செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தமிழ் இளங்கோவும் நானும்.

                               Image result for five star hotel
தமிழ் இளங்கோவை அறியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அவருக்கு என் மேல் ஒரு பூனைக்குட்டி விசுவாசம் இருக்கிறது. அடிக்கடி என் பதிவுகளைப் படிப்பார் போல இருக்கிறது !  அப்படி படிக்கும்போது என்னுடைய பழைய பதிவு ஒன்றை படித்திருப்பார் போல் இருக்கிறது.

அந்தப் பதிவு.

"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":   இதைச்சுட்டினால் அந்தப் பதிவைப் பார்க்கலாம். படிப்பது உங்கள் சௌகரியம்.

இந்தப் பதிவு நீண்ட நாட்களுக்கு முன் போட்ட பதிவு. நானும் அந்தப் பதிவை இப்போது போய்ப் படித்தேன். என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பதிவை எழுதியது நான்தானா என்று சந்தேகம் வந்து விட்டது.


எனக்கு சில சமயம் என்னை அறியாமல் சில மேதைத்தனமான கருத்துகள் தோன்றி விடும். இது சாதாரணமாக நடக்காது. அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படிப்பட்ட சமயத்தில் இந்த பதிவை எழுதியிருப்பேன் போல இருக்கிறது.

தமிழ் இளங்கோ அவர்கள் இதைப் படித்தவுடன், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பெரு நோக்கில் இந்தக் கருத்துகளைத் தொகுத்து என்னை ஒரு புத்தகமாக வெளியிடச்சொல்லி ஒரு அன்பு மடல் எழுதியிருக்கிறார்.

அதற்கு நானும் தனிப்பட்ட முறையில் ஒரு பதில் அனுப்பினேன். அப்புறம்தான் எனக்கு ஒரு யோசனை வந்தது. திரு தமிழ் இளங்கோ மாதிரி இன்னும் பல பதிவர்கள் என்னை ஒரு பெரிய மேதை என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட தவறான எண்ணங்களைப் போக்குவது என் கடமை என்று கருதுகிறேன்.

அதனால் தமிழ் இளங்கோவின் மடலையும் அதற்கு நான் எழுதின பதிலையும் இங்கே கொடுக்கிறேன். என்னைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ள இந்தக் கடிதம் பயன்படும் என்று நம்புகிறேன்.

தி.தமிழ் இளங்கோ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":

இன்று மீண்டும் இப்பதிவை படிக்க நேர்ந்தது. இதுபோன்ற உங்களது வாழ்வியல் சிந்தனை பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகமாக வரும் வலைப்பதிவர் திருவிழாவில் புதுக்கோட்டையில் வெளியிட்டால் என்ன? (அதிகம் அச்சடித்து கையை சுட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சிக்கன முறைகளை கரந்தை ஜெயக்குமாரிடம் கேட்டால் சொல்லுவார்)

வெளியிடு
நீக்கு
ஸ்பேம் என குறி

இந்த வலைப்பதிவின் கருத்துரைகளை மதிப்பாய்வு செய்க

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 9:03:00 முற்பகல் IST அன்று மனஅலைகள் இல் தி.தமிழ் இளங்கோ ஆல் உள்ளிடப்பட்டது

DrPKandaswamyPhD drpkandaswamy1935@gmail.com

9:45 AM (0 minutes ago)
to தி.தமிழ்
அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
உங்கள் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி.

என் முக்கிய குணத்தைப் பற்றி சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சரித்திரத்திற்காக சொல்லித்தானாக வேண்டும். நான் ஒரு வாழைப்பழ சோம்பேறி. ஏதோ என் மண்டைக்குள் களிமண் அதிகம் இல்லாததினால் பெரிய சாதனையாளன் மாதிரி உலகிற்கு ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். அவ்வளவுதான். நான் ஒரு மேதை அல்ல. மூளை மட்டும் எப்போதாவது சில சமயம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். மற்ற சமயங்களில் நன்றாக குறட்டை விட்டுத் தூங்கும்.

புத்தகம் எழுதி, அதை அச்சிட ஏற்பாடுகள் பண்ணி, அதை புரூப் பார்த்து, புத்தகங்கள் வந்தவுடன் அதை வீட்டில் வைத்துப் பாதுகாத்து (வீட்டுக்காரி தினமும் அவைகளைப் பார்த்து முணுமுணுப்பாள்) அதை வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் கொடுத்து, ஐயா, எனக்கு வேண்டாம் இந்த புத்தகம் போடும் வேலையும் அதனால் வரக்கூடிய புகழும்.

ஒரு நல்ல பைஃவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு ஓரு வாரம் நன்றாகச் சாப்பிட்டு (சோமபானம் உட்பட) தூங்கச் சொல்கிறீர்களா? இப்பவே ரெடி. இந்தப் புத்தகம் போடற வேலையெல்லாம் வேண்டாங்க. அதுக்குன்னு சில ஆட்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் வேலை. அவர்கள் செய்யட்டும். எனக்கு அது ஒத்துக் கொள்ளாது.

அன்புள்ள,
பழனி. கந்தசாமி