புதன், 26 அக்டோபர், 2011

ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும்?



விஷ்ணுபகவான் நரகாசுரனைக் கொன்ற நாளாக தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம். இதை மூட நம்பிக்கை என்று சொல்லி தீபாவளியை கொண்டாடக்கூடாது என்று பிரசாரம் செய்வாரும் உளர். ஆனால் மக்கள் அந்த பிரசாரங்களைக் கேட்காமல் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கொண்டாட்டங்கள மனிதனுக்கு அவசியமாகிறது. அதிலும் தீபாவளி வெறும் கொண்டாட்டமாக அமையாமல் நமது பொருளாதாரத்துடன் எப்படி பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று யோசித்தீர்களானால் அதன் மகத்துவம் நன்றாகப் புரியும்.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா எத்தனை பேருக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கிறது. எத்தனை வகையான தொழில்கள் இந்த திருவிழாவினால் பொருள் ஈட்டுகின்றன. இதெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அல்லவா?

அது தவிர எத்தனை குடும்பங்களின் வெளியூரிலிருக்கும் குடும்பத் தலைவன் அவன் குடும்பத்துடன் இனிமையாகப் பொழுதைக்கழிக்க உதவுகின்றது. எவ்வளவு சிறார்கள் இன்று குதூகலமாக இருக்க வழி வகுக்கின்றது. இவையெல்லாம் மனித வாழ்வு தங்கள் வாழ்வு சிறக்க உதவுகின்றன.

ஆகவே தீபாவளித் திருநாளான இன்று எல்லோரும் தங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தாருடன் இனிதே மகிழ்ந்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.

9 கருத்துகள்:

  1. உண்மை தான்.

    தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.

    ஆமா எண்ணெய் தேச்சு குளிக்காம இங்கே வந்து உட்கார்ந்துகிட்டு என்ன செய்றீங்க?

    அம்மிணி அடிக்க வராம இருக்காங்க?

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி.
    அருமையான பதிவு. கொண்டாட்டங்கள் தேவை தான்.
    எங்களது மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    வணக்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி.
    மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஐயா தங்கள் வாழ்விலும் வளம் பெருக இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களது மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு