திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஆசை இருக்கு காதல் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க

இந்தப் பதிவிற்கும் சுவாதி-ராம்குமார் நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து கொள்கிறேன்.

பொதுவாக பலரும் தங்கள் வாழ்க்கையை இன்ன மாதிரி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு கனவு வைத்திருப்பார்கள். பெரிய வேலை, பெரிய வீடு, அழகான மனைவி, பெரிய கார் என்று இப்படி ஆசை வைத்திருப்பார்கள். இப்படி ஆசை வைப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளை அடைய தேவையான உழைப்பைத் தருவதற்கு அவர்கள் முன் வருவதில்லை.

முதலில் படிப்பு. படிக்கும்போது படிப்பில் கவனம் வைத்து நல்ல மார்க்குகள் வாங்கி மேல் படிப்புகள் படித்து தன்னை ஒரு நல்ல உத்தியோகத்திற்கு தயார் செய்து கொள்ளவேண்டும். அப்படி படிக்கும் காலத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும், காதலில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும் என்பதை உணர்வதில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ என்னென்ன தேவை என்று கூடப் பிரியாத வயதில் காதலில் ஈடுபடுகிறவர்கள் புத்தியில்லாதவர்கள். அப்படி ஈடுபடும் பலரும் சராசரிக் குடும்பத்தில் அல்லது ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி நடைபெறும் காதல் கல்யாணங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதம் தோற்றுப் போகின்றன.

வீட்டில் ஆடு மேய்ப்பவனுக்கு காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது. இப்படிக் காதல் செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் பல பேர். காதல் புனிதமானதாம். ஆஹா, புனிதம் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் வயிறு நிறைந்து விடுமா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை என்று ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்றுவதை விடுத்து, அவர்கள் தலைவர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் என்னவென்றால் நீ மேல் ஜாதியில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து கொள், சீக்கிரம் முன்னேறலாம் என்று சொல்லிக்  கொடுக்கிறார்கள்.

இந்த மேல் ஜாதிப் பையன்கள் ஒருவரும் இப்படி தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பெண்கள் மட்டும் ஏன் இப்படி புத்தி கெட்டுப்போய் அலைகிறார்கள் என்பது புரியவில்லை? ஜாதிகள் மறைவது என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.

உண்மை கசக்கும். பொய்தான் இனிக்கும். எனக்குப் பொய் பேசத் தெரியவில்லை என்பது ஒரு குறையே.  ஜாதி சமரசம் பேசுபவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிப் படித்து விட்டு என்மீது ஆங்காரம் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.