சும்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சும்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஆகஸ்ட், 2010

சும்மா இருப்பதே சுகம்

நான் ஒரு நல்ல சோம்பேறி. இதைச்சொல்ல நான் வெட்கப்படவில்லை. ஆன்மீகப் பெரியோர்கள் பலர் சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லிப் போயிருக்கிறார்கள். ஆகையினால் சோம்பேறியாய் இருப்பதில் தவறு ஒன்றுமில்லை.


அப்படியானால் ஆபீஸில் எப்படி ஆணி பிடுங்கி முன்னேறினீர்கள் என்றால், அது ஒரு பெரிய ரகசியம். உங்களிடம் மட்டும் சொல்கிறேன். வெளியில் சொல்லவேண்டாம். நான் சோம்பேறிதானே தவிர என் மூளை கொஞ்சம் ஷார்ப். இதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும். இருந்தாலும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் தன்னைப்பற்றி சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. அந்தக் குணத்தினால் மற்றவர்கள் ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலையை நான் இரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு மீதி நேரம் முழுவதும் சோம்பிக்கழிப்பேன். அப்போது என்ன செய்வீர்கள் என்று கேட்காதீர்கள். அது பெரிய அரசு இரகசியம். அதை வெளியிட்டால் அரசு கவிழ்ந்து விடும்.

சரி. இதெல்லாம் இப்ப என்னத்துக்குன்னு கேக்கறீங்களா? ஒரு பதிவில படிச்சேன். மூணு நாளு பதிவு எழுதலீன்னா அந்தப்பதிவரை எல்லோரும் மறந்து விடுவாங்கன்னு. அதுக்காகத்தான் இந்த பதிவு. நாலு நாள் கம்ப்யூட்டர் ரிப்பேர். இன்னும் நாலு நாளைக்கு கல்யாணம். அதனால கேதார் பயணக்குறிப்புகள் தாமதம்.

ஆகவே இந்த மொக்கைப்பதிவு.

வாழ்க மொக்கைப் பதிவர்கள்.