செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்-துவக்க விழா

நான்கு நாள் முன்னமேயே இந்தப் பதிவு வெளிவந்திருக்கவேண்டும். தமிழர்கள் வழக்கப்படி இன்று லேட்டாக வெளிவருகிறது.

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கத்தின் துவக்க விழா நேற்று அதாவது ஸ்ரீதுன்முகி ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதி (14-4-2016) அன்று கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. கூட்டத்திற்கு மொத்தம் மூவாயிரம் பேர் வந்திருந்தார்கள் என்று சொல்ல விருப்பம்தான். ஆனால் வந்திருந்ததோ மூன்று பேர்கள்தான்.
நான், என் இரு நண்பர்கள், ஆகக்கூடி மூன்று பேர்கள். இதற்கெல்லாம் அசந்து விடுவேனா?  "அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்" என்ற கொள்கையில் வளர்ந்தவனாச்சே. நாங்கள் மூவரும் முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம். நான் தலைவர். ஒரு நண்பர் உபதலைவர். இன்னொரு நண்பர் காரியதரிசி.

இந்த சங்கத்தின் மூலமாக தமிழை வளர்ப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம். பாண்டிய மன்னன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். அதே போல் இந்த சங்கத்தையும் பிரபலமாக்குவோம் என்று தீர்மானம் போட்டோம். பின்பு நான் பேசும்போது கூறினேன். தமிழை வளர்க்க முதல் தேவை தமிழன் வளரவேண்டும். தமிழனை எப்படி வளர்த்தலாம் என்று ஆலோசித்ததில் பின்கண்ட யோசனைகள் உதித்தன.

1. தமிழனுக்கு தமிழ்ப்பற்று இல்லை. பேசுவது ஆங்கிலத்தில். பார்ப்பது இந்தி சினிமா. வேலைக்குப் போவது அமெரிக்கா. அங்கு போய் குழந்தை குட்டி எல்லாம் பெத்ததுக்கப்புறம்தான் தான் தமிழன் என்பது ஞாபகம் வரும். உடனே இவனைப்போல் இருப்பவர்கள் எல்லாம் கூடி ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிப்பார்கள். அதில் நடவடிக்கைகள் எல்லாம் அமெரிக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும்.

2. கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லாம் தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு பரிபாஷை.

3. தமிழ் சீரியல்களில் வரும் பெண்கள் சீலை கட்டுவதில்லை.

4. ஆகவே இனிமேல் தமிழர்கள் எங்கு இருந்தாலும் ஆண்கள் வேட்டி, சட்டைதான் அணியவேண்டும். பெண்கள் சேலைதான் உடுத்தவேண்டும். சிறு பையன்கள் ஆப்-டிராயர் போட்டுக்கொள்ளலாம். சிறு பெண்கள் பாவாடை, தாவணிதான் போட்டுக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகளை அனுசரிப்பவர்கள்தான் தமிழர்கள். மற்றவர்கள் வந்தேறிகள். இந்த நடைமுறைகளை தமிழர்கள் எந்த அளவிற்கு கடைப் பிடிக்கிறார்கள் என்று கணித்த பிறகு அடுத்த கட்ட செயல்பாடுகளைப் பற்றி விவாதிப்போம். இத்துடன் கூட்டம் கலைகிறது.

14 கருத்துகள்:

  1. //கூட்டத்திற்கு மொத்தம் மூவாயிரம் பேர் வந்திருந்தார்கள் என்று சொல்ல விருப்பம்தான். ஆனால் வந்திருந்ததோ மூன்று பேர்கள்தான்.//

    முதல் கூட்டமல்லவா .... அதனால் இப்படி ஆகியிருக்கும். இனி முப்பதாயிரம் பேர்களுக்குக் குறையாமல் வருவார்கள்.

    தமிழனை எப்படி வளர்க்கலாம் என்று ஆலோசித்ததில் தங்களுக்கு உதித்த யோசனைகள் அபாரமாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  2. //தமிழனுக்கு தமிழ்ப்பற்று இல்லை. பேசுவது ஆங்கிலத்தில். பார்ப்பது இந்தி சினிமா. வேலைக்குப் போவது அமெரிக்கா. அங்கு போய் குழந்தை குட்டி எல்லாம் பெத்ததுக்கப்புறம்தான் தான் தமிழன் என்பது ஞாபகம் வரும். உடனே இவனைப்போல் இருப்பவர்கள் எல்லாம் கூடி ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிப்பார்கள். அதில் நடவடிக்கைகள் எல்லாம் அமெரிக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும்.///

    பெட்னா தமிழ்சங்கத்தை இப்படியெல்லாம் கிண்டல் பண்ணலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சும்மா கற்பனையில்தான் சொன்னேன். ஆனா நீங்க சொல்றதப் பார்த்தா, நெஜமாவே அப்படித்தான் நடக்குது போல இருக்குது.

      நீக்கு
  3. கூட்டத்தீற்கு நிறைய பேர்கள் வந்திருப்பார்கள் நீங்கள் ஒரு குவாட்டர் பாட்டிலும் ஒரு பொட்டலம் பிரியாணியும் என்று அறிவித்து இருந்தால்... இது கிடைக்கா இடத்தீர்கு தமிழன் வரமாட்டான்

    பதிலளிநீக்கு
  4. தமிழை வளர்க்க விஜய் டிவி கட்டாயம் பார்க்கணும் என்று தீர்மானம் போட்டு இருக்கனும் அதுமட்டுமல்ல தமிழ் கலாச்சாரத்தை ப்ற்றி அறிவை வளர்த்து கொள்ள விஜய்டிவியின் அனைத்து சீரியல்களை கண்டிப்பாக பார்க்கணும் என்று நீங்கள் தீர்மானம் போட்டிருக்கனும் சாரே

    பதிலளிநீக்கு
  5. கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கத் துவக்க விழாவில் மூன்று பேர் கலந்து கொண்டிருந்தாலும் முத்தான தீர்மானங்களைத்தான் நிறைவேற்றியிருக்கிறீர்கள். சங்கத்தின் தலைவரான தங்களுக்கு வாழ்த்துக்கள்! தாங்கள் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை கணித்து அடுத்த முறை கூடும்போது அவசியம் ஒரு பொருளாளரை நியமனம் செய்யவும்.(கணக்கு வழக்குகளை பார்க்க ஒருவர் வேண்டுமல்லவா?)

    பதிலளிநீக்கு
  6. அய்யா, மற்ற இருவர் யார் என்று சொல்லவே இல்லையே. முதன் முதலில் திருச்சியில்தான் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று தொடங்கினார்கள் என்று நினைக்கிறேன். அப்புறம் அது பரவலாயிற்று. உங்கள் சங்கமும் வெகு விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற இருவர்கள் என்னுடன் பணி புரிந்தவர்கள். பதிவுலகத்தில் இல்லாதவர்கள்.

      நீக்கு
  7. மூன்று பேர் வந்திருந்தனர் சரியாகக் கணக்குப் பண்ணினீர்களா

    பதிலளிநீக்கு
  8. அடாது மழை பெய்தாலும் விடாது நடத்தப்படும் குஷ்பு டான்ஸ். அனுமதி இலவசம். கோவைக் கிறுக்கர்கள் அனைவரும் திரண்டு வாரீர்.

    இப்படி ஒரு வாட்சப் விளம்பரம் வெளியிட்டிருந்தால் 3000 என்ன 30000 பேர் வந்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஐயா தீர்மானங்கள் சிரிப்பாக இருந்தாலும் சிந்தித்து பார்த்தால் வேதனையே வருகின்றது காரணம் இதுதானே உண்மை வாழ்க தமிழ்ச்சங்கம் நானும் சங்கத்தில் சேரலாமா ?
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி வேதனைப் படுபவர்களை சங்கத்தில் சேர்த்த மாட்டோம்.

      நீக்கு
  10. சங்கம் சிறப்பாக செயலாற்ற மனமுவந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. உண்மையில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்தான் தமிழைப் பற்றி அதிகம் கவலைப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு