படிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நான் படித்துக் கிழித்தவை



தாங்கள் எஸ்.எஸ்.எல்.சி முடித்துள்ளீர்கள் என்று சத்தியமாக நம்புகிறேன்....:)

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் நான் SSLC முடித்துள்ளேன் என்பதை சத்தியமாக நம்புகிறார்களாம். அப்படி என்றால் நான் மற்ற படிப்புகளை முடித்தது பற்றி இப்படி சத்தியம் செய்ய முடியாது என்று அர்த்தம். அவர்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது ஒரு பதிவரின் கடமையல்லவா?

நான் SSLC முடித்தவுடன் இன்டர்மீடியட் படித்தேன். இரண்டு வருடம். கோவை அரசு கலைக்கல்லூரியில் 1951-53 ம் வருடங்கள். திரு.நமச்சிவாயம் அவர்கள் பிரின்சிபல். நான் பதிப்பதற்கு வெகு காலம் முன்பு இந்தப் படிப்பு முடித்தவர்களை Fellow of Arts (FA) என்று அழைப்பார்களாம். இங்கு சேர்வதற்கு கம்யூனிடி சர்ட்டிபிகேட் வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். அதற்காக வாங்கின சர்ட்டிபிகேட்.


என்னுடைய இன்டர்மீடியட் பாஸ் சர்டிபிகேட்.


அடுத்து கோவை விவசாயக் கல்லூரியில் மூன்று வருடம் (1953-56) படித்து B.Sc.(Ag.) பட்டம் மெட்ராஸ் சர்வ கலாசாலையில் வாங்கினேன். 


இந்தப் பட்டம் பிரபல துணைவேந்தர் டாக்டர் ஏ.லக்ஷ்மணசாமி முதலியார் கையெழுத்துப் போட்டதாக்கும்.

அடுத்து வேலையில் சேர்ந்து மூன்று வருடம் சர்வீஸ் போட்டபின் M.Sc.(Ag.)  பட்டம் 1961ல் மண்வளத்துறையில் வாங்கினேன். இதுவும் மெட்ராஸ் யூனிவர்சிடி பட்டம்தான். 


பிறகு வெகு நாள் கழித்து வேலையில் இருந்து கொண்டே ஆராய்ச்சிகள் செய்து தீசிஸ் எழுதி அமெரிக்காவிற்கு மூன்று எக்சாமினர்களுக்கு அனுப்பி, அவர்கள் ஒப்புதல் கொடுத்து Ph.D. பட்டம் 1976 ல் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் வாங்கினேன். டாக்டர் ஜி. ரங்கசாமி அவர்கள் துணைவேந்தர்.


பிறகு வேலையில் இருக்கும்போது மூன்று உள்நாட்டுப் பயிற்சிகளுக்கும் ஒரு வெளிநாட்டுப் பயிற்சிக்கும் சென்றிருக்கிறேன்.

முதல் பயிற்சி 
Soil Salinity Research Institute, Karnal, Hariyana State.

களர் மண்ணின் தன்மைகளைப் பற்றி ஒரு மாதம் பயிற்சி.


இரண்டாவது பயிற்சி.
கோவிந்த் வல்லப் பந்த் விவசாயப் பல்கலைக்கழகத்தில் மண்ணின் பௌதிகக் குணங்கள் பற்றி ஒரு மாதம் பயிற்சி.


மூன்றாவது பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் கதிர் வீச்சுகளின் காப்பு முறைகளைப் பற்றி பதினைந்து நாள் பயிற்சி.



பிலிப்பைன்சில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒன்றரை மாதம் நெல் பாசனம் பற்றிப் பயிற்சி.


அங்கேயே நடந்த இன்னொரு பயிற்சி.


இந்த சர்ட்டிபிகேட்டில் பிரபல சர்வதேச வேளாண் விஞ்ஞானி டாக்டர் M.S. சுவாமிநாதன் அவர்கள் கையெழுத்தைப் பாருங்கள்.

அதே ஆராய்ச்சி நிலையத்திற்கு மூன்று வருடம் கழித்து ஒரு சர்வதேச கருத்தரங்குல் கலந்து கொண்டபோது எடுத்த போட்டோ. உட்கார்ந்திருக்கும் வரிசையில் வலது கோடியில் இருப்பதுதான் அடியேன்.




தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள் என்று நன்னூலில் குறிப்பிட்ட ஒரு இடம் - தன்னைப் பற்றி அறியாதவர்களிடத்தில் தன் பெருமைகளைச் சொல்லிக்கொள்வது குற்றமல்ல. அந்த இலக்கணப்படி நான் செய்திருக்கிறேன்.