புதன், 22 டிசம்பர், 2010

இன்னும் நான்கு நாள்தான் இருக்கு

ஈரோடு பதிவர் சங்கமம்.

முழு விவரங்களை இங்கே பாருங்கள். இதைப்பார்த்தவுடனே மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்து விடுங்கள். இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன.

விழா நடக்கும் இடம்:

டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,

URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்

காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ் வணக்கம்
*வரவேற்புரை
*பதிவர்கள் அறிமுகம்
*கூட்ட துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)

*சிறுகதைகளை உருவாக்குவோம் -

எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் -

எழுத்தாளர். பாமரன்
*குறும்படம் எடுக்கலாம் வாங்க -

அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில் நேர்த்தி -

கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை -

சிதம்பரன்.கி

மதியம் 01-30 – 02.30 மதிய உணவு

இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)

*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -

ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -

லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)

மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)

*பதிவர்கள் கலந்துரையாடல் -

ஒருங்கிணைப்பு சேர்தளம்

நன்றியுரை
மாலை 05.00 மணி நிகழ்ச்சி நிறைவு

(முக்கிய அறிவிப்பு) இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.

(பதிவர்களே, இதற்கு மேலும் என்ன வேண்டும்? உடனே தயாராகுங்கள். நான் இன்றையிலிருந்தே உபவாசம் இருக்கப்போகிறேன்- ப.க.)

குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

(பதிவர்களே, இதைக் கவனியுங்கள். ரொம்ப முக்கியமான பாயின்ட். ஈரோட்டுக்காரர்களின் மனசுதான் மனசு!!!!!- ப.க.)

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

(நன்றிகளை ஏற்றுக்கொள்கிறோம். எதுக்கும் நாங்க நேர்ல வர்ரப்ப கொடுக்கறதுக்கு கொஞ்சம் மிச்சம் வச்சுருங்க? – ப.க.)

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com
அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...
உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...

7 கருத்துகள்:

  1. பதிவர்களே, கவனியுங்கள். பதிவு போட்டு 3 மணி நேரம் ஆகிறது. இன்னும் ஒருவரும் கடைக்கு வரவில்லை. இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவர் சங்கமத்தில் விவாதிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. உங்க ஊரு காரங்க ரொம்ப பெரிய மனசு காரங்க சார்.

    பதிலளிநீக்கு
  3. நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஏற்பாடுகள் எல்லாம் பலமா செய்து விட்டீர்கள் போல. வர ஆசைதான். அலுவலகத்தில் ஆணி அதிகம். தில்லியில் இருந்து வர இயலாது. சங்கமம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கடைக்கு வந்துட்டேன். பதிவர் சங்கமத்தில் என்னைப் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு