செவ்வாய், 29 மார்ச், 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.


சரித்திரம் படித்தவர்கள் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் ரஷ்யப் புரட்சி பற்றியும் படித்திருப்பார்கள். அந்தப் புரட்சிகளின் பின்னணி பற்றியும் நன்கு அறிந்திருப்பார்கள். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி பற்றி எல்லோரும் செய்தித் தாள்களில் படித்துக் கொண்டிருந்தோம்.
சரித்திரம் படிப்பதின் நோக்கமே, நம் முந்தைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்த தவறுகள் என்ன, அந்த தவறுகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு காத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளத்தான். இந்த தத்துவத்தில் யாருக்கும் ஐயப்பாடு இருக்காதென்று நம்புகிறேன்.

எகிப்திய மன்னர் இந்தத் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன். அல்லது தம் மக்கள் ராஜ விசுவாசம் மாற மாட்டார்கள் என்ற மயக்கத்தில் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

ஆனால் நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தத் தத்துவத்தை நன்கு புரிந்தவர்கள். அதாவது மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துள்ளார்கள். மக்களுக்கு வயிறு எப்போது காய்ந்து போகிறதோ அப்போதுதான் புரட்சிக்கான விளை நிலம் உருவாகிறது. பல சமயங்களில் வயிறு நிறைந்திருந்தாலும் அவன் சும்மா இருந்தால் அவன் மனதில் வேண்டாத எண்ணங்கள் தோன்றும். இப்படி பலர் சிந்திக்க ஆரம்பிப்பது நல்லதல்ல. அவர்களை எப்போதும் ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும். ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காது.

அப்படி வைத்திருந்தாலும், இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை. ஆனால் ஒரு நல்ல காலம், அவ்வாறு படித்த சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாவதில்லை. அப்படி ஒன்று இரண்டு உருவாகும்போது அவர்களை எப்படி கையாளவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

இந்த சூழ்நிலையை நிலை நிறுத்தத்தான் இலவசங்கள். கிராமிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை செய்யாமல் காசு கிடைக்கிறது. சலீசாக அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க டி.வி. யும் டாஸ்மாக்கும் இருக்கின்றன. குடிசைமாற்றுத் திட்டத்தின் மூலம் குடியிருக்க வீடு கிடைக்கிறது. இந்த நிலையில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?
ஆகவே இலவசங்களின் நன்மையைப் புரிந்து கொண்டீர்களா? இனியாவது இலவசத்தைக் குறை கூறாமல் அவைகளை வாங்கி அனுபவியுங்கள். வாழ்க இலவசம். வாழ்க குடி மக்கள்!

33 கருத்துகள்:

  1. ஆக தமிழ்நாட்டு மக்களெல்லாரும் சந்தோஷமா இருக்காங்கன்னு சொல்றீங்க!

    பதிலளிநீக்கு
  2. Robin said...
    //ஆக தமிழ்நாட்டு மக்களெல்லாரும் சந்தோஷமா இருக்காங்கன்னு சொல்றீங்க!//

    ஆமாங்க, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கறோமுங்க, அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு!!!

    பதிலளிநீக்கு
  3. இலவசமாக உங்கள் கட்டுரை படித்து பரவசமானேன். ஆனாலும் உங்கள் வலைப்பூவிற்கு வர உழைப்பு தேவைப்பட்டது. அதனால் உழைப்பின் பலத்தினால் கிடைத்த மகிழ்வுதான் உண்மையான மகிழ்வாக எனக்குப் பட்டது.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க இலவசம். வாழ்க டாஸ்மாக் மக்கள்

    பதிலளிநீக்கு
  5. deeps vasan said...

    //இது வஞ்ச புகழ்ச்சி தானே?//

    இத பாருங்க, அத நான் சொல்லல, நீங்கதான் சொல்றீங்க.

    பதிலளிநீக்கு
  6. இனி தேசத்துரோகம் யாரும் செய்ய மாட்டாங்க.

    பதிலளிநீக்கு
  7. ஒருத்தர் ரயிலில் பிரயாணம் பண்றார், அவருக்குப் பக்கத்தில் இன்னொருத்தர் வந்து உட்காருகிறார். பேச்சுக் கொடுத்து நண்பராவது போல நடிக்கிறார். பின்னர் அவருக்கு பிஸ்கட் "முற்றிலும் இலவசமாகக்" கொடுக்கிறார். அதை வாங்கித் தின்றவர் மயக்கமடைகிறார், பின்னர் மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த தங்கச் செயின், மோதிரம், வாட்ச், செல் போன், பையில் வைத்திருந்த ரொக்கப் பணம் எல்லாம் மாயம், நண்பரும் மாயம். [இந்தக் கதைக்கும், உங்கள் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா?]

    பதிலளிநீக்கு
  8. Jayadev Das said...................

    என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க, நான் இனி ரூம் போட்டுல்ல யோசிக்கணும்.கொஞ்சம் டைம் கொடுங்க. நல்ல பதிலா யோசிச்சு குடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!
    ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும்!
    வாழ்க இலவசங்கள்!

    பதிலளிநீக்கு
  10. //இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை.//

    வடிவேலு தி.மு.கவுக்கு காவடி தூக்க ஆரம்பிச்சட்டதால இனிமேல் அவ்வ்வ்வ் போடறதில்லைன்னு முடிவு செஞ்சிருக்கேன்.அதனால சாய்ச்சுப்புட்டிங்களே சொல்லிக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  11. ஜெயதேவ தாஸ் என்னமா விடுகதை போடுகிறார்!!

    பதிலளிநீக்கு
  12. ஒரு மாணவன் தன்னால் படிக்க முடிந்தவரை எந்த இடையூறும் குறிப்பாக பொருளாதார இடையூறு இன்றி படிக்க வைக்க வேண்டிய கடமை யாருடையது?

    அதில் துளிகூட செல்வு கூட வராமல் பார்த்துக்க் கொள்ளவேண்டும் என்று அரசு நினைப்ப்து மக்களை சோமேறியாக்கிவிடும் என்று நினைக்கிறீர்களா?

    குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும் ஐயா?

    ===========================

    பின் குறிப்பு: டாஸ் மாக்கில் எதுவும் இலவசம் கிடையாது

    பதிலளிநீக்கு
  13. வீராங்கன் said...
    //ஒரு மாணவன் தன்னால் படிக்க முடிந்தவரை எந்த இடையூறும் குறிப்பாக பொருளாதார இடையூறு இன்றி படிக்க வைக்க வேண்டிய கடமை யாருடையது?

    அதில் துளிகூட செல்வு கூட வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அரசு நினைப்ப்து மக்களை சோம்பேறியாக்கிவிடும் என்று நினைக்கிறீர்களா?

    குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும் ஐயா?//

    திரு. வீராங்கன், இந்தப் பதிவின் நோக்கத்தை புரிந்து பின்னூட்டம் போட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. இந்த சூழ்நிலை மிகவும் விவாதத் திற்குரியது. நான் பிரச்சினையின் ஒரு நுனியைத்தான் தொட்டிருக்கிறேன். என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை எவ்வாறு முன்னேற்றுவது என்பது ஒரு பெரிய சவால். இலவசங்கள் அந்த சவாலுக்கு துணை புரியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

    "ஒருவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு மீன் கொடுத்தால் அவனுடைய ஒரு நாள் பசி போகும். ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் ஆயுளுக்கும் அவனுக்கு பசி போகும்"
    இந்தக் கருத்துள்ள ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.

    உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். சமூக ஆர்வலர்கள் முயல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. nidurali said...

    //இலவசமாக உங்கள் கட்டுரை படித்து பரவசமானேன். ஆனாலும் உங்கள் வலைப்பூவிற்கு வர உழைப்பு தேவைப்பட்டது. அதனால் உழைப்பின் பலத்தினால் கிடைத்த மகிழ்வுதான் உண்மையான மகிழ்வாக எனக்குப் பட்டது//

    என் பங்கில் ஏதாவது செய்ய வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  15. கட்சி ஆளுங்களுக்குதான சார் முக்காவாசி இலவசம் சென்று அடையுது. நமக்கு கிடைக்க மாட்டேங்குதே?

    பதிலளிநீக்கு
  16. சிவகுமார் ! said...

    //கட்சி ஆளுங்களுக்குதான சார் முக்காவாசி இலவசம் சென்று அடையுது. நமக்கு கிடைக்க மாட்டேங்குதே?//

    சிவகுமார், இலவசத்திட்டங்களில் பல நுட்பமான விஷயங்கள் உள்ளன. நம்மால் அவற்றை முற்றிலுமாகப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.

    பதிலளிநீக்கு
  17. nidurali said...

    //இலவசமாக உங்கள் கட்டுரை படித்து பரவசமானேன். ஆனாலும் உங்கள் வலைப்பூவிற்கு வர உழைப்பு தேவைப்பட்டது. அதனால் உழைப்பின் பலத்தினால் கிடைத்த மகிழ்வுதான் உண்மையான மகிழ்வாக எனக்குப் பட்டது.//

    நீடூரலி, உங்கள் பின்னூட்டத்தின் முழுப்பொருளும் விளங்க இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. உழைப்பில்லாமல் கிடைக்கும் எதுவும் சுவைக்காது. மிகச் சரியாகச் சொன்னீர்கள். உங்கள் தமிழ் வாழ்க.

    பதிலளிநீக்கு
  18. மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். மக்கள் மயக்கத்திலேயே இருந்துவிட்டால் புரட்சி ஏது?

    பதிலளிநீக்கு
  19. bandhu said...

    //மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். மக்கள் மயக்கத்திலேயே இருந்துவிட்டால் புரட்சி ஏது?//

    ரொம்ப விரிவா எழுதறதுக்கு பயமா இருந்துச்சுங்க. இந்த அளவில புரிஞ்சுக்கிறவங்க புரிஞ்சுக்கிட்டும்னு தானுங்க எழுதினனுங்க.

    ஆனா, இதில ஆச்சரியம் என்னன்னா, நம்மாளுங்க இந்த சுளுவ எப்படிக்கண்டு பிடிச்சாங்க அப்படீங்கறதுதானுங்க. அது மட்டுமில்லீங்க, இதுல இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்குங்க. நம்மளுக்கு அதெல்லாம் எதுக்குங்க. பேசாம அரசு டி.வி. ல எதையாச்சும் பாத்துட்டு இருக்க வேண்டியதுதானுங்க.

    பதிலளிநீக்கு
  20. @ராஜ நடராஜன்

    ஹா..ஹா..ஹா.. சும்மா தமாசு சார். [அனாலும் அது நிஜத் தமாசு சார்..!!!]

    பதிலளிநீக்கு
  21. @ வீராங்கன்
    இப்படிப் பின்னி பெடலெடுக்கிறீர்களே நண்பரே!!

    \\ஒரு மாணவன் தன்னால் படிக்க முடிந்தவரை எந்த இடையூறும் குறிப்பாக பொருளாதார இடையூறு இன்றி படிக்க வைக்க வேண்டிய கடமை யாருடையது?
    அதில் துளிகூட செல்வு கூட வராமல் பார்த்துக்க் கொள்ளவேண்டும் என்று அரசு நினைப்ப்து மக்களை சோமேறியாக்கிவிடும் என்று நினைக்கிறீர்களா? \\ குடுத்த காசுக்கு அதிகமாவே கூவுரீங்களே சார். இலவச வண்ணத் தொலைக் காட்சி கொடுப்பது இந்த லட்சியத்தை மனதில் வைத்துதானா என்று நீங்கள் யோசிக்க வேண்டும். இலவச கல்வி என்பது எப்போது செயல்படுத்தப் பட்ட ஒன்று, இந்த ஆட்சியில் அதற்க்கு புதிதாக ஒன்றும் செய்யப் படவில்லை. மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு கொடுக்கப் படும் சலுகைகள் பற்றி இங்கு யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் எல்லாமே இலவசம் என்று போனால் இது நம்மை எங்கு கொண்டு போய் விடும் என்பதுதான் கேள்வி. கை கால் இல்லாதவன், குருடு, ஆதரவற்ற முதியோர், அனாதைக் குழைந்தைகள் என்று அவர்களுக்கு இலவசம் கொடுத்தால் அர்த்தம் உண்டு. உழைத்து சாப்பிட வேண்டிய மக்களுக்கு எல்லோருக்கும் இலவசம் என்று வாரிக் கொடுப்பதன் உள்நோக்கமென்ன?
    \\ குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும்.\\ உலகத்துல தமிழ் நாடு மட்டும்தான் இருக்குதா? மற்ற நாடுகள் எப்படி இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கின்றன? இலவசம் கொடுத்தா? மக்கள் அவர்கள் தேவைகளுக்கு அவர்களே சம்பாதிக்கும் படி செய்யும் அரசு தான் சிறந்த அரசு, அதுதான் உருப்படும், இலவசம் கொடுக்கிறவன், தற்போதைக்குக் கொடுப்பான், என்றென்றைக்கும் கொடுக்க முடியாது, அப்படிக் கொடுத்தால் அதனால் ஏற்ப்படும் மொத்த கடன் இடியும் வாங்கித் தின்றவன் தலை மேல்தான் வட்டியோடு வந்து விழும்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் Dr உங்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  23. they r treating us like beggars!!
    freebies cant make the ppl to sleep for a long period :|

    பதிலளிநீக்கு
  24. முன்னால, இலவசமா அட்வைஸ் தான் கிடைச்சது! இப்ப எல்லாம் கிடைக்குதே! இது எப்பேர்பட்ட முன்னேற்றம்!

    பதிலளிநீக்கு
  25. //"ஒருவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு மீன் கொடுத்தால் அவனுடைய ஒரு நாள் பசி போகும். ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் ஆயுளுக்கும் அவனுக்கு பசி போகும்"
    இந்தக் கருத்துள்ள ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.//



    ஒரு தூண்டிலில் ஒரு மீன் பிடிப்பதை கற்றுக் கொண்டவுடன் அவனுக்கு உதவுவதை நிறுத்தாமல், ஒரு சுண்டுதலில் ஓராயிரம் மீன் கிடைக்கும் வரை அவனுக்கு உதவுவதை மிகவும் சரி என்று சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  26. வீராங்கன் said...
    //ஒரு தூண்டிலில் ஒரு மீன் பிடிப்பதை கற்றுக் கொண்டவுடன் அவனுக்கு உதவுவதை நிறுத்தாமல், ஒரு சுண்டுதலில் ஓராயிரம் மீன் கிடைக்கும் வரை அவனுக்கு உதவுவதை மிகவும் சரி என்று சொல்கிறேன்//

    உங்கள் கருத்தை மதிக்கிறேன். நமக்குள் விவாதம் வேண்டாமே.

    பதிலளிநீக்கு
  27. //குடுத்த காசுக்கு அதிகமாவே கூவுரீங்களே சார்.//


    கொடுத்த காசு அல்ல சார். கொடுக்கப் பட்ட வாழ்க்கை. நான் படித்தது, பணியில் சேர்ந்தது எல்லாமே அரசாங்கத்தின் மூலமாகத்தான். அரசு எனக்கு உதவி செய்து கொண்டே இல்லாமல் போயிருந்தால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனக்கு உதவுவது என்னை சோம்பேறியாக்கியிருக்கும் என்று எந்த அறிவுஜீவியாவது முட்டுக் க்ட்டை போட்டிருந்தால் நானும் எங்கோ ஒரு மூளையில்தான் இருந்திருப்பேன்.

    எந்த ஒரு இடத்தில் பணம் கட்டித்தான் படிக்கவேண்டும். பணம் கொடுத்தால்தான் வேலை வாங்க முடியும் என்ற சூழல் எனக்கு எப்போது வரவில்லை.

    பதிலளிநீக்கு
  28. //\\ குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும்.\\ உலகத்துல தமிழ் நாடு மட்டும்தான் இருக்குதா? மற்ற நாடுகள் எப்படி இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கின்றன?//




    குடும்பத் தலைவிகளின் பிரச்சனைகளை இப்படியும் சமாளிக்கலாம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த கேள்வியைக் கேளுங்கள். பதில் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  29. விவாதங்கள் திசை மாறிப்போகின்றன. இத்துடன் இந்தப் பதிவிற்கான பின்னூட்டங்களை நிறுத்திக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு