புதன், 3 ஆகஸ்ட், 2011

கல்யாணம் ஏற்பாடு பண்ணுதல்




நாஞ்சொல்ற மொறைமைகஎல்லாம் 40-50 வருசத்துக்குமுந்தி நடந்ததுங்கோ.இப்பெல்லாம் பல மாத்தங்கவந்திருச்சுங்க.
ஒரு ஊட்ல வயசுக்கு வந்தபொண்ணோ, மாப்பிள்ளையோஇருந்தாக்காசொந்தபந்தமெல்லாம்அவுங்கவுங்களுக்கு தெரிஞ்சஜோடியப்பத்தி சொல்லுவாங்க.இப்பத்த மாதிரி நம்முளுக்குஎன்னான்னு ஒதுங்கமாட்டாங்கஅப்படி சொன்னதுபோக, நெருங்கினசொந்தத்துக்குள்ளும் பொண்ணுமாப்புள்ள பாக்கறதுண்டுங்க.மாமன்புள்ளஅத்தைபுள்ளய்ன்னு இருந்தா ஒண்ணுக்குள்ளஒண்ணா இருக்கட்டுமுன்னு கட்டி வைக்கிறது வழக்கமுங்கோ.அப்பத்தான் சொந்தம் உட்டுப்போகாமெ இருக்குமுங்க.

அப்பிடி சொந்தத்துல ஒரு எடமும் இல்லைனாத்தான் வெளில பொண்ணோமாப்பிள்ளயோ தேடுவாங்கஅப்பிடியும் ரொம்ப தூரமெல்லாம் போகமாட்டாங்கஏதாவது  விசேசம்னா நடந்துபோய்ட்டு வர்ரமாதிரி தூரமாத்தான் இருக்கோணும்ரொம்பவசதியா இருக்குறவங்கதான் தூரமா இருந்தாலும் பரவால்லீன்னு நெனப்பாங்கஅவங்க போகவர வண்டிவாசி வச்சிருப்பாங்கமாட்டு வண்டிகதானுங்க.

இப்ப மாதிரி புரோக்கர்களோதிருமண அமைப்புகளோ அப்ப கிடையாதுங்கஅப்படி தோதான எடமுன்னு தெரிஞ்சா,யாராவது பொது மனுசரெ உட்டு பொண்ணு கேப்பாங்கமாப்பிள்ள ஊட்டுல இருந்துதான் மொதல்ல பொண்ணு கேட்டுஆளு உடோணுமுங்கபொண்ணு ஊட்லேர்ந்து மொதல்ல மாப்பிள்ள கேட்டு அவங்க ஊட்டுக்குப்போனாஅது ரொம்ப மானக்கேடான விசயமுங்கஅப்பறமுங்க அப்பெல்லாம் கொளந்த பொறந்தா சாதகம் எளுதற வளக்கம் கிடையாதுங்கஏன்னாஅப்பெல்லாம் ஊர்ல பெரிய வசதியானவங்கஊட்லதான் கெடியாரமே இருக்குமுங்ககொளந்த பொறந்தநேரத்தைக்குறிச்சு வச்சு ஜாதகம் எளுதறது ரொம்பக் கம்மிங்க.


அதனால பொண்ணு மாப்பிள்ளஜோடிப்பொருத்தம் சரியா இருந்து ரெண்டுஊட்டுக்காரங்களுக்கும் புடிச்சுப்போச்சுன்னாசகுனம் பாப்பாங்கஅதாவது பொண்ணுப் பாக்கறதுக்குண்ணு நாலு பேரு போவாங்க இல்லீங்களாஅப்போ எதிர்ல நல்ல சகுனம்கண்ணுல படோணுமுங்கஅதாவதுசுமங்கலிப்பொம்பள,பசுமாடுஇப்படி ஏதாச்சும் ஒண்ணு கண்ணுல பட்டாசரிஇந்த எடத்தை முடிச்சுடுவோம்னு முடிவு பண்ணுவாங்கஏதாச்சும்கெட்ட சகுனமா தென்பட்டா அந்தக் காரியத்தெ நிறுத்திப்போடுவாங்க.

மாப்பிளை பொண்ணைப்போயி அவங்கூட்ல பாக்கறதுங்கிற வளக்கமெல்லாம் அப்போ கெடயாதுங்கஎங்கயாச்சும் கோயல் கொளத்துல பாத்தாத்தான் உண்டுஅது மாதிரித்தான் பொண்ணும் மாப்பிள்ளய பாத்திருக்காதுங்கபெரியவங்க பாத்துமுடிவு பண்ணுனா அதுக்கு அப்பீலே இல்லைங்கோ.
இதுக்கு மேலயும் சில பேரு கோயில்லெ பூக்கேட்டு முடிவுபண்ணீக்கலாம்னுரெண்டு ஊட்டுக்காரங்களும் அவங்கூருகோயிலுக்குப் போவாங்கஅங்க போயி செகப்பு பூ ஒருபொட்டலத்திலியும்வெள்ளைப்பூ ஒரு பொட்டலத்திலயும் கட்டிசாமிக்கு முன்னால வச்சு பூசை பண்ணுவாங்கமொதல்லயேரெண்டு பேரும் வெள்ளப்பூ வந்தா கல்யாணத்தெ நடத்தலாம்னுபேசி வச்சுக்குவாங்கபூச முடிஞ்சதும் அங்க இருக்கிற ஒருசின்னப்புள்ளய கூப்பிட்டு அந்த ரெண்டு பொட்டலத்துல ஒண்ணஎடுக்கச்சொல்லுவாங்கஇவிங்க நெனச்ச வெள்ளப்பூ அந்தபொட்டலத்துல இருந்துச்சின்னாஆஹாசாமிபூக்குடுத்துட்டுதுன்னு போய் மேக்கொண்டு ஆக வேண்டியதப்பாப்பாங்கவேற பூ வந்திருச்சுன்னாசாமி பூக்குடுக்கலஎன்னபண்றதுவேற எடம் பாக்க வேண்டியதுதான் என்று சற்றுவிரக்தியுடன் வீடு திரும்புவார்கள்.


சாமி பூக்கொடுத்த உடனே மத்த காரியங்களைப்பாக்கஆரம்பிப்பாங்கமொதல்லே கல்யாணத்துக்கு நல்லநாளுகுறிக்கோணும்உள்ளூர்ல இல்லேன்னா பக்கத்தூர்லஇவங்களுக்குன்னு காசா நல்ல நாளு பாக்கற அய்யருஒருத்தரு இருப்பாருஅவர் கிட்ட போயி நாளு குறிச்சுவாங்குவாங்கநிச்சயம் பண்றதுக்குன்னு ஒரு நாளுமுகூர்த்தத்திற்குன்னு ஒரு நாளு குறிச்சு வாங்கீக்குவாங்கஅப்பொறம்பொண்ணு ஒரப்பு பண்றதுன்னு ஒரு பளக்கம்அன்னிக்குதான்மொறையா பொண்ணு கேக்கறது நடக்கும்ஒரு பத்து பேரு,முக்கியமா அண்ணந்தம்பிமாமன்மச்சான்நெருங்கினபங்காளிங்கரெண்டு தாயாதிகள் எல்லாம் போவாங்க.

இதுல பங்காளின்னா ஆருதாயாதின்னா ஆருன்னு நீங்கதெரிஞ்சுக்கோணும்ஒரே பூட்டனுக்கு (முப்பாட்டனுக்கு அப்பா)வளி வந்த அண்ணன் தம்பிகள் எல்லாம் பங்காளுங்கன்னுசொல்றதுஏன்னா அவங்களுக்கு வந்த சொத்து வழிவழியாபங்குபோட்டு வந்திருக்கும்அதனால பங்காளிகள்னுசொல்லுவாங்கஎதோ ஒரு சமயத்துல பங்கு போடறதுலசண்டை வந்தாலும் வந்திருக்கும்அதைத்தான்பங்காளிச்சண்டைன்னு சொல்றதுஎன்ன சண்டை சச்சரவுஇருந்தாலும் நல்லது பொல்லாததுக்கு உட்டுக்குடுக்கமாட்டாங்கஎல்லாரும் கலந்துக்குவாங்க.
கவுண்டமாருகளுக்குள்ளே பல கூட்டங்கள்னு இருக்குதுன்னுமுன்னமேயே சொல்லீருக்கேன்எங்க கூட்டத்துக்குமுழுக்காதங்கூட்டம்னு பேருஒரு குடும்பத்துல பொறக்கறஆண் வாரிசுகளெல்லாம் இதே கூட்டம்தான்பொண்ணுங்களெயாரு ஊட்டுக்கு கட்டிக்கொடுக்கறமோ அந்தக்கூட்டத்தெசேந்தவளாகி விடுவா.

ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவங்க வேற ஊர்லயும் இருப்பாங்க.ஆனா அவுங்க இந்த ஊரச்சேந்தவங்களுக்கு பங்காளியாஇருக்கமாட்டாங்கசொத்துல பங்கு வந்தாத்தான் பங்காளின்னுசொல்வோம்அப்படி வேற ஊர்லெ இருக்கெறவங்களெதாயாதின்னு சொல்ற வளக்கமுங்கஇப்படி ரெண்டு ஊர்லஇருக்கறவங்க ஒருத்தருக்கொருத்தர் தாயாதிங்கஇதுஎதுக்குன்னாஒரு ஊட்ல நல்லது பொல்லாதது நடந்துச்சுன்னா,அவங்க பங்காளிகளே சீர்பாரெல்லாம் செய்யப்படாதுங்கவேறஊருல இருக்கற தாயாதிங்கதான் செய்யோணும்அதனாலஊர்லெ மானமா வாளோணும்னா எல்லா பங்காளிகளயும்தாயாதிகளயும் நல்ல ஒறவுல வச்சுக்கோணுமுங்க.இல்லேன்னாகடசீ நேரத்துல கால வாரி உட்ருவாங்க.

பொண்ணு ஒரப்பு பண்றதுக்கு இவங்கெல்லாம் வேணுமுங்கோ.ஒரப்பு பண்றதுன்னா என்னன்னாக்காமாப்பிள்ள ஊட்ல இருந்துஎதாச்சும் பலகாரம்பூவுவெத்தலபாக்கு இதெல்லாம்கொண்டுட்டு போகணுங்கமுன்னாலயே சொல்லிவச்சுட்டுத்தான் போவாங்கபொண்ணு ஊட்லயும் அவங்கதாய்துபாய்து எல்லாரும் கூடியிருப்பாங்கமாப்பிள்ளஊட்டுக்காரங்க வந்த ஒடனே “வாங்க வாங்க ஒறம்பரக்காங்கன்னு வாய் நெறய சொல்லி வரவேப்பாங்கஎல்லாத்துக்கும்குடிக்க தண்ணி குடுப்பாங்கஇது ரொம்ப முக்கியமுங்க.இல்லீன்னா பொண்ணூட்டுக்காரங்களுக்கு பக்குவம்பத்தாதுன்னு சொல்லிப்போடுவாங்கஅப்பறம் எல்லாரும்ஊட்டுக்குள்ள போயி ஆஜாரத்துல பாய் போட்டிருக்கும்அதுமேல உக்காருவாங்க.
பொண்ணூட்டுக்காரங்களும் எதுத்தாப்ல உக்காந்திருப்பாங்க.எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்கங்கறது எல்லாத்துக்கும்தெரியும்இருந்தாலும் பொண்ணூட்டுக்காரங்கள்லெ பெரியவங்கஒருத்தருமாப்பிள்ள ஊட்டுக்காரங்களப்பாத்து, “என்னங்கஊர்லஎல்லாரும் நல்லா இருக்காங்களாமளைமாரியெல்லாம்ஒளுங்காப்பேயுதுங்களாஎன்ன ஜோலியா இத்தன தூரம்எல்லாருமா சேந்து வந்திருக்கீங்க” அப்படீம்பாருமாப்பிள்ளஊட்டுக்காரங்கள்லெ வெவரமா ஒருத்தரும் இல்லாட்டி இதுக்குஎன்ன சொல்றதுன்னு தெரியாமெ முளிப்பாங்கஅவுங்கமுளிச்சிட்டிருக்கட்டும்நாம நாளக்கி பாக்கலாங்களா?

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

காப்பி பேஸ்ட் கலைஞர்கள்

பதிவர்களில் பல வகை இருக்கிறார்கள்.

பிரபல பதிவர்கள்:  இவர்கள் என்ன பதிவிட்டாலும் ஜே போடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கறது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

மொக்கைப்பதிவர்கள்:  இவர்கள் பதிவில் ஒரு விஷயமும் இருக்காது. ஆனால் முந்நூறு பின்னூட்டங்கள் கண்டிப்பாக போடப்படும்.

சாதாரணப் பதிவர்கள்:  கோயில், குளங்கள், பஜ்ஜி, போண்டா, எங்க வீட்டுக் கல்யாணம் இவைகளைப் பற்றி எழுதுபவர்கள். பதிவுலகில் இவர்கள்தான் மெஜாரிட்டி.

நவயுகப் பதிவர்கள்:  இவர்கள் அறிவு ஜீவிகள். சமூகத்தைச் சீர்திருத்தப் போகிறவர்கள். புதுப் புது தலைப்புகளில் பதிவு போடுவார்கள். ஆனால் அவ்வப்போது என் பதிவை இவன் திருடீட்டான், அவன் திருடீட்டான் என்று புலம்பல் பதிவுகளும் போடுவார்கள்.

காப்பி பேஸ்ட் பதிவர்கள்:  இவர்கள் பாடுதான் இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் சொந்தமாக பதிவு எழுதி தங்கள் மூளையை வீணாக்க மாட்டார்கள். ஏனென்றால் அது இல்லை. ஆகவே அடுத்தவர்களின் பதிவை அப்படியே காப்பி செய்து தங்கள் பதிவில் பேஸ்ட் செய்து விடுவார்கள். இது நியாயமா, அநியாயமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்காக இவர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகம். மற்ற பதிவர்களெல்லாம் இவர்களை புழு, பூச்சியை விட கேவலமாகப் பேசுகிறார்கள்.

இந்த காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு உதவுவதற்காக நான் செய்த உத்தி என்னவென்றால், கீழே கண்ட அறிவிப்பை என் பதிவின் தலைப்பிலேயே கொடுத்து விட்டேன்.

இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக...தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம். எங்கிருந்து எடுத்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் இன்னொரு வருத்தமான செய்தி: இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுப் பட்டைகள் உண்டு.

ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.

இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போய் விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் எங்க ஊர்ல இருக்கிற புளிய மரத்தையெல்லாம் ரோட்டை அகலப்படுத்துகிறேன் என்று வெட்டிவிட்டார்கள். புளிய மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டால்தான் பேயான பிறகு அங்கேயே வசிக்கலாம்?

சக பதிவர்களிடமிருந்து நான் கேட்கும் உதவி என்னவென்றால், உங்கள் ஊரில் எங்காவது புளியமரம் தென்பட்டால் உடனே எனக்குத் தெரிவித்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் சேர இறைவனை வேண்டிக்கொள்வேன். 

ஞாயிறு, 31 ஜூலை, 2011

பச்சக்குடிசைக்கு முன் மொறை மாப்பிள்ளைகள் பண்ணும் ரகளை.


கடைசி பகுதி.

பச்சக்குடிசைக்குள்ள விடுவதற்காக சமஞ்ச புள்ளயக்கூட்டிட்டு வரப்போறாங்கன்னு தெரிஞ்ச உடனே முறை மாப்பிள்ளைகள் அந்த குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொள்வார்கள். புள்ள வந்து குடிசவாசல்ல நிக்கும். இந்தப்பசங்களெ வெளில வாங்கடான்னா, எனக்கு இந்தப்புள்ளய கட்டிக்கொடுக்கறேன்னு சொன்னாத்தான் வெளில வருவேன்னுட்டு ஒரே ரவுசு பண்ணுவாங்க.

பொண்ணோட அம்மா “சரி, பொண்ணக்கட்டிக்குடுக்கிறன்னுசொன்னா, பொண்ணோட அப்பா சொல்லோணும்னுட்டு ரகளை பண்ணுவாங்க. பொண்ணாட அப்பனும் “சரி, மாப்ள, பொண்ணக்கட்டிக்குடுக்கறம்னு  சொன்ன பிறகும் இதெல்லாம் பத்தாது, பொண்ணுப்புள்ளயே கட்டீக்கறன்னு சொன்னாத்தான் நான் வெளில வருவேன்னு ஒரே ரகளையாக்கிடக்குமுங்க. அப்றமேல் நாலுபேரு சமாதானம் பண்ணி, அவங்கவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. நூறோ, ஆயிரமோ இல்லைன்னா ஒரு பவுன் காசோ குடுத்து அவங்களெ வெளியில வரவைப்பாங்க.


அப்பறம் அந்த சீர் பண்ணுன புள்ளய பச்சக்குடிசைக்குள்ள உக்கார வைப்பாங்க. தொணைக்கு அஞ்சாறு சோடிப்புள்ளைங்களும் இருக்குமுங்க. அந்த சமைஞ்ச புள்ள அந்தக்குடிசைக்குள்ள மூணு நாளு அல்லாட்டி அஞ்சு நாளு இருக்கோணுமுங்க.

அப்பறம் வந்திருக்கற ஒரம்பறைக்கெல்லாம் விருந்து நடக்குமுங்க. விருந்தில ஒப்பிட்டு கட்டாயமா இருக்குமுங்க. சாப்பிட்டு முடிச்சுட்டு எல்லாரும் அவங்கவங்க ஊட்டுக்கு போயிருவாங்க.

இந்த நாளுகள்ல சொந்தக்காரங்க எல்லாம் பலகாரம் பட்சணம் எல்லாம் கொண்டுவந்து புள்ளக்கி கொடுப்பாங்க. எல்லாம் புள்ள தாட்டியா வளருட்டும்னுதானுங்க. யாராச்சும் மொறக்காரங்க பலகாரம் கொண்டுவல்லீன்னா, இந்தப் புள்ளயோட அம்மாக்காரி பேசற பேச்சு நாண்ட்டுட்டு சாகலாம்போல இருக்குமுங்க. “இவ புள்ள சமஞ்சப்ப நாம்போயி கோயமுத்தூரு கடைவீதியிலெ துணியெடுத்துட்டு அய்யரு கடெலெ பலகாரம் வாங்கீட்டு போயீஈ, மூணு நாளு அவ ஊட்டுலெ இருந்து, புள்ளக்கி வேணுமுங்கறதெச் செஞ்சுபோட்டுட்டு வந்தேன். இவளுக்கு இப்ப ராங்கியாப்போச்சு. சமஞ்ச புள்ளக்கி ஒரு வடைவாளக்காயி வாங்கிட்டு வர்ரதுக்கு முடியலயாக்கும்? இப்படி நீட்டி மொளக்கீட்டு இருக்கறப்பவே அவ வந்திருவா.

ஒடனே இவ பேச்சு திரும்பும் பாருங்க, “நங்கேஏஏ (அண்ணி), எங்க உன்னயக்காணம்னு இப்பத்தான் சொல்லி வாய் மூடலே, நீங்க வந்துட்டீங்க. சேதி கெடச்சா நிக்கமாட்டீங்களே, எங்கயாச்சும் ஒடம்புக்கு முடியாமப் போச்சோன்னு ஒரே கவலையாப்போச்சுங்க. ஊட்லெ அண்ணன், கொளந்தைக எல்லாம் நல்லா இருக்காங்கல்லோ, வந்து பாரு ஒன்ற மருமகளெ” என்று வரவேற்பு பெரமாதமாயிருக்குமுங்க.

வர்ற ஒரம்பறைங்க எல்லாம் புள்ளக்கி புத்தி சொல்லுவாங்க. “இத பாரு, இப்ப நீயி பெரிய புள்ள ஆயிட்ட, இனி வெளயாட்டுப்புத்தியெல்லாம் உட்டுடோணும். சோறாக்கிப்பளகிக்கோணும், நாளெக்கி போற எடத்துல “புள்ள வளத்துருக்கா பாருன்னு யாரும் ஒங்கம்மாவெ சொல்லீரப்படாது, பாத்துப்பளகிக்கோ” அப்படீன்னு புத்தி சொல்லிட்டுப்போவாங்க.


இந்த நாட்களில் இந்தப்பொண்ணை எம்பையனுக்கு கட்டிக்குடு, எம்பையனுக்கு கட்டிக்குடுன்னு, ஒரே கேடியமா இருக்குமுங்க. நெறய சமயங்களிலெ கலியாணமே முடிவு ஆகிடுமுங்க. அப்படி மொற மாப்பிள்ளைக்கு குடுக்கமாட்டேன்னு சொல்லீட்டா அப்பவே சண்டை வந்திருமுங்க. ஜாக்கிரதையாப் பேசோணுமுங்க. இப்படித்தானுங்க எங்க அத்தைக்கு சீர் செய்யறப்போ பொண்ணு கேக்கற ஞாயத்துல வெவகாரம் பெரிசா ஆகிப்போயி, எங்க குடும்பமே ஊரைவுட்டுட்டு கோயமுத்தூரு வந்துட்டமுங்க.

இப்படி சமைஞ்ச புள்ள அந்தப்பச்சக்குடிசைலெ மூணு நாளு இல்லாட்டி அஞ்சு நாளு இருக்குமுங்க. சோறு தண்ணி எல்லாம் அந்தக் குடிசக்குள்ளதானுங்க. அந்த நாளு முடிஞ்ச அன்னிக்கு பொளுது உளுந்தபொறவு அந்தக்குடிசய பிரிச்சு நாசிவப்பையன், புள்ள, கூட அஞ்சாறு பேரு எல்லாருமா ஊருக்கு வெளியிலெ கொண்டு போயி அத தீ வச்சு   எரிச்சுப்போட்டு வருவாங்க. முட்டலும் எரியற மட்டும் இருக்கமாட்டாங்க. ஊட்டுக்கு வந்ததும் புள்ளக்கி தலயோட தண்ணி வாத்து ஊட்டுல சேத்திக்குவாங்க. அப்புறம் மறுச்சு நாளைலிருந்து அந்தப்புள்ள வழக்கம் போல வேலயப்பாத்துட்டு இருக்குமுங்க.

வெள்ளி, 29 ஜூலை, 2011

மணற்கேணி போட்டிகள்

சிங்கைப் பதிவர்கள் குழுமம் 2009ம் ஆண்டு கட்டுரைப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மூன்று பதிவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து விருது வழங்கியது பதிவர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.

