புதன், 1 டிசம்பர், 2010

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டையில் எங்கள் கைடு


கோட்டை வாசல்


எல்லாம் பளிங்குங்க!


பச்சைக்கம்பளம். வாங்கலாம்னு பார்த்தேன். வெலைக்குத் தரமாட்டேனுட்டாங்க.



நாங்கதேன் ?


இந்த மாடத்துலதான் ஷாஜஹான் தன் கடைசி காலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தாராம் ! நான் பாக்கலீங்க. சொல்லக்கேள்வி.
பின்னால தாஜ்மஹால் தெரியுது பாருங்க.


அம்புட்டுத்தான், அடுத்த டூரை எதிர்பாருங்கள்.

கொசுறு :
தாஜ்மஹால் நல்லா இருக்குங்க இல்ல?



இந்தப்படம் புடிக்கலீங்களா? அப்ப இது புடிக்குதா பாருங்க!

மேலும் படங்களைப் பார்க்க இந்த லிங்க்குக்குப் போகவும்.

http://www.youtube.com/watch?v=vJGK11EyLT4




19 கருத்துகள்:

  1. இந்தப்படம் புடிக்கலீங்களா? அப்ப இது புடிக்குதா பாருங்க!
    //

    அண்ணே.. வரவர ரொம்ப குசும்பு பண்றீங்க..!!

    :-)

    பதிலளிநீக்கு
  2. பட்டாபட்டி.... said...

    //இந்தப்படம் புடிக்கலீங்களா? அப்ப இது புடிக்குதா பாருங்க!//

    ///அண்ணே.. வரவர ரொம்ப குசும்பு பண்றீங்க..!!///

    தம்பி, நீங்க குசும்பு பண்ணுனா நாங்க கண்டிப்போம். ஆனா நாங்க பண்ணுனா எங்களை நீங்க கேக்க முடியாதில்ல. அந்த தெகிரியம்தான்.

    பதிலளிநீக்கு
  3. எல்லா படங்களும் அழகுதான். எடுத்த புண்ணியவான் யாரோ?

    // அண்ணே.. வரவர ரொம்ப குசும்பு பண்றீங்க..!!//
    ----------------பட்டா பட்டி.


    அது இயல்புதான். தாத்தாக்கள் பேராண்டிகளிடம் வேறு என்னதான் செய்வார்கள்?

    பதிலளிநீக்கு
  4. கக்கு - மாணிக்கம் said...

    //எல்லா படங்களும் அழகுதான். எடுத்த புண்ணியவான் யாரோ?//

    சொன்னா தற்பெருமை அடித்த பாவம் வரும். அதனால் சொல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. நல்ல புகைப்படங்கள்.

    //மேலும் படங்களைப் பார்க்க இந்த லிங்க்குக்குப் போகவும்.//

    அய்யா லிங்க் கொடுக்கலையே?

    நட்புடன்

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  6. எதோ சுவாரஸ்யம் கொறஞ்ச மாதிரி இருக்கு....படங்கள் அதிகமாகி தடங்கள் குறைந்த தாலோ....

    -
    கிறுக்கன்

    பதிலளிநீக்கு
  7. அந்த படம் முதன் முதலில் வெளி வந்தபோது கீழே கொடுக்கப்பட்ட கமெண்ட் " இரண்டு உலக அதிசயங்கள் ஒரே படத்தில்"

    நல்லருக்குங்க சார்.(எல்லா படத்தையும்தான் சொன்னேன்)

    பதிலளிநீக்கு
  8. பாலா said...

    //அந்த படம் முதன் முதலில் வெளி வந்தபோது கீழே கொடுக்கப்பட்ட கமெண்ட் " இரண்டு உலக அதிசயங்கள் ஒரே படத்தில்"
    நல்லாருக்குங்க சார்.(எல்லா படத்தையும்தான் சொன்னேன்)//

    என்னமோ வாழப்பழத்தில ஊசி ஏத்தினாமாதிரி இருக்குதே, பாலா!

    பதிலளிநீக்கு
  9. அருமையாக உள்ளது அதிலும் இது...

    ஃஃஃஃஃஅந்தக்கருத்துக்கள் எல்லோருக்கும் உரிமையுடையவை. யாருக்காவது தேவையிருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லைஃஃஃஃ

    தங்கள் பெரும் தன்மையை காட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  10. கிறுக்கன் said...

    //ஏதோ சுவாரஸ்யம் கொறஞ்ச மாதிரி இருக்கு....படங்கள் அதிகமாகி தடங்கள் குறைந்த தாலோ....//

    சும்மா மொக்கைன்னே சொல்லுங்க கிறுக்கன். உண்மையைச் சொல்றதுக்கு என்ன தயக்கம்? பயணத்தொடர் போரடிக்க ஆரம்பிச்சதனால நிறுத்திட்டேன். கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்த படங்களை என்ன பண்றது. யான் பெற்ற இன்பம் (துன்பம்?) பெறுக இவ்வையகம்னு பதிவா போட்டுட்டேன். எப்படியோ என் பிக்சர் ஃபோல்டரை ஒரு வழியா காலி பண்ணி டெலீட் பண்ணீட்டேன். இனி உங்க பாடு :)- கூகிள்காரன் பாடு :)-

    பதிலளிநீக்கு
  11. வெங்கட் நாகராஜ் said...

    //நல்ல புகைப்படங்கள்.
    //மேலும் படங்களைப் பார்க்க இந்த லிங்க்குக்குப் போகவும்.//
    அய்யா லிங்க் கொடுக்கலையே?//

    கொஞ்சம் சொதப்பல் ஆகிவிட்டது. இப்போது சரி பண்ணிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. ம.தி.சுதா said...
    //அருமையாக உள்ளது அதிலும் இது...
    ///ஃஃஃஃஃஅந்தக்கருத்துக்கள் எல்லோருக்கும் உரிமையுடையவை. யாருக்காவது தேவையிருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லைஃஃஃஃ///
    தங்கள் பெரும் தன்மையை காட்டுகிறது...//

    உண்மைதானே சுதா. நாம் வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம்?
    இந்தக்கருத்துகளின் மேல் உள்ள பாசம் தொலைந்த மாதிரி பணத்தின் மேல் உள்ள ஆசையும் போகவேண்டி ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. காதல் ஓவியத்தின் முன் ஒரு காவிய நாயகன். ம்ம்ம்ம்......

    பதிலளிநீக்கு
  14. தாராபுரத்தான் said...

    //புடிக்குதுங்கோ.//

    சந்தோஷமுங்க.

    பதிலளிநீக்கு
  15. ஆக்ரா படங்கள் அருமை.நன்றி.

    பச்சைக்கம்பளம் :) அழகாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு