வெள்ளி, 24 டிசம்பர், 2010

இயற்கை விவசாயம்

இன்றைக்கு இதுக்குத்தான் மார்க்கெட். வெங்காய மார்க்கெட்டல்லாம் சரிஞ்சு போய்ட்டுது. ஆனா இயற்கை விவசாயத்துக்கு மார்க்கெட் எப்பவும் சரியாது.

கம்யூனிஸ்ட் தொழிற் சங்கங்களின் கொள்கையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லைன்னா தெரிஞ்சுக்குங்க. “அடைய முடியாத இலக்கை குறிக்கோளாகக் கொள்”. கொஞ்சம் யோசிச்சாத்தான் இதனுடைய முழு அர்த்தமும் விளங்கும். யோசிச்சிட்டு இருங்க. அதுக்குள்ள வேற ஒரு சமாச்சாரம் சொல்றேன்.

பொய்ய பொருந்தச் சொன்னா நெஜம் திரு திருன்னு முளிக்குமாம்.

இது மாதிரி சில சமாச்சாரங்கள் எப்போதும் ஜனங்களுக்குப் பிடிக்கும். காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம். எலெக்ஷன் சமயத்தில் இது மிகவும் சொல்லப்படும் வசனம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஏழ்மை ஒழிப்பு, ஓசோன் லேயரில் ஓட்டை, மரம் நடுவோம், இவைகளெல்லாம் சாஸவதமான சமாச்சாரங்கள். எப்போது வேண்டுமென்றாலும் யார் வேண்டுமென்றாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கை வழி வாழ்வோம் அப்படீன்னு சொன்னா யாருதான் வேண்டாம்னு சொல்வாங்க. ஆஹா, அப்படித்தான் வாழவேண்டும் என்று எல்லோரும் ஜால்ரா போடுவார்கள். சரீப்பா, இயற்கை வழின்னு சொல்றயே, அப்படீன்னா என்ன அர்த்தம், அப்படி வாழறது எப்படீன்னு கேட்டீங்கன்னா, இவன் இயற்கைக்கு விரோதின்னு பட்டம் கொடுத்து உங்களை மென்டல் பண்ணீடுவாங்க.

ஏன் சில பேர் இந்த மாதிரி திரியறாங்கன்னு தெரியுமுங்களா? அதுல காசு இருக்குங்க. NGO அப்படீன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லையா. அப்ப நீங்க இந்த லோகத்துல வாழ லாயக்கில்லீங்க. அத மொதல்ல தெரிஞ்சுக்குங்க. இந்தியாவுல லட்சக்கணக்குல இந்த NGO க்கள் இருக்குங்க. அவங்களுக்கு என்ன தொழில்னா, இந்த மாதிரி சமூக சேவை செய்யறதுதான். அதாவது ஏழ்மை ஒழிப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு, இப்படி ஏதாச்சும் ஒண்ணு. இதுக்கு வெளிநாட்டுக்காரனும், நம்ம இந்திய அரசாங்கமும் கோடிக்கணக்குல பணத்தைக்கொட்டறாங்க. வாங்கி அப்படியே உங்க பேங்குல போட்டுக்க வேண்டியதுதான். ஆனா ஒழுங்கா கணக்கு காட்டோணும். அதுக்குத்தான் இந்த மாதிரி இயற்கை வழி வாழ்வு போன்ற சங்கதிகளெல்லாம்.

எதாச்சும் புரியுதுங்களா. புரிஞ்சா அடுத்த பதிவுக்கும் வாங்க. புரியலேன்னா, எதாச்சும் 3ஷா பத்தி யாராச்சும் போட்டோ போட்டு எளுதியிருப்பாங்க. அங்க போயிடுங்க.