சனி, 3 ஜூன், 2017

10. நாட்டு நடப்பு – 2

                                        Image result for யானை
தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் முக்கியமானவை திருட்டுச்செய்திகள்தான். திருட்டுகளில் பலவகை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது திருட்டுக்கொடுப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. இரண்டொரு பண நோட்டுக்களை வழியில் போட்டுவிட்டு ‘ஐயா, இந்த நோட்டு உங்களது போல இருக்குதே’ என்று கூறுவார்கள். நீங்களும் ஓஹோ, நம் பணம் தானோ என்று அதை எடுக்க முயற்சி செயவீர்கள். அந்த சமயத்தில் உங்கள் கவனம் அந்த கீழே கிடக்கும் பணத்தின் மீதுதான் இருக்கும். அப்போது அந்த திருடர்கள் உங்கள் பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. இரண்டொரு நிமிடங்கள் கழித்துத்தான் என்ன நடந்தது என்று புரியும். அதற்குள் அந்த திருடன் கண்காணாமல் போயிருப்பான்.

இந்த மாதிரியான செய்திகள் அநேகமாக வாரத்திற்கு ஒருமுறையாவது வருகின்றன. மக்கள் இந்த செய்திகளைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்று புரியவில்லை. நமக்கு இந்த மாதிரி நடக்காது என்று நினைப்பார்கள் போலும்.  ஆனால் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் மனித மனம் சபல புத்தி உள்ளது. எதுவும் சும்மா கிடைக்கிறது என்றால் அவனது புத்தி அப்போது வேலை செய்வதில்லை.

என் பாட்டி ஒரு கதை சொல்வார்கள் – ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒருவன் யானை, யானை, கடனுக்கு யானை என்று விற்றுக்கொண்டு போனான். இந்த சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, பேச முடியவில்லை, இடது கையினால் எனக்கு ஐந்து என்று சாடை காட்டினானாம்.

அது போல சும்மா கிடைக்கு மென்றால் எதுவாக இருந்தாலும் கை நீட்டுவதுதான் நம் ஜனங்களுக்கு பழக்கம். இந்த பழக்கம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பணத்தை கீழே பார்த்தவுடன் அது நம்முடையதுதானா என்று கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுக்க முயற்சிக்கிறான். நஷ்டம் அடைகிறான். இந்த ஆசையானது மக்களை மேலும் எப்படி அலைக்கழிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொடரும்....

10 கருத்துகள்:

  1. உண்மை ஐயா இந்த தவறுகளின் தொடக்கமே மக்களின் ஒட்டு மொத்த மனமே...

    பதிலளிநீக்கு
  2. கடையில் நூறு ரூபாய்க்கு ரெண்டு என்று சொல்லும் ஏதோ ஒரு பொருளைப் பேரம் பேசுவான் ஹீரோ. மூன்று நான்கு என்று கேட்பான். "ஏன்? சும்மாவே எடுத்துக்கோயேன்" என்று கடைக்காரர் சொன்னதும் "அப்போ ரெண்டாக கொடு" என்பான் ஹீரோ! அது நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
  3. //மனித மனம் சபல புத்தி உள்ளது.//

    கரெக்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ.

    பெண்ணாசை,
    பொன்னாசை,
    மண்ணாசை,
    பதிவிடும் ஆசை,
    மீள் பதிவிடும் ஆசை என

    படத்தில் காட்டியுள்ள யானைகள் அளவுக்குச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆம் சபலமே
    வீழ்ச்சிக்கு முழுக்காரணம்

    பதிலளிநீக்கு
  5. ஒரு முறை வீதியில் நடந்து போகும்போது ஒரு தொகை தரையில் கிடந்தது . எடுத்தேன் அதன் பின் எப்போது அந்தவழியே போகும் போதும் இன்னொரு முறை பணம்கிடைக்குமா என எதிர்பார்த்து தலை நிமிராமல் நடக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. பார்த்தீங்களா பார்த்தீங்களா மீள் பதிவு என்று சொன்னவுடன் பின்னூட்ட எண்ணிக்கை குறைகிறது. எல்லோரும் பழைய சோறு என்று தள்ளி விடுகிறார்கள்.

    இடையில் ஒன்று இரண்டு புது பதிவுகளும் இடுங்கள். பின்னூட்ட எண்ணிக்கையும் கூடும்.

    5 யானை என்று சொல்லி 6 யானை படம் போட்டு இருக்கிறீர்கள். 6வது யானை என்ன?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்ட எண்ணிக்கை அதிகரித்தால் என் பேங்க் பேலன்ஸ் அதிகரிக்குமா?

      பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாக வைத்திருக்கும் பிளாக்கர்கள் என்ன பலன் அடைந்தார்கள் என்று சொல்லுங்கள்.

      நீக்கு
    2. பழமொழி வழிக்கிற்கு வந்த காலம் ரொம்ப வருடங்களுக்கு முன். அதற்குப் பிறகு யானைகள் குட்டி போடக்கூடாதா?

      நீக்கு
    3. அந்த ஆறாவது ஆணை கொசுறு என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

      நீக்கு
  7. அதான் புத்தர் சொல்லிட்டாரே... ஆசையே துன்பத்திற்குக் காரணம். மண், பெண், பொன் என்ற வரிசைதான்.

    பதிலளிநீக்கு