வியாழன், 9 ஆகஸ்ட், 2012

உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும்


இந்தப் பழமொழியை எல்லோரும் அறிவீர்கள். ஈமு கோழியின் நிலை இதற்கு நல்ல உதாரணம்.

சுசி ஈமு பண்ணை திவாலானதும் போலீசும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து அந்தக் கம்பெனியின் சொத்துக்களை முடக்கியதும் தெரியும். ஆனால் ஓடிப்போன இந்தக் கம்பெனி முதலாளி இப்படி ஒரு வில்லங்கத்தை விட்டுச் செல்லுவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மூன்று இடங்களில் சுமார் 6500 ஈமு கோழிகளையும் அந்த ஆள் விட்டுச் சென்றிருக்கிறான். அவைகள் நாலு நாளாக பட்டினி. இதை அப்படியே விட முடியுமா? அவைகளுக்குத் தீனி போட்டுத்தான் ஆகவேண்டும். 6500 கோழிகளுக்கு ஒரு நாளைக்கு 5 டன் தீவனம் வேண்டும். ஒரு டன் 20000 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யவேண்டும்.

பராமரிப்புக்கு அவன் போதுமான ஆட்களை விட்டுச் செல்லவில்லை. அதற்கு குறைந்தது 30 ஆட்களாவது வேண்டும். ஆள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் அதற்கு தினம் 15000 ரூபாய் வேண்டும்.

இது போக ஈமு கோழி ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 6500 கோழிக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும்.

இவ்வளவு இருந்தும் பராமரிப்பு சரியில்லாவிட்டால் கோழிகள் இறந்து போக வாய்ப்புகள் உண்டு. அப்படி இறந்து போனால் அவைகளை என்ன செய்வது? கோர்ட்டுக்கு என்ன பதில் சொல்வது?

ஐயா, சுசி முதலாளியே, எங்கிருந்தாலும் உடனே வந்து எங்களை இந்த உடும்பிலிருந்து காப்பற்றும் ஐயா!

புதன், 8 ஆகஸ்ட், 2012

எதிர்பார்த்தது நடக்கிறது


எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பார்த்தது நடப்பதில் என்ன அதிசயம் என்று கேட்கலாம். ஆனால் இதில் பல விவசாயிகளின் பணம் முழுகிப் போய் விட்டதே. அதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.

ஈமு கோழி பித்தலாட்டம்


என்ற தலைப்பில் 17-12-2011 ல் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் சொல்லியுள்ள பித்தலாட்டம் இன்று அரங்கேறிவிட்டது. பெருந்துறை அருகில் உள்ள சுசி ஈமு பண்ணை இன்று முடக்கப்பட்டது (தினத்தந்தி செய்தி,  8-8-12). இதைத் தொடர்ந்து வரிசையாக மற்ற பண்ணைகளும் மூடும் செய்திகள் வெளியாகும். காத்திருங்கள்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாயம் ஏன் சாத்தியமில்லை?

என்னுடைய  இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம் என்ற பதிவிற்கு நான் எதிர்பார்க்காத அளவிற்கு பார்வையாளர்களும் பின்னூட்டங்களும் வந்துள்ளன. சில பின்னூட்டங்கள் பதிவுலகைப் பற்றிய என் கருத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன. இதில் எனக்கு வருத்தமேயில்லை. மாறாக சந்தோஷமே. ஏனென்றால் நாட்டுப் பிரச்சினைகளில் மக்கள் இவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே.

என்னுடைய மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் திரு வே.சுப்பிரமணியன் அவர்கள். அவருடைய பின்னூட்டத்தை இங்கு கொடுத்து அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் (சிகப்பு வர்ணம்) தனித் தனியாக பதில் கொடுக்கிறேன்.


//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து.//

அப்படியெனில் நடைமுறைக்கு ஒத்து வருவது எது என்று தாங்கள் தெரியப்படுத்தவில்லையே..

இன்று நடைமுறையில் பெரும்பாலானோர் விவசாயத்தில் செயற்கை உரங்களையும் பூச்சிகொல்லி மருந்துகளையும் பயன்படுத்திதான் மகசூல் எடுக்கிறார்கள். இதனால் மண்ணின் தன்மை மாறுபட்டு நிலம் கெட்டுக்கொண்டு வருகின்றது என்பது உண்மை. அதற்கு மாற்றாகத்தான் இயற்கை வழி விவசாயம் செய்வோம் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்களும் ரசாயன பூச்சி மருந்துகளும் உபயோகப் படுத்த மாட்டார்கள். இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவார்கள்.இந்தியாவிலுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் இயற்கை உரம் மட்டும் போடுவதென்றால் அவ்வளவு உரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. ஏறக்குறைய "அன்னா ஹஸாரே" ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்திட்டம் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இந்த இரண்டு திட்டங்களையும் எதிர்ப்பவர்களுக்கு வெகு சுலபமாக "தேசத்துரோகிகள்" அல்லது "இயற்கை விரோதிகள்" என்ற பட்டத்தை சூட்டி விட முடியும். ஏனென்றால் நாம் உணர்ச்சிகளினால் ஆட்டுவிக்கப்படுகிறோமே தவிர, சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பது கிடையாது. லஞ்சத்தை ஒழிப்பது பற்றிய விவாதம் இங்கு வேண்டாம்.

இயற்கை விவசாயத்திற்கு வருவோம். 1970 களில் பசுமைப் புரட்சி வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். அதன் முக்கிய அம்சமே ரசாயன எருக்கள் உபயோகப்படுத்துவதுதான். அப்படி உபயோகித்துதான் பசுமைப் புரட்சி வெற்றி பெற்றது. இன்றும் இந்திய விவசாயம் இந்த செயற்கை உரங்களை நம்பித்தான் இருக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் பாருங்கள்.

உரங்களின் உபயோகம் கடந்த 60 வருடங்களில் எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்று பாருங்கள். அப்படி உரங்களை உபயோகித்ததால்தான் இன்று நாம் எல்லோரும் பட்டினியில்லாமல் இருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன் நாம் 30 கோடியாக இருந்தபோது பஞ்சங்கள் வந்தது என் போன்றவர்களுக்குத் தெரியும். இன்று 120 கோடியாக ஜனத்தொகை உயர்ந்த போதும் பஞ்சம் என்பது என்னவென்றே இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது.

இந்த நிலை எப்படி சாத்தியமாயிற்று என்று விவசாய வல்லுனர் யாரையாவது நேரில் சந்தித்தால் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.



இந்தப் படத்தை நன்கு பார்த்து புரிந்து கொள்ளுங்கள். பயிரிடும் பரப்பு குறைந்த போதிலும் உணவு உற்பத்தி அதிகமாகியிருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று? உரங்களின் உபயோகத்தினால்தான்.

இப்படி ரசாயன உர உபயோகத்தினால்தான் மனிதனுக்கு வியாதிகள் வருகின்றன, நிலவளம் கெட்டு விட்டது, இப்படியான கதைகளை இயற்கை விவசாய விஞ்ஞானிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இயற்கை விவசாயத்தை அனுசரித்து இன்றுள்ள இந்திய ஜனத்தொகைக்கு அவர்களால் உணவு கொடுக்க முடியுமென்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

தவிர, சுற்றுச்சூழல் பாதிப்பு இந்த விவசாயத்துறையில் மட்டுமா இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், எது இன்று மாசில்லாமல் கிடைக்கிறது? அதைப் பற்றி நாம் கவலைப்பட்டு ஆகப்போவதென்ன? உலகத்தை 100 வருடங்களுக்கு முன்னால் கொண்டு போக யாரால் முடியும்?

//இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை. நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.//

பதிவுலகை தாண்டிய உலகம்தான் நிஜம் என்றும், பதிவுலகம் பொய்யென்றும் தாங்கள் கூறுகிறீர்கள். அப்படியெனில் பொய்யான இந்த பதிவுலகில், ஏன் ஆரோக்கியமான விஷயத்தை பதிவிட்டு வீணடித்தீர்கள்? பதிவுலகம் பொய்யான உலகமாக தெரியவில்லையே அய்யா. அப்படி பொய்யானதாக இல்லாததால்தான் இந்த பதிவையே நீங்கள் இட்டுள்ளீர்கள்.

தங்கள் கூற்றுப்படி, பதிவுலகில் விவாதம் பயனில்லையென்றால்.. அதே பதிவுலகில் இட்ட இந்த பதிவும் பயனில்லாத ஒன்றாகத்தானே இருக்கும்.


பதிவுலகத்தில் நான் வலம் வருவது என்னுடைய சுயநலனுக்காக மட்டுமே. என்னுடைய மூளை துருப்பிடிக்காமல் இருப்பதற்காக இந்தக் கம்பயூட்டரையும் பதிவுலகத்தையும் பயன்படுத்துகிறேன்.மற்றபடி இதில் எனக்கு வேறு ஒரு உபயோகமும் எதிர்பார்ப்பும் இல்லை.

பொய்யான பதிவுலகத்தில் ஏன் ஆரோக்யமான விஷயத்தைப் பதிவிட்டு வீணடித்தீர்கள் என்று கேட்கிறீர்களே, அது என் தனிப்பட்ட விருப்பம். உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் நான் வீணடிக்கவில்லையே. இந்தப் பதிவுகளைப் படிப்பதும் படிக்காததும் அவரவர்கள் விருப்பமே.

பதிவுலகில் விவாதங்களினால் பயன் இல்லை என்று நான் சொன்னது இயற்கை விவசாயம் பற்றி மட்டும்தான். மொத்தப்  பதிவுகளினால் பயனில்லை என்று ஏன் பொருள் கொள்கிறீர்கள்?

ஏதாவது எனக்கு மனதிற்குப் பிடித்த விஷயங்களை என்னுடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேனே தவிர, என்னுடைய பதிவுகளைப் படித்து இந்த உலகில் புரட்சி வெடிக்கும் என்கிற எண்ணம் எல்லாம் கிடையாது.  ஏதாவது பதிவர் எதைப் பற்றியாவது எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டால், எனக்கு மனது இருந்தால் அதைப்பற்றி எழுதுவேன். அவ்வளவுதான்.  ஏன் அதைப் பற்றி எழுதுகிறீர்கள், ஏன் இதைப்பற்றி எழுதவில்லை என்று யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். பொது அரங்கில் கேள்வி கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் " இதையெல்லாம் எழுதி நீ என்ன சாதித்தாய் (கிழித்தாய்)?" என்று வரும் கேள்விகள் அநாகரிகமானவை. அப்படிப்பட்ட கேள்விகளை நிராகரிக்கும் உரிமை எனக்குண்டு. அல்லது அதே பாணியில் பதிலளிக்கும் உரிமையும் எனக்குண்டு.

நாகரிகமான, நக்கல் கிண்டல் இல்லாமல் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அதை கண்டிப்பாய் நிறைவேற்றுவேன். நகைச்சுவையை அவை ஆபாசமாக இல்லாதவரை நான் வரவேற்கிறேன். "எதை நீங்கள் ஆபாசம் என்று கருதுகிறீர்கள்" என்று நீங்கள் கேட்கலாம். அது என்னுடைய அபிப்பிராயத்திற்கு உட்பட்டது.

பதிவுலகம் முகமூடிகளால் நிரம்பியிருக்கிறது. அப்படிப்பட்ட மாயாஜால உலகில் எந்த விவாதமும் பயனளிக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். அந்தக் கருத்துகளுக்கு யார் பொறுப்பேற்று நடைமுறைப் படுத்தப் போகிறார்கள்? அதனால்தான் பதிவுலகில் செய்யப்படும் விவாதங்கள் ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதையாகத்தான் முடியும்

பதிவுலகத்தில் வரும் பதிவுகளினால் நிஜ உலகில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது மாற்றங்களைச் சொல்லுங்கள். நான் என் கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். 

என்னைப்பொறுத்தவரை, பதிவுலகில் இட்டுள்ள இந்த பதிவும் பயனுள்ள ஒன்றாகத்தான் பார்க்கிறேன். மேலும் அதை ஒட்டிய பதிவுலக விவாதங்களும் பயனுள்ள ஒன்றாகத்தான் இருக்கும்.


ஏதோ ஒரு சிலர் ஒரு பதிவைப் படிப்பதற்கும் உருப்படியான சமுதாய மாற்றம் ஏற்படுவதற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது, நண்பரே. அப்படி ஏற்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமே.

நன்றி அய்யா!

சில சுட்டிகள் கொடுத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் அவைகளைப் பார்க்கலாம்.


FAO Report on Agricultural Production


PRODUCTION

The domestic production of N and P2O5 was 29 000 and 10 000 tonnes, respectively, in 1951/52. By 1973/74, this had increased to 1.05 million tonnes N and 0.325 million tonnes P2O5. As a result of the oil crisis in the mid-1970s and the consequent sharp increase in the international prices of fertilizers, the Government of India encouraged investment in domestic fertilizer production plants in order to reduce dependence on imports. It introduced a “retention price” subsidy in 1975/76. The scheme led to a sharp increase in domestic capacity and production between the mid-1970s and the early 1990s. The total production of N and P2O5 rose from 1.51 million and 0.32 million tonnes respectively in 1975/76 to 7.30 million and 2.56 million tonnes in 1991/92. In 1992/93, phosphatic and potassic fertilizers were decontrolled. As a consequence, the rate of growth in the demand for these products slowed. The total production of N reached 10.6 million tonnes and that of P2O5 reached 3.6 million tonnes in 2003/04.



இந்த லிங்க்கில் 2020 வரைக்கும் இந்தியாவின் உரத்தேவை என்ன என்று Indian Institute of Management, Allahabad ஒரு 32 பக்க அறிக்கை தயாரித்திருக்கிறார்கள். 



இந்த லிங்கில் இந்திய நாட்டின் உர பயன்பாட்டு புள்ளி விபரங்கள் உள்ளன.


முடிவுரை:

இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் நம் கருத்துகளைத் தெளிவு படுத்திக்கொள்ள உதவும். இவைகளை நான் வரவேற்கிறேன்.


சிலபல எரிச்சலூட்டும் பின்னூட்டங்களும் வருகின்றன. என்னால் முடிந்தவரையில் அவைகளுக்குப் பதில் அளிக்கிறேன். ஆனால் சில பின்னூட்டங்கள் தனி மனித தாக்குதல்களாக இருக்கின்றன.  

ஒரு முகமூடிப் பதிவர் போட்ட இந்தக் கமென்ட்டைப் பாருங்கள்.

//இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவில்லை, இணையத்தில் விவசாயம் பற்றிப்பேசுவதால் பயனில்லை என்கிறீர்கள் ,அப்போ மற்றது பேசினால் மட்டும் பயன் கூறையை பிச்சிக்கிட்டு கொட்டுமா?



விவசாயத்துக்கு உதவாத விவசாய பல்கலைகளும், விவசாய துறையும் எதுக்கு , தெண்ட சம்பளம் வாங்கவா, அவற்றையும் மூடி விடலாம். ஆண்டுக்கு பல கோடி மிச்சம் ஆகும்.//

எவ்வளவு நாகரிகமான கமென்ட் பார்த்தீர்களா? யார் மேலயோ உள்ள வயித்தெரிச்சலை என் மேல் கொட்டினால் நான் என்ன செய்ய முடியும்?

அவர் போட்ட இன்னொரு கமென்ட்டையும் பாருங்கள்.

நீங்கள் நிஜ உலகில் மேடையில் தான் பேசுவேன் என்று சொல்கிறீர்கள் ரைட்டு,பான்கி மூன் கிட்டே சொல்லி UNOமூலம் FAO வில் ஒரு மேடை தயார் செய்துவிடலாம்.

இந்த நக்கலை அவர் எதற்காக என்னிடம் 


காட்டுகிறார் என்று தெரியவில்லை. அப்படி FAO 


வில் மேடை தயார் செய்யக்கூடிய சாமர்த்தியசாலி, 


எதற்கு ஒரு முகமூடி போட்டுக்கொண்டு 


பதிவுலகில் வலம் வருகிறார் என்று எனக்குத் 


தெரியவில்லை.




இப்படிப்பட்ட கமென்ட்டுகளுக்கு அவர்கள் 


பாணியிலேயே பதில் கொடுப்பது தவறல்ல என்று 


நினைக்கிறேன்.


சனி, 4 ஆகஸ்ட், 2012

உங்களுக்குப் பேசத் தெரியுமா?



நீங்கள் மிக நன்றாகப் பேசுவீர்கள் என்று நான் அறிவேன். உங்களைப் போல் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர்கள் அதிகம் பேர் இல்லையென்பதையும் நான் அறிவேன். ஆனால் நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சை அடுத்தவர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆனால் அதை நான் அறிவேன். இந்த சூட்சுமத்தை அறியாமல்தான் பலர் வாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள். மற்றவர்களையும் சங்கடப்படுத்துகிறார்கள்.

நீங்கள் உங்கள் நண்பரிடம் ரொம்ப முக்கியமான சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். அவர், இவன் இந்தக் கழுத்தறுப்பை எப்ப முடிப்பான், நாம பஸ் பிடிச்சு எப்ப வீட்டிற்குப் போய்ச் சேருவது என்று கவலையில் இருப்பார். பல பேர் இப்படித்தான், அடுத்தவன் என்ன நினைப்பான், அவன் என்ன சூழ்நிலையில் இருக்கிறான் என்ற நினைப்பேயில்லாமல் மணிக்கணக்கில் அறுப்பார்கள்.

அடிக்கடி, “என்ன நான் சொல்றது புரியுதா” என்ற கேள்வி வேற கேட்டு வெறுப்பேத்துவார்கள். ஒரு அவசர வேலை இருக்கிறது, நான் போகவேண்டும் என்றால் அதைக் காதிலேயே வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதிரே ஒரு ஆள். அவ்வளவுதான். இவர்கள்தான் வயதான பிறகு வீட்டுத் திண்ணையில் தனியாக உட்கார்ந்துகொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டு இருப்பவர்கள்.
போனில் பேசுபவர்கள் இன்னும் பெரிய கழுத்தறுப்புகள். நேரில் முகம் பார்த்து பேசும்போதே அடுத்தவர்களின் மன நிலையைக் கவனிக்காதவர்கள், போனில் முகத்தைப் பார்க்காமல் பேசும்போது எப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு நீங்கள் சும்மா “ஊம்” சொல்லிக்கொண்டு இருந்தால் போதும். நீங்கள் ஏதாவது சொல்ல இடைவெளியே கொடுக்க மாட்டார்கள். அப்படி ஏதாவது சொல்ல ஆரம்பித்தால், இருங்க, நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தபின் நீங்கள் பேசலாம் என்பார்.

இவர் எப்போ சொல்லி முடிக்கிறது, நாம எப்போ பேசறது, வீண் வேலைதான். பேசாமல் போனை கீழே வைத்து விட்டு நம் வேலையைக் கவனிக்கலாம். அதற்கும் இந்த பிரஹஸ்பதிகள் விடமாட்டார்கள். அவர்களுக்கு ஒரு ஆள் “ஊம்” கொட்டிக்கோண்டே இருக்கவேண்டும். எது எதற்கோ மிஷின் கண்டு பிடிக்கிறார்களே, இந்த “ஊம்” கொட்டுவதற்கு ஒரு மிஷின் கண்டு பிடித்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்?
எனக்கு சில நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு காது கொஞ்சமாகத்தான் கேட்கும். ஆனால் அவர்கள் அதை உயிர் போனாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். செவிட்டு மிஷின் வாங்கி வீட்டில் பத்திரமாக வைத்திருப்பார்கள். தப்பித்தவறி அதை காதில் வைத்துக்கொண்டாலும் ஞாபகமாக சுவிட்சை ஆஃப் பண்ணிவைத்திருப்பார்கள். காரணம் பேட்டரி தீர்ந்து போய் விடுமாம். ஏனய்யா இந்தக் கஞ்சத்தனம் பண்ணுகிறீர்கள் என்று கேட்டால், ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்பத்தான் ஆஃப் பண்ணினேன் என்பார்கள்.

இவர்களுடன் பேசுவது ஒரு தனி கலை. அவர்கள் பேசும் சப்ஜெக்ட்டுக்கு சம்பந்தமாய் பேசினால் நம் உதடு அசைப்பை வைத்து ஓரளவு புரிந்து கொள்வார்கள். வேற சப்ஜெக்ட்டுக்கு போனீர்களானால் வந்தது வம்பு. நீங்கள் சொல்வதை அவருக்குப் புரிய வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். ஆனால் இவர்களுக்கு மற்றவர்களுடன் அளவளாவ மிகவும் பிடிக்கும். யாராவது கிடைத்தால் மிகுந்த சந்தோஷம் கொள்வார்கள். அப்படி யாரும் கிடைக்காவிட்டால் போன் போட்டு நண்பர்களை வரவழைப்பார்கள். இவர்களிடம் காலம் தள்ள ரொம்ப ரொம்ப பொறுமை வேண்டும்.

சிலர், யாராக இருந்தாலும் வலியப்போய் ஒட்டிக்கொண்டு சம்பந்தமில்லாமல் ஏதாவது கேட்டுத் தொண தொணப்பார்கள். விசேஷ வீடுகளில் இந்த ஆட்கள் பண்ணும் அக்கிரமம் சொல்லி முடியாது. இவர்களை சிலர் சமாளிக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். அங்கு கண்ணில் தென்படும் யாராவது ஒருத்தரைக் கூப்பிட்டு, “இவர் என்னமோ கேட்கிறார், என்ன என்று பாருங்கள்” என்று சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்வார். அந்த ஆள் மாட்டிக்கொண்டு முழிப்பார்.

இதில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான நல்ல நல்ல ஆலோசனைகளை இலவசமாகச் சொல்ல நான் இருக்கிறேன். பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம்



இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி ரெபெக்கா தனது பண்ணையில் செய்த மாறங்களினால் அடுத்த தலைமுறை விவசாயம் எப்படி இருக்க வேண்டும்  என்பதன் எடுத்துக் காட்டு ஆகி இருக்கிறார்.

உலகின் பொருளாதாரமே எண்ணெய் எரிபொருள் சார்ந்து இருப்பதால் உலகளாவிய  எரிபொருள் விலை மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கிறது.எரிபொருள் தேவை குறைந்த அள்வே பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதில் ரெபெக்கா வெற்றி பெற்றுள்ளார்.

"இயற்கை நம் தேவைகளுக்கு   நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"

விவசாய(நில)ம் என்பது எதிர்காலத்தில் மிக அதிக மதிப்பு பெறும்.ஆகவே நிலம் உள்ளவர்கள் விற வேண்டாம்.முடிந்தவரை முறையாக விவசாயம் கற்று பயனுறுமாறு வேண்டுகிறேன்.


விவசாயப் பதிவுகளுக்கு வாசகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் சில பதிவுலக நண்பர்கள் என்னுடைய அனுபவத்தை ஏன் பதிவிடக்கூடாது என்று பின்னூட்டமிட்டதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

மேலே கொடுத்துள்ள ஒரு பின்னூட்டத்தின் வாசகத்தைக் கொடுத்திருக்கிறேன். இதில் இயற்கை விவசாயத்தின் பெருமையை விளக்கியுள்ளார்கள்.

நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு  தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை.  நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.

இன்றைய விவசாயத்தின் நிலை பற்றி சில முக்கியமான பிரச்சினைகளை மட்டும் கூறுகிறேன்.

1. விவசாயப் பொருள்களின் சந்தை விலைக்கும் விவசாயிக்கு கிடைக்கும் விலைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. சாதாரண தேங்காய் கடையில் 15 ரூபாய் விற்கிறது. தென்னந்தோப்பில் நான்கு ரூபாய்க்கு மேல் கேட்பாரில்லை. இளனி ரோட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோப்புக்காரனுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை. இதே போல்தான் அனைத்து விவசாயப் பொருள்களும் விற்கின்றன.

உழவர் சந்தை என்று ஒன்று இருக்கிறது. இங்கு வியாபாரிகள்தான் பெரும் அளவில் விவசாயிகள் என்ற போர்வையில் கடை போட்டு இருக்கிறார்கள். அரை ஏக்கர் பொட்டல் காடு இருந்தால் அவனுக்கு விவசாயி என்ற அடையாள அட்டை கிடைத்து விடும். நிஜ விவசாயி அவனுடன் போட்டி போட முடியாது.

இந்த நிலையை மாறினால் ஒழிய விவசாயம் வளராது.

2. விவசாயத்திற்கு நிலமும் நீரும்தான் பிரதானம். நிலம் இருக்கிறது. நீரைத்தான் காணவில்லை. பருவ மழைகள் பொய்த்துப்போகின்றன. அதனால் நிலத்தடி நீர் அருகிப் போய் விடுகிறது. ஆதே காரணத்தினால் ஆற்றுப் பாசனமும் குருகிப் போகிறது. என்னதான் விவசாயி கஷ்டப்பட்டாலும் அவனால் தன் குடும்பத்தையே காப்பாற்ற முடிவதில்லை.

3.விவசாயத்திற்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த நிலைக்கு பல காரணங்கள் உண்டு. இங்கு அவற்றை எல்லாம் ஆராய்ந்து தீர்வு காண முடியாது. இந்தப் பிரச்சினைக்கு அரசுதான் வழிவகை செய்யவேண்டும்.

4.விவசாயிகளுக்கு ஒரு ஆரோக்கியமான கூட்டு அமைப்பு கிடையாது. அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. அதனால் அவர்கள் அரசிடம் இருந்து எந்த சலுகையையும் பெற முடிவதில்லை. விவசாயத்திற்கு வேண்டிய எந்த கொள்கையையும் முன் வைக்க முடிவதில்லை.

5. விவசாயம் வளர ஆக்கபூர்வமான கொள்கைகள் எதையும் அரசினால் சரியாக நடைமுறைப் படுத்த முடிவதில்லை. அதிகாரிகள் சரியில்லை. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. நன்மைகள் விவசாயிக்கு போய்ச் சேருவதில்லை.

அரசு எப்போது விழித்தெழுந்து விவசாயத்தைக் கரை சேர்க்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்னொரு நண்பரும் விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதையும் படியுங்கள்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.



\\கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. \\ இந்த பிரபஞ்சத்தில் உள்ளதில் கண்ணாலோ, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அறியக் கூடியது வெறும் 4 % மட்டுமே, மீதமுள்ள 96 % [ Dark Energy, Dark Matter] நம்மிடமுள்ள எதற்கும் சிக்காது என்று இன்றைய விஞ்ஞானமே சொல்கிறது. நிலைமை இப்படி இருக்க, கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பது நியாயமா சார்??!! அப்ப, எதற்கும் சிக்காத Dark Energy , Dark Matter இருப்பதாக எப்படி சொல்கிறார்கள்? Galaxy - களில் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தை கொண்டு சுற்றி வருகின்றன, Galaxy - யின் மையப் பகுதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைய வேண்டும், ஆனால் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தார்கள், கண்ணுக்குத் தெரிந்து எல்லாத்தையும் கூட்டிப் பார்த்தாலும் கணக்கு வரவில்லை, ஆகையால் Dark Matter இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். ஆக, நேரடியாக 'பார்க்க' முடியாவிட்டாலும், விளைவை வைத்து பின்னால் சென்று அதற்க்கான root cause கண்டு பிடிப்பதும் அறிவியல்தான். அப்படியானால், இங்கே கடவுள் இருப்பதாக முடிவுக்கு வருவது எதை வைத்து என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒன்று செய்யுங்கள், ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அவர்கள் எல்லோரிடமும் காட்டி இதை யாரும் செய்யவில்லை தானாகவே களிமண் மீது நெருப்பு பிடித்து பானையாகி விட்டது என்று சொல்லுங்கள். லட்சம் பேரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஒருத்தராவது, [அவர் மனநிலை தவறியவராக இருக்கக் கூடாது] நீங்கள் சொல்வதை நம்புகிறாரா என்று பாருங்கள். மண் சட்டியின் Complexity எவ்வளவு என்று பாருங்கள், அப்படியே மனிதனின் கண்கள், இதயம், கிட்னி, மூளை இதெல்லாம் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது, செயல் படுகிறது என்று பாருங்கள், அவற்றின் Complexity யையும் பாருங்கள். ஒரு மண் சட்டியே தானாக வந்ததாக யாரும் நம்பவில்லை அதன் பின்னால் ஒரு குயவன் இருந்தே தீருவான் என்றால் இவ்வளவு Complexity யையும் கொண்ட உடலுறுப்புகள் தானாக வருமா, அவை ஒருங்கிணைத்து செயல் படுமா, இவற்றின் பின்னால் யாரும் இருக்க வேண்டியதில்லையா என்று நீங்களாகவே கேள்வி கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உடலுறுப்புகள் மட்டுமல்ல, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் கூட அதன் complexity அது நீங்கள் வசிக்கும் நகரின் complexity யை விட அதிகம். அணுவில் இருந்து, பேரண்டம் வரைக்கும் ஒவ்வொன்றும் அதிசயம், அற்ப்புதம், தானாக வர வாய்ப்பே இல்லை. படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான். It is as simple as that.
===================================================================


மேலே உள்ளது நண்பர் ஜெயதேவ் தாஸ் அவர்கள் என்னுடைய "கடவுள் இருக்கிறாரா இல்லையா" என்ற பதிவிற்குப் போட்ட பின்னூட்டம். இதில் நல்ல கருத்துகள் இருப்பதால் அது பின்னூட்டத்தில் மட்டுமே இருந்தால் பலருடைய கவனத்திற்கு வராது என்பதால் ஒரு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தத்துவ விசாரணை அதாவது ஆராய்ச்சிக்கு என்றும் முடிவு இல்லை.

நன்றி, வணக்கம்.

திங்கள், 30 ஜூலை, 2012

நன்றியுரை.



அன்புடையீர்,

ஒரு வார காலத்திற்கு என்னை பதிவுலக நட்சத்திரமாக மாற்றிய தமிழ்மண நட்சத்திரப் பதிவுகளின் நிர்வாகிகளுக்கும், குறிப்பாக திரு. சங்கரபாண்டி அவர்களுக்கும், இந்த தகுதிக்கு என்னை முன்னிலைப்படுத்திய நண்பர் கோவி. கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நடசத்திரப் பதிவுகளுக்குப் பெருவாரியாக வந்து ஆக்கபூர்வமான பின்னூட்டமிட்டவர்களுக்கும், வாழ்த்து கூறியவர்களுக்கும், உற்சாகப்படுத்தியவர்களுக்கும், பார்வையிட்டவர்களுக்கும், திரட்டிகளில் ஓட்டுப் போட்டவர்களுக்கும் நான் மிகுந்த கடன்பட்டிருக்கிறேன். இக்கடனை எவ்வாறு தீர்ப்பேன் என்ற எண்ணம் என்னை ஒருவித குற்ற உணர்விற்குத் தள்ளியிருக்கிறது.

என் வயதின் காரணமாகவும், உடல், மன நிலை காரணமாகவும் என்னால் அதிகமான பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட முடிவதில்லை. ஆகவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கம்பன் காட்டிய  இலங்கை வேந்தன் போல் கலங்குகிறேன். நண்பர்கள் இந்நிலைக்காக என்னை மன்னிக்கவேண்டும்.

என்னுடைய இந்த வாரப் பதிவுகள் நட்சத்திரப் பதிவுகளின் தரத்தை எட்டாமல் இருந்திருக்கலாம். அதற்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னால் நான் எழுதியவற்றைத் திரும்பவும் படித்து மெருகேற்ற முடிவதில்லை. என் சோம்பேறித்தனம்தான் அதற்கு முக்கிய காரணம். அதற்காக தமிழ்மண நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தவிர, என்னால் விரிவாகவும் எழுத முடிவதில்லை. சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்ற நன்னூல் சூத்திரம் என் ஆழ்மனத்தில் பதிவாகியிருப்பதே இதற்குக் காரணம். ஆகவே என்னுடைய இந்த நட்சத்திரப் பதிவுகள் அனைத்தும் சுருக்கமாகவே அமைந்து விட்டன. சில சமயம் அவை திடீரென்று முடிந்து விட்ட மாதிரியோ அல்லது குறையுடன் முடிந்து விட்ட மாதிரியோ கூடத் தோன்றலாம். இது என்னுடைய பலகீனம். இதைப் பொறுத்துக்கொண்டு என்னை உற்சாகப்படுத்திய அத்துணை நல்ல நெஞ்சங்களுக்கும் மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இந்த வாய்ப்பை தமிழ் மணமும் பதிவுலகமும் எனக்களித்த பெரும் பேறாகக் கருதுகிறேன். இனிமேல் நான் எழுதுவது படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்ற உணர்வை இந்த வாய்ப்பு என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. இனி வரும் பதிவுகளில் இந்த உணர்வை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

நன்றி, வணக்கம்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

பதிவுகளின் பயன்

.
பல்லாயிரக்கணக்கானவர்கள் பதிவு எழுதுகிறார்கள். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பல விதமான கருத்துகள் எழுதப்படுகின்றன. இவைகளை எழுதுபவர்களுக்கோ அல்லது படிப்பவர்களுக்கோ இந்தப் பதிவுகளினால் என்ன பயன் என்று சிறிது சிந்திப்போம்.

பதிவு எழுத வந்தவர்கள் பெரும்பாலும் யாரையாவது பார்த்துத்தான் பதிவுலகத்திற்குள் வந்திருப்பார்கள். இதில் கூகுளின் பங்கு மகத்தானது. அவர்கள் இந்த வசதியைக் கொடுக்காவிடில் பதிவுலகம் இவ்வளவு வளர்ந்திருக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருந்திருக்க முடியும்.

இரண்டாவது எழுதுபவர்களின் கற்பனைக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. அவர்களின் எழுத்துத் திறமையை உலகிற்குக் காட்ட ஒரு வாய்ப்பாக அமைகின்றது. மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை. அவனுக்கு உணர்ச்சி பூர்வமான தேவைகளும் இருக்கின்றன. அவைகளில் ஒன்று தன் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் என்பது. இந்த தேவையை பதிவுகள் நல்ல முறையில் பூர்த்தி செய்கின்றது. அதனால்தான் பதிவுகள் பிரபலமாக இருக்கின்றன.

ஆனால் நாம் எல்லோரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பதிவில் எழுதப்படும் கருத்துகள் எவ்வகையிலாவது படிப்பவர்களுக்கு உதவ வேண்டும். நகைச்சுவைப் பதிவு மனதை சந்தாஷப்படுத்தும். பயணப் பதிவுகள், நாமே அந்த இடங்ளுக்குப் போன உணர்வைக்கொடுக்கும். கதைகள் மனதை வருடிக்கொடுக்கும். ஆன்மீகப் பதிவுகள் கோவில்களுக்குப் போன திருப்தியைத் தரும்.

இவ்வாறு பலதரப்பட்ட பதிவுகள் ஏதாவது ஒரு வகையில் படிப்பவர்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கின்றன. ஆனால் சில பதிவுகள் படிப்பவர்களின் மனதைக் கெடுக்கும் விதமாகவோ அல்லது எதற்கும் உதவாத தகவல்களையோ தருகின்றன. அவ்வாறு எழுதுபவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும். நம் பதிவில் எழுதும் சிந்தனை மக்களுக்கு ஏதாவது வகையில் உதவுமா, இல்லையென்றால் அப்படிப்பட்ட பதிவுகளை எழுத தயங்க வேண்டும்.

தவிர, பதிவில் ஒரு சிந்தனை மக்கள் முன் வைக்கப்பட்டால் படிப்பவர்கள் அதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாகப் போடவேண்டும். பதிவுகள் ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக அமைய வேண்டும். அப்போதுதான் பதிவுகளின் முழுப் பயனும் கிடைக்கும். இன்றோ பின்னூட்டங்கள் வெறும் முகஸ்துதிகளாக இருக்கின்றனவே தவிர, ஆக்கபூர்வமான கருத்துகளாக இல்லையென்பது வருத்தத்திற்குரியது.

பதிவர்களின் சந்திப்பில் இத்தகைய கருத்துக்ளை விவாதித்தால் பதிவுலகம் ஒரு பயனுள்ள சக்தியாக உருவெடுக்கும் என்பது என் கருத்து. பதிவர்களே, சிந்தியுங்கள்.

சனி, 28 ஜூலை, 2012

ஆண்களுக்கும் அலங்காரம் தேவையா?



“ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழி எல்லோரும் அறிந்ததே. இந்தப் பழமொழி காலாவதி ஆகிவிட்டது. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று நன்னூல் அணிந்துரையில் படித்திருக்கிறேன். அப்படி இன்று “ஆள் பாதி அலங்காரம் பாதி” என்று சொல்லவேண்டிய நிலை உருவாகிவிட்டது.

பெண்கள் அலங்காரப் பிரியைகள் என்பது காலம் காலமாகத் தெரிந்த நடைமுறை உண்மை. முன்பு கல்யாணப் பெண்ணிற்கு அலங்காரம் செய்வார்கள். உறவுகளுக்குள்ளேயோ அல்லது தோழிகள் வட்டத்திலோ, அலங்காரம் செய்யும் திறமை சிலருக்கு இருக்கும். அவர்களைக் கொண்டு மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்வார்கள்.

அலங்காரம் என்றால் ஜடை அலங்காரம் ஒன்றுதான் பிரதானமாய் இருக்கும். பூக்காரர் ஜடை அலங்காரத்திற்கு என்று ஸ்பெஷலாய் ஒரு பூக்கோர்வை கொண்டு வந்திருப்பார். அதை ஜடையில் வைத்து கட்டிவிட்டால் கூந்தல் அலங்காரம் முடிந்தது. பிறகு நெற்றிச்சுட்டி, ஜடை பில்லை, மற்ற நகைகளைப் போட்டுவிட்டால் மணப்பெண் அலங்காரம் முடிந்து விடும்.

கல்யாணத்திற்கு வரும் பெண்கள் இருப்பதில் ஒரு நல்ல சீலையைக் கட்டிக்கொண்டு கொஞ்சம் தலைக்குப் பூ வைத்துக்கொண்டு வருவார்கள். ஆண்கள் பெரும்பாலும் வீட்டில் துவைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு தோளில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு வருவார்கள். மேல் சட்டை போடுபவர்கள் மிகக் குறைவு.

காலம் மாறிக்கொண்டு வருகிறது. மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய தொழில்முறை அலங்காரிகள் தோன்றி பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போது கல்யாணப் பெண்ணின் தாயார் கூட அலங்காரம் செய்து கொள்கிறாள். சில சமயங்களில் மணப்பெண் யார், மணப்பெண்ணின் தாயார் யார் என்ற சந்தேகம் கூட வந்து விடுகிறது. மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களும், தோழிகளும் கூட அலங்காரம் செய்து கொண்டுதான் கல்யாணத்திற்கு வருகிறார்கள்.

சுப விசேஷங்கள் நடக்கும் இடங்களுக்கு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வரக்கூடாது என்பது சம்பிரதாயம். அந்த சம்பிரதாயங்கள் எல்லாம் காற்றோடு போய் வெகு காலம் ஆகிவிட்டது. தலையை விரித்துப் போடுவதுதான் இன்றைய நாகரிகம். மணப்பெண்ணே கூட அப்படித்தான் அலங்காரம் செய்து கொள்கிறாள்.

இத்துடன் இந்தக் கூத்து முடிந்தால் பரவாயில்லை என்று சமாதானமடைந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் துக்க வீட்டிற்கு வருபவர்கள் வரும் கோலத்தைப் பார்த்தால் வயித்தெரிச்சல்தான் வரும். பழைய காலத்தில் துக்க சேதி கேட்டால் கட்டியிருக்கும் புடவையுடன் பெண்கள் வந்து விடுவார்கள். நெற்றியில் இட்டிருக்கும் குங்குமத்தை அழித்து விடுவார்கள். இன்று துக்க வீட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்களா அல்லது ஏதாவது கல்யாணத்திற்குப் போய்விட்டு அப்படியே வந்து விட்டார்களா என்ற சந்தேகம் நிச்சயமாய்த் தோன்றும்.

பெண்களை விட்டு விடுவோம். இந்த ஆண்கள் பண்ணும் அலம்பல்கள் இருக்கிறதே அதை நேரில் பார்த்தால்தான் நம்புவீர்கள். துவைத்த வேஷ்டி சட்டையோடு கல்யாணத்திற்கு வந்த காலம் மலையேறிப்போய்விட்டது. அப்படி யாராவது கல்யாணத்திற்கு வந்தால் அவர்களை சமையல்காரன் என்று கருதி பின் வாசலுக்குப் போகச் சொல்லுவார்கள். “ராம்ராஜ்” காரன் வேஷ்டி சட்டை கொண்டு வந்தாலும் வந்தான், ஜனங்கள் முழுவதுமாக மாறிப்போய் விட்டார்கள்.

கல்யாண வீட்டிற்கு வரும் பெரும்பாலானோர் வெள்ளை வேட்டி சட்டைதான் போட்டுக்கொண்டு வருகிறார்கள். தலைக்கு (கூடவே மீசைக்கும்) டை அடிக்கத் தவறுவதில்லை. வேஷ்டி, சட்டை கஞ்சி போட்டு இஸ்திரி போட்டிருக்கவேண்டும் என்பது எழுதாத சட்டம். சாதாரண சட்டை வேட்டி போட்டுக்கொண்டு போகிறவர்களுக்கு யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவர்களுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடும்.
இப்போது என்ன நடக்கிறதென்றால் துக்க வீட்டுகளுக்கும் இதே மாதிரிதான் உடை உடுத்துகிறார்கள். அங்கும் இதே ராம்ராஜ் வேட்டி, சட்டைதான். என்ன வித்தியாசம் என்றால் மேக்கப் கொஞ்சம் குறைவாக இருக்கும்.

ஆண்களுக்கும் மேக்கப் போட கடைகள் வந்துவிட்டன என்ற விபரம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்னும் ஐந்து வருடங்களில் கல்யாணத்திற்குப் போகிறவர்களும் துக்கத்திற்குப் போகிறவர்களும் இந்த அலங்கார நிலையங்களுக்குப் போய்விட்டுத்தான் போவார்கள்.

இந்த மேக்கப் தொழிலுக்கு நல்ல வளமான எதிர்காலம் இருக்கிறபடியால் உங்கள் வாரிசுகளை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை அமையும். கார், பங்களா என்று வசதியாக வாழலாம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?



இந்தக் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருகின்றது. ஆனால் நேரடியான பதில்தான் இல்லை. முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் கடவுளை நம்புகிறவன். தினமும் காலை குளித்து முடித்தவுடன் கடவுள்கள் படங்களுக்கு முன் நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசுகிறவன். ஆனாலும் இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கிறது.

சூரியன் இருக்கிறானா, சந்திரன் இருக்கிறானா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. அவை கண்ணுக்கு முன்னால் தெரிகின்றன. அவைகளின் செயல்களை உணருகிறோம். ஆகவே அவைகளின் இருப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆனால் கடவுள் அப்படியில்லை. கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பார்த்தாகச் சொல்பவர்கள் ஒன்று பொய்யர்கள் அல்லது மனப்பிராந்தி பிடித்தவர்கள்.

அப்படியானால் கடவுள் என்ற ஒரு தத்துவம் எப்படி உருவாகியது? இது மிகவும் ஆராய வேண்டிய கேள்வி. கடவுளை உருவாக்கியவர்கள் யார்? ஏன் உருவாக்கினார்கள்? அது மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்க்கமான பதிலை இந்த சிறு பதிவில் முடிக்க முடியாது. தவிர அந்த அளவிற்கு எனக்கு ஞானமும் இல்லை.

ஆனால் நான் ஒரு சராசரி அறிவுள்ள ஒரு மனிதன். பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல ஆன்மீகப் பிரங்கங்களைக் கேட்டிருக்கிறேன். பல சாமியார்களின் நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலில் விழுந்தும் இருக்கிறேன். இந்த பின்புலத்தில் என் மனதில் தோன்றும் கேள்விகளையும் அதன் பதில்களாக என் மனதில் தோன்றும் எண்ணங்களையும்தான் இங்கே பகிர்கிறேன்.
ஆதி மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்ற விவாதத்தில் நம்பிக்கைதான் ஆதாரமே தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. இன்றும், கடவுளைக் காட்ட முடியுமா என்றால் அது அவரவர் நம்புக்கையின்பாற்பட்டது என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கடவுளைக் காட்டுவார் யாரும் இல்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் ஆகத்தானே இருந்திருக்கவேண்டும்? ஏன் இந்துக்களுக்கு ஒரு கடவுள் (ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று இருக்கிறார். ஆதியில் ஒரு மனிதனிலிருந்துதானே மற்ற எல்லோரும் உற்பத்தியானார்கள்? அப்போது முதல் மனிதனை உண்டாக்கிய கடவுள் ஒருவர்தானே இன்று வரையில் இருக்கவேண்டும்? ஏன், எப்படி இத்தனை கடவுள்கள் உண்டானார்கள்?

ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரவர்கள் தங்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப கடவுள்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதுதான் முழுமுதற்கடவுள் என்று நம்பி வழிபட்டார்கள். தங்களின் மனம் சலனமடையும்போது ஒரு ஊன்றுகோலாக கடவுளைப் பயன்படுத்தினார்கள். இன்னும் வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?

அப்படி கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்புகிறார்களே அவர்களைப்போல் முட்டாள்கள் யாராகிலும் உண்டா? கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்.

வெள்ளி, 27 ஜூலை, 2012

வாழ்வின் நோக்கம் என்ன?



நாம் பிறந்தது ஏன் என்பது நமக்குத் தெரியாத ஒரு செயல். ஆனாலும் பிறந்து, வளர்ந்து கல்வி கற்று, வேலை தேடி, மணம் புரிந்து, குழந்தைகள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சூழ்நிலைகளின் வேறுபாடுகளினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் வாழ்கிறோம். ஆனாலும் மனிதன் வாழ்வதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்றால் சரியான பதில் எதுவும் சொல்லமுடிவதில்லை.

நாம் பிறந்து ஓரளவு அறிவு பெற்றவுடன் சிந்திக்கத் தொடங்குகிறோம். இந்நிலையில் நம் சிந்தனைகள் நாம் பழகும் மனிதர்களின் சிந்தனைகளை ஒட்டியே இருக்கிறது. குறிப்பாக நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோரின் எண்ணங்களையே நாமும் பிரதிபலிக்கிறோம். இவர்கள் நமக்கு காட்டும் வழி என்ன? நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல வேலை தேடிக்கொள்ளவேண்டும், கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நிலைபெறவேண்டும், என்பவைதான். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் வழி காட்டுதல் இவ்வளவே.

இவ்வாறு ஒரு சராசரி வாழ்வு வாழ்வதில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. உங்கள் பெற்றோர்களும் உறவினர்களும் உங்களை மரியாதையுடன் பார்க்கிறார்கள். உங்கள் மனைவியும் மக்களும் இங்களைப் பற்றி பெருமை கொள்கிறார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டிய அங்கீகாரங்கள் இவ்வளவே. ஏறக்குறைய செம்மறியாட்டு மந்தையில் ஒரு ஆடாக மனிதன் ஆகிவிடுகிறான்.

இதை விட்டு நீங்கள் வேறு வழியில் போக முயற்சித்தால் சமூகம் உங்களை விடுவதில்லை. அதை எதிர்த்து நீங்கள் செயல்பட்டால் உங்களை பைத்தியம் என்று பெயர் சூட்டி ஒதுக்கி விடுவார்கள். இந்த சூழ்நிலையை மீறி சிலர் செயல்படுகிறார்கள். அவர்கள்தான் அரசியல் தலைவர்களாக, சமூக சீர்திருத்த வாதிகளாக, பெரிய தொழிலதிபர்களாக, பெரிய வியாபாரிகளாக உருவாகிறார்கள். அவர்கள் அவ்வாறு உருவெடுக்க உதவுவது அவர்களின் மனோபாவமும் சூழ்நிலைகளும் ஆகும். எல்லோராலும் அவ்வாறு உருவாக முடியாது.

அப்படி உருவானவர்களின் கொள்கைகள் நியாயமானதாகவே இருக்கவேண்டும் என்ற சட்டம் இல்லை. பெரும்பாலாவர்கள் குறுக்கு வழிகளையே கடைப்பிடிக்கிறார்கள். நியாய அநியாயங்கள் அவர்களுக்கு இல்லை. எப்படியும் தாங்கள் மேல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக கொலைகளும் செய்வார்கள். இந்த வழி சாதாரண மக்களுக்கு உகந்ததல்ல.
அப்படியானால் என்னதான் செய்யலாம் என்று யோசித்தபோது கிடைத்த சில கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

  1.   உண்மையாக இருங்கள். உங்கள் மனச்சாட்சி சொல்வதைக் கேளுங்கள்.
  2.   மற்றவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
  3.   அன்பாக இருங்கள். மற்றவர்கள் கஷ்டங்களைக் கண்டு மனம் உருகுங்கள். அக்கஷ்டங்களை உங்களால் முடிந்த அளவு குறைக்கப் பாடுபடுங்கள்.
  4.   தொழிலில் நேர்மையாக இருங்கள்.

எல்லோரும் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்தால், சமூகம் கொஞ்சமாவது மாறும் என்று நம்புகிறேன்.


வியாழன், 26 ஜூலை, 2012

விளையாட்டுகளும் போட்டிகளும்.



மனிதன் ஒரு குழு மிருகம். அதாவது அவன் குழுவாக இருக்க விரும்புபவன். யாருடனும் சேராமல் தனியாக இருப்பவனை எல்லோரும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பார்கள். (என்ன சந்தேகம், மனநோய் பீடித்தவன் என்ற சந்தேகம்தான்).

குழுவாக சேர்ந்து என்ன செய்யமுடியும்? அதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் விளையாட்டுகள். பழங்காலத்திலிருந்தே பல வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டு இருக்கின்றன. 

விளையாட்டுகளுடன் கூடவே அவற்றை வேடிக்கை பார்ப்பதும் ஒரு குழு செயலாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே விளையாட்டு என்றாலே விளையாடுபவர்கள் சிலரும் அதை வேடிக்கை பார்ப்பவர் பலரும் சேர்ந்த செயல்பாடாகவே இருந்து வந்திருக்கிறது.

விளையாட்டுகள் அந்தந்த நாடுகளின் கலாசாரம், கால நிலை, வாழ்க்கை முறைகள் ஆகியவைகளை அனுசரித்தே உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கை முறையான விவசாயத்தை ஒட்டி அமைந்த விளையாட்டாகும். காளைகள் விவசாயத்திற்கு இன்றியமையாதவை. அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவது அவசியமான ஒன்று. அதையே ஒரு வீர விளையாட்டாக அமைத்துக் கொண்டார்கள்.

பல்லாங்குழி, பாண்டி ஆகிய விளையாட்டுகள் சிறுமிகளுக்கு உகந்ததாக அமைந்தன. இந்த விளையாட்டுகளுக்கு எந்த செலவும் இல்லை. எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். குழுவாகப் பொழுது போக்குவதற்கு வசதியாக இருந்தன.

சாதாரணமாக விளையாடக்கூடிய விளையாட்டுகள் கால ஓட்டத்தில் வளர்ச்சி பெற்று பல சட்ட திட்டங்களுடன் வளர்ச்சியடைந்தன. கபடி என்று சொல்லப்படும் விளையாட்டு கிராமத்தில் பத்து பேர் கூடினால் விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்த காலம் மாறி இன்று அது ஒரு தேசிய விளையாட்டாக பல சட்டதிட்டங்களுடன் மாறி விட்டது.

பொதுவாக எல்லா விளையாட்டுகளும் உடலுக்கு ஒரு பயிற்சியாகவே இருந்து வந்திருக்கின்றன. இங்கிலாந்து நாடு ஒரு குளிர்ப் பிரதேசம். வெயிலைக் காண்பதே அபூர்வம். அந்த நாட்டில் வெய்யில் வரும்போது குளிர் காய்வதற்காக ஏற்பட்ட விளையாட்டு கிரிக்கெட். அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விளையாடுவார்கள். விளையாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் வெய்யிலின் பயன் கிடைத்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தது. இதே மாதிரிதான் கோல்ப்ஃ என்ற விளையாட்டும். ஒரு பந்தை நாற் முழுவதும் தட்டிக்கொண்டே போவது.

குளிர் பிரதேசத்துக்காரன்  வெயில் காய்வதற்காக ஏற்படுத்திய விளையாட்டுகளை வெயில் பிரதேசங்களில் எதற்காக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிர்களில் ஒன்று. தவிர, நாள் கணக்கில் வெய்யிலில் நின்று கொண்டிருப்பது உஷ்ணப் பிரதேசங்களில் முடியாததும் தேவையில்லாததும் ஆகும்.

நம் நாட்டுக்கு உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான். ஒரு காலத்தில் உலக அரங்கில் நெம்பர் ஒன்றாக இருந்த நம் ஹாக்கி டீம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. காரணம் நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும் கொடுக்காததுதான்.

விளையாட்டு வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் அதில் ஜெயிப்பவர் கெட்டிக்காரர் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. இதனால் விளையாட்டு என்பது குழுவாகப் போட்டி போடுவதுடன் நில்லாமல் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே கெட்டிக்காரர்கள் என்று பேசப்பட்டார்கள். நாளாக நாளாக இந்த விளையாட்டுகளில் யார் ஜெயிப்பார்கள் என்று பணையம் கட்டுவதும் தொடங்கியது.

கிரிக்கெட்டில் இது பெரும் பூதமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். எல்லா விளையாட்டுகளிலும் இந்த சூதாட்டம் பரவி இன்று சூதாட்டம் இல்லாத விளையாட்டே இல்லை என்று ஆகிப்போனது. 

மனித நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட விளையாட்டுகள் இவ்வாறு சூதாட்டமாக மாறிப்போனது பெரிய கலாச்சார சீர்கேடு. இந்த நிலை மாறுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதிலளிக்கவேண்டும்.

புதன், 25 ஜூலை, 2012

இந்திய தேசியக் கலாச்சாரம்



ஒவ்வொரு நாட்டிற்கும், ஏன் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனி கலாசாரங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் வெள்ளைக்காரர்கள் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். பொது இடங்களிலோ, பயண ஊர்திகளிலோ, மற்றவர்களிடம் அநாவசியமாகப் பேசமாட்டார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் வலியப் போய் பேசுவதை அநாகரிகமாக கருதுவார்கள். எங்கு சென்றாலும் தன்னுடைய முறை வரும் வரையிலும் காத்திருப்பார்கள். அடுத்தவனை முந்திக்கொண்டு செல்லமாட்டார்கள்.

தமிழர்களின் குணமே வேறு. அடுத்தவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவன் காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு தன்னைப்பற்றி சிந்தித்தான் என்றால் அவன் எவ்வளவோ முன்னேறியிருப்பான். கேரளாக்கரர்களை எடுத்துக்கொண்டால் உலகின் எந்த மூலையில் கொண்டு போய் விட்டாலும் அவன் அங்கும் ஒரு பிழைக்கும் வழியைத் தேடிக்கொள்வான். பஞ்சாபியர்கள் எதையும் துணிந்து செய்வார்கள்.

ஜப்பான்காரர்கள் உழைப்பிற்குப் பேர் போனவர்கள். எந்த சங்கடம் வந்தாலும் அதை சகித்துக் கொண்டு, மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யும் பண்புள்ளவர்கள். ஐரோப்பியர்கள் எதையும் திட்டமிட்டு ஒரு ஒழுங்குடன் செயல்படுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரமாக எதையும் செய்யாதவர்கள்.

இந்த வகையில் இந்தியர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அவர்களை எந்தக் காரியத்திலும் முழுதாக நம்ப முடியாது. கையூட்டு கொடுத்தால் எந்த இந்தியனையும் விலைக்கு வாங்கி விடலாம். இத்தகைய எண்ணங்களே அயல் நாட்டில் இந்தியர்களைப் பற்றி பேசப்படுகிறது.

இதற்குக் காரணம் அவர்களுடைய நேரடி அனுபவங்களே ஆகும். மிளகாய்த்தூள் ஏற்றுமதிக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது. சில நாட்கள் ஒழுங்காக அனுப்பினார்கள். பிறகு செங்கல்லை நன்கு பொடியாக்கி மிளகாய்த் தூளுடன் கலப்படம் செய்து அனுப்பினார்கள். ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டது.

“வின்கா ரோசியா” என்று அழைக்கப்படும் சுடுகாட்டு மல்லி எனப்படும் செடி மருந்து தயாரிப்புக்காக ஏற்றுமதி ஆர்டர் கொடுத்தார்கள். சுடுகாட்டு மல்லியுடன் பல செடிகளையும் சேர்த்து அனுப்பி அந்த ஆர்டரைப் பாழாக்கினார்கள். திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் பல மூடுவிழா நடத்தியதற்குக் காரணம் நம்பிக்கையின்மைதான்.

சமீபத்தில் மாருதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தகராறுக்கு காரணம் இந்தியர்களின் அதீத உணர்ச்சி வசப்படும் தன்மைதான். இது மாதிரி பல நிகழ்ச்சிகள் இந்தியத் தொழில் துறையில் தினமும் நடக்கின்றன. பீகார் சுரங்கத் தொழில் மாஃபியாவின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறது. வெளிநாட்டுக்காரன் எந்த நம்பிக்கையில் இங்கு முதலீடு செய்ய வருவான்.

அப்துல் கலாம் கண்ட வல்லரசுக் கனவு எப்பொழுது பலிக்கப்போகிறதோ?