வியாழன், 14 ஜனவரி, 2016

ஒரு அவசரப் பதிவு.

                                    Image result for ஏர்டெல் 4ஜி

நான் "பிஎஸ்என்எல்" ஐ விட்டு ஜகா வாங்கி ஏர்டெல்லுக்குப் போன கதை யை முன்பே எழுதியுள்ளேன்.

நேற்று ஏர்டெல் ஆபீசிலிருந்து ஒருவர் என் மொபைலில் பேசினார். சார், புதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. நீங்க இப்போ வச்சிருக்கிற பிராட்பேண்ட் ஸ்பீட் 4MBPS. 60 GB வரைக்கும்தான் இந்த ஸ்பீட். அப்புறம் 512 KBPS க்கு குறைஞ்சிடும். இப்போ பதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. அதுல ஸபீட் 16 MBPS. 100 GB வரைக்கும் இந்த ஸ்பீடுலேயே வேலை செய்யும். சார்ஜ் சும்மா ஒரு இருநூறு ரூபாய்தான் அதிகமாகும். நீங்க உபயோகிக்கிற அளவிற்கு இந்த ஆஃபர் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்.

நானும் சரி, 16 MBPS ஸ்பீட் எப்படியிருக்கும் பார்த்து விடலாம் என்று நினைத்து சரி என்று சொல்லி விட்டேன். இன்று காலை முதல் அந்த 16 MBPS ஸ்பீடில் என் பிராட்பேண்ட் வேலை செய்கிறது. டவுன்லோடு செய்வதெல்லாம் டக் டக்கென்று நடக்கிறது.

போகப்போகப் பார்க்கவேண்டும்.

"என் ஆசிரியர் பாகம் இரண்டு" ஞாபகம் இருக்கிறது. பொங்கல் கழித்து வெளியாகும்.