சனி, 19 பிப்ரவரி, 2011

முதுமையை எதிர்கொள்ள பத்து அம்சத்திட்டம்.



முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையைச் சந்திக்கத் தகுந்த திட்டமிடல் இருந்தால் முதுமையையும் சந்தோஷமாக அனுபவிக்கலாம். அதற்கு உதவும் சில கருத்துக்கள்.

1.   முதுமையில் பணம் மிகவும் அவசியம். வாழ்நாளில் சேமித்தது எல்லாவற்றையும் மக்களுக்காக செலவழித்த பிறகு, மக்கள் பெற்றோரை புறக்கணிக்கும் சம்பவங்கள் ஏராளம்.


2.   உங்கள் வருமானத்தில் பாதி தொகையில் உங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முடித்துக் கொள்ளவேண்டும். மீதி பாதியைச் சேமித்தால், அதில் பாதி எதிர்பாராத செலவுகளுக்காகத் தேவைப்படும். மீதிப்பாதிதான் உண்மையான சேமிப்பாக அமையும்.


3.   முதியவர்கள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் சேர்த்தவை, பரம்பரையாக வந்த சொத்துக்கள் இவற்றை தமக்குப் பிறகு யார் யாருக்கு எவ்வளவு என்று பிரித்து தெளிவாக உயில் எழுதி, சாட்சிகள் கையொப்பமிட்டு, ரிஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உயிலில் என்ன எழுதியிருக்கிறோம் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரிந்திருப்பது நல்லது.

4.   வங்கியிலிருந்து அதிகத் தொகை எடுத்து வரவேண்டியிருந்தால் நம்பகமான ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்லவும்.


5.   தடுமாற்றமுள்ளவர்கள் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. காலையில் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்திருக்காமல், முதலில் அரை நிமிட நேரமாவது படுக்கையில் உட்கார்ந்த பிறகு மெதுவாக எழுந்து நடக்க வேண்டும்.

6.   வழவழப்பான தரை, பாத்ரூமில் ஈரமான தரை, மார்பிள் தளம் போன்றவற்றால் நிலை தடுமாறி விழும் நிலை தோன்றலாம். டெலிபோன் அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.


7.   உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் இரத்த அழுத்தம் குறையும், எலும்புகள் வலுப்பெறும், மலச்சிக்கல் தோன்றாது. நல்ல தூக்கம் வரும்.

8.   சிலர் மரணபயத்தால் நிலை குலைந்து தவிப்பார்கள். இவர்கள் மனநல மருத்துவரைக் கலந்து தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது. மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


9.   உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.

10. பற்றற்ற வாழ்க்கை வாழப்பழகிக் கொள்ளவேண்டும். தியானம் மூலம் மன அமைதி பெறலாம். சகிப்புத்தன்மை கூடும், உடல் நலம் பாதுகாக்கப் படும்.

22 கருத்துகள்:

  1. //1. முதுமையில் பணம் மிகவும் அவசியம். வாழ்நாளில் சேமித்தது எல்லாவற்றையும் மக்களுக்காக செலவழித்த பிறகு, மக்கள் பெற்றோரை புறக்கணிக்கும் சம்பவங்கள் ஏராளம்

    10. பற்றற்ற வாழ்க்கை வாழப்பழகிக் கொள்ளவேண்டும். தியானம் மூலம் மன அமைதி பெறலாம். சகிப்புத்தன்மை கூடும், உடல் நலம் பாதுகாக்கப் படும்//

    ஒன்றிலிருந்து பத்துக்குள் அனைத்தும் அடக்கம்
    (பணம் பத்தும் செய்யும்)

    பதிலளிநீக்கு
  2. எவரும் சொல்ல இயலாத அறிவுரைகள். எல்லாருக்கும் வேண்டுவது.
    ஒரு தந்தையின் இடத்திலிருந்து இதனை சொல்வது போலவே உள்ளது.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மொத்த தகவல்களில் பற்று இல்லாத வாழ்க்கை முக்கியமானது. ஆசைகள் பெருகாது. சாவு பயம் முக்கியமாக நகர்ந்து போய்விடும். அப்புறம் உணவுப் பழக்கம் அதைவிட முக்கியமானது.

    80 வயதில் அசைவ வெறியர்களை பார்த்துக் கொண்டிருப்பதால் இதை எழுத முடிகின்றது.

    பதிலளிநீக்கு
  4. . பற்றற்ற வாழ்க்கை வாழப்பழகிக் கொள்ளவேண்டும். தியானம் மூலம் மன அமைதி பெறலாம். சகிப்புத்தன்மை கூடும், உடல் நலம் பாதுகாக்கப் படும்//
    மிக மிக அவசியம்.
    அப்போது தான் நிறைய பேருக்குப் பற்றே வர ஆரப்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு. வாழும் முறையிலும் ஒரு மாற்றம் நிகழும் காலகட்டம். குடும்பதினருடனான பழக்கங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் உங்கள் பார்வையில் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. //முதுமையில் பணம் மிகவும் அவசியம். வாழ்நாளில் சேமித்தது எல்லாவற்றையும் மக்களுக்காக செலவழித்த பிறகு, மக்கள் பெற்றோரை புறக்கணிக்கும் சம்பவங்கள் ஏராளம்.


    2. உங்கள் வருமானத்தில் பாதி தொகையில் உங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முடித்துக் கொள்ளவேண்டும். மீதி பாதியைச் சேமித்தால், அதில் பாதி எதிர்பாராத செலவுகளுக்காகத் தேவைப்படும். மீதிப்பாதிதான் உண்மையான சேமிப்பாக அமையும்//

    எல்லோரும் எழுதி வைத்துக்கொள்ளவேண்டியவை..

    பதிலளிநீக்கு
  7. சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.
    நன்றியும் வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  8. நண்பரே, நான் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆழ்ந்து படித்ததில்லை. ஏதாவது நல்ல பதிவுத்தளம் இருந்தால் அதன் சுட்டி கொடுக்க இயலுமா?
    என்று கேட்டிடுந்திர்கள் பின்வரும்தளத்தை பாருங்கள்
    http://www.thanall.com/

    பதிலளிநீக்கு
  9. மிக உபயோகமான தகவல்கள். உங்கள் அனுமதியுடன் சிலர்க்கு இந்த பதிவை அனுப்ப எண்ணுகிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. வருகை தந்து, கருத்துகள் போட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். பாராட்டுதலோடு நின்று விடாமல் நான் கூறியிருக்கும் கருத்துகளையும் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் கண்டிப்பாக உங்களுடைய எதிர்காலம் வளமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் பயனுள்ள பதிவு..

    பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு