன் கோவில் தங்குமிடத்துக்கு போனோம். அங்கு காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியில் வந்தோம். வாசலில் தள்ளுவண்டியில் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இட்லி தயாரித்து விற்றுக்கொண்டிருந்தார். ஆளுக்கு நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டோம்.
ஹரித்துவாரில் ஒரு தாள் தங்கிவிட்டு அடுத்த நாள்தான் கேதார்நாத் புறப்படுவதாக முதலில் திட்டம். ஆனால் டிராவல் கம்பெனிக்கும் எனக்கும் நடந்த பேச்சுகளில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக அன்றே கேதார்நாத் புறப்பட அவர் டாக்சி 8 மணிக்கு அனுப்புவதாகச் சொல்லி விட்டார். வேறு வழியில்லை. டிபன் சாப்பிட்டவுடன் டாக்சி வந்துவிட்டது. உடனே புறப்படவேண்டியதாயிற்று. குழறுபடிக்குக் காரணம், டிராவல் ஏஜென்ட் இந்தியில் பேசினார். நான் எனக்குத் தெரிந்த காலே அரைக்கால் இந்தி. தமிழ், இங்கலீஷ் கலந்த பாஷையில் பேசினேன். எப்படியோ டாக்சி வந்துவிட்டது.
மூட்டைகளை ஏற்றி நாங்களும் ஏறி கேதார்நாத் மகாதேவ் சாமியைக் கும்பிட்டு விட்டுப் புறப்பட்டோம்.