அதேபோல் 2010 ம் ஆண்டுக்கும் கட்டுரைப் போட்டி அறிவிப்பு வெளியாகி பலரும் கட்டுரைகளை அனுப்பினார்கள். நானும் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன்.

இக்கட்டுரைகள் யாவும் தகுந்த நடுவர்களால் ஆய்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தெரிந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று சில பதிவுகள் மூலமாக அறிந்தேன். ஆனால் இந்த முடிவுகள் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஏனெனில் எனக்கு இதுவரையில் எந்த தகவலும் வந்து சேரவில்லை.

போட்டிகள் நடத்தும் அமைப்பாளர்கள் போட்டி முடிவுகளை பதிவுகளில் வெளியிடுவதோடு இல்லாமல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முடிவு விவரங்களை அனுப்புவது தேவை என்று கருதுகிறேன்.

ஏனென்றால் மிகுந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட கட்டுரைகளை அந்தந்த பதிவர்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி உபயோகித்துக் கொள்ளலாம் அல்லவா? இதை மணற்கேணி அமைப்பாளர்கள் உடனடியாக கவனித்து ஆவன செய்வார்கள் என்று நம்புகிறேன்.

சமைஞ்ச சீர் செய்யற மொறை.


சமைஞ்ச சீர் செய்யற மொறை.


மொத நாளு சமைஞ்ச புள்ளைக்கு தண்ணி வாத்து தனியா உக்கார வச்சுட்டாங்களா? அடுத்த நாளு,  இல்லீன்னா அதுக்கு மறுச்சு நாள்லெ சீரு வச்சுருவாங்க. மாமமாரு, பங்காளிங்க, அப்பறம் நெருங்கின சொந்த பந்தங்களுக்கெல்லாம் ஆளு மூலமா, இன்ன கெளமீல புள்ளக்கி சீர் வைக்கிறோம்னு சேதி சொல்லி அனுப்பிச்சுருவாங்க.

பொதுவா சீரு பொளுதோட நேரம்தான் வப்பாங்க. அப்பத்தான் காடுகரைக்கு போனவங்க எல்லாம் வேலைகளைப் பாத்துட்டு திரும்பி வரமுடியும். எல்லாரும் பொளுது சாயறதுக்கு முன்னாடியே சீரூட்டுக்கு வந்துருவாங்க. தோட்டத்தில இருந்து பச்ச தென்னை ஓலைகளெ வெட்டிட்டு வந்து வச்சிருப்பாங்க. பொம்பளைக எல்லாம் சேந்து சோறு ஆக்கிட்டிருப்பாங்க.

வண்ணான், நாசிவன் ரெண்டு பேரும் குடும்பத்தோட கண்டிப்பா வேணுமுங்க. அப்பறம் பண்ணயத்து ஆளுங்க, மத்த குடிபடையெல்லாம் வந்திருவாங்க. தோட்டத்திலிருந்து வாளக்கொலை, தென்னம்பாளையெல்லாம் வந்திருங்க. வந்தவிய எல்லாம் ஆளுக்கு ஒரு வேலைய எடுத்து செய்வாங்க. வூட்டுக்கு முன்னாலெ ஒரு அம்பாரிப்பந்தல் போட்டு அதுல கொலக்கம்பம், பாளை எல்லாம் வச்சுக்கட்டுவாங்க. பண்ணெயத்து ஆளு, தென்னை ஓலையையெல்லாம் எடுத்து தடுக்கு பின்னி வச்சுருவாங்க. கொஞ்சம் மூங்கத்தப்பையும் தோட்டத்திலிருந்து கொண்டு வந்திருப்பாங்க.

மாமனூட்டிலிருந்து சீருக்கு வேண்டிய தட்டச்சாமான்கள், புது துணிமணிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, தங்களோட சொந்த பந்தங்களையும் கூட்டிக்கிட்டு நேரத்தோட வந்துருவாங்க. எல்லா சொந்தக்காரங்களும் சக்கரெ பளம் கொண்ட்டுட்டு வரது வழக்கமுங்க. எல்லாத்தையும் தனித்தனியா தட்டத்துல எடுத்து வைப்பாங்க. ஒம்பது தட்டு, பதினொரு தட்டுன்னு ஒத்தப்படைக் கணக்குலதான் தட்டுகளை வைப்பாங்க.

அப்புறமா எல்லாத்தட்டுகளையும் பொம்பளைங்க ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கிட்டு பக்கத்தில இருக்கிற புள்ளாகோவிலுக்கு போவாங்க. ஆம்பிளைங்களும் கூடப்போவாங்க. அங்கெ சாமிக்கு முன்னாலெ எல்லாத்தட்டையும் வச்சு பண்டாரம் பூசெ பண்ணி. தட்டுகளுக்கெல்லாம் தீத்தம் தொளிப்பாருங்க. அப்பறம் கொண்டுட்டு போனமாதிரியே எல்லாத் தட்டுகளையும் பொம்பளைங்க எடுத்துட்டு ஊட்டுக்கு வருவாங்க. அதுக்குள்ள ஊட்டு உள்வாசல்லெ வண்ணான் மாத்து விரிச்சு, முக்காலி வச்சு, புள்ளாறு புடிச்சு வச்சிருப்பானுங்க. இந்த தட்டுகளை எல்லாம் அந்த மாத்து மேல வைப்பாங்க. ரெண்டு குத்துவெளக்கு வச்சு, எண்ணைஊத்தி, பொருத்தி வச்சிருப்பாங்க. 

அதுக்குள்ள மொறைக்கார பசங்க எல்லாம் சேர்ந்து ஊட்டுத்திண்ணைலெ ஒரு ஓரத்தில பச்ச தென்னை மட்டைகள வச்சு ஒரு மறைப்பு கட்டி அதுக்கு ஒரு திட்டி வாசலும் வச்சிருப்பாங்க. இதுக்கு பச்சக்குடிசன்னு பேருங்க.
அப்பறமா சமஞ்ச புள்ளயக்கூட்டிட்டு வந்து  மறைவா உக்கார வைச்சு அத்தைக்காரிக எல்லாம் தண்ணி வாத்துவுடுவாங்க. அப்பறம் ஊட்டுக்குள்ள கூட்டிட்டுப்போய் புதுத்துணிகள உடுத்தி, அலங்காரம் பண்ணி, கூட்டிட்டு வந்து மாத்து மேல போட்டிருக்கிற முக்காலிலெ உக்கார வப்பாங்க. வண்ணாத்தி தீப்பந்தம் புடிச்சுட்டு இருப்பாங்க. நாசுவனும் கூட இருப்பானுங்க. மாமனூட்டில இருந்து வந்திருக்கிறதில வயசான சுமங்கலி பொம்பளதான் சீரு பண்ணுமுங்க. தெரியாததெ அப்பப்ப நாசிவப்பையன்தான் சொல்லிக் குடுப்பானுங்க. (இந்த நாசிவன் எங்க ஆளுகளுக்கு சேந்தவன்தானுங்க. அவன எதுக்காக நாசுவனா வச்சாங்க அப்படீங்கறதுக்கு ஒரு கதெ இருக்குதுங்க. அதெ அப்றமாச்சொல்றனுங்க).



சீர்க்காரம்மா தட்டுகளுக்கெல்லாம் தண்ணி சுத்திப்போட்டு, கப்பூரம் பத்தவச்சு எல்லாத்துக்கும் சுத்திக்காட்டிட்டு, புள்ளக்கும் காட்டிட்டு துண்ணூரு வச்சு உடுமுங்க. எல்லாரும் சாமி கும்பிட்டுக்குவாங்க. அப்பறமா அத்தைமாருங்க, நங்கையா, கொளுந்தியா எல்லாரும் புள்ளக்கி கன்னம், கையிலெ எல்லாம் மஞ்சப்பூசி, பொட்டு, பூவு எல்லாம் வச்சு உடுவாங்க. இதெல்லாம் முடிஞ்சு புள்ளயக்கொண்டுபோயி திண்ணையில கட்டி வச்சிருக்கிற அந்தப்பச்சக்குடிசைல உடறதுக்கு கூட்டிட்டுப்போவாங்க. சீரு பண்ணின புள்ள அந்தப்பச்சக்குடிசைல அஞ்சு நாளெக்கி இருக்கோணுமுங்க.

இப்பத்தானுங்க அந்த மொறை மாப்பிள்ளைங்க இருக்காங்களே, அவுங்க பெரிசா ரகளை பண்ணுவாங்க பாருங்க.....

மீதி அடுத்த பதிவில் 

புதன், 27 ஜூலை, 2011

சமைஞ்ச கொமரிப்பொண்ணுங்களுக்கு சீர் செய்தல்

நண்பர்களுக்கு வணக்கம். பல நாட்களுக்கு முன் வேறொரு பதிவில் கொங்கு வேளாள சமூகத்தினரின் சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதினேன். சோம்பேறித்தனம் காரணமாக அந்த தளத்தை விட்டு விட்டேன். இருந்தாலும் அந்தப் பதிவுகளை மிகவும் பிரயாசைப்பட்டு எழுதியிருந்தேன். அவைகள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற எண்ணத்திலும், நாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற பரந்த நோக்கிலும் அந்தப் பதிவுகளை இந்தத் தளத்தில் மீள் பதிவு செய்கிறேன்.


தமிழ் நடை ஒரு மாதிரியாக இருக்கும். பெரிய மனசு பண்ணி எல்லோரும் பொறுத்துக் கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.





பொண்ணுங்க வயசுக்கு வந்தா எல்லா சமூகத்திலயும் சடங்கு பண்றது வழக்கம்தானுங்க. எங்க சனத்துல எப்படி பண்ணுவாங்கன்னு சொல்றனுங்க. நாஞ்சொல்றது அம்பது அறுபது வருசத்துக்கு முன்னாடி நடந்த வளிமொறைங்க. இதெல்லாம் இப்ப ரொம்ப மாறிப்போச்சுங்க.


பொண்ணு சமைஞ்சா, ஒடனே அவ மாமனூட்டுக்குத்தான் சொல்லி அனுப்போணுங்க. இல்லீன்னா பெரிய வம்பு வளக்காயிருமுங்க. சமாசாரம் தெரிஞ்ச ஒடனே அவ மாமன் சம்சாரம், கூட நாலஞ்சு பேரைச்சேத்துட்டு, ஒரு புதுச்சீல, ரவிக்கை, சக்கரை, பளம் எல்லாம் வாங்கிட்டு இந்த சமைஞ்ச ஊட்டுக்கு வருவாங்க. அப்பல்லாம் சொந்தபந்தங்க எல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்லதான் இருப்பாங்க. அதனால எல்லாம் சட்டுப்புட்டுனு நடக்குமுங்க.



இங்கெயும் அக்கம்பக்கத்து ஊட்டுக்காரங்க எல்லாம் கூடிடுவாங்க. எல்லாருஞ்சேந்து அந்த புள்ளய ஒரு முக்காலி போட்டு கிளக்குமானா உக்கார வைப்பாங்க. வெந்தண்ணி ஒரு பெரிய குண்டாவுல கொண்டுவந்து பக்கத்துல வச்சுக்குவாங்க. கூட வெளயாடற சிறுசுக எல்லாம் வேடிக்கை பாக்க கூடிருமுங்க.

