சனி, 30 டிசம்பர், 2017

33. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது.

                                            Image result for மாடு பிடித்தல்

ஆனாலும் சும்மா சொல்லப்படாது. நம் இந்தியர்கள் வாய்ச்சொல்லில் அசகாய சூரர்கள். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.

நான் அப்போதே சொன்னேன். ஆனா காசை வாங்கிட்டு இந்த அதிகாரிகள்தான் அனுமதி அளித்தார்கள் என்று எப்போதும் எதிர்க் கட்சிக்காரன் சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான்.

ஆனா இவனும் அந்தக் காசில் பங்கு வாங்கிக்கொண்டு வாயையும் **ச்சையும் மூடிக்கொள்வான்.

எப்படியோ இந்திய ஜனத்தொகையில் 14 பேரை சில நொடிகளில் குறைத்தாய் விட்டது.

என்ன பரிதாபம் என்றால் இதுவும் சில நாட்களில் மறந்து போகும். கும்பகோணம் பால் மணம் மாறாத சிறார்களின் மறைவை விடவா இது கொடியது?

சனி, 23 டிசம்பர், 2017

32. சங்கீதக் கச்சேரிகளும் மைக்குகளும்


                                    Image result for மார்கழி கச்சேரிகள்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் ராம நவமிக்காக கச்சேரிகள் நடக்கும். எங்கள் வீட்டிற்கு நன்றாகக்  கேட்கும். அப்படிக்கேட்டு கேட்டுத்தான் எனக்கு கர்னாடக சங்கீதத்தின் பேரில் ஒரு ஈடுபாடு வந்தது.

மதுரை மணி அய்யர், மதுரை சோமு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், எம்.எம். தண்டபானி தேசிகர், ஆலங்குடி சகோதரர்கள், காருகுறிச்சி அருணாசலம் முதலானவர்களின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். இந்த வித்வான்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக கச்சேரி நடக்கும் இடத்திற்கும் போவேன். ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டு திரும்பி விடுவேன்.

அப்போதெல்லாம் மேடையில் ஒரே ஒரு மைக் மட்டும்தான் வைப்பார்கள். வார்ப்பாட்டுக்காரருக்கு எதிரில் ஒரு ஒன்றரை அடி தூரத்தில் இந்த மைக் இருக்கும். கச்சேரியில் நடக்கும் வாய்ப்பாட்டு, பிடில், மிருதங்கம், கடம் ஆகியவைகளின் தொனி நன்றாகக் கேட்கும். அப்போதைய வித்வான்கள் மைக் வருவதற்கு முன்பே பாடுவதற்கு பழகியவர்கள். பெரிய கூட்டங்களில் கூட மைக் இல்லாமல் பாடக்கூடியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


                          Related image

பிறகு கொஞ்ச வருடங்களை கழித்து ஒவ்வொரு வித்வானுக்கும் தனித் தனி மைக்குகள் வைக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் வில்லங்கம் ஆரம்பமாகியது. சில வித்துவான்கள் மைக் காரருடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர்களின் மைக்குக்கு மட்டும் ஒலியைக் கூட்டுமாறு செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த சதி வேலைகளுக்கு எல்லையில்லாமல் போயிற்று. அப்போது இருந்த பாலக்காடு மணி என்பவர் பிரபல மிருதங்க வித்வான். அவர் மிருதங்க வாசிப்பு அவ்வளவு நன்றாக இருக்கும். அதனால் அவருக்கு ஏகப்பட்ட கிராக்கி. இந்த மைக் சதிகளைப்  பார்த்து பொறுக்க மாட்டாமல் இனி மைக் வைக்கும் கச்சேரிகளுக்கு நான் மிருதங்கம் வாசிக்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டார்.

அவருடைய வாசிப்புக்காகவே பல கச்சேரிகள் மைக் இல்லாமல் நடந்தன. பிறகு காலம் மாறி விட்டது. பாலக்காடு மணி அய்யரும் போய்ச்சேர்ந்து விட்டார்.

1970 களில் என்று நினைக்கிறேன். அப்போது குமாரி - காயத்திரி அவர்களின் வீணைக் கச்சேரி அன்றைய புரந்தரதாஸ் அரங்கில் (கோவை) நடை பெற்றது. வீணையின் நாதம் கணீரென்று பது விதமாக இருந்தது. நன்றாக இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பிறகுதான் அதன் ரகசியம் வெளியானது. காயத்திரியின் தந்தை சினிமா உலகத்தில் ஒரு சவுண்ட் இன்ஜினீயர். அவர் வீணையில் ஒரு ஸ்பெஷல் மைக்கைப் பொருத்தி அதை கச்சேரி ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து விட்டார்.

வீணையின் நாதம் அட்டகாசமாக கேட்டது. பிறகு இந்த டெக்னிக்கை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இன்று கடத்திற்குக்கூட இந்த மாதிரி மைக் பொருத்தும் டெக்னிக்கை ஆரம்பித்து விட்டார்கள்.

தவிர இப்போது பாடும் வாய்ப்பாட்டுக்  காரர்களின் பாட்டு எதிரில் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கூட சரியாக காதில் விழாது. அவ்வளவு குரல் வளம். ஆகவே அவர்களின் வாய்க்கருகே இரண்டு அங்குலம் தள்ளி மைக் வைக்கப்படுகிறது. தவிர ஒவ்விருவருக்கும் தனித்தனி மைக். மிருதங்க வித்வானுக்கு இரண்டு மைக். இனி பாடகரின் தாவாக்கொட்டையில் மைக் வைக்க வேண்டியதுதான் பாக்கி.

                                             Image result for mic in carnatic music

இந்த முறையில் ஒவ்வொரு வித்வானும் அவரவர்கள் மைக்கை அட்ஜஸ்ட் செய்கிறார்கள். மொத்தத்தில் இன்று நாம் கேட்கும் கச்சேரிகள் முற்றிலும் சின்ந்தெடிக் ஆக மாறி விட்டது. இது மட்டுமா? கச்சேரிகளில் இன்று தம்புரா என்பது ஏறக்குறைய மறைந்து போய்விட்ட ஒன்றாக ஆகி விட்டது. அதற்கு எலெக்ட்ரானிக் சுருதிப்பெட்டி வந்து விட்டது.

அந்தக்காலத்தில் கச்சேரிகள் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும். வாய்ப்பாட்டுக்காரரைத் தவிர வேறு யாரும் தண்ணீர் அருந்தினதை நான் பார்த்ததில்லை. இன்று கச்சேரியில் ஒவ்வொருவர் பக்கத்திலும் இரண்டிரண்டு வாட்டர் பாட்டில்கள்.

இவ்வாறாக கர்னாடக சங்கீதம் கம்ப்யூட்டர் சங்கீதமாக மாறிக்கொண்டு வருகிறது.

                                 Image result for carnatic music

திங்கள், 18 டிசம்பர், 2017

31. காதல் கல்யாணம்

                                      Image result for காதலர்கள் படங்கள்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதுதான் இல்லறம். ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பணம். பணம் இல்லையேல் முற்றும் துறந்த முனிவர்களினால் கூட வாழ முடியாது.

தற்போது செய்தித்தாள்களில் பிரபலமாக இருக்கும் கௌசல்யா-சங்கர் காதலை எடுத்துக்கொள்வோம். அவல்களின் கல்யாணம் நடக்கும்போது கௌசல்யாவிற்கு 18 வயது, சங்கருக்கு 21 வயது. அப்போதுதான் இருவரும் மேஜர் ஆகியிருக்கிறார்கள். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கரின் குடும்பம் ஏழ்மையின் விளிம்பில்தான் இருந்தது என்று யூகிக்கிறேன்.

காதல் சினிமாவில் வேண்டுமானால் உயர்வாகக் காட்டப்படலாம். ஆனால் யதார்த்த த்தில் காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன.

இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. காதல், சாதி வெறி ஆகியவை ஒருபுறம் இருக்க, அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு வாழ்வதற்கான பொருளாதார பலம் அவர்களுக்கு இல்லை. அந்த நிலையில் தங்களுக்கு கல்யாணம் அவசியமா என்ற சிந்தனை வராதா?

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்?

இது எனக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

30. பிட் காயின் எனும் மகா மோசடி


பிட்காயின் வேண்டுமா என்று நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அது ஒரு நையாண்டிப் பதிவு என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்தப் பதிவில் பலர் இந்த பிட்காயினைப் பற்றி விவரமான பதிவு ஒன்று போடுங்கள் என்று விருப்பப்  பட்டிருந்தார்கள்.

அவர்களுக்காக நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து ஆராய்ச்சி செய்ததில் எனக்குத் தெரிய வந்த சில உண்மைகளை இங்கே பகிர்கின்றேன்.

1. மிக மிக அரிய மூளை உள்ள ஒருவன் இதில் ஈடுபட்டிருக்கிறான். பிட்காயின் என்பது அவன் மூளையில் உதித்த ஒரு பக்கா ஃப்ராடு ஐடியா.

2. பிட்காயின் என்பது ஒரு மாயை. ஒரு வித ஏமாற்று வழிகள் மூலம் அப்படி ஒன்று இருப்பதாக பலரை நம்ப வைத்திருக்கிறான். நம்ம ஜனங்கள்தான் இப்படிப்பட்ட ஏமாற்றுத் திட்டங்களில் பலாப் பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி தங்கள் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்களே.

நம் ஊரில் நடந்த ஈமு கோழித்திட்டம் நல்ல உதாரணம்.

3. இந்த பிட்காயினை உற்பத்தி செய்பவர்கள் ஊரில் உள்ள இளிச்சாவாயன்களைக் கண்டு பிடித்து அவர்கள் தலையில் இந்த பிட்காயின்களைக் கட்டுகிறார்கள். 

4. அந்த இளிச்சவாயன்கள் சாதாரண இளிச்சவாயன்கள் இல்லை. பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்டுகள். அவர்களுக்கு உள்ள ஒரே கவலை, அவர்களிடம் இருக்கும் கணக்குக் காட்டாத பணத்தை எப்படி பத்திரப்படுத்துவது என்பதுதான்.

5. அவர்களுக்கு இந்த பிட்காயின் ஒரு வரப்பிசாதமாக வாய்த்தது. இதில் பணத்தைப் போட்டால் பணம் எங்கிருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாது.

6. இவர்கள் போடும் பணம் எங்கே போகிறது என்று அந்த ஒரிஜினல் பக்காத் திருடனுக்கு மட்டுமே தெரியும்.

7. இந்த பிட்காயினைக் கொண்டு ஆயிரம் வித்தைகள் செய்யலாம் என்பது அண்டப்புளுகு.

8. இந்த பிட்காயினுக்கு விலை நிர்ணயம் செய்வது அந்த பக்காத்திருடனே.

9. இந்தப் பிட்காயினுக்காக தனி ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்ஐ நடத்துபவர்களும் வடிகட்டின அயோக்கியர்களே.

10. அவர்கள் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிந்தவர்கள்.

11. ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  என்ன வேலை செய்யும்? பிட்காயினை ஒருவன் விற்கிறான் என்றால், யாராவது வாங்குபவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இரண்டு பார்ட்டிகளும் கிடைத்து விட்டால் இவனிடம் இருந்து அவனுக்கு இந்த பிட்காயினைக் கைமாற்றி விட்டு இவனுடைய கமிஷனை எடுத்துக்கொள்வான்.

12. இந்த வியாபாரத்தில் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  ஒரு புரோக்கர் மட்டுமே. பிட்காயின் செல்லுமா செல்லாதா என்பதற்கு அவன் எந்தக் கேரன்டியும் தரமாட்டான். எல்லா ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்களும் இந்த விதமாகத்தான் செயல்படுகின்றன.

இந்த உலகமகாத் திருட்டு இன்னும் சில நாட்களில் அம்பலமாகப்போகிறது. பார்த்து அனுபவியுங்கள். பதிவர்கள் யாரிடமும் இந்த பிட்காயின் வாங்கும் அளவிற்கு வசதி இல்லையாதலால் அவர்கள் எந்த வருத்தமும் பட வேண்டியதில்லை.

திங்கள், 11 டிசம்பர், 2017

29. பிட் காயின் வேண்டுபவர்கள் அணுகவும்.


பிட் காயினைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லையென்று நம்புகிறேன். இனி உலக முழுவதும் பிட் காயின்தான் புழக்கத்திற்கு வரப்போகிறது.

இதன் விலை 2017 ம் ஆண்டு துவக்கத்தில் 1000 டாலராக இருந்தது இப்போது 15000 டாலராக இருக்கிறது. என்ன ஒரு வளர்ச்சி பார்த்தீர்களா? 2016 ம் ஆண்டில் ஒரு 100 பிட் காயின் வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.

இந்த விவகாரத்தில் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த பிட்காயின் எங்கே கிடைக்கும் என்பதுதான். இப்படி மக்கள் வகை தெரியாமல் திண்டாடுகிறார்களே என்று நான் இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

ரகசியமாக விசாரித்ததில் இந்த பிட் காயினை ஒரே ஒருவர்தான் தயாரிக்கிறார் என்பதுவும் அவர் வட துருவத்தில் யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் தன் கம்ப்யூட்டருடன் வசிக்கிறார் என்பதுவும் தெரிய வந்தது. அவருக்கு பல இடங்களில் ரகசிய ஏஜண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் தெரிய வந்தது.

இதில் ஒருவர் எனக்கு தற்செயலாக அறிமுகம் ஆனார். அவர் எனக்கு எவ்வளவு பிட்காயின் வேண்டுமானாலும் வாங்கிக்கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் விலை 10 லட்சம் ரூபாய். தேவைப் படுபவர்கள் எவ்வளவு பிட்காயின் வேண்டுமோ அவ்வளவிற்கான தொகையை என்னுடைய ஸ்டேட் பேங்க் கணக்கில் கட்டிவிட்டு அந்த விபரத்தை எனக்குச் சொன்னால் அவர்களுக்கு இந்த பிட் காயின்கள் அனுப்பி வைக்க முடியும். 

பிட்காயின்களை நேரில் பார்க்கமுடியாது. அவைகள் உங்களுக்கு ஒரு கணக்கு ஆரம்பித்து அந்தக்கணக்கில் இந்த பிட்காயின்களை சேர்த்து விடுவோம். இந்தக்கணக்கு விபரங்கள் எங்கள் கம்பயூட்டரில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். இதன் விலை ஏற ஏற உங்கள் பிட்காயின்களின் மதிப்பும் ஏறிக்கொண்டே போகும். இந்த பிட்காயின்களின் மதிப்பை எண்ணிக்கொண்டே நீங்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கலாம்.

இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த பிட்காயின் என்னும் கோபுரம் சீட்டுக்கட்டு கோபுரம் மாதிரி சரிந்து விடும். ஆனால் எங்களிடம் வாங்கிய பிட்காயின்கள் அப்படியே இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் ஏற்படாது. அப்போது தங்கள் பிட்காயினுக்கு பணம் வேண்டுபவர்கள் அன்றைய மதிப்பு எவ்வளவோ அந்த நிலவரத்திற்கு பணம் பெற்றுக்கொள்ளலாம். (எங்களுடைய கணிப்பு - அன்றைய தேதியில் ஒரு பிட்காயின் ஏறக்குறைய நூறு ரூபாய் இருக்கும்)

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையோடு எங்களிடம் பிட்காயின் வாங்கி பயனடையுங்கள்.

வாழ்க பிட்காயின். வாழ்க இவ்வைகயம்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

28. டாக்டர்களுக்கும் கிளினிகல் லேப்களுக்கும் உள்ள உறவு

                                                Image result for clinical laboratory

இன்றைய தலைப்புச் செய்திகளில் ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள்.

கிளிக்கல் லேப்கள் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கின்றனவாம். இந்த அதிசய உண்மையை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பெங்களூருவில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது பற்றிய உண்மைகள் ஒருபுறம் இருக்க-

இன்னொரு செய்தி-

ஆங்கிலத்தில்-

While the labs searched have declared an undisclosed income of over Rs 100 crore, the amount of referral fee in case of a single lab is more than Rs 200 crore, it said in a statement.

அதாவது ஒரு லேபில் மட்டும் சுமார் 200 கோடி இந்த மாதிரி டாக்டர்களுக்குக் கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்களாம். இது ஒரு வருடத்திற்கு என்று வைத்துக்கொள்ளலாம். சுமாராக 20 % கமிஷன் என்று வைத்துக்கொண்டால் அந்த லேப்பில் வருடத்திற்கு 1000 கோடி பிசினஸ் நடந்திருக்க வேண்டும். ஆதாவது ஏறக்குறைய ஒரு நாளைக்கு 3 கோடிக்கு பிசினஸ். இப்படி 3 கோடி பிசினஸ் செய்யக்கூடிய கிளினிக் லேப் பெங்களூரில் இருக்கிறதா?

எனக்கு நம்பிக்கை வரவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.