பதிவர் சந்திப்புகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்புகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 அக்டோபர், 2015

பதிவர் சந்திப்புகள் - ஈரோடு - 2011

ஈரோட்டில் பதிவர் சந்திப்பு 2009. 2010, 2011 ஆகிய மூன்று வருடங்கள் மிக சிறப்பாக நடைபெற்றன. முதல் சந்திப்பிற்கு நான் போகவில்லை. அடுத்த இரண்டு சந்திப்புகளுக்கும் நான் சென்று வந்தேன்.

இதற்கு முன்பு சென்னைப் பதிவர்கள் மாதம் ஒரு முறை கடற்கரையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்று "டோண்டு ராகவன்" பதிவுகளிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

2012 ம் ஆண்டு புலவர் திரு ராமானுஜம் ஐயா அவர்களின் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. இதுதான் முதல் பதிவர் சந்திப்பு என்று பலர் தவறாக எண்ணுக்கொண்டிருக்கிறார்கள். ஈரோட்டில் 2009 ம் ஆண்டே பதிவர் சந்திப்பு ஆரம்பித்து விட்டது.

திருநெல்வேலியில் உணவு ஆபீசர் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. நான் கலந்து கொண்டேன். இதைப் பற்றிய என் பதிவை நாளை மீள்பதிவாகப் போடுகிறேன்.

2013ம் ஆண்டு சென்னையில் இரண்டாவத் தடவையாக பதிவர் சந்திப்பு நடந்தது. நான் கலந்து கொண்டேன்.

போன வருடம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு நான் செய்த ரயில் டிக்கட் ரிசர்வேஷன் குளறுபடியால் போகவில்லை.

இந்த வருடம் புதுக்கோட்டைக்குப் போக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன்.

இப்போது நான் கலந்து கொண்ட ஈரோடு பதிவர்கள் சந்திப்பைப்பற்றிய என்னுடைய பதிவை இங்கு மீள் பதிவாகப் போடுகிறேன்.

ஈரோடு பதிவர் சங்கமம் 2011

பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். (மாலை 4.30). இருநூறு பேருக்கு மேல் பதிவர்கள் மற்றும் இணைய ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இணையத்தில் சீரிய முறையில் பணியாற்றிய பதினைந்து பதிவர்களை பரிசு கொடுத்து மேடையில் அமர்த்தி அவர்களுடைய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான தலைமையுரை ஆற்றினார்கள்.

நான் எடுத்த சில புகைப்படங்கள்.
(படங்களை கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்.)

கூட்டம் நடந்த ஹால்-






விருந்தினரின் ஒரு பகுதி-வலது ஓரத்தில் சிகப்பு ஜிப்பாவுடன் இருப்பவர்தான் பிரபல பதிவர் "தருமி" அவர்கள்.



வரவேற்புரை-




ஈரோடு கதிர் (விழா நாயகன்) சிறப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்-


சிறப்பு பதிவர்கள் மேடையில்


தலைமையுரை - ஸ்டாலின் குணசேகரன்


செயலாளர் பாலாஜி நன்றி கூறுகிறார்


இனி நம்ம ஐட்டங்கள்.

காலை டிபன் - நான் சாப்பிட்ட இட்லிகளும் பூரிகளும்.




சீனா அய்யாவும் ஜாக்கி சேகரும்


மதிய உணவு-

சைவம்


நம்மோடது


தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.(நடுவில் இருப்பவர்) போனால் வராது.


அனைவருக்கும் வணக்கம். விவரங்கள் அதிகம் வேண்டுமென்பவர்கள் கதிர் பதிவு போடும் வரை பொறுத்திருக்கவும்.