வெள்ளி, 9 ஜூலை, 2010

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்தச் செய்தியைப் படிக்கவும்.

நன்றி: தினத்தந்தி

பிரபல நடிகை சத்யப்பிரியா சென்னை தியாகராயநகர் ராமானுஜர் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக தனது காரில் வந்தார்.


ஓட்டல் வாசலில் காரில் காத்திருந்தபோது அவரது கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த அவரது கைப்பையை மர்ம ஆசாமி ஒருவன் கொள்ளையடித்து சென்று விட்டான். ரோட்டில் பத்து ரூபாய் நோட்டுக்களை சிதற விட்டு, அந்த ரூபாய் நோட்டுகள் உங்களுடையதா என்று மர்ம ஆசாமி ஒருவன் கேட்டான். உடனே அந்த ரூபாய் நோட்டுகளை காரில் இருந்து இறங்கி நடிகை சத்யப்பிரியா பொறுக்கிக்கொண்டு இருந்தார். (இதைத்தான் "பொறுக்கி" என்று கூறுவது)


அப்போது அந்த மர்ம ஆசாமி சத்யப்பிரியாவின் காரில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான். அந்த கைப்பைக்குள் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம், வங்கி கிரெடிட் கார்டுகள், வங்கி ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் டிரைவிங்க் லைசன்சும் இருந்த்தாக நடிகை சத்யப்பிரியா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

எனக்குத் தெரிந்து இந்த டெக்னிக் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் திருந்துவதாகக் காணவில்லை.