வெள்ளி, 6 மே, 2011

பேசும் முறை

பல சமயங்களில் நாம் ஒரு விஷயத்தை அடுத்தவர்களிடம் சொல்லும்போது, நேரடியாக விஷயத்தை சொல்லாமல் சுற்று வளைத்து சொல்லுகிறோம். அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களை இவ்வாறு கூறுவதில் தவறில்லை. ஆனால் சாதாரண சமாச்சாரங்களைக் கூட இவ்வாறு கூறுபவர்கள் இருக்கிறார்கள்.

இது கேட்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவது ஒரு அறியாமை. சுருக்கமாகவும், பொருள் திரிபு ஏற்படாமலும் பேசுவது ஒரு கலை. இதை நன்கு கற்றுக்கொண்டால் உங்களை எல்லோரும் விரும்புவார்கள்.

அதேபோல் அடுத்தவர்கள் பேசும்போது அதைக் கவனமாகக் கேட்பதுவும் ஒரு கலையே. அவர்கள் பேசி முடிப்பதற்குள் பதில் சொல்வது மிகவும் அநாகரிகம். நம் நாட்டில் இது சாதாரணமாக நடப்பது உண்டு. ஆனால் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.