கோந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2013

கோந்து தயாரிப்பது எப்படி?


தற்காலத்திய சிறுவர்களிடம் கோந்து தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள், கோந்தா, அப்படீன்னா என்னங்க, என்று கேட்பார்கள். அது வந்து Gum  அப்படீன்னு நீங்க உபயோகிக்கிறீங்களே அதுதான் என்றால், மொதல்லயே ஒழுங்கா Gum  னு கேட்டிருந்தா சொல்லியிருப்போம்ல என்று பதில் வரும்.

நான் சின்னப் பையனா இருக்கறப்ப கோந்து வேணும்னா வேப்ப மரத்தைத் தேடிப்போவோம்.  அதில் ஏற்பட்டுள்ள சிறு காயங்களிலிருந்து வேப்பம் பிசின் வழிந்து காய்ந்து இருக்கும். அதை எடுத்து வந்து தொட்டாங்குச்சியில் (அதாங்க தேங்காய் தொட்டி அல்லது சிரட்டை) போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் மூன்று நாளில் கோந்து தயார்.

அந்தக் தொட்டாங்குச்சி சாய்ந்து விடாமல் பக்கத்தில் சிறு கற்களினால் அணைப்பு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தொட்டாங்குச்சி சாய்ந்து கோந்து சிந்திப்போகும். இந்தக் கோந்தை எடுக்க ஒரு பென்சில் தடிமனான குச்சியை அதில் போட்டு வைக்கவேண்டும்.

இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் கோந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தோம். அந்தக் காலத்தில் கோந்தின் முக்கியமான உபயோகம் என்னவென்றால் பட்டம் விடுவதற்கான நூலுக்கு மாஞ்சா போடுவதுதான். நூலுக்கு மாஞ்சா போடுவது என்பது ஒரு கலை. அதைப்பற்றி பிறகு தனியாக ஒரு பதிவு போடுகிறேன். மாஞ்சா நூல் ஒரு கொலைக் கருவியாக தற்காலத்தில் மாறிவிட்டது காலத்தின் கோலம்.

தற்காலத்தில் கோந்து பல விதங்களில் வந்து விட்டன. செயற்கை கோந்துகள் ஏறக்குறைய இயற்கை கோந்துகளை மறக்கடிக்க வைத்துவிட்டன. ஆனாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அந்தக் காலத்து பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

இப்போது நகர வாழ்க்கையில் வேப்ப மரங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நாட்டு மருந்துக் கடைகளில் இப்பொழுதும் கோந்து கிடைக்கிறது. 100 கிராம் 15 ரூபாய். அதை வாங்கிக்கொண்டு வந்து பழைய மருந்து பாட்டிலில் ஊறவைத்துப் பயன்படுத்திக்கொண்டு வந்தேன். இப்போது ஒரு பழைய காலி கேம்லின் கோந்து பாட்டில் என் பேரனின் தயவால் கிடைத்தது. அதை உபயோகப் படுத்துகிறேன். கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கோந்துகள் இதை விட விலை குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோந்தை உபயோகப்படுத்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி, ரெடிமேட் கோந்துகளினால் கிடைப்பதில்லை.

பழைய ஆட்களைத் திருத்துவது மகாக் கடினம்.

செவ்வாய், 16 மார்ச், 2010

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?






இது காலம் காலமாக விதண்டா வாதக்காரர்களால் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப்பதில் கிடையாது. அப்படிச்சொன்னால் “அப்புறம் நீ என்ன பெரிய ஆராய்ச்சி பண்ணறே?” அப்படீன்னு மறு கேள்வி வரும்.

இந்த முன்னுரை எதற்கு என்றால், அடுத்து படிக்கவும்.

என்னுடைய ஒரு பதிவில் கோவி கண்ணன் சொன்னது.

//அடுத்த பதிவு எதை பற்றி கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழை வராமல் தடுக்குமாமே? எனவே அந்த மரத்தை பற்றி உங்களிடம் பதிவு எதிர்பார்க்கிறேன் //

“இதற்கு ஹாய் அரும்பாவூர் சொன்னது”

//இது என்ன சார் புது கதை? யார் அவிழ்த்து விட்டார்கள்?

இதை விளக்க பல பதிவுகள் போட வேண்டும். இதற்கு நம் டாக்டர் சார் எதற்கு?

நானே சொல்லிவிடுவேனே?

இதற்கு சிறிதளவு இயற்கையியல் அல்லது உயிரியல்/தாவரவியல்(BOTANY) தெரிந்தால் போதுமே!

அதைப்பற்றி பார்க்கும் முன்னர் ஒருவார்த்தை

இயற்கையினால் உண்டான எதுவும் அந்த இயற்கைக்கு எதிரானது அல்ல, மனிதர்களை தவிர!

கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் மட்டுமல்ல சப்பாத்தி, கள்ளி மற்று பல பாலை தாவரங்கள் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவது உண்மைதான்.

ஆனால் அவைகள் மழைவராமல் தடுக்கும் காரணிகள் அல்ல.

மீண்டும் சந்திப்போம்.//


அரும்பாவூர் ஏறக்குறைய சரியான பதில் சொல்லிவிட்டார். நானும் கொஞ்சம் சொல்லாவிட்டால் என்னுடைய டாக்டர் பட்டத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடுமல்லவா? அதற்காக.



கருவேலமரம், சப்பாத்தி கள்ளி முதலானவை இயற்கையாகவே மழை குறைந்த வறண்ட பிரதேசங்களில் வளரக்கூடியவை. அந்த சூழ்நிலையில் அவை தாக்குப்பிடிக்கத் தேவையான குணங்களைப் பெற்றிருக்கின்றன. அந்த குணங்களில் ஒன்று காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை இலைகள் மூலம் உறிஞ்சிக்கொள்வது. பிராணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் முட்கள். ஆகவே மழை குறைவான பிரதேசங்களில் இத்தகைய மரங்கள் வளருகின்றன.


இப்போது தலைப்பை மீண்டும் படியுங்கள். கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?


இல்லே, கோழி வறுவல்தான் முன்னே வந்ததா?

கருவேல மரம் வளர்ந்ததால் மழை குறைந்ததா? மழை குறைந்ததால் கருவேல மரம் வளர்ந்ததா?