கல்யாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 டிசம்பர், 2015

கல்யாணம் கட்டுவது எதற்காக?

                                       Image result for கல்யாணம்

இது என்ன கேள்வி? "கல்யாணம் கட்டுவது பிள்ளை பெறுவதற்காக" என்று எகத்தாளமாகப் பதில் சொல்வது சுலபம். ஆனால் கல்யாணத்தின் பின்னால் உள்ள அனைத்து காரணங்களையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளை பெறவது என்பது கல்யாணத்தின் ஒரு முக்கிய அம்சம்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக மட்டும்தான் கல்யாணம் செய்து கொள்கிறோமா?

மனித சமூகத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பது பல் காலமாக ஒரு தேவையாக இருந்து வந்திருக்கிறது. இனவிருத்தி ஒரு நோக்கமாக இருந்தாலும் இவ்வாறு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஒரு நம்பிக்கையான துணை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அவசியம். மனைவி இந்த வகையில் ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருக்கிறாள்.

ஒரு குடும்பம் என்றால் ஒரு ஆண், ஒரு பெண், சில பல குழந்தைகள் சேர்ந்தது என்று அனைவரும் அறிவோம். பொதுவாக ஆண் குடும்பத்தலைவன் என்று அறியப்படுகிறான். குடும்பத்தின் பாதுகாப்பு, அதை வழிநடத்துவது, குடும்பத்திற்கு வேண்டிய பொருளாதாரத்தை ஈட்டுவது ஆகியவை இவனுடைய முக்கியப் பொறுப்புகள்.

அதே சமயம் குடும்பத்தலைவி என்று அறியப்படும் பெண், வீட்டில் இருந்து கொண்டு அந்தக் குடும்பத்தை நிர்வகிக்கிறாள். கணவனுக்கு உதவியாக இருத்தல், பிள்ளைகளைப் பேணுதல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவு அளித்தல் ஆகியவை இவள் பொறுப்பாகும்.

கால மாற்றத்தால் பெண்களும் வெளியில் சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்படி ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டும்போது அவர்களின் பொறுப்புகளும் மாற்றத்திற்கு உட்படுகின்றன. குடும்ப வேலைகளை இருவரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அப்படி வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களின் கடமைகள் என்னென்ன? அந்தப் பெண் நிறையப் படித்திருக்கலாம். ஆனால் அவள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவேண்டும் என்ற சூழ்நிலை அந்தக் குடும்பத்தில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அந்தப்பெண்ணின் நிலை என்ன?

எந்தக் குடும்பமானாலும் அதில் உள்ளவர்கள் சாப்பிட்டே ஆகவேண்டும். தினசரி வெளியில் ஓட்டல்களிலிருந்து உணவு வாங்கிச் சாப்பிடுவது உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படியானால் வீட்டில் உணவு தயாரிப்பது யார்? ஒரு ஆள் வைத்து சமைத்தாலும் அந்த ஆளை சரியாக நிர்வகிப்பது யார்? இது ஒரு குடும்பத்தலைவியின் பொறுப்பாகத்தான் இது நாள் வரை இருந்து வருகிறது.

ஏன் குடும்பத்தலைவி மட்டும் உணவு தயாரிக்கவேண்டும்? குடும்பத் தலைவன் தயாரிக்கக் கூடாதா என்று பெண்ணுரிமைக் கழகத்தினர் கேட்கலாம். ஆனால் ஒரு குடும்பத்தில் ஆண் சம்பாதித்துக் கொண்டுவந்தால் பெண் மற்ற குடும்ப வேலைகளைக் கவனிப்பது என்பது வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வதாகும்.

ஆனால் இந்த நடைமுறை வழக்கத்தை இந்தக் காலத்து நவநாகரிக யுவதிகள் கடைப்பிடிப்பதில்லை. அந்தக்காலத்தில் கல்யாணத்திற்காகப் பெண் பார்க்கப் போனால் "பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா" என்று சம்பிரதாயமான் கேள்வி கேட்பது உண்டு. பெண்ணின் தாயாரும் "பெண்ணை சமையல் செய்யத் தெரியாமலா வளர்ப்போம்" என்று பதில் சொல்வதுவும் வழக்கமே.

ஆனால் இன்று பெண் பார்க்கச்செல்லும்போது இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை.  அப்படிக்கேட்டால் பெண்ணின் தாயார் "என்ன உங்கள் வீட்டிற்கு நமையல்காரியைத் தேடுகிறீர்களா" என்று பதில் கேள்வி கேட்பார்கள். பெண்ணோ, "அம்மா அவர்கள் ஒரு நல்ல சமையல்காரியைப் பார்த்து அவர்கள் பையனுக்கு கட்டி வைக்கட்டும். எனக்கு இந்தப் பையன் வேண்டாம்" என்பாள்.

இப்படிக்கேள்வி கேட்காமல் கட்டிக்கொண்டு வரும் பெண் என்ன செய்கிறாள் என்றால் மாமியிர் ஆக்கிப்போடும் சோற்றை மூன்று வேளையும் விழுங்கி விட்டு தன்னுடைய ரூமில் டிவி பார்க்கிறாள். காலப்போக்கில் குழந்தையும் பெற்றுக்கொள்கிறாள். குழந்தையை கொஞ்சகாலம் பெண்ணின் தாயார் பார்த்துக்கொள்கிறாள். பிறகு புருஷன் வீட்டிற்கு வந்த பிறகு அந்த வேலையையும் மாமியாரே பார்க்கும்படியாகி விடுகிறது.

நானும் என் மனைவியிடம் இந்த நிலையைப் பற்றி விவாதித்தேன். இப்போது எந்தப் பொண்ணு சமையல் செய்யப் பழகுது? படிக்கப் போகுதுங்க, படிச்சு முடிச்சதும் கல்யாணம் கட்டிக் கொடுத்துடறாங்க. என் பொண்ணுக்கு சமையலறை எங்கே இருக்குன்னே தெரியாதுங்க அப்படீன்னு பெண்ணப் பெத்தவங்க பெருமையாச் சொல்லிக்கிறாங்க.

எனக்கு வருகின்ற சந்தேக்ம் என்னவென்றால், அப்போ கல்யாணக் கட்டிக்கிடறது எதுக்காக? பிள்ள பெறுவதற்காக மட்டுமா? அப்படியானால் வீட்டை யார் நிர்வகிப்பார்கள்? எதிர்காலத்தில் எல்லோரும் சாப்பாட்டிற்கு ஓட்டலையே நம்பிக்கொண்டிருப்பார்களா? எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவா? அல்லது இவை நியாயமான சந்தேகங்கள்தானா?

இதைப் படிக்கும் பதிவர்கள் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறவேண்டுகிறேன்.

                        

புதன், 14 ஜனவரி, 2015

VGK 15 அ ழை ப் பு

VGK 15   ழை ப் பு
 இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.
இந்தக் கதைக்கு என் விமர்சனம்.
எந்த விசேஷம் என்றாலும் விருந்தினர்கள் அவசியம். அதுவும் கல்யாணத்திற்கு எவ்வளவு விருந்தினர் வருகிறார்களோ அவ்வளவிற்கு கல்யாணக்காரரின் மவுசு கூடும். இதற்காகவே எவ்வளவு கூட்டம் கூட்ட முடியுமோ அவ்வளவு கூட்டம் கூட்டுவதற்கு கல்யாணக்காரர் ஆசைப்படுகிறார்.
இதற்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று விவஸ்தை இல்லாமல் அழைப்பிதழைக் கொடுப்பதுதான் வழி. இவ்வாறு அழைப்பிதழ் கொடுக்கும்போது ஏற்படும் அனுபவங்களை பல விதமானவைகளாக இருக்கும். அதை இந்தக் கதையில் நன்கு படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
எப்படி பார்த்துப் பார்த்து அழைப்பிதழ் கொடுத்தாலும் ஏதாவது ஒன்றில் கோட்டை விடுவது வழக்கமே. இந்தக் கல்யாணத்தில் தாய் மாமனுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. இது ஒரு பெரிய தவறுதான். பொதுவாக இந்த மாதிரி தபாலில் அழைப்பிதழ் வந்தால் கல்யாணத்திற்கு வரமாட்டார்கள். ஆனால் இந்த மாமன் வந்து விட்டார். சண்டை போடுவதற்கென்றே வந்திருக்கிறார்.
கல்யாணக்காரரின் ஆப்த நண்பர் மாமாவின் காலில் விழுந்து சமாதானம் செய்து விடுகிறார் என்பதுதான் கதையின் உச்ச கட்ட திருப்பம். காரியம் ஆகவேண்டுமென்றால் கழுதையின் காலில் கூட விழலாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துப் போயிருக்கிறார்கள்.

எப்படியோ கல்யாணம் சுபமாக நடந்தேறியது. நமக்கும் ஒரு கல்யாண (கதை) விருந்து கிடைத்தது.