கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு பஸ்சில் வந்தோம்.
400 கி.மீ. தூரம். பஸ்கள் சொகுசானவை. ஏசி பொருத்தப்பட்டவை. ரோடுகள் 6 வழி எக்ஸ்பிரஸ்
வே. ரோடுகளில் எந்த குண்டு குழிகளும் கிடையாது. பஸ்கள் ரோடுகளில் அப்படியே வழுக்கிக்கொண்டு
போகின்றன. ஒரு குலுங்கல் இல்லை. 400 கி.மீ.
தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்து விட்டோம். 100 கி.மீ. தூரத்துக்கு ஒரு இடத்தில் கடை,
பாத்ரூம் வசதிகள் இருக்கின்றன. பாத்ரூம்கள் அவ்வளவு சுத்தமாக இருக்கின்றன. யாரும் காசு
கேட்பதில்லை.
கொசுறு; கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். சென்டோசா லேசர் ஷோவைப் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=AuCVmyxXO4Y
ரோடில் வருபவர்களுக்காக சுங்கச்சாவடி, குடிஉரிமைச்
சோதனைச்சாவடி ஆகியவை “வுட்லேண்ட்” என்னுமிடத்தில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குத்
தனித்தனியாக இருக்கின்றன. இரண்டு இடங்களிலும் நம் பாஸ்போர்ட், விசா ஆகியவைகளைக் காண்பித்து
“சாப்பா” (ரப்பர் ஸ்டாம்ப்) குத்திக்கொள்ளவேண்டும். இவைகளை தவறு இல்லாமல் செய்யவேண்டும்.
எங்காவது தவறு நடந்து விட்டால் அடுத்த குடியுரிமைச் சோதனையில் நம்மை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள்.
ஒரு சிறுவன் இம்மாதிரி ஒரு தவற்றினால் ஒன்றரை மணி நேரம் போராடி அவனை மீட்டு எடுத்து
வருவதற்குள் டூர் ஏஜென்டுக்கு தாவு தீர்ந்து விட்டது. எங்கேயோ ஒரு இடத்தில் அவனுடைய
பாஸ்போர்ட்டில் சீல் வைக்காமல் வந்துவிட்டான். அவ்வளவுதான். அவனை தீவிரவாதிகள் ரேன்ச்சுக்கு
விசாரித்து அவனை விட அவ்வளவு நேரம் ஆயிற்று.
டூர் போவதென்றால் யாரும் வழிச்செலவுக்கு பணம் எடுத்துக்கொள்ளாமல்
புறப்பட மாட்டார்கள். டூரிஸ்ட் கம்பெனியே எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்வதால் நாம்
கொண்டுபோன பணம் அப்படியே இருக்கிறது. அதை திரும்பக் கொண்டு வந்து இங்கே என்ன செய்யப்போகிறோம்?
அதற்குத்தான் சிங்கப்பூருக்கு கூட்டி வருகிறார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் அத்தனையையும்
செலவு செய்ய இங்கே வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள். அதிக அலைச்சல் கூட இல்லை. ஒரே
கடையில் நீங்கள் கொண்டுபோன அனைத்துப் பணத்தையும் செலவு செய்ய சாமான்கள் வைத்திருக்கிறார்கள்.
“முஸ்தபா சென்டர்” என்று அதற்குப் பெயர். அம்மா, அப்பா தவிர அனைத்துப் பொருட்களும்
அங்கே கிடைக்கும். நான் 20 வருடத்திற்கு முன்பு பார்த்ததை விட பல மடங்கு வளர்ந்திருந்ததைப்
பார்த்தேன். இதைத் தவிர இன்னும் ஏராளமான கடைகள் இருக்கின்றன. அத்தனையிலும் ஜனங்கள்
மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சிங்கப்பூரை “வாங்குபவர்களின் சொர்க்கம்” என்று கூறுகிறார்கள்.
சிங்கப்பூரில் நாங்கள் பார்த்த முக்கிய இடங்களின்
லிஸ்ட்டும் போட்டோவும் மட்டும் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் வாசகர்களில் அநேகர் சிங்கப்பூரைப்
பார்த்திருப்பார்கள்.
1. சென்டோஸா
தீவு
2.
சிங்கப்பூர்
ஃப்லையர்
3. சங்கி
ஏர்போர்ட்
4. சிங்கப்பூர்
சிங்கம்
5. மாரியம்மன்
கோவில்
கொசுறு; கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். சென்டோசா லேசர் ஷோவைப் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=AuCVmyxXO4Y