புதன், 30 மார்ச், 2011

சேவைகளும் சேவைக்களங்களும்



வழுக்கைத் தலைக்காரர் ஒருவர் ஹேர் கட்டிங் சலூனுக்குப் போனால் நாம் என்ன சொல்வோம்- “ இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” – என்று சொல்வோம். 
நீதி: முடி இருக்கிறவன்தான் அதை வெட்டிக்கொள்ள சலூனுக்குப் போகவேண்டும். 

அதே மாதிரி ஒருவனுக்கு பேங்க்கில் கணக்கே கிடையாது, அவன் நான் பேங்கில் பணம் எடுக்கப்போகிறேன் என்றால் என்ன சொல்ல முடியும்? (கொள்ளையடிப்பது இதில் சேராது). 
நீதி: பேங்கில் கணக்கு இருந்தால்தான் பணம் எடுக்க முடியும்.

இது வரையிலும் நான் சொன்னது புரிகிறதா? புரிந்தால் மேலே படியுங்கள். புரியாவிட்டால் அடுத்த பிளாக்கிற்குப் போங்கள்.

அது போல் எலக்ஷ்ன் சமயத்தில் சொல்வதற்கு நல்ல, மக்களின் மனதைக் கவரக்கூடிய இனிமையான கோஷங்கள் வேண்டும்.

உதாரணமாக- 
வறுமைக் கோட்டை அழிப்பேன்.
லஞ்சத்தை ஒழிப்பேன்.
குடிசைகளை மாளிகைகள் ஆக்குவேன்.
எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்.

இந்தக் கோஷங்களெல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன? காதில் விழும்போது தேன் பாய்வது போல் இருக்கிறதல்லவா?. இவைகள் எல்லாம் எப்போது சாத்தியப்படும்?  
வறுமை இல்லாவிட்டால் வறுமையை அழிப்பது எப்படி?           லஞ்சம் இல்லாவிட்டால் அதை ஒழிப்பது எப்படி?               குடிசைகள் இல்லாவிட்டால் அவைகளை எப்படி மாளிகைகள் ஆக்க முடியும்?

மாக்களே, கவலைப்படாதீர்கள். இவைகள் நம் நாட்டில் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கும்.


16 கருத்துகள்:

  1. உலகத்தில் எத்தனையோ மன்னர்கள் வந்தாலும் சரித்திரத்தில் சிலரது ஆட்சியைத்தான் பொற்காலம் என்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. Yes. I remember a conversation, which goes like this.

    "Why do you help the unfortunates'?

    "Because it makes me feel happy."

    "So, you will be more happy, if there are more unfortunates out there, so that you can help them."

    Life is like that.

    பதிலளிநீக்கு
  3. தகவல் அறியும் உரிமையின் கீழ்..முதலில் இந்த வறுமைக்கோடு எங்கே உள்ளது என்று கேட்கப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ! சிவகுமார் ! said...

    //தகவல் அறியும் உரிமையின் கீழ்..முதலில் இந்த வறுமைக்கோடு எங்கே உள்ளது என்று கேட்கப்போகிறேன்.//

    எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருக்குதுங்க, ஆனா அதுக்காக அலைய முடியலீங்க. நீங்க கேட்டுச் சொன்னீங்கன்னா ரொம்ப புண்ணியமாப் போகும்!!!

    பதிலளிநீக்கு
  5. ம்ம்மாஆஆஆ.....எங்க தீவனமும் தட்டும் போடறவங்கள காணமே, தேர்தல் கமிசன் கெடுபிடியோ...

    பதிலளிநீக்கு
  6. he he he.... sir, engeyo poyitteenga ponga!!

    aaga mothan ivanga koshangalai vaaza vaippatharkkaaka varumaiyai vaaza vaippaangannu solreenga, rightu!!

    :))

    பதிலளிநீக்கு
  7. G.M Balasubramaniam said...

    //WHAT WAS THAT SIR, IN THE LAST PARA.? "MAAKKALAE"//

    மடை....ர்களேன்னு சொன்னா அடிக்க வரமாட்டாங்க?

    பதிலளிநீக்கு
  8. தமிழ் உதயம் said...

    //நீங்க கூட ஒரு கட்சி தொடங்கலாம்.//

    பண்ணீடலாமுங்க. ஆனா கட்சித்தலைவருக்கு வேண்டிய சில முக்கியமான தகுதிகள் எனக்கு இல்லைங்க.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...
    சாமியின் மனஅலைகள்

    இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக...தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம்.

    பிடிக்க முயற்சிப்பது நீங்கள் விரும்பும் ப்ளாக் லிஸ்டில் எனது
    வலைப்பூவும் இருக்க

    பதிலளிநீக்கு