முதல் ட்ரிப்பில் போய் வந்த அனைத்துப் பதிவர்களும் தங்கள் தங்கள் தளங்களில் தேவலோகத்தை வானளாவப் புகழ்ந்திருந்தார்கள். அதைப் படித்த மற்ற பதிவர்கள் தங்களை ஏன் கூப்பிடவில்லை என்று கோபமாக பதிவுகள் போட்டார்கள். இப்படியாக ஒரு வாரம் முழுவதும் தேவலோகத்தைப் பற்றிய பதிவுகள்தான் இடப்பட்டன. சினிமா விமர்சனப் பதிவுகள் காணாமல் போய்விட்டன.
ஓரிரு நாளில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஜனங்கள் வரத்தொடங்கினார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைத்து வரப்பட்டு என் ரூமுக்கு கொண்டுவரப்பட்டார்கள். அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு, எனக்கு திருப்தியானவுடன், அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். பிறகு அவர்களை பேங்குக்கு சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த செலானைக் கொண்டுவரச்சொன்னேன்.
அவர்கள் பணம் கட்டி வந்தவுடன் செலானை வாங்கி அவர்களுடைய ஒப்பந்தத்தில் பின் பண்ணி தேவலோகத்திற்குப் போகும் தபால் பையில் போட்டேன். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை இமிக்ரேஷன் விசா பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, அவர்களுக்கு விருந்து கொடுத்து, பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பினேன்,
முதல் நாள் பத்துப் பேர்கள் மட்டுமே வந்தார்கள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்ததைப் பார்த்ததும், இன்டர்நெட்டில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஒரு தளம் ஆரம்பித்தோம். இமிக்ரேஷன் விசா வேண்டுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான நாள் மற்றும் நேரம் அலாட் செய்யப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடப்படும். அதன்படிதான் வரவேண்டும் என்று நிர்ணயித்தோம்.
இப்படியாக ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்கு விசா கொடுத்திருப்போம். வரவு செலவு கணக்குகளைப் பார்த்தோம். மொத்த வரவு 1,50,000 கோடி அதாவது ஒன்றரை லட்சம் கோடி. இதில் இந்திய அரசுக்கு வரி கட்டினது 75,000 கோடி. மீதி 75,000 கோடியில் எங்கள் ஊதியமாக எடுத்துக் கொண்டது 15,000 கோடி. இதில் என் பங்கு 7500 கோடி. பொதுவிற்கும் செக்குவிற்கும் ஆளுக்கு 3750 கோடி.
இப்படி கணக்குப் பார்த்ததில் எங்கள் ஊதியத்தொகையைக் கண்டு மலைத்துப் போய் விட்டோம். இந்தப் பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொதுவைக் கூப்பிட்டு, வெளியில் போய் ஒரு நல்ல ஆடிட்டர், அனுபவம் மிக்க ஒரு வக்கீல், இவ்வளவு பணத்தை டீல் பண்ணக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வரும்படி அனுப்பினேன்.
அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு விவரங்களைச் சொன்னோம். அரசியல்வாதி எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தொகையைச் சொன்னவுடன் அவர் "பூஊஊஊ, இவ்வளவுதானா, இதற்கா என்னை வரச்சொன்னீர்கள், முதலிலேயே விவரத்தைச் சொல்லியிருந்தால் நான் என் வட்டச் செயலரை அனுப்பியிருப்பேனே, அவரே இந்த மாதிரி தொகைகளை எல்லாம் டீல் பண்ணியிருப்பாரே என்றார்.
அப்படீங்களா, எங்களுக்கு அனுபவம் போதாதாகையால் உங்களை வரவழைத்து விட்டோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரைத் தாஜா பண்ணினேன். பிறகு எல்லோரும் கலந்து ஆலோசித்தோம். இந்தப் பணத்தில் எனக்கு 500 ஏக்கர் நிலமும், மற்றவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 250 ஏக்கர் நிலமும் அவரவர்கள் ஊர்களில் வாங்கிப்போடுவது என்று முடிவு செய்தோம்.
அரசியல்வாதி ஊருக்குப் போனதும் தனது வட்டத்தை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பிப் போனார்கள். மறுநாள் "வட்டம்" தனது எடுபிடிகளுடன் வந்தார். விஷயத்தைக் கேட்டார். இவ்வளவுதானே. ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.
பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் பணத்தை முழுவதையும் வட்டத்திடம் கொடுக்கச் சொன்னோம். அவர் அந்தப் பணத்தை இரண்டு லாரிகளில் ஏற்றி வட்டத்துடன் அனுப்பினார்.
பிறகு நடந்ததுதான் நாங்கள் எதிர்பாராதது! விவரங்கள் அறியக் காத்திருங்கள்.
ஓரிரு நாளில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஜனங்கள் வரத்தொடங்கினார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைத்து வரப்பட்டு என் ரூமுக்கு கொண்டுவரப்பட்டார்கள். அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு, எனக்கு திருப்தியானவுடன், அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். பிறகு அவர்களை பேங்குக்கு சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த செலானைக் கொண்டுவரச்சொன்னேன்.
அவர்கள் பணம் கட்டி வந்தவுடன் செலானை வாங்கி அவர்களுடைய ஒப்பந்தத்தில் பின் பண்ணி தேவலோகத்திற்குப் போகும் தபால் பையில் போட்டேன். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை இமிக்ரேஷன் விசா பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, அவர்களுக்கு விருந்து கொடுத்து, பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பினேன்,
முதல் நாள் பத்துப் பேர்கள் மட்டுமே வந்தார்கள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்ததைப் பார்த்ததும், இன்டர்நெட்டில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஒரு தளம் ஆரம்பித்தோம். இமிக்ரேஷன் விசா வேண்டுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான நாள் மற்றும் நேரம் அலாட் செய்யப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடப்படும். அதன்படிதான் வரவேண்டும் என்று நிர்ணயித்தோம்.
இப்படியாக ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்கு விசா கொடுத்திருப்போம். வரவு செலவு கணக்குகளைப் பார்த்தோம். மொத்த வரவு 1,50,000 கோடி அதாவது ஒன்றரை லட்சம் கோடி. இதில் இந்திய அரசுக்கு வரி கட்டினது 75,000 கோடி. மீதி 75,000 கோடியில் எங்கள் ஊதியமாக எடுத்துக் கொண்டது 15,000 கோடி. இதில் என் பங்கு 7500 கோடி. பொதுவிற்கும் செக்குவிற்கும் ஆளுக்கு 3750 கோடி.
இப்படி கணக்குப் பார்த்ததில் எங்கள் ஊதியத்தொகையைக் கண்டு மலைத்துப் போய் விட்டோம். இந்தப் பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொதுவைக் கூப்பிட்டு, வெளியில் போய் ஒரு நல்ல ஆடிட்டர், அனுபவம் மிக்க ஒரு வக்கீல், இவ்வளவு பணத்தை டீல் பண்ணக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வரும்படி அனுப்பினேன்.
அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு விவரங்களைச் சொன்னோம். அரசியல்வாதி எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தொகையைச் சொன்னவுடன் அவர் "பூஊஊஊ, இவ்வளவுதானா, இதற்கா என்னை வரச்சொன்னீர்கள், முதலிலேயே விவரத்தைச் சொல்லியிருந்தால் நான் என் வட்டச் செயலரை அனுப்பியிருப்பேனே, அவரே இந்த மாதிரி தொகைகளை எல்லாம் டீல் பண்ணியிருப்பாரே என்றார்.
அப்படீங்களா, எங்களுக்கு அனுபவம் போதாதாகையால் உங்களை வரவழைத்து விட்டோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரைத் தாஜா பண்ணினேன். பிறகு எல்லோரும் கலந்து ஆலோசித்தோம். இந்தப் பணத்தில் எனக்கு 500 ஏக்கர் நிலமும், மற்றவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 250 ஏக்கர் நிலமும் அவரவர்கள் ஊர்களில் வாங்கிப்போடுவது என்று முடிவு செய்தோம்.
அரசியல்வாதி ஊருக்குப் போனதும் தனது வட்டத்தை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பிப் போனார்கள். மறுநாள் "வட்டம்" தனது எடுபிடிகளுடன் வந்தார். விஷயத்தைக் கேட்டார். இவ்வளவுதானே. ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.
பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் பணத்தை முழுவதையும் வட்டத்திடம் கொடுக்கச் சொன்னோம். அவர் அந்தப் பணத்தை இரண்டு லாரிகளில் ஏற்றி வட்டத்துடன் அனுப்பினார்.
பிறகு நடந்ததுதான் நாங்கள் எதிர்பாராதது! விவரங்கள் அறியக் காத்திருங்கள்.
நாங்கள் நினைப்பதெல்லாம் 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
• தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்nkட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை
• எங்களுக்கு நல்ல கதை சொல்ல அன்பான தாத்தா பாட்டி இருந்தார்கள். கலாச்சாரத்தை கெடுக்கும் மெகா சீரியல்கள் டஹ்ரும் டிவி பெட்டிகள் இல்லை
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு (குண்டு பல்புதான், மண்ணெண்ணெய் விளக்குதான்) வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். ஆமாம் பேப்பர் காத்தாடிகள் தீப்பெட்டி ரயில்கள் பாண்டி விளையாட்டு கில்லி தாண்டல் போன்றன ஆனால் இன்றோ அனைத்தும் ப்ரொவிசனல் ஸ்டோர்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும். எனவே எங்கள் ஜிம்கள் எல்லாம் எங்கள் வீதிகளிலிலேயே இருந்தன (காசு பறிக்காமல்)
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை .
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
• முக்கியமாக பெண்களை நம் தாயாக மற்றும் கூட பிறந்தவர்களாக நினைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் டெல்லி நியூஸ் போன்றவற்றை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்
குருச்சந்திரன்