ஞாயிறு, 6 மார்ச், 2011

செயல்களும் விளைவுகளும்


கடமைகள், தேவைகள், ஆசைகள் இவற்றை நிறைவேற்றுவதற்கான எண்ணங்கள் மனதில் தோன்றி, செயல்களாக வெளிப்படுகின்றன. இச்செயல்களின் விளைவுகளே மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் தருகின்றன.

நாம் செய்யும் செயல்களுக்கு எப்போதும் நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளே ஏற்படுவதில்லை. விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடி இருந்தால் இன்பமும், எதிர் மறையாக இருந்தால் துன்பமும் நம் மனதில் தோன்றுகின்றன. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவன் இந்த விளைவுகளைக் கண்டு கலங்க மாட்டான். அவன்தான் ஞானி எனப்படுபவன். எல்லோரும் ஞானியாக முடியாது. ஆனால் ஓரளவிற்கு இந்த உலக அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கீதை இதைத்தான் மக்களுக்குப் போதிக்கிறது.

உன் கடமையைச் செய். பலனை என்னிடம் விட்டு விடு.”  

இதை வெறும் வறட்டு வேதாந்தமாகக் கருதாமல் நடைமுறை வாழ்க்கையில் அனுசரித்தால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.