வியாழன், 10 மார்ச், 2011

மனிதனின் கடமைகள்.


என்னுடைய மதியும் விதியும் என்கிற பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம்.

Anonymous said...
But, what are all one's duties and who defines that?
இந்த பின்னூட்டம்அனானியாக வந்திருக்கிறது என்பதைத் தவிர, அதில் குறிப்பிட்டுள்ள கருத்து நன்றாகவும் ஆழமாகவும் உள்ளது.
ஒருவருடைய கடமைகள் என்னென்ன? அவைகளை யார் வரையறுக்கிறார்கள்?

மனிதன் என்பவன் தனியானவன் அல்ல. அவன் சுற்றியிருக்கும் சமூகத்தின் ஒரு அங்கம். அந்த சமூகத்தின் பல நியதிகளுக்கு அவன் கட்டுப் பட்டவன். அவனைப் பெற்றவர்களும் அவனுடைய உறவினர்களும் அந்த சமூகத்தின் அங்கத்தினர்களே. அவர்களும் அந்த சமூகத்தின் கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டவர்களே.

இந்த சமூக கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டேதான் ஒருவன் தன் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்ந்த அவன் தான் வாழும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியவனாக இருந்தால் அந்த சமூகம் அவனை ஏற்றுக்கொள்ளும். அப்படி இல்லாமல் அவன் சமூகத்திற்கு தீமை பயக்கக் கூடிய பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தால் அவனை அந்த சமூகம்/சமூக அங்கத்தினர்கள் ஒதுக்கி விடுவார்கள்

ஆகவே கடமைகள் என்பவைகளை சமூகம்தான் நிர்ணயிக்கிறது. அந்த சமூக கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை வளர்த்துக் கொள்கிறான். அப்போது அவன் தன்னுடைய கடமைகள் என்னென்ன என்பதை உணர்ந்து வரையறுத்துக் கொள்கிறான். அவ்வாறு வரையறுத்துக்கொண்ட கடமைகள் அல்லது பண்புகள் ஒருவனை மேம்படுத்துவதாகவோ அல்லது தாழ்த்துவதாகவோ அமைகின்றன. இவ்வாறு பண்புகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கே உண்டு. வேறு யாரும் அவனைக் கட்டாயப்படுத்த முடியாது.

ஒருவன் வளர்ந்த சூழ்நிலை, அவனுடைய குடும்ப பழக்க வழக்கங்கள், அவன் பழகிய சகாக்கள் ஆகிய அனைத்தும் அவனுடைய பண்புகள் எப்படி உருவாகின்றன என்பதை நிர்ணயிக்கும். கல்வி, கேள்விகளில் ஒருவன் ஈடுபாடு கொண்டிருந்தால் அவனுக்கு நற்பண்புகள் வளர வாய்ப்புகள் அதிகம். இவை எல்லாவற்றையும் விட அவன் தலையெழுத்து எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்பது மிக மிக முக்கியம். ஆகவே அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.



11 கருத்துகள்:

  1. //அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.
    //

    It's 100% Correct. Nice Post. Thanks to Anony...

    பதிலளிநீக்கு
  2. சரியா சொன்னீங்க ..ஆனா சிலதுகள் என்ன சொன்னாலும் எதிர் பேச்சாவே பேசிகிட்டு இருக்குதுங்களே கண்ணால கானும் வரை எதையும் நம்ப மாட்டேன்னு .அதுக்கு என்ன செய்யுறது .. வளர்த்த விதமா..? இல்லை வளர்ந்த விதமா...???

    :-))

    பதிலளிநீக்கு
  3. கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். //
    பெற்றோரும், சமூகமும் கடமையை வழிநடத்துகினறனர்.

    பதிலளிநீக்கு
  4. ஜெய்லானி said...
    //சரியா சொன்னீங்க ..ஆனா சிலதுகள் என்ன சொன்னாலும் எதிர் பேச்சாவே பேசிகிட்டு இருக்குதுங்களே கண்ணால கானும் வரை எதையும் நம்ப மாட்டேன்னு .அதுக்கு என்ன செய்யுறது .. வளர்த்த விதமா..? இல்லை வளர்ந்த விதமா...??? :-))//

    அதுதான் சகவாச தோஷம்ங்கறது. ஏனுங்க, உங்க தோஸ்த்துங்க யாராச்சும் அப்படிப் பண்றாங்களா? கொஞ்ச நாளைக்கு இங்க அனுப்புங்க, சரி பண்ணீடறோமுங்க!

    பதிலளிநீக்கு
  5. //அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.

    முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  6. \\ஆகவே அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.\\

    கடமை உணர்ச்சி சரி. நமக்கே இருக்கவேண்டும். அது ஒருவேளை இல்லையென்றால் ஊட்ட வேண்டும் இல்லையா? நல்லாப் படிக்காத பையனை அப்பா கண்டிப்பது போல.

    எது சரி என்ற சந்தேகம் எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்று. பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

    இந்தப் பதிவின் காரணத்தையே பாருங்கள். எது என் கடமை என்று கேட்கிறார். அப்படிக் கேட்பவருக்கு மற்றவர்கள் உதவவேண்டும். நான் இன்றும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் பல வேளைகளில்.

    நான் சொல்வது சரிதானே? (பாருங்கள் இங்கே கூடக் கேட்கிறேன்!)

    பதிலளிநீக்கு
  7. Gopi Ramamoorthy said...

    //எது சரி என்ற சந்தேகம் எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்று. பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

    இந்தப் பதிவின் காரணத்தையே பாருங்கள். எது என் கடமை என்று கேட்கிறார். அப்படிக் கேட்பவருக்கு மற்றவர்கள் உதவவேண்டும். நான் இன்றும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் பல வேளைகளில்.

    நான் சொல்வது சரிதானே? (பாருங்கள் இங்கே கூடக் கேட்கிறேன்!)//

    நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் அந்த விவேகம் பலருக்கு வருவதில்லை என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை. தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை என்றுதான் பெரும்பாலானோர் கருதுகிறார்கள் என்பது என் அனுபவம்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா!

    நான், கடமைகளைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்! நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

    www.lusappani.blogspot.in

    பதிலளிநீக்கு