சனி, 6 ஆகஸ்ட், 2011

ஈமெயில் படித்தால் பணம் தரும்


                            


பதிவுலக நண்பர்களே,


கீழே உள்ள விளம்பரத்தை ஒரு பதிவில் பார்த்தேன். மக்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குகிறார்கள் என்ற நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

வாரம் ஒரு முறை விளம்பர ஈமெயில் வருமாம். அதைப் படித்தால் பணம் தருவார்களாம். எவ்வளவு தெரியுமா? பிச்சைக்காசு 25 பைசா. பிச்சைக்காரன் கூட ஒரு ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. வருடம் 52 மெயில்கள். அதாவது 13 ரூபாய்கள். உங்கள் கணக்கில் 200 ரூபாய் சேர்ந்தால் பணம் கொடுப்பார்களாம். எத்தனை வருடத்தில் 200 ரூபாய் சேரும்? சுமார் 15 வருடங்கள். ஆக மொத்தம் நீங்கள் பதினைந்து வருடம் காத்திருந்தால் 200 ரூபாய் கிடைக்கும்.

இதைவிட காதில் பூ சுற்றும் வேலை ஏதாவது இருக்கிறதா? யோசியுங்கள் நண்பர்களே!!

 

ஈமெயில் படித்தால் பணம் தரும் rupeemail ல் இணைவது எப்படி?

இது உண்மை நண்பர்களே! இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்துகொண்டால் இத்தளத்தில் இருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாரம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  விளம்பர மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பார், அவற்றை திறந்து பார்த்தாலே உங்களது அக்கௌண்டில் அந்த விளம்பரத்துக்கான மதிப்பு எவ்வளவோ அவ்வளவு பணம் சேர்ந்திருக்கும். உங்களது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாலும் 2 ரூபாய் பணம் அளிக்கப்படுகிறது. மொத்தமாக ரூ.200 ஆனதும் நீங்கள் அந்த தொகையை டி.டி யாக பெறலாம். இலவசமாக உறுப்பினாராக இணைய கீழ் காணப்படும் படத்தை அழுத்தவும்.