செவ்வாய், 29 மார்ச், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்

Image result for பார்க்


பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


வருகிற ஸ்ரீதுன்முகி வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி (அதாவது 14-4-2016, வியாழக்கிழமை) கோவையில் ஒரு மகத்தான தமிழ் மறுமலர்ச்சித் திருவிழா நடக்கவிருக்கிறது. அதாவது தாய்த்தமிழை வளர்ப்பதற்காக ஒரு சங்கம் துவக்குகிறோம். இந்தச்சங்கத்திற்கு "கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கம்" என்று பெயர் வைத்திருக்கிறோம்.

கிறுக்கர்கள் என்றால் கிறுக்குபவர்கள் அதாவது பேப்பரில் அல்லது சுவர்களில் அல்லது இணையத்தில் கிறுக்குபவர்கள் என்று அர்த்தம். அதாவது எழுத்தாளர்கள் அல்லது இந்த பதிவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். வேறு அர்த்தம் கொள்பவர்கள் தமிழ் விரோதிகள்.

இந்தச் சங்கத்தில் சேர எந்த வித சந்தாவும் தேவையில்லை. ஒரே தகுதி, அவர்கள் தாங்கள் கிறுக்கர்கள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அவ்வளவே.

இந்த சங்கத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் 13-4-2016 தேதிக்குள் அவர்களுடைய விண்ணப்பத்தை கீழ்க்கண்ட பதிவருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கிறுக்கர் பழனி.கந்தசாமி, மன அலைகள் பதிவு, மேற்பார்வை "கூகுள் பிளாக்கர்".

தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

துவக்க விழா 14-4-2016 அன்று சாய்பாபா காலனி இராமலிங்கம் காலனி நகராட்சி பூங்காவில் நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு இந்த சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்.