இருக்கெறதுல பெரிய சொமங்கலிதான் இந்த சீரெச்செய்யுமுங்க. சருகுச்சட்டில தண்ணி எடுத்து அதுல கொஞ்சம் மஞ்சப்பொடிய கலந்து அந்த தண்ணிய கையிலெ கொஞ்சம் எடுத்து மூணு தடவ அந்தப்புள்ள தலயச்சுத்தி கீள ஊத்துவாங்க. அப்பறமா எல்லாரும் மஞ்சப்பொடிய தண்ணிலெ நனச்சு அந்தப்புள்ள மூஞ்சில, களுத்து, கய்யில எல்லாம் பூசுவாங்க. அவியவிளுக்கு தெரிஞ்ச தமாசெல்லாம் ஆளாளுக்குப் பேசி, ஒரே ரவுசா இருக்குமுங்க.

அப்பறம் குண்டாவுல வச்சிருக்கற தண்ணிய அந்த சருகுச்சட்டிலெயெ மோந்து ஊத்தி அந்தப்புள்ளக்கி தண்ணி வாத்து உடுவாங்க. அப்பறம் மாமஞ்சம்சாரம் வாங்கிட்டு வந்திருக்கற புதுத்துணிய உடுத்தி வூட்டு பந்தவாசல்லெ முக்காலியப்போட்டு கெளக்குமாமா உக்கார வைப்பாங்க. அந்தப்புள்ளக்கி ஒரே வெக்கமாப்போயி தலயக்குனிஞ்சுகிட்டு உக்காந்துட்டிருக்கும்.


அதுக்கு முன்னால ஒரு மாத்து விரிச்சு அதுல ஒரு புள்ளார புடிச்சு வச்சிருவாங்க. புள்ளாருன்னா எப்படீன்னா, மாட்டுச்சாணி ஒரு கை ரொம்ப எடுத்து ஒரு கொளக்கட்டயாட்டம் புடிச்சு அதெக்கீள வெச்சு அதந் தலெல ரண்டு அருகம்பில்ல சொருகினா அதான் புள்ளாரு. அப்போதக்கி அதுதான் சாமி. அதுக்கு நெகுதி வச்சு சந்தனமும் செகப்பும் வச்சுட்டா தீந்துது. புள்ளாரு ரெடி. ஒரு தட்டத்திலெ வெத்தல, பாக்கு, ரெண்டு வாளப்பளம், ஒரு தேங்கா எல்லாம் இருக்குமுங்க. இன்னோரு தட்டத்துல சக்கர பளம் எல்லாம் வச்சிருக்கும். அப்பறம் ஒரு தட்டத்தில திண்ணீரு, செகப்பு, கப்பூரம் எல்லாம் இருக்கும். அப்புறம் ஒரு சொம்புல நெறய தண்ணியோட இருக்கும்.

இந்த சீர்க்காரம்மா அந்தப்புள்ளக்கி எதிரா நின்னு சொம்ப ஒரட்டாங்கையில எடுத்துட்டு கொஞ்சம் தண்ணியெ சோத்தாங்கையில ஊத்தி புள்ளயச்சுத்தி கீள ஊத்துமுங்க. இப்பிடி மூணு தடவ பண்ணுமுங்க. அப்பறம் தட்டத்துல கொஞ்சம் திண்ணீத்தப் போட்டு அதுக்குமேல கப்பூரத்தெ வச்சு பத்தவெச்சு புள்ளயச்சுத்தி மூணு தடவ காட்டுமுங்க. எல்லாரும் அந்தக்கப்பூரத்தெ தொட்டுக் கும்பிட்டுக்குவாங்க.
அப்பறம் சீர்க்காரம்மா சமஞ்ச புள்ள நெத்திலயும் திண்ணீரு பூசி, பொட்டு, பூவு எல்லாம் வெச்சுடுமுங்க. அப்பறம் கொஞ்சம் சக்கரெயெ எடுத்து புள்ள வாய்லெ வக்கிமுங்க. அப்பறமா வந்திருக்கற தாய்துபாய்து ஒரம்பற சனமெல்லாம் புள்ளக்கி பூவும்பொட்டும் வச்சுட்டுட்டு, சக்கர, பளத்தயெல்லாம் எடுத்து புள்ள வாயில ஊட்டறதும் மொறக்காரிங்க வாயில ஊட்டறதுமா, ஒரே ரவுசா கெடக்குமுங்க.

இந்தக்கூத்தெல்லாம் முடிஞ்சபொறவு புள்ளய கூட்டிட்டுப்போய் ஒரு தனி ரூம்புலெ உக்காரவச்சுருவாங்க. அந்தப்புள்ள மூணு நாளக்கி அந்த ரூம்பவிட்டு எங்கியும் போகப்படாதுன்னு கட்டுமானம் பண்ணியிருவாங்க.

மிச்சம் நாளெக்கி.....

முழுக்காதன் குல வரலாறு


வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.

இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “முழுக்காதன் குலத்தவர்கள்” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.

இந்தக் குலத்திற்கு குலதெய்வம் வெள்ளையம்மாள் ஆகும். இந்தத் தெய்வத்திற்கு கோவை மாவட்டம் காங்கயம் பக்கத்திலுள்ள காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி இருக்கிறது. ஒவ்வொரு இனத்தவர்களின் குல தெய்வங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். இந்த வரலாறுகள் கர்ண பரம்பரையாய் வருவன. பல குல வரலாறுகளுக்கிடையே பல சமயங்களில் ஒரே கருத்து காணப்படும். அதே மாதிரி ஒரே குல தெய்வத்தின் வரலாற்றிலும் பல பேதங்கள் இருக்கும். இந்த வரலாறுகளுக்கெல்லாம் ஆதாரம் என்னவென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கயத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். அந்தப் பெண் பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று அழைத்தார்கள். (மகாபாரதத்தில் பாண்டு மன்னன் பிறக்கும்போதே வெளுத்திருந்தான் என்று படித்திருக்கிறோம்). இன்றும் இவ்வாறான குழந்தைகள் பிறக்கின்றன. அவைகளை “அல்பினோ” என்று கூறுவார்கள். அந்தப் பெண்ணிற்கு மணப்பருவம் நெருங்கியது. பெற்றோரும் உடன் பிறந்தோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.


அவர்கள் பண்ணையில் மாடு மேய்ப்பதற்காக தூர தேசத்திலிருந்து வந்த ஒருவன் வேலையில் இருந்தான். அவனும் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவனே. ஆனால் ஏழை.


வெள்ளையம்மாளின் தந்தை அந்த மாடு மேய்ப்பவனுக்கே தன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். 


அவனுடைய ஊருக்குச் சென்று அவனுடைய பெற்றோர்களின் சம்மதம் பெற்றார். திருமணமும் நடந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.


அவளுடைய தமையன்களுக்கும் திருமணம் நடந்து எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். இந்நிலையில் வெள்ளையம்மாளின் தந்தைக்கு அந்திம காலம் நெருங்கியது. அப்போது அவர் தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொடுக்கும்படி கூறிவிட்டு காலமானார். 


வெள்ளையம்மாளின் அண்ணிகளின் துர்ப்போதனையைக் கேட்ட அண்ணன்மார்கள் வெள்ளையம்மாளின் புருஷனை வஞ்சகமாக தனியாக கூட்டிக்கொண்டு போய் கொன்றுவிட்டார்கள். அவன் எங்கோ காணாமல் போய்விட்டான் என்று சொல்லி, வெள்ளையம்மாளின் பேரிலும் பல அவதூறுகளைக் கூறி அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.


வெள்ளையம்மாள் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் மனம் போன போக்கில் போகும்போது, ஒரு சர்தார் (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி) குதிரைமேல் வருவதைக்கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள். சர்தார் இவளைப்பார்த்தவுடன் நின்று விசாரித்து இவளுடைய அனாதை நிலையைக் கண்டு இரங்கினான். “நான் இப்போது வரி வசூலுக்காக அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய துயர் தீர்க்கிறேன். அதுவரை பக்கத்தில் இருக்கும் கோட்டையில் பத்திரமாக இருப்பாயாக” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடுகள் செய்து விட்டு, வரி வசூலிக்கப் போய்விட்டான்.

சர்தார் திரும்பி வருவதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காவது மகனும் பிறந்துவிட்டான். சர்தார் வந்த பிறகு வெள்ளையம்மாளைக் கூட்டிக்கொண்டு அவளுடைய அண்ணன்மார் ஊருக்கு வந்தான். அவர்களுடைய அண்ணன்மாரைக் கூப்பிட்டு விவரங்கள் விசாரிக்கும் போது அவளுடைய அண்ணிமார்கள் வெள்ளையம்மாள் பேரில் அடாத பழிகளைச் சுமத்தினார்கள். விபசாரி என்றும் ஏசினார்கள். அவளுடைய அண்ணன்மார்கள் வாய்மூடி மெளனமாக இருந்தார்கள். சர்தார் அவர்களைப் பார்த்து உங்கள் தகப்பனார் வெள்ளையம்மாளுக்கு காணி நிலம் கொடுக்கச் சொன்னது உண்டா இல்லையாவென்று கேட்க, அவர்கள் எங்கள் தந்தை அவ்வாறுதான் கூறிவிட்டு இறந்தார். ஆனால் இப்போது வெள்ளையம்மாள் சாதி கெட்டு வந்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது என்று வாதிட்டனர்.

இதைக்கேட்ட வெள்ளையம்மாள் நான் கடவுள் சாட்சியாக எந்தத் தப்பும் செய்யவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அப்போது அவளுடைய அண்ணன்மார்கள் தங்கள் பெண்டாட்டிகளின் பேச்சைக் கேட்டு, வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம், அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள் என்னவென்றால்:

1.   காளைகளை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு வெடத்தலாமரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பார்கள். இது நன்கு முற்றி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்.
2.   அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்கு நண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கனைக்கவேண்டும்.
3.   இதற்கு வேண்டிய தண்ணீரை சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.
இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே ஒரு நுகத்தடி நடப்பட்டது. பச்சை மண் குடமும் கொண்டுவரப்பட்டது. வெள்ளையம்மாள் கோவில் குளத்திலிருந்து அந்தக் குடத்தில் நீர் கொண்டு கொண்டு வந்தாள். குடம் கரையாமல் நின்றது. அந்தக் குடத்தில் இருந்து தண்ணீரை நுகத்தடிக்கு ஊற்ற அந்த நுகத்தடியில் தளிர்கள் துளிர்த்தன. மீதம் இருந்த தண்ணீரை அங்கிருந்த மண் குதிரை மேல் தெளிக்க, அந்தக் குதிரை தலையை ஆட்டி கனைத்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிசயப்பட்டுப் போனார்கள். வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து முழுவதையும் வெள்ளையம்மாளுக்கே கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு ஊரைவிட்டே போய்விட்டார்கள். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு தன் ஊருக்குப் போனார்.

வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின் தெய்வமானாள். அவளுடைய வம்சாவளிதான் தற்காலத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.


சமீபத்தில் (10-7-2011) அன்று நாங்கள் (பங்காளிகளான 26 குடும்பங்கள்) எங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தபோது எடுத்த சில காட்சிகள்.








ஞாயிறு, 24 ஜூலை, 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.

இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!  எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

சோதனை பதிவு

இது ஒரு சோதனை பதிவு.

அமைதிப் பள்ளத்தாக்குக்குள் செல்லும் வனத்துறை வாகனம்.


வாகனத்திற்குள்


எங்கள் வாகனம்


நன்றி, வணக்கம்.