செவ்வாய், 18 மே, 2010

பூனைத்தோல் கம்பெனி




பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரையை படித்தேன். இன்று ஒரு வலைத்தளத்தைப் பார்த்தவுடன் அந்தக்கட்டுரை நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி (???!!!) அடைகிறேன்.

ஒரு நாள் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் வெளிவந்தது.

பூனைத்தோல் கம்பெனி.

ஒரு பங்கு ஒரு டாலர் மட்டுமே. உங்கள் பங்க்குகளுக்கு முந்துங்கள்.

நாங்கள் ஒரு புது கம்பெனி ஆரம்பித்திருக்கிறோம். அமெரிக்காவிலும் ஐரோப்பா கண்டத்திலும் தற்போது பூனைத்தோல் அங்கிகளும் அலங்காரப்பொருள்களும் மிக பிராபல்யமாக விற்பனையாகின்றன. ஆனால் அவைகளை போதுமான அளவில் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான பூனைத்தோல் கிடைப்பதில்லை. இந்தக்குறையை நீக்கும்பொருட்டு நாங்கள் ஒரு பூனைத்தோல் கம்பெனி ஆரம்பித்துள்ளோம்.

வருடத்திற்கு ஒரு கோடி (10 பில்லியன்) பூனைத்தோல் தேவைப்படுகின்றது. அதற்காக நாங்கள் ஒரு பூனைப்பண்ணை ஆரம்பிக்கப்போகிறோம். இந்தப்பண்ணையில் பதினொரு லட்சம் பூனைகள் வளர்க்கப்போகிறோம். இதில் ஒரு லட்சம் பூனைகள் ஆண் பூனைகள். மீதி பெண் பூனைகள். ஒரு பெண் பூனை 6 மாதத்தில் இரண்டு குட்டிகள் போடும். இதில் சராசரியாக ஒன்று ஆணும் ஒன்று பெண்ணாகவும் இருக்கும். தாய்பூனையும் குட்டிப்பூனையும் அடுத்த 6 மாதத்தில் 4 குட்டிகள் போடும். ஆகக்கூடி ஒரு பெண் பூனை ஒரு வருடத்தில் 7 பூனைகளாகப் பெருகி விடும். பத்து லட்சம் பூனைகள் அந்த வருட முடிவில் 70 லட்சம் பூனைகளாக பெருகிவிடும். 10 லட்சம் பெண் பூனைகளை வைத்துக்கொண்டு மீதி 60 லட்சம் பூனைகளைத்தோலுரித்து ஒரு தோல் 5 டாலர் என்று விற்றால் 300 லட்சம் டாலர் கிடைக்கும்.



பூனைகளுக்கு சாப்பாடு வேண்டுமல்லவா? அதற்காக பக்கத்திலேயே ஒரு எலிப்பண்ணை ஆரம்பிக்கப்படும். 5 கோடி எலிகள் வளர்க்கப்படும். எலிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 10 குட்டிகள் போடும். இவைகள் பூனைகளுக்கு தீனியாக போடப்படும்.

எலிகளுக்கு தீனி வேண்டுமல்லவா? அதற்காக பூனைகளின் தோலை உறித்தபிறகு இருக்கும் கழிவுகளை பதப்படுத்தி எலிகளுக்கு உணவாக கொடுக்கப்படும்.

இப்படியாக மிகக்குறைந்த செலவில் மிக அதிக லாபம் ஈட்டப்போகிறோம். அந்த லாபத்தில் 10 பர்சென்ட் மட்டும் கம்பெனி சிலவுகளுக்காக வைத்துக்கொண்டு மீதி லாபம் முழுவதும் பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். ஒரு பங்கின் விலை ஓரு டாலர் மட்டுமே. உங்கள் தேவைகளுக்கு முந்துங்கள். பதிவர்களுக்கு சலுகை வழங்கப்படும்.

இப்படியாக ஒரு விளம்பரம் வந்ததாக ஒரு கற்பனைக்கதை.

இதை மிஞ்சும் வகையில் இன்று ஒரு பதிவில் ஒரு விளம்பரம் பார்த்தேன். இதுவும் அமெரிக்க விளம்பரம்தான். அவருடைய பதிவில் இருக்கும் பிக்சல்களை விற்கிறாராம். ஒரு பிக்சல் ஒரு டாலர் மட்டுமே. ரொம்ப சலீசு. தேவைப்படுபவர்கள் சீக்கிரமே வாங்கிக்கொள்ள வேண்டுமாம். பிக்சல்கள் தீர்ந்துவிட்டால் பிறகு வருத்தப்படக்கூடாது. இந்ந விளம்பரத்தைப்பார்க்காதவர்கள் உடனே பார்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

7 கருத்துகள்:

  1. விளம்பரத்தைக்கண்டு பிடிக்க முடியாதவர்கள்

    http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/05/blog-post_17.html

    இந்தப்பதிவின் முதல் பின்னூட்டத்தைப்பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  2. நானும் அந்த பின்னூட்டம் பார்த்துவிட்டு அந்த வலைத்தளம் சென்றுபார்த்தேன்.
    சிரிப்பாய் வந்தது. பல வலைதள "முற்போக்கு சிந்தனாவாதிகள் " எங்கே கிடைக்காமல் போய்விடுமோ
    என்ற பயத்தில் "மனை " வாங்கி போட்டுவிட்டார்கள். பின்னாளில் விற்றால் முன்று நான்கு பங்கு
    லாபம் கிடைக்கும் அல்லவா. அல்பங்கள்!

    பதிலளிநீக்கு
  3. என்னங்க இப்படி சூப்பர் ஹடியவெல்லாம் கொடுக்கிறீங்க. பாத்துட்டேயிருங்க, நம்ம ஊர்லெயும் இந்த மாதிரி கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சுடுவாங்க, பாருங்க

    பதிலளிநீக்கு
  4. நானும் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன்.101 பதிவர்களுக்கு இலவசம் என்று சொல்லியிருந்தார்கள்.

    நானும் ரவுடிதான் என்று அங்கே போய் பார்த்தேன். பணம் என்றதும் ஓட்டி வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. ரிஷபன் Meena Said:

    //நானும் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன்.101 பதிவர்களுக்கு இலவசம் என்று சொல்லியிருந்தார்கள்.//

    எனக்கு ஒண்ணு புரியல. பிளாக் போடறதுக்கு எடம் கொடுக்கற மகராசன் சும்மா கொடுக்கறான். அதை வாங்கி இவங்க காசு பண்ணலாம்னு நெனைக்கிறாங்களே, எடம் கொடுத்தவன் சும்மாவா இருப்பான்?

    பதிலளிநீக்கு