சனி, 23 ஜூன், 2012

ஆழ்குழாய் கிணற்றுக்குள் 4 வயது குழந்தை


டில்லிக்கு அருகில் ஒரு கிராமத்தில் நான்கு வயது குழந்தை, வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து, இரண்டு நாட்களாய் வெளியில் எடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நினைத்தால் மனது பதறுகிறது. சோகத்திலும் மகா சோகம். ஒரு குழந்தையை உயிருடன் பலி கொடுப்பதென்பது மகாக் கொடுமை.

இந்த வேதனை கோபமாக உருவெடுக்கிறது. வீட்டிற்குப் பக்கத்தில் இத்தகைய ஆபத்தை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இரண்டாவது அந்த நாலு வயது குழந்தை ஆழ்குழாயில் இரவு 11 மணிக்கு விழுந்தது என்கிறார்கள். அப்போது அந்தக் குழந்தையின் அம்மா என்ன செய்து கொண்டிருந்தாள்? ஒரு 4 வயது குழந்தையை 11 மணிக்குள் தூங்க வைக்க மாட்டார்களா? பெற்றுப்போட்டு விட்டு எக்கேடோ கெட்டுப்போ என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார்களா?

இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?