புதன், 30 மார்ச், 2011

சேவைகளும் சேவைக்களங்களும்



வழுக்கைத் தலைக்காரர் ஒருவர் ஹேர் கட்டிங் சலூனுக்குப் போனால் நாம் என்ன சொல்வோம்- “ இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” – என்று சொல்வோம். 
நீதி: முடி இருக்கிறவன்தான் அதை வெட்டிக்கொள்ள சலூனுக்குப் போகவேண்டும். 

அதே மாதிரி ஒருவனுக்கு பேங்க்கில் கணக்கே கிடையாது, அவன் நான் பேங்கில் பணம் எடுக்கப்போகிறேன் என்றால் என்ன சொல்ல முடியும்? (கொள்ளையடிப்பது இதில் சேராது). 
நீதி: பேங்கில் கணக்கு இருந்தால்தான் பணம் எடுக்க முடியும்.

இது வரையிலும் நான் சொன்னது புரிகிறதா? புரிந்தால் மேலே படியுங்கள். புரியாவிட்டால் அடுத்த பிளாக்கிற்குப் போங்கள்.

அது போல் எலக்ஷ்ன் சமயத்தில் சொல்வதற்கு நல்ல, மக்களின் மனதைக் கவரக்கூடிய இனிமையான கோஷங்கள் வேண்டும்.

உதாரணமாக- 
வறுமைக் கோட்டை அழிப்பேன்.
லஞ்சத்தை ஒழிப்பேன்.
குடிசைகளை மாளிகைகள் ஆக்குவேன்.
எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்.

இந்தக் கோஷங்களெல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன? காதில் விழும்போது தேன் பாய்வது போல் இருக்கிறதல்லவா?. இவைகள் எல்லாம் எப்போது சாத்தியப்படும்?  
வறுமை இல்லாவிட்டால் வறுமையை அழிப்பது எப்படி?           லஞ்சம் இல்லாவிட்டால் அதை ஒழிப்பது எப்படி?               குடிசைகள் இல்லாவிட்டால் அவைகளை எப்படி மாளிகைகள் ஆக்க முடியும்?

மாக்களே, கவலைப்படாதீர்கள். இவைகள் நம் நாட்டில் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கும்.