புதன், 13 ஏப்ரல், 2016

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

                          Image result for ராஜஸ்ரீ

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ. 15 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை.


இன்றைய தினத்தந்தி செய்தி.

பேங்க் லாக்கரிலிருந்து இந்த நகைகளை எடுத்து ஒரு கைப்பையில் வைத்து காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒரு நபர் வந்து காருக்குப் பக்கத்தில் கீழே கிடக்கும் பத்து ரூபாய் நோட்டுகள் உங்களுடையதுதானா என்று கேட்டிருக்கிறார்.

ராஜஸ்ரீ காரை விட்டு இறங்கி அந்த நோட்டுகளை ராஜஸ்ரீ குனிந்து எடுத்துக்கொண்டிருந்தபோது காரில் இருந்த கைப்பையை அந்த நபர் எடுத்துக்கொண்டு மறைந்து விட்டார்.

இந்த மாதிரி திருடும் டெக்னிக் எனக்குத் தெரிந்து 50-60 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த திருட்டுகள் செய்தித்தாள்களிலும் பிரசுரமாகி வருகிறது.

ஆனாலும் நம் மக்கள் இந்த டெக்னிக்குக்கு பலியாவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை?