வியாழன், 29 மார்ச், 2012

அக்கிரமம், அநியாயம்!


இன்றைய செய்தித்தாள்களில் நமது இந்தய ராணுவ முதன்மை தளபதி வி.கே.சிங் பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதம் பத்திரிக்கைகளுக்கு கசிந்து வெளியாகி உள்ளது. கடிதத்தின் சாராம்சம், இந்திய ராணுவத்திலிருக்கும் குறைபாடுகள்.

முதலில் இந்தக் கடிதம் எப்படி கசிந்தது? தலைமை ராணுவ அதிகாரி ராணுவ ரகசியங்களை காப்பாற்றுவது இந்த லட்சணத்தில்தானா?

இரண்டாவது. இந்த ஆள்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி. இந்த ஆளை நம்பித்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஆளின் வேலையே ராணுவத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது. இந்த ஆளே ராணுவத்தின் நடைமுறைகள் சரியில்லை என்று சொன்னால் எனக்கு முதலில் தோன்றும் கேள்வி என்னவென்றால், இந்த ஆள் இத்தனை நாள் சம்பளம் வாங்கிக்கொண்டு என்ன பிடுங்கிக்கொண்டு இருந்தான்? என்பதுதான்.

அடுத்த கேள்வி. இவனை கண்காணிக்கும் மந்திரி என்ன ***** கொண்டு இருந்தார